Saturday, December 25, 2010

பதராகிப்போன “நெல்லு”



அந்த ஜனங்களை தொட்டால் தீட்டு... பார்த்தால் பாவம்... ஆண்டைகளின் தெருக்களில் தோளில் துண்டணியக்கூடாது... காலில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது. இதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. இதை... இந்த மனு(அ)தர்மத்தை மீறினால்... சவுக்கடியும்
சாணிப்பாலும்தான் பரிசாகக் கிடைக்கும்.


இந்த கொடுமைகளெல்லாம் வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோதுதானே என்றெண்ணி விடாதீர்கள்... ”சுதந்திர இந்தியாவிலும் இதுதான் நிலைமை... (இன்னும்கூட அப்படியான கிராமங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன...) இந்த சமூகப்புறக்கணிப்போடுதான் வயிற்றுப்பாட்டுக்கும் அந்த கூலிகள் பெரும் பாடுபடவேண்டியிருந்தது. (வெண்மனி குறித்து அறிய இங்கே சொடுக்கவும்)

அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் இதே நிலைதான். பண்ணையார்களின்... மிராசுதாரர்களின் வயல்களில்... உழவு மாடுகளைக்காட்டிலும் கூடுதலாக உழைத்தனர் இந்த ஜனங்கள்.. பெண்?.. பிள்ளைகளோடு குடும்பமே வயல்காட்டில் விழுந்து கிடந்தால்தான் கால் வயிறு கஞ்சியாவது உத்தரவாதமாகும்.

இப்படி வெங்கொடுமை சாக்காட்டில் வீழ்ந்து கிடந்த ஜனங்களை ஒன்று திரட்டியது செங்கொடி இயக்கம். வீடு... வாசல்... மனைவி... மக்களை மறந்து கம்யூனிஸ இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்கள் தஞ்சை மாவட்டத்தின் வரப்புகளெங்கும் நடந்து நடந்து... மக்களைத் திரட்டினார்கள். சாதிய அவமானங்களுக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பியதோடு... கூலி பிரச்னையையும் செங்கொடி இயக்கம் கையில் எடுத்தது.

அதுவரை பெற்றுவந்த கூலியை உயர்த்தி ஒரு படி நெல் கூடுதலாக கேட்டார்கள்  விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்ட... ஒடுக்கப்பட்ட... மக்கள். அதற்காக கூட்டம் போட்டார்கள்.... விவாதித்தார்கள்.. வயல்களில் இருந்து தெருவுக்கு வந்து போராடினார்கள்.. தங்கள் போராட்டத்தின் அடையாளமாகத்தான் செங்கொடிகளை வயல்களில் நட்டு பறக்கவிட்டனர்.

நாற்று நட்ட வளைகரங்கள் செங்கொடிகளை நட்டன... ஏரோட்டிக் கருத்தவர்கள்... போராட்டத்தில் சிவந்தனர்.... விவசாய கூலித்தொழிலாளர்கள் சங்கம் ஊருக்கு ஊர்... சேரிக்குச் சேரி.. முளைத்தது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளமுடியாத மிராசுதாரர்கள்... கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’ தொடங்கினர். செங்கொடிகளை இறக்கிவிட்டு... கூலித்தொழிலாளர் சங்கத்தை கலைத்துவிட்டு, தங்கள் சங்கத்தில் சேரவேண்டுமென நிர்பந்தித்தனர். விவசாயக்கூலிகள் மறுத்தபோது மோதல் எழுந்தது.

