Wednesday, December 29, 2010

அமைச்சர்களால் ஏற்படாத போக்குவரத்து இடைஞ்சலா?

raja govt hostel students

மிழகத்தில் நீண்டகாலமாகவே அரசு விடுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 21 ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, எம்.சி. ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதி மாணவர்களும் சென்னையிலுள்ள மற்ற அரசு விடுதி மாணவர்களும் அடிப்படை வசதி கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தச் செய்தியை பிரசுரித்த பல ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகள் மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களை மட்டுமே பெரியதாக எழுதிவிட்டு விடுதி மாணவர்களின் பிரச்சனைகள் பற்றி சிறிதளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பகுதி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களும் அரசு விடுதிகளில் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால் 80 முதல் 90 விழுக்காடு மாணவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது போன்ற அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு, அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள். ஏற்கனவே கிராமப்புறங்களில் உலகமயமாக்கத்தால் வேலைவாய்ப்பற்ற விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகிய இவர்கள் கல்லூரிப் படிப்பை எட்டுவதே மிகவும் சிரமம். அவ்வாறு கல்வி பயில வாய்ப்பு கிடைத்த ஒரு சிறுபகுதியினர்தான் இவர்கள். அதாவது கோடிக்கணக்காக உள்ள தலித் மக்களில் உயர்கல்வி பெற வாய்ப்பு பெற்றவர்கள் சில ஆயிரக்கணக்கானோரே. சென்னை நகரில் உள்ள அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் தலித் மாணவர்களும் இந்த ஆயிரங்களில் அடங்குவர்.

இவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் உள்ள மோசமான நிலைமைகளை மனதாபிமானம் உள்ள எவரும் பேசாமல் இருக்க முடியாது. அங்கேயே தங்கி பல சிரமங்களுக்கு ஆளாகும் மாணவர்கள் எப்படி வாய்மூடிக் கொண்டிருக்க முடியும். சென்னையில் வெளிவரும் பல ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் தலித் மாணவர்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி சிறிதளவும் கவலைப்படாமல், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை எழுதுவதற்கு பதிலாக சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களைப் பற்றி பெரிய அளவிற்கு எழுதியுள்ளனர். உதாரணமாக டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியான இந்து நாளிதழ் ஒரு சில மணி நேரம் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலைப் பற்றி பூதாகரமாக எழுதியுள்ளது.

முதலில், அரசு விடுதி மாணவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை சற்று பரிசீலிப்போம். விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவருக்கு ஒரு நாளைக்கு 15 ரூபாயும், கல்லூரி மாணவருக்கு 18 ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. தினமும் என்ன வகை உணவு வழங்க வேண்டுமென உணவுப்பட்டியலும் உள்ளது. ஆனால், இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், இன்றைய விலைவாசி உயர்வில் 15 மற்றும் 18 ரூபாயில் மூன்று வேளை உணவு வழங்குவதே மிகவும் சிரமம். அப்படி இருக்கும்போது எவ்வாறு தரமான உணவு வழங்கமுடியும். எனவே தான், வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், பற்றாக்குறையாகவும், ஆரோக்கியமற்றதாகவும் வழங்கப்படுகிறது. 15அடிக்கு 15அடி அளவுள்ள ஓர் அறையில் கிட்டத்தட்ட 20 லிருந்து 25 மாணவர்கள் தங்கியுள்ளனர். படிப்பதற்கும், உறங்குவதற்கும் இடமில்லாமல் தங்களது கல்லூரி நாட்களை முடித்தாலே போதுமென எண்ணி ஒவ்வொரு நாட்களையும் பல சிரமங்களுக்கிடையே தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு கிராமப்புறங்களிலிருந்து உயர்கல்வி கற்க ஏராளமான மாணவர்கள் நகர்புறத்திற்கு வரவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அப்படி வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்றைக்கு விடுதிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கப்படவில்லை. எனவேதான் இருக்கின்ற சில விடுதிகளில் மிக அதிக மாணவர்கள் தங்குவதும், உணவு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக, சென்னை சைதாபேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியில் 400 மாணவர்கள்தான் தங்க முடியும். ஆனால் கிட்டத்தட்ட 800 மாணவர்கள் தங்குகின்றனர்.

