500 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் காலனிய நாடாகவும் சிலகாலம் அமெரிக்காவின் ஒரு பகுதியாகவும் அடிமைப்பட்டிருந்த கியூபா, மக்கள் புரட்சியின்மூலம் 1959 இல் விடுதலையடைந்தது. அதன்பின்னர், மக்கள்நலன் சார்ந்த அரசின் திட்டங்களாலும், சோவியத் யூனியனின் உதவிகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளாலும், வளர்ச்சிப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தது கியூபா.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், 1960, 1992, 1996, 1999 என பல ஆண்டுகளில் பல்வேறு சட்டங்களை இயற்றி, கியூபாவின் மீது மிகப்பெரிய பொருளாதார தடைவிதித்து அதனை இன்றுவரை நடைமுறைப்படுத்தியும்
வருகிறது அமெரிக்க அரசு. இதனால் சிறிய பென்சில் கூட கியூபாவிற்குள் நுழையவிடாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறது.
90 களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் உடைந்ததும், கியூபாவிற்கும் பிரிந்துகொண்டிருந்த சோவியத் யூனியனுக்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்தது. அமெரிக்காவின் வர்த்தகத்தடையும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் ஒன்றுசேர்ந்ததால், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை கியூபா சந்திக்கவேண்டியதாயிற்று. ஒன்றிரண்டு ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34 % வரை குறைந்தது. 80 சதவீதமான இறக்குமதியையும், 80 சதவீதமான ஏற்றுமதியையும் இழந்தது கியூபா. வானத்தின் உயரத்தில் பறந்துகொண்டிருக்கிற ஒரு வானூர்தியின் இஞ்சின் திடீரென ஒட்டுமொத்தமாக செயலிழந்துபோனால், அந்த வானூர்தி ஓர் அடிகூட நகரமுடியாமல் அவ்விடத்திலேயே விழுந்துவிடுமல்லவா! அதுபோன்ற நிலைக்குதான் கியூபாவும் தள்ளப்பட்டது. எண்ணை இறக்குமதி குறைந்ததால், பேருந்துகள் ஓடாமல் நின்றுபோயின. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மின்சாரம் இல்லாமல் நாடே இருளில் தவித்தது. உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. பசியும் பட்டினியும் மக்களின் வாழ்க்கைக்குள் நுழைந்தன.
அடுத்தது என்ன? என்கிற கேள்வி கியூப மக்களிடையே மிகப்பெரிய சவாலை எழுப்பிவிட்டிருந்தது.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த உலகமே சந்திக்கப்போகிற ஒரு பிரச்சனையினை உலகின் முதல்நாடாக கியூபா சந்திக்க நேரிட்டது.
அது என்ன பிரச்சனை? அதனை கியூபா எப்படி எதிர்கொண்டது? கடந்த இருபது ஆண்டுகளில் என்னதான் சாதிக்கமுடிந்தது? உலக நாடுகள் கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள பாடம் இருக்கிறதா?
அதுதான் "Peak Oil crisis". அதனை கியூபா எப்படி எதிர்கொண்டது என்பதனை "The Power of Community: How Cuba Survived Peak Oil" என்கிற படத்தின்மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் "ஃபெயித் மோர்ஹன்". பெட்ரோல் உள்ளிட்ட எல்லா எண்ணை பொருட்களும் இன்றுமுதல் கிடைக்காது என்கிற நிலை வந்தால், என்னவாகும்? நம்முடைய நிலை என்ன? அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று கூட நாம் நினைத்துப் பார்க்கவியலாது. அதற்காக தயாராகாமல், "பீக் ஆயில் நெருக்கடி" என்றால் என்னவென்றுகூட அறியாமல் இருக்கிறோம்.