அடிமேல் அடிவாங்கிக்கொண்டிருந்தவர்கள், செங்கொடி தந்த தைரியத்தில் திருப்பியடிக்கத்தொடங்கினர்.. எங்கும் கலவரம்... எங்கும் அடிதடி... குடிசைகளுக்கு தீவைப்பு... எங்கும் அழுகுரல்... இதன் உச்சகட்ட கொடுமை அரங்கேறிய இடம்தான் ‘கீழ்வெண்மணி’ கிராமம்.
1968ம் ஆண்டு டிசம்பர் மாதம்... 25ம் தேதி... உலகமே கிறிஸ்துவின் வருகைக்காக தவம் கிடந்த நாளில்தான் அந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது. அன்று காலையில் முத்துச்சாமி, கணபதி என்ற இரு கூலித்தொழிளிகளை சவரிராஜ் நாயுடு என்ற மிராசுதாரர் கட்டிவைத்து அடித்தான்... இந்த தகவல் பரவியது காட்டுத் தீ  போல... நியாயம் கேட்டு செங்கொடிகளுடன் புறப்பட்டனர்  கீழ்வெண்மணி மக்கள். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ‘பக்கிரிசாமி’ என்ற அடியாள் இறந்துபோனான்... அதற்காகவே காத்திருந்ததுபோல அடியாள் சேனையுடன்... துப்பாக்கி சகிதம் புறப்பட்டான் கோபாலகிருஷ்ண நாயுடு.

அன்று இரவு... கீழ்வெண்மணியை சுற்றி வளைத்து தாக்கினார்கள்... எங்கும் மரண ஓலத்துடன் நெல்லிக்காய்போல சிதறியோடியது மக்கள் கூட்டம். பாதுகாப்புக்காக பெண்களும், முதியவர்களும், சிறுவர்களுமாக 44 பேர் அங்கிருந்த ராமையாவின் குடிசைக்குள் தஞ்சமடைந்தனர். குடிசையை வெளிப்பக்கம் இழுத்துப்பூட்டி குடிசைக்கு தீவைத்தது... கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாள் கும்பல்...

இயேசு அவதரித்ததாக நம்பப்படும் அந்த இரவில் குடிசைக்குள் இருந்த 44 பேரும் தீயில் கருகி மரித்துப் போனார்கள். தப்பிக்க வழியின்றி கதறியபடியே... ஒருவரையொருவர் கட்டியணைத்தபடியே.. மரண பீதியோடிருந்த 44 உயிர்களையும் தின்றுதீர்த்தன தீயின் நாக்குகள்.

இரவு 8 மணிக்கு புகார் கொடுத்து... தகவல் சொல்லியும்... சாவகாசமாக...மறுநாள் காலையில் வந்த கீவளூர் போலீசார்.... கரிக்கட்டைகளாய் கிடந்த மனிதர்களை எண்ணிப்பார்த்து 44 என கணக்கு சொல்லிவிட்டுப்போனது... உலக வரலாற்றில் நடந்த எந்த கொடூரங்களையும்விட இது கொடுமையானது...

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது... கோபால கிருஷ்ண நாயுடு போன்ற பெரிய மனிதர்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவார்கள் என இந்த கோர்ட் நம்பவில்லை’  எனக்கூறி நாயுடு விடுதலை செய்யப்பட்டான்... (பின்னாளில் சில கோபக்கார இளைஞர்கள்... வெண்மணி நெருப்பை நெஞ்சில் ஏந்தி காத்திருந்து... அவர் கணக்கை நேர் செய்தார்கள்) 1968ல் நடந்தது இந்த கொடூரம்... 42 ஆண்டுகள் கழித்து இப்போது ‘நெல்லு’ என்ற பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது...

ஆனால் மேலே சொன்ன எந்த விபரங்களும் அந்தப்படத்தில் இருக்காது... 44 பேரை குடிசையில் எரித்த காட்சியைத்தவிர. இந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியது செங்கொடி சங்கம்தான்.. ஆனால் இந்த வார்த்தையே அந்த படத்தில் இல்லை... அதைவிட கொடுமை என்னவென்றால்... எந்த ஒரு காட்சியிலும்கூட செங்கொடியை கண்ணில் தென்படவில்லை. எல்லா போராட்டக்காட்சிகளிலும் கம்பும், அரிவாளும்தான் இருக்கிறதே தவிர... ஒருத்தர்கூட செங்கொடி பிடித்தபடி போராடவில்லை. ஒரு காட்சியில் 2 குண்டு குண்டானவர்களுடன் சிவப்பு துண்டு போட்டுக்கொண்டு வருவதைத்தவிர... உயிரைக்கொடுத்து இயக்கத்தை நடத்திய ஒருத்தரும் படத்தில் இல்லை.