தமிழக அரசு, உண்மையிலேயே தலித் மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள அரசாக இருக்கும் பட்சத்தில் புதிய விடுதிகள் கட்டுவதற்கும், தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும், போதுமான நிதி ஒதுக்கீட்டினை செய்திருக்க வேண்டும். மாறாக அரசு விடுதிகளின் தரத்தை மேம்படுத்த எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அரசு விடுதி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்காத தமிழக அரசின் காதுகளில் மீண்டும், மீண்டும் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு விடுதி மாணவர்களும் ஜனநாயக அமைப்பின் கீழ் அணி திரளவேண்டும். அவ்வாறு அனைத்து அரசு விடுதி மாணவர்களும் ஓரணியில் திரண்டு போராட முன்வந்தால், சைதாப்பேட்டையில் மட்டுமல்ல, தலைமைச் செயலகத்திற்கு எதிரேயும் மறியல் செய்ய சக்தி படைத்தவர்கள் ஆவார்கள். அவ்வாறு போராட முன்வரும் மாணவர்களுக்கு அனைத்து பகுதிமக்களும் உணர்வுபூர்வமான ஆதரவை கொடுக்க முன்வரவேண்டும்.

போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மாணவர்களுக்கும் -பொதுமக்க ளுக்கும் இடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் முதலாளித்துவப் பத்திரிகைகளின் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் போதும், முதலவர், துணை முதல்வர், அமைச்சர்கள், மற்றும் முக்கிய நபர்கள் செல்லும் போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்கிறது. பல நாட்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னை நகர மக்கள் போக்கு வரத்து நெரிசலில் பாதிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் வாயைத் திறக்காதாவர்கள், இப்போதும் வாயை மூடிக்கொண்டு இருக்கட்டும்.

மூலம் :பேராசிரியர் எம்.எஸ் அவர்களின் கட்டுரை

9 comments:

  1. 15அடிக்கு 15அடி அளவுள்ள ஓர் அறையில் கிட்டத்தட்ட 20 லிருந்து 25 மாணவர்கள் தங்கியுள்ளனர். படிப்பதற்கும், உறங்குவதற்கும் இடமில்லாமல் தங்களது கல்லூரி நாட்களை முடித்தாலே போதுமென எண்ணி ஒவ்வொரு நாட்களையும் பல சிரமங்களுக்கிடையே தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.//

    இந்த வாழ்க்கையை ஒவ்வொரு அமைச்சருக்குமானதாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களின் கோபமும், வலியும் புரியும்.

    ReplyDelete
  2. ச‌ரியான சாட்டைய‌டி இந்து ராம்க‌ளுக்கு.
    கூஜா தூக்கும் ப‌த்திரிகைக‌ள். விள‌ம்ப‌ர‌ வ‌ருமானத்திற்குகாக‌
    தரும‌ம் கொல்லும் த‌ர‌க‌ர்க‌ள்.
    த‌மிழக அர‌சின் சார்பில் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்காக
    ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ ம‌னித‌ச்ச‌ங்கிலி போர‌ட்ட‌ம் ந‌ட‌ந்த‌
    ஒரு ம‌ழை, மாலையில் ம‌க்க‌ள் ப‌ட்ட‌ அவ‌ஸ்தை
    சொல்லில் அட‌ங்காது. பிர‌த‌மரின் நிக‌ழ்ச்சியால் ஏற்ப‌ட்ட‌
    போக்குவ‌ர‌த்து குழ‌ப்ப‌ங்க‌ளால் இதுவ‌ரை மூன்று போர்
    ப‌லியாகி இருக்கிறார்க‌ள். க‌த்திபாரா மேம்பால‌த்தில் நட‌ந்த‌
    எந்திர‌ன் ப‌டபிடிப்பினால் ஏற்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து நெரிச‌லுக்கு
    யார் காரண‌ம். ராவ‌ண‌ன் ப‌ட‌ப்பிடிப்பின‌ர‌ரின் சுகத்திற்காவும்,
    த‌ற்காப்புக்காவும், கேர‌ள‌ காட்டில் டின் டின்னாய்
    இரசாயன மருந்துக‌ளை கொட்டி, பல்லாயிர‌ம் நுண்ணுயிர்க‌ளையும்,
    பிற‌ பூச்சி,வில‌ங்கின‌ங்க‌ளை அழித்து ஒழித்த‌ன‌ர். சுய‌நல‌......

