Saturday, December 25, 2010

அந்த டிசம்பர் 25!


டிசம்பர் 25ம் தேதி என்றால் உலக கிறிஸ்தவர்களின் புனிதநாள் என்பது வரலாற்றுப் பதிவாகி 2010 ஆண்டுகளை உலகம் கடந்துவிட்டது. 1968 டிசம்பர் 25, வெண்மணி நிகழ்வு தமிழக உழைப்பாளி மக்கள், குறிப்பாக கிராமப்புறத்து உழைப்பாளிகளின் மனதில் பதிவாகி, இப்போது வரலாற்றுப் பதிவாக மாறிவிட்டது. இயேசுவின் பிறப்பை அறிவிக்க வான் மண்டலத்தில் தோன்றிய ஒளி வெள்ளம் பூமியை நோக்கி நகர்ந்து, நகர்ந்து பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து நிலைகொண்டது என்பது பைபிளின் கதை. ஆனால் 1968 டிசம்பர் 25 இரவு 12 மணிக்கு கீழத்தஞ்சை வெண்மணியில் விவசாயக் கூலி தொழிலாளி இராமய்யாவின் குடிசையில் நிலப்பிரபுக்களால் வைக்கப்பட்ட தீ எரிந்து வான் மண்டலத்தையே சிவப்பு வெளிச்சமாக்கியது. அந்த குடிசைக்குள் நெருப்பில் வெந்து துடித்த 44 தலித் விவசாய கூலித்தொழிலாளிகளின் மரண ஓலமும் விண்ணைத் தொட்டது.


இயேசு பிறப்பிற்குப் பின்பு புதிய கால நிர்ணயம், வரலாற்றில் உருவாக்கப்பட்டது. அது இயேசு பிறப்பிற்கு முன், இயேசு பிறப்பிற்குப் பின் என குறிப்பிடும் வகையில் கி.மு., கி.பி., என்ற காலவரையறை உருவாக்கப்பட்டது. அதே போல் கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளிகள் குறிப்பாக தலித் பண்ணை அடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையில் 1968 வெண்மணி நிகழ்வுக்கு முன், வெண்மணி நிகழ்வுக்குப் பின் என்று இரண்டு கட்டமாக வரலாற்றை பிரித்துச்சொல்லும் மாற்றங்களை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும், பண்ணை அடிமை சமூக அமைப்புமாகத்தான் கீழத்தஞ்சை 1968 வரை நீடித்தது. இந்த நடைமுறை காவிரி டெல்டா பகுதி முழுவதும் பரவியிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு பண்ணைத் தொழிலாளியின் வாழ்க்கை, பிறப்பில் இருந்து இறப்பு வரை அவனாலோ அவனது பெற்றோராலோ எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. அவனின்றி அணுவும் அசையாது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து. ஆனால் எந்த ஆன்மீகவாதிகளும் கடவுளைக் கேட்டு உத்தரவு பெற்று எதையும் செய்வதில்லை. தன் இஷ்டத்திற்கு அனைத்தையும் செய்துவிட்டு என் செயல் எல்லாவற்றையும் கடவுளே தீர்மானிக்கிறார் என கடவுளின் மீது பழிபோடும் போக்கே நடக்கிறது. ஆனால் ஒரு பண்ணை அடிமையின் வாழ்க்கை அப்படியல்ல.

ஆண்டையின் அனுமதியின்றி ஒரு பண்ணைத் தொழிலாளி துரும்பைக்கூட அசைக்க முடியாது. அசைக்கக்கூடாது. அப்படி மீறி செயல்பட்டால் இந்தப் பூவுலகில் அவனுக்கு வாழ்க்கை இல்லை. ஒரு பண்ணை அடிமை அடித்துக் கொல்லப்பட்டால் கொலை செய்த ஆண்டையின் மீது சட்டம் எந்த நடவடிக்கையையும் எடுக்காது. பல நூறு ஆண்டுகள் இருந்த இந்த நடைமுறை இறுக்கத்திற்கு ஒரு தளர்ச்சி ஏற்படத்துவங்கியது 1935க்கும் 1945க்கும் இடைபட்ட காலத்தில்தான்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் ஜமீன்தாரி நிர்வாக முறை, சமஸ்தான ஆட்சி முறை பிரிட்டிஷ் அரசு ரெவின்யூ நிர்வாக முறை இவைகளுக்கு எதிராக விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பும், கலவர நடவடிக்கைகளுமே ஏழை, எளிய விவசாய கூலித்தொழிலாளர்கள் மத்தியில் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட உணர்வுகளை கிளப்பியது. தேசம் முழுவதும் இதுபோன்ற போராட்ட அதிர்வுகள் ஏற்பட்டதன் வேகம் தஞ்சை மண்ணிலும் பரவியது. இந்த அதிர்வுகளை வேகப்படுத்தி, தூண்டுதல் செய்து பாதிக்கப்பட்டோரை வீதியில் இறக்கியது செங்கொடியும், 1944ல் தென்பரையில் உருவாக்கப்பட்ட விவசாயிகள் சங்கமும்தான்.

