Monday, December 6, 2010

" லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்திய நெருப்பு" குறித்து அண்ணா ... !


தம்பி, நீ விரும்பினால் இந்த நாட்டை பொன்னாடு ஆக்கமுடியும், அதற்கு ஒன்று தேவை. பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெறிக்கப்படவேண்டும்.
(04.01.1957) 

குற்றச்சாட்டுகள், பகட்டான பேச்சு, வாக்குறுதி பறந்தது, பதவி வேட்டை, லஞ்சத்தில் பங்கு, கள்ள மாக்கெட் வரவு, அதிகார மோகம், என இதழ்கள் தூவியுள்ள குற்றச்சாட்டுகளை ஜனநாயக
வளர்ச்சி உள்ள எவரும் தாங்கிக் கொள்ள முடியாது. பச்சையாக கண்டித்தும் சகித்தும் கொள்ளுகின்றனர். ஆச்சரியம் அதிலே இல்லை. இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு உரியவர்களை கயவர்களை நாடு சகித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் ஆச்சர்யம். ஆனால் அதற்கு காரணம்? பாசம்! பாசம் பொல்லாத நோய்; எளிதில் போவதில்லை.
(திராவிட நாடு - 23.11.1947)

பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபபோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளை கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக்கப்படமாட்டாது.
(பொதுவாழ்வு ஒரு பொன்னாடு)

இன்று வெறுப்பு, அருவருப்பு, பகை எனும் உணர்ச்சியின் துணைகொண்டு மட்டுமே அரசியலில் தம்முடன் மாறுபட்டிருப்பவர்களை மட்டம்தட்டி, தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்பிற்கு ஏற்றம் தேடித் தரமுடியும் என்ற எண்ணம் தடித்துக் கிடக்கிறது. கொள்கையில் நம்பிக்கை சுரந்ததால் அல்ல இருந்த இடத்தில் கசப்பு வளர்ந்ததால், பகைகக்கி இழிபொழிபேசியே, மாற்றுமுகாமினரை ஒழிக்க முடியும் என்ற நினைப்புடன் நாப்பறை கொட்டுகின்றனர் . பழுதுபட்ட மங்கை பழுக்க மங்சளை முகத்தில் அப்பிக்கொண்டு பத்தினிவேடம் போட்டிடும் கதைப்போல்! மற்ற கட்சி தலைவர்களை மதித்திடுவது நம் கொள்கையை நம்மிடமிருந்து பெயர்த்தெடுத்துவிடும் என்று எண்ணுவதும் பேதைத்தனம். செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் புதுக்கட்சி பணம் சேர்த்து, புதிய பலம் பெற நினைப்பது, ஆடிக்கெட்ட முதியவன், ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது. முறுக்கு ஏறும் வேகமானது, அதைவிட வேகமாக முறுக்கு தளர்ந்துவிடும். முறிந்தேகூடப் போய்விடும்.
(கடிதம் - 11.07.1965)

ணம் மட்டும் குவிந்திருக்கும்போது செருக்கு பிறரை துச்சமாக எண்ணும். துடுக்கு ஏற்பட்டுவிடும். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ எவரையும் எதுவும் செய்துவிடமுடியும் என்கின்ற மண்டைகனம் எவனால் என்ன என்ற போக்கு, எடுத்தேன், கவிழ்த்தேன் என்கின்ற பேச்சு; யாருக்கு நான் அஞ்சவேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் - இப்படி பலப்பல நோய்கள் ஒருசேர குடியேறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பும் தடித்துவிடும். பிறகு நெறித்த புருவம், கனல் உமிழும் பார்வை கடும் சொற்கள்.
(05.05.1960)

அதிகாரம் ஒரு போதை! பருகப் பருக இனிக்கும். அதில் சொக்கி விழாதவர் மிகச் சிலரே. அதிலும் அரசியல் அதிகாரம், அதிகமான போதைத் தரும். அதைப் பருகுவோர், பரமானந்தமடைந்து பாதம் பூமியில் சரியாக படியாதபடி தாண்டவமாடுவர். அதைத்தான் அறிஞர்கள் அரசியல் கோமாளி கூத்தென்பர். அந்த போதையின் பயனாக எதேச்சதிகாரமும், சர்வாதிகாரமும் ஏற்படும். தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டனாகிவிடமாட்டானா? அதைப்போல தனக்கொரு எதிரியும் இல்லை என்ற மனப்பான்மை கொண்டுவிட்டால், கேட்கவாவேண்டும். அவர்தம் திருவிளையாடல் யாராயினும் சரி எனக் கூறி, எதற்கெடுத்தாலும் கச்சை கட்டி நிற்பர். இதுவே அதிகார வெறி எனப்படுவது.
(எதேச்சாதிகாரம், திராவிடநாடு - 27.06.1948)

நீண்ட பேச்சினால் அல்ல, நாசுக்கான அரசியலால் அல்ல, உயிரை இழக்கவும் தயாராயிருந்த உத்தமர்கள் சிந்திய இரத்தத்தால்தான், உலகிலே எந்த உன்னதமான கொள்கையும் நிலை நாட்டப்பட்டிருக்கிறது. 
   

