Friday, November 26, 2010

பா.ஜ.கவின் இரு தலைகள்!


நில ஊழலில் ஈடுபட்ட அவர் பதவியில் நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் திட்டவட்டமாக இருந்தனர்.

அதே போல ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜூம் எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்றார். மேலும் எடியூரப்பாவின் தீவிர எதிர்ப்பாளரான மூத்த பாஜக எம்பியான அனந்த் குமாரும், அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.

ஆனால், எனது சாதியைச் சேர்ந்த, எனது தீவிர ஆதரவாளர்களான 13 எம்எல்ஏக்களை என்னுடன் ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்ப்பேன், மேலும் பாஜகவுக்குக் கிடைத்து வரும் எனது சமூகமான லிங்காயத்து சாதி ஓட்டுக்களை சிதறடிப்பேன் என்று எடியூரப்பா விடுத்த மிரட்டலால் பாஜக தலைவர்கள் அவருக்குப் பணிந்து விட்டனர்.

மேலும் ரெட்டி சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் நடத்தி வரும் உட்கட்சி கோஷ்டி அரசியலை பகிரங்கமாக்குவேன். மூத்த பாஜக தலைவர்கள் எனது அரசால் பெற்ற லாபங்களையும், கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் உள்ள அவர்களது சொத்து விவரங்களையும் வெளியிடுவேன். மேலும் கட்சிக்கு பணம் வரும் வழிகளையும் அடைப்பேன் என்றும் எடியூரப்பா மிரட்ட, அவரே பதவியில் நீடிக்கட்டும் என்ற முடிவுக்கு பாஜக தலைவர்கள் வந்துவிட்டனர்.

அவரிடம், இனிமேல் அரசாங்கத்தில் உங்களது மகன்களும் உறவினர்களும் தலையிடுவதை மட்டும் தவிர்த்து விடுங்கள், ரெட்டிகள் மீது கை வைத்துவிடாதீர்கள், எல்லா கோஷ்டிகளையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று சில நிபந்தனைகளை மட்டும் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி ஆகியோர் மூலம் ‘வேண்டுகோளாக’ வைத்து பெங்களூருக்கு அனுப்பி வைத்துவிட்டது பாஜக மேலிடம்.

ஒருவழியாக தனது தலைவர்களை மிரட்டி பதவியை தக்க வைத்துக் கொண்டு, பெங்களூர் வந்த எடியூரப்பாவுக்கு அவரது ஆதரவாளர்கள், சென்னையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசாவுக்கு திமுக வினர் வரவேற்பு அளித்த பாணியில், விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, வழக்கம் போல தரும் உறுதிமொழி களை மீண்டும் தந்தார். அவர் கூறுகையில், “பாஜக மேலிடம் கர்நாடக முதல்வராக தொடர்ந்து நீடிக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. இனிமேல் கர்நாடகத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.” என்றார்.

இதற்கிடையே எடியூரப்பா குடும்பத்தினரின் நில ஊழல் தொடர்பாக லோக் அயுக்தா விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக தனி நீதி விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் லோக் அயுக்தாவின் விசாரணையை முடக்க அவர் முயல்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாங்கள் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எங்களிடம் கேட்காமல் நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது ஏன் என்று லோக் அயுக்தா தலைவரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் வியாழனன்று தனது மகன் விஜயேந்திரா மற்றும் மகள் உமாதேவியை தனது அரசு இல்லத்திலிருந்து காலி செய்யுமாறு எடியூரப்பா கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
(ஆதாரம் : தீக்கதிர்)

சித்தாந்தம், கலாச்சாரம், தேசீயம் என்று மார்தட்டிய கட்சிக்கு எதுவும் கிடையாது என்பது அம்பலமாகியுள்ளது. கட்சி, கட்டுப்பாடு என்பதெல்லாம் வெறும் பம்மாத்துதான். மக்களிடம் பிரிவினையையும், துவேஷத்தையும் வளர்ப்பது, அதில் குளிர் காய்வது, அதிகாரத்துக்கு வருவது என்ற அதன் திட்டத்தில் இப்போது ஊழலும் புகுந்து நாற்றமெடுக்க ஆரம்பத்திருக்கிறது. மோடியும், எடியூரப்பாவும் பா.ஜ.கவின் இருதலைகள்.

2 comments:

  1. இந்த கட்டுரையை படிச்சதும், அவங்க இருதலைகள் அல்ல... தறுதலைகள் என்று சொல்லத்தோன்றுகிறது...

    ReplyDelete
  2. தியாகராஜன்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)