குத்தகை வாரம், மரக்கால் மாற்றம் எனத்துவங்கி வேலை நேர நிர்ணயம், கூலி நிர்ணயம், கூலி உயர்வு என பல்வேறு முழக்கங்களோடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம் உசுப்பிவிடப்பட்டது. பொருளாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி துவக்கப்பட்ட போராட்டங்கள், காலப்போக்கில் தலித்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும் கிளம்பியது. ஒரு தலித்திடம் ‘உன்னை அடித்தால் திருப்பி அடி’ என்ற தைரியத்தை கொடுத்த தலைவன், செங்கொடி இயக்கத்தலைவன் தோழர் பி.சீனிவாசராவ்தான்.

இந்த முழக்கம் தஞ்சை தரணி முழுவதும் பரவியது. ஆண்டைகளுக்கு இது மின்சாரத்தை பாய்ச்சியது போல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விவசாயத் தொழிலாளிகள், தலித் தொழி லாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமான வர்க்கப்போராட்டமாக மாறியது. பண்ணையாருக்கும் நிலப்பிரபுகளுக்கும் அரசின் காவல்துறையும், சட்டமும் துணை போனது. உழைப்பாளிகளுக்கும் தலித்துகளுக்கும் பண்ணை அடிமைகளுக்கும் செங்கொடியும் அதன் தலைவர்களும் உறுதுணையாக நின்றனர். தோழர் சீனிவாசராவ், அமிர்தலிங்கம், பி.எஸ்.தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, மணலி கந்தசாமி, கே.ஆர்.ஞானசம்பந்தம், என்.ஜி.முருகையன், கோ.வீரய்யன், வெங்கடேச சோழகர், ஏ.எம்.கோபு, ஏ.கே.கணேசன், சமீபத்தில் மறைந்த தோழர் வேதையன் இப்படிப்பட்ட செங்கொடி இயக்க படையின் தளபதிகள் உயிரை துச்சமென மதித்து பண்ணை அடிமைகளையும், தலித் மக்களையும் திரட்டிப் போராடி, புதிய மாற்றங்களை நோக்கி செல்வது என்பது உறுதியானது. தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு மற்றும் நிர்வாகத்தின் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உழைப்பாளி களின் போராட்டம் தோலுரித்துக்காட்டியது.

தலித்துகளை சாட்டையால் அடிக்கக்கூடாது. சாணிப்பால் குடிக்க சொல்லக்கூடாது என்று 1964ல் மன்னார் குடியில் ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் பண்ணை முதலாளிகள் தங்களது அதிகாரமே போகிறதே என்ற ஆவேசத்தில் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற போர்வையில் இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் மாவட்டம் முழுவதும் ஒன்று திரண்டார்கள். கூலித்தொழிலாளிகளுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிவப்புக்கொடியை இறக்கு, பச்சைக் கொடியை ஏற்று என்று விவசாயத் தொழிலாளிகளையும் குத்தகை விவசாயிகளையும் மிரட்டினர். மீறியவர்களின் மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இக்காலத்தில்தான் 1968ல் அரைப்படி நெல் அறுவடைக்கூலியை உயர்த்தித்தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நெல் உற்பத்தியாளர்கள் இப்போராட்டத்தை உடைப்பதற்காக எதையும் செய்யத் தயாரானார்கள். இந்த ஆத்திரத்தின் உச்சகட்டம்தான் வெண்மணி தீ வைப்பு.

எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்று வழக்கில் ஒரு சொல் உள்ளது. பண்ணை அடிமை, தலித் ஒடுக்குமுறை, ஆண்டானின் ஆதிக்கம் இவையனைத்திற்கும் சேர்த்து வெண்மணி தீ வைப்பு ஒரு முடிவை ஏற்படுத்தியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம், தீ வைத்துக் கொளுத்திவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கருதினர். ஆனால் அதுவே எதிர்விளைவுகளை உருவாக்கியது. பூகம்பத்திற்கு பின்பு புதிய மாற்றம் ஏற்படும் என்பதுபோல், வெண் மணி தீவைப்பின் பிரளயம் மாபெரும் மாற்றங்களை தஞ்சை மண்ணில் கொண்டுவந்தது.

நிலப்பிரபுக்களின் நெல் உற்பத்தியாளர் சங்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பண்ணை அடிமை முறை முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சாணிப்பால், சாட்டையடி பழைய கதையாக மாறியது. கீழத்தஞ்சைக்கென ஒரு கூலிச்சட்டம் அமலுக்கு வந்தது. குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டம் நிரந்தரமானது. 1968க்கு முன்பு ஒரு அடி கூட சொந்த இடமில்லாத தலித்துகள், 1968க்குப் பின் இந்த 40 ஆண்டுகால இடைவெளியில் ஒன்றரை லட்சம் தலித் மக்கள் சுமார் 2லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக, உழவடைதாரர்களாக மாறியிருக்கிறார்கள். எனவே சாதிய ஒடுக்குமுறை, தலித்துகள் மீது நேரடி தாக்குதல்கள் பெருமளவு மறைந்துவிட்டது. 1968 டிசம்பர் 25 வெண்மணி பூகம்பம் தஞ்சையில் பல மாற்றங்களைச் செய்ததுடன் புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

வெண்மணி தீயில் வெந்து கருகிய 44 தியாகிகளின் தியாகம் வீணாகவில்லை. செங்கொடி இயக்கத்தின் தலித் உழைப்பாளிகளும், விவசாயத் தொழிலாளிகளும் புதிய வரலாற்றை எழுதுவதற்கான போர்க்களத்தை உருவாக்கிச் சென்றுள்ளார்கள்.

- கட்டுரையாளர்: -ஏ.லாசர், மாநிலத்தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)