படத்தில்... கதை நடக்கிற ஊருக்கு பெயரே கிடையாது... அந்த ஊர்க்காரங்க... இந்த ஊர்க்காரங்க... என்று சொல்லியே படத்தை முடித்துவிட்டார்கள்... படத்தில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்று சித்தரிக்கப்பட்டுள்ள ‘பெரியதம்பி’ எந்த ஊருக்கு மிராசுதாரர் என்றெந்த தகவலும் கிடையாது... படத்தில் ஒரே ஆறுதல் கதாநாயகியாக நடித்திருக்கிற நடிகைதான்... அவர் மட்டும் கொஞ்சம் நடிக்கலாமேம என முயற்சி எடுத்திருக்கிறார். மற்றவர்களெல்லாம் கேமிராவுக்கு நேராக கையை நீட்டி பண்யையாருக்கு எதிராக வசனம் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

60களில் நடக்கிற கதைக்கு... 2010 ஸ்டைலில் மெட்டுக்கள்... ஆட்டங்கள்... ஆங்கிலம் கலந்த பாட்டுக்கள.... இசை எஸ்.எஸ்.குமரன்... ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரியில்லை. (அதற்கான வாய்ப்பைத்தான் இயக்குநர் தரவேயில்லையே...  அவர் என்ன பண்ணுவார்....).
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் எம்.சிவசங்கர் என்பவர் (என்ன சொல்வது... ஒன்றும் சொல்வதற்கில்லை... ஆனால்... கேட்பதற்கு நிறைய இருக்கிறது... ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கறீங்க ஸார்...).

வரலாற்றையோ... வரலாற்று நிகழ்வுகளையோ படமாக்குவது கத்திமேல் நடக்கிற வேலை. கொஞ்சம் பிசகினாலும் வரலாற்றுப்பிழை நேர்ந்துவிடும். படத்தின் இயக்குநரும் ‘கீழ்வெண்மணி’ தியாக வரலாற்றை கொஞ்சம் நுணுக்கமாக படித்திருக்க வேண்டும்... அல்லது அதுபற்றிய ஆவணப்படங்களையாவது... (பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ‘ராமையாவின் குடிசை) பார்த்து விவரங்களை சேகரித்துக்கொண்டு கேமிராவை தூக்கியிருக்க வேண்டும்.

அப்பிடி மெனக்கெட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் ‘நெல்லு’ படத்தில் இல்லை. (இப்படியெல்லாம் தவறுதலாக எடுப்பதைவிட... எடுக்காமல் இருப்பதே மேல்...). பெரும் பணத்தையும்... பலரின் தூக்கங்களை பறிகொடுத்த இரவுகளையும்... உழைப்பையும் கொட்டி.. எடுக்கிற சினிமாவில்... மற்றவற்றிற்கு காட்டும் அக்கறையை கதைக்கும் கொஞ்சம் காட்டினால்தான் அது... பேர் சொல்லும் படமாக இருக்கும்... அதுவும் இதுபோன்ற வரலாற்று சம்பவங்களை படமாக்குகிறபோது... இன்னும் கூடுதலான அக்கறையும் உழைப்பும்... எதையும் மறைக்கக்கூடாது என்ற நேர்மையும் இயக்குநருக்கு மிகவும் அவசியம்... வேறென்ன சொல்லமுடியும்.

இது ‘நெல்லு’... இல்லீங்க.... ‘பதர்’...

எஸ்.கருணா


( நன்றி: நம்தினமதி நாளிதழ் )

1 comment:

  1. செங்கொடியின் தியாக வரலாற்றை மறைத்திட எந்தக் கொம்பனாலும் முடியாது.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)