4 comments:

  1. அண்ணாதுரை ஒரு அறிஞர். வாய்ச் சொல் வீர‌ர். ம‌க்க‌ளின் ப‌லவீன‌ம் க‌ண்டு அதை த‌ன‌க்காய், த‌ன் க‌ட்சி வ‌ள‌ர்ச்சிக்காய் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர். (உ.ம்) பெரியாரை விட்டு வில‌கிய‌து, த‌னிநாடுகோரிக்கை, இந்தி எதிர்ப்பில் இள‌ம் ப‌ள்ளி மாண‌வ‌க‌ர்க‌ளையும் இழுத்த‌து. லாட்ட‌ரி சீட்டு வியாப‌ர‌த்தை அர‌சே தொட‌ங்கிய‌து. ரூபாய்க்கு மூன்றுப‌டி அரிசி என்ற பொய் வாக்குறுதியில் ஆட்சிக்கு வ‌ந்த‌து. "சொல் ஒன்று செய‌ல் வேறு" என்ற‌ நுட்ப‌ங்க‌ளை அர‌சிய‌லில் எளிதாக்கிய‌வ‌ர். அவ‌ர‌து மிக‌க்குறைந்த‌ கால‌ ஆட்சியும், நோயும்,அவ‌ர‌து ம‌ரண‌மும், பின் ஆட்சிக்கு வ‌ந்தோரின் அவ‌ல‌ங்க‌ளும், அண்ணாவின் புக‌ழை த‌க்க‌வைத்திருக்கிற‌து. பெரியாரையும், க‌ண்ண‌தாச‌னையும், ப‌டித்திருந்து, அறுபது முத‌ல் எழுப‌துக‌ளின் அர‌சிய‌லை ஆழ்ந்து நோக்கினால் இது உள்ள‌ங்கை நெல்லி. இற‌ந்துவிட்ட‌வ‌ர‌க‌ளைப் ப‌ற்றிய‌ குறை கூறுவ‌தைச் ச‌மூக‌ம் விரும்பாதென்ப‌தால், அண்ணா ப‌ற்றிய மாறுபட்ட‌ க‌ருத்துக்க‌ள் அதிக‌ம் வெளிவ‌ருவ‌தில்லை. முக்கியாமாய், வாரிசுக‌ள் மிக‌ மோச‌மாய் ஆன‌தால்,முந்தைய‌ சுமார்க‌ள் மிக‌ ந‌ல்ல‌வ‌ர்களாகி விடுகிறார்க‌ள்.

    ReplyDelete
  2. இற‌ந்துவிட்ட‌வ‌ர‌க‌ளைப் ப‌ற்றிய‌ குறை கூறுவ‌தைச் ச‌மூக‌ம் விரும்பாதென்ப‌தால், அண்ணா ப‌ற்றிய மாறுபட்ட‌ க‌ருத்துக்க‌ள் அதிக‌ம் வெளிவ‌ருவ‌தில்லை. முக்கியாமாய், வாரிசுக‌ள் மிக‌ மோச‌மாய் ஆன‌தால்,முந்தைய‌ சுமார்க‌ள் மிக‌ ந‌ல்ல‌வ‌ர்களாகி விடுகிறார்க‌ள்.//

    sariyaana karuthu

    ReplyDelete
  3. //அண்ணாதுரை ஒரு அறிஞர். வாய்ச் சொல் வீர‌ர். ம‌க்க‌ளின் ப‌லவீன‌ம் க‌ண்டு அதை த‌ன‌க்காய், த‌ன் க‌ட்சி வ‌ள‌ர்ச்சிக்காய் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர். (உ.ம்) பெரியாரை விட்டு வில‌கிய‌து, த‌னிநாடுகோரிக்கை, இந்தி எதிர்ப்பில் இள‌ம் ப‌ள்ளி மாண‌வ‌க‌ர்க‌ளையும் இழுத்த‌து. லாட்ட‌ரி சீட்டு வியாப‌ர‌த்தை அர‌சே தொட‌ங்கிய‌து. ரூபாய்க்கு மூன்றுப‌டி அரிசி என்ற பொய் வாக்குறுதியில் ஆட்சிக்கு வ‌ந்த‌து. "சொல் ஒன்று செய‌ல் வேறு" என்ற‌ நுட்ப‌ங்க‌ளை அர‌சிய‌லில் எளிதாக்கிய‌வ‌ர். அவ‌ர‌து மிக‌க்குறைந்த‌ கால‌ ஆட்சியும், நோயும்,அவ‌ர‌து ம‌ரண‌மும், பின் ஆட்சிக்கு வ‌ந்தோரின் அவ‌ல‌ங்க‌ளும், அண்ணாவின் புக‌ழை த‌க்க‌வைத்திருக்கிற‌து. பெரியாரையும், க‌ண்ண‌தாச‌னையும், ப‌டித்திருந்து, அறுபது முத‌ல் எழுப‌துக‌ளின் அர‌சிய‌லை ஆழ்ந்து நோக்கினால் இது உள்ள‌ங்கை நெல்லி. இற‌ந்துவிட்ட‌வ‌ர‌க‌ளைப் ப‌ற்றிய‌ குறை கூறுவ‌தைச் ச‌மூக‌ம் விரும்பாதென்ப‌தால், அண்ணா ப‌ற்றிய மாறுபட்ட‌ க‌ருத்துக்க‌ள் அதிக‌ம் வெளிவ‌ருவ‌தில்லை. முக்கியாமாய், வாரிசுக‌ள் மிக‌ மோச‌மாய் ஆன‌தால்,முந்தைய‌ சுமார்க‌ள் மிக‌ ந‌ல்ல‌வ‌ர்களாகி விடுகிறார்க‌ள்.//
    மிக சரியான கருத்துக்கள். வேற்று வாக்குறுதிகளும் வெறும் அலங்கார பேச்சையும் தவிர வேறு எதுவும் தராத அண்ணாவை அவர் வழி வந்தவர்கள் வேண்டுமானால் அறிஞர் எனலாம். ஆனால் நீங்கள் சொல்வதே உண்மை

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)