ஆனால் உலகின் முதல் நாடாக, கியூபா அதனை சந்திக்க நேரிட்டது. சோவியத் யூனியனின் உதவியானால் கிடைத்துவந்த எண்ணையும், அமெரிக்காவின் மூலமாக அமல்படுத்தப்பட்டிருக்கிற தீவிர வர்த்தகத்தடையும் ஒன்றுசேர்ந்து, 90 களின் துவக்கத்தில் "பீக் ஆயில் நெருக்கடியினை" சந்தித்தது கியூபா. புதிதாக உற்பத்தி செய்யமுடியாத எண்ணைவளத்தை வேறு எந்த நாட்டிலிருந்து பெறலாம் என்று சிந்திக்காமல், அதற்கு மாற்று என்ன சிந்தித்தனர் கியூப மக்கள்.
பீக் ஆயில் நெருக்கடி:
பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணையின் தேவை, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வாகனங்கள் எல்லாமே எண்ணெயினால்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. எண்ணையில்லாமல் உலகின் ஓரணும் அசையாது என்கிற நிலையின்று உருவாகியிருக்கிறது. ஆனால் எண்ணைவளம் என்பது ஏதோ பூமியிலிருந்து எடுக்க எடுக்க சுரக்கக்கூடிய பொருளல்ல. குடத்திலிருக்கும் நீரைப்போல்தான். எடுக்க எடுக்க குறையத்தான் செய்யும். நம்முடைய தாகம் குடத்திற்கும் புரியாது;நீரும் அறியாது. ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி லிட்டர் எண்ணையினை உலகளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதாவது, பல கோடி வருடங்களாக பூமிக்கடியில் உருவான ஒட்டுமொத்த எண்ணைவளத்தினை, கடந்த 125 ஆண்டுகளுக்குள் பாதியளவிற்கு நாம் உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி தீர்த்துவிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் நமது தேவை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல், அதிகளவில் எண்ணையை பூமியிலிருந்து எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட வேளையிலிருந்து நாம் எடுக்கிற எண்ணையின் அளவு சரியத்துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் அளவு குறைந்து, இறுதியில் எண்ணையே இல்லாமல் போகிற தருணமும் வரும். அவ்வாறு குறையத்துவங்குகிற அந்நிலையைத்தான் நாம் "பீக் ஆயில்" என்கிறோம்.
1949 இல் கிங் குப்பர்ட் என்கிற புவியியல் வல்லுநர் பீக் ஆயில் நெருக்கடி குறித்த ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டார். 1970 இல் "பீக் ஆயில்" புள்ளியினை எட்டிவிடுமென்றும், அதன்பின் அமெரிக்காவின் என்னை உற்பத்தி குறையத்துவங்கிவிடுமென்றும் சொன்னார். அவர் சொல்லியபடியே, உலகளவில் தினந்தோறும் 20 சதவீதம் அளவிற்கு எண்ணையினை பயன்படுத்துகிற அமெரிக்கா, 1970 இலேயே பீக் ஆயில் நிலையினை எட்டிவிட்டது. (மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக அமெரிக்கா மாறியதற்கு இது மிகமுக்கிய காரணம்).
1997 இல், பெட்ரோலிய புவியியல் வல்லுனரான கோலின் கேம்ப்பெல் "The Coming Oil Crisis" என்கிற ஆய்வுக்கட்டுரையொன்றினை வெளியிட்டார். (http://www.oilcrisis.com/library/cccrisis.htm) மூன்றாண்டுகளுக்குப்பிறகு, பல அறிவியல் ஆய்வாளர்களுடன் இணைந்து பீக் ஆயில் ஆய்வுக்கழகத்தினை துவங்கினார். 2002 இல் அவர்கள் அனைவரும் ஸ்வீடனில் மாநாடொன்றினையும் நடத்தி விவாதித்தனர்.
2001 இல் கென் டெஃபேஸ் என்கிற ஆய்வாளர் "ஹுப்பர்ட் பீக்" என்கிற ஆய்வு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். (http://press.princeton.edu/chapters/s8845.html).
2003 இல் ரிச்சர்ட் ஹெயின்பேர்க் என்கிற கல்வியாளர் "தி பார்ட்டி இஸ் ஓவர்" என்கிற புத்தகத்தை எழுதினார் (http://en.wikipedia.org/wiki/The_Party%27s_Over:_Oil,_War,_and_the_Fate_of_Industrial_Societies).