    ReplyDelete
  3. சார்,
    கொலை செய்தவன் கூட ஒரு ஞாயமான காரணம்தான் சொல்கிறான். அப்புறம் எதற்கு கோர்ட்டும் வக்கீலும்? மா நகர பேருந்து தொழிலாளர்கள் யாராவது ஏதாவது சொன்னால் உடனே சாலையை மறித்து போக்குவரத்தை தடை செய்யும் போது அது அவர்களுக்கு ஞாயமாக படுகிறது. பிரதமர், பெரிய அரசியல் தலைவர்கள் வரும் போது சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தால் பாதுகாப்பு என்று சொல்லி ஞாயபடுத்துகிறார்கள். எல்லோருக்கும் அவரவர் ஞாயம்தான் பெரிது. மக்களின் கஷ்டம் பற்றி யாரும் கவலை படுவதில்லை. மாணவர்கள் தலித் ஆகட்டும் மற்றவர்கள் ஆகட்டும் ஏன் பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயற்சிக்க கூடாது? அசிங்கமான முன் ணுதாரணங்களை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே.. எதிர்க்காலம் இவர்கள் கையில் எங்கிறோம் ஆனால் இவர்களும் அந்த அசிங்கமானவர்களை பின் பற்றினால் எப்படி ஞாயபடுத்த முடியும்?

    ReplyDelete
  4. எக்காரணம் கூறினும், சாலை மறியல் மிகத் தவறான ஒன்று!அடாவடித் தனமானது! பொது மக்கள் பயன் படுத்தும் சாலையை யார் மறித்தாலும், அது உரிமைத் தடுப்புக் குற்றம்! சம்பந்தப்பட்ட அதிகாரியையோ/அமைச்சரையோ மறியுங்கள்!

    ReplyDelete
  5. கிணற்றுத்தவளை///

    மக்களின் கஷ்டம் பற்றி யாரும் கவலை படுவதில்லை. //

    மக்களில் ஒரு பகுதியினர்தான் அந்த மாணவர்கள். படிக்க வேண்டிய சூழலைக் கூட கொடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோமே. அவர்களை மரியல் செய்யும் நிலையில் வைத்திருக்கிறோமே என்று நாம்தான் வெக்கித் தலைகுனிய வேண்டும். அவரவருக்கென கொஞ்சம் சமூக உணர்வு வேண்டாமா? - மக்கள் பிரச்சனைக்காக நம் சொந்த சுக துக்கங்களை சகித்துக் கொண்டால்தான் என்ன?

    பொது மக்கள் பயன் படுத்தும் சாலையை யார் மறித்தாலும், அது உரிமைத் தடுப்புக் குற்றம்! //

    கோபப்படாதீர்கள் நண்பா - ஒரு சில நிமிடங்கள் சாலை தடுக்கப்படுவதில் இவ்வளவு கொதிக்கிறீர்கள். காலம் காலமாய் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கும் தலித் மாணவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களி கோபமெல்லாம் ஒன்றிணைந்தால் ஒரு பிரளயமே வெடிக்கும். ஆனால், சாலையைத்தான் மறித்திருக்கிறார்கள். அதுவும், உண்மையிலேயே பிரச்சனை ஒரு கட்டத்தை எட்டிய போது. இப்போதும் உங்களுக்கு சாலை மறியல்தான் பெரிதாகப்படுகிறதா?

    ReplyDelete
  6. அன்பார்ந்த தோழர்களே,

    தோளுக்கு தோளாக பகுதியை ஏன் அகற்றி விட்டீர்கள்? நமது
    தோழர்களின் புதிய பதிவுகளை அறிந்து கொள்ள மிகவும் வசதியாக
    இருந்தது. நேரமும் மிச்சமானது. தோளுக்கு பின்னால் கத்தி
    பாய்ச்சுபவர்கள் யாரேனும் இருந்தால் அந்த வலைப்பக்கத்தை மட்டும் அகற்றி விடலாமே. மீண்டும் அப்பகுதியை இணையுங்கள் என்று
    உரிமையோடு கோருகிறேன்.


    தோழமையுடன்
    எஸ்.ராமன், பொதுச்செயலாளர்,
    காப்பிட்டுக் கழக ஊழியர் சங்கம்,
    வேலூர் கோட்டம்.

    ReplyDelete
  7. தோழர் ராமன்!

    புதிய டெம்ப்ளேட் மாற்றும்போது, சேகரித்து வைத்திருந்த விட்ஜெட்டை இழந்துவிட்டோம். விரைவில் சேர்க்கப்பட்டுவிடும்.

    ReplyDelete
  8. //கோபப்படாதீர்கள் நண்பா - ஒரு சில நிமிடங்கள் சாலை தடுக்கப்படுவதில் இவ்வளவு கொதிக்கிறீர்கள். காலம் காலமாய் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கும் தலித் மாணவர்களை நினைத்துப் பாருங்கள்.//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் சிந்தன்!

    தனது கஷ்டங்களை மட்டுமே பெரிதாய் நினைக்கிற மனிதர்கள், வாழ்க்கையே துயரமாகிப்போன அடுத்தவர்களின் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பிடிக்காதவார்களாகவே இருக்கிறார்கள்.

    @கிணற்றுத்தவளை!
    //ஏன் பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயற்சிக்க கூடாது? //
    யாருங்க இங்க பொதுமக்கள்? அரசு விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுமக்கள் இல்லையா? நமது முழந்தைகளோ, உரவினர்களோ அப்படியொரு புழுக்கள் போன்ற வாழ்க்கையில் உழன்றால் நம் வேதனை என்னவாக இருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!


    @ரம்மி!
    கிணற்றுத்தவளை அவர்களுக்குச் சொன்ன விளக்கங்களே உங்களுக்கும். சாலைமறியல் அடாவடித்தனமானது என்றால், அரசு விடுதிகளில் இருக்கும் அந்த மாணவர்களை இக்கதியாக்கியவர்களின் செயலை என்னவென்பது?

    உங்களைப் போன்ற பொதுமக்களும் அந்த அரசு விடுதி மாணவர்களின் துயரங்களை உணரத்தலைப்பட்டால், அவர்களோடு சேர்ந்து நிற்க முன்வந்தால் பிரச்சினைகள் சில நிமிடங்களிலேயே தீர்க்கப்பட்டுவிடுமே!

    ReplyDelete
  9. ///கொலை செய்தவன் கூட ஒரு ஞாயமான காரணம்தான் சொல்கிறான். அப்புறம் எதற்கு கோர்ட்டும் வக்கீலும்? ///

    சொல்வது சரிதான், கிணற்றுத் தவளை,

    வழக்கறிஞர்கள் சென்ற ஆண்டு உயர்நீதிமன்றத்துக்குள் நடந்து கொண்ட விஷயம் நாடே அறியும். ஒரு நீதிபதியின் மண்டையே பிளந்தது அன்று.

    சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதிச் சண்டையை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தார்கள்.

    அவ்வளவு ஏன், இரண்டு தமிழக அமைச்சர்கள் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், மைதீன்கான் ஆகியோர் ஒரு காவல் அதிகாரி வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தும், உடனையாக உதவாமல் எட்ட நின்று அவர் சாவதை வேடிக்கை பார்த்தார்கள்.

    காலம் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வாழ்வில் வறுமையைத் தவிர வேறெதையும் காணாத பரம்பரையினர் தமது அன்றாட வாழ்க்கையின் அவலங்க‌ளை நீக்கப் போராடுவது மற்ற மக்கள் சௌகரியஙளைப் பார்த்துதான் செய்யவேண்டும் என்றால் அதில் எள்ளளவும் நியாயம் இல்லை.

    போக்குவரத்து பாதிக்கப் பட்டது என்கிறவர்கள், வீதி முழுவதும் எத்தனை கார்கள் நிறுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்பதில்லையா? 600 சதுர அடிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வ‌சிப்பவரெல்லாம் இன்று கார் வைத்துக் கொண்டு அதைத் தமது வளாகத்தில் நிறுத்த இடம் இன்றி தெருவெல்லாம் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து தொல்லைகள் யார் கண்ணுக்கும் படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் மேற்சாதியினர், வசதி வாய்ப்பு உள்ளவர்கள். என்றோ ஒரு நாள் தெருவில் இறங்கிப் போராடுபவன்தான் பொதுமக்களுக்கு இடைஞ்ச‌ல் செய்கிறானென்றால் என்னே நியாயம்?

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)