2005 இல் மேட் சிம்மன்ஸ் என்கிற எழுத்தாளர், "ட்வைலைட் இன் த டெசர்ட்" என்கிற புத்தகத்தில் சவுதி அரேபியாவின் எண்ணை இருப்பு குறித்து எழுதினர்.
இப்படியாக ஏராளமான புத்தகங்களும் கட்டுரைகளும் "பீக் ஆயில் நெருக்கடி" குறித்து எழுதப்பட்டன. குறிப்பாக 2004 மற்றும் 2005 இல் மட்டும் 25 முக்கியமான புத்தகங்கள் வெளியாகின. இங்கொன்றும் அங்கொன்றும் சில நாடுகளில் எண்ணை தீர்ந்து போன செய்திகளாக இருந்தது, உலகம் முழுவதிலும் எண்ணைப்பற்றாக்குறை வரும் என்கிற எச்சரிக்கை மணியோசையினை ஆய்வாளர்கள் எழுப்பினர். ஆனாலும் நாம் இந்நெருக்கடிக்கு தயாராகவில்லை. ஒட்டுமொத்த எண்ணை வளத்தில் பாதியளவிற்கு நாம் பயன்படுத்தித் தீர்த்தபின், எண்ணை உற்பத்தி சரியத்துவங்கும். ஆனால் உலகின் மக்கள்தொகையும் நம்முடைய எண்ணை தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆக, எண்ணை, இயற்கை எரிவாயு, நிலக்கரி, யுரேனியம் போன்ற உற்பத்தி செய்யமுடியாத இயற்கை பொருட்களை, நமக்குப் பின்னால் வருகிற தலைமுறையினருக்கு இல்லாமல் செய்து, முடிந்தவரை பயன்படுத்தித் தீர்க்கிறோம்.
எண்ணை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிற 48 இல் 32 நாடுகள் ஏற்கனவே "பீக் ஆயில்" நிலையினை அடைந்துவிட்டன (ஜெர்மனி, பிரான்சு, மெக்சிகோ, ரஷியா, அமெரிக்கா உள்பட). 2020 இல் பீக் ஆயில் நெருக்கடி உலகளவில் வரலாம் என்று சர்வதேச எரிபொருள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. சமீபத்தில் குவைத் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அறிக்கையிலோ, "பீக் ஆயில் நெருக்கடி" 2014 இலேயே வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. 2005 ற்குப்பிறகு எண்ணை உற்பத்தி உயராமலும் 2011 இல் சிறிய அளவில் உயர்ந்திருப்பதும் இச்செய்திகளை உறுதிசெய்யும் வகையில் இருக்கின்றன.
இக்கட்டுரைத்தொடரின் இரண்டாம் பகுதி -
கியூபா- நெருக்கடிகள் கடந்த மக்கள் தேசம் (பகுதி-2)
அடுத்தது என்ன? என்கிற கேள்வி கியூப மக்களிடையே மிகப்பெரிய சவாலை எழுப்பிவிட்டிருந்தது.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த உலகமே சந்திக்கப்போகிற ஒரு பிரச்சனையினை உலகின் முதல்நாடாக கியூபா சந்திக்க நேரிட்டது.
அது என்ன பிரச்சனை? அதனை கியூபா எப்படி எதிர்கொண்டது? கடந்த இருபது ஆண்டுகளில் என்னதான் சாதிக்கமுடிந்தது? உலக நாடுகள் கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள பாடம் இருக்கிறதா?
அதுதான் "Peak Oil crisis". அதனை கியூபா எப்படி எதிர்கொண்டது என்பதனை "The Power of Community: How Cuba Survived Peak Oil" என்கிற படத்தின்மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் "ஃபெயித் மோர்ஹன்". பெட்ரோல் உள்ளிட்ட எல்லா எண்ணை பொருட்களும் இன்றுமுதல் கிடைக்காது என்கிற நிலை வந்தால், என்னவாகும்? நம்முடைய நிலை என்ன? அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று கூட நாம் நினைத்துப் பார்க்கவியலாது. அதற்காக தயாராகாமல், "பீக் ஆயில் நெருக்கடி" என்றால் என்னவென்றுகூட அறியாமல் இருக்கிறோம்.
ஆனால் உலகின் முதல் நாடாக, கியூபா அதனை சந்திக்க நேரிட்டது. சோவியத் யூனியனின் உதவியானால் கிடைத்துவந்த எண்ணையும், அமெரிக்காவின் மூலமாக அமல்படுத்தப்பட்டிருக்கிற தீவிர வர்த்தகத்தடையும் ஒன்றுசேர்ந்து, 90 களின் துவக்கத்தில் "பீக் ஆயில் நெருக்கடியினை" சந்தித்தது கியூபா. புதிதாக உற்பத்தி செய்யமுடியாத எண்ணைவளத்தை வேறு எந்த நாட்டிலிருந்து பெறலாம் என்று சிந்திக்காமல், அதற்கு மாற்று என்ன சிந்தித்தனர் கியூப மக்கள்.
பீக் ஆயில் நெருக்கடி:
பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணையின் தேவை, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வாகனங்கள் எல்லாமே எண்ணெயினால்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. எண்ணையில்லாமல் உலகின் ஓரணும் அசையாது என்கிற நிலையின்று உருவாகியிருக்கிறது. ஆனால் எண்ணைவளம் என்பது ஏதோ பூமியிலிருந்து எடுக்க எடுக்க சுரக்கக்கூடிய பொருளல்ல. குடத்திலிருக்கும் நீரைப்போல்தான். எடுக்க எடுக்க குறையத்தான் செய்யும். நம்முடைய தாகம் குடத்திற்கும் புரியாது;நீரும் அறியாது. ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி லிட்டர் எண்ணையினை உலகளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதாவது, பல கோடி வருடங்களாக பூமிக்கடியில் உருவான ஒட்டுமொத்த எண்ணைவளத்தினை, கடந்த 125 ஆண்டுகளுக்குள் பாதியளவிற்கு நாம் உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி தீர்த்துவிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் நமது தேவை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல், அதிகளவில் எண்ணையை பூமியிலிருந்து எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட வேளையிலிருந்து நாம் எடுக்கிற எண்ணையின் அளவு சரியத்துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் அளவு குறைந்து, இறுதியில் எண்ணையே இல்லாமல் போகிற தருணமும் வரும். அவ்வாறு குறையத்துவங்குகிற அந்நிலையைத்தான் நாம் "பீக் ஆயில்" என்கிறோம்.
1949 இல் கிங் குப்பர்ட் என்கிற புவியியல் வல்லுநர் பீக் ஆயில் நெருக்கடி குறித்த ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டார். 1970 இல் "பீக் ஆயில்" புள்ளியினை எட்டிவிடுமென்றும், அதன்பின் அமெரிக்காவின் என்னை உற்பத்தி குறையத்துவங்கிவிடுமென்றும் சொன்னார். அவர் சொல்லியபடியே, உலகளவில் தினந்தோறும் 20 சதவீதம் அளவிற்கு எண்ணையினை பயன்படுத்துகிற அமெரிக்கா, 1970 இலேயே பீக் ஆயில் நிலையினை எட்டிவிட்டது. (மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக அமெரிக்கா மாறியதற்கு இது மிகமுக்கிய காரணம்).
1997 இல், பெட்ரோலிய புவியியல் வல்லுனரான கோலின் கேம்ப்பெல் "The Coming Oil Crisis" என்கிற ஆய்வுக்கட்டுரையொன்றினை வெளியிட்டார். (http://www.oilcrisis.com/library/cccrisis.htm) மூன்றாண்டுகளுக்குப்பிறகு, பல அறிவியல் ஆய்வாளர்களுடன் இணைந்து பீக் ஆயில் ஆய்வுக்கழகத்தினை துவங்கினார். 2002 இல் அவர்கள் அனைவரும் ஸ்வீடனில் மாநாடொன்றினையும் நடத்தி விவாதித்தனர்.
2001 இல் கென் டெஃபேஸ் என்கிற ஆய்வாளர் "ஹுப்பர்ட் பீக்" என்கிற ஆய்வு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். (http://press.princeton.edu/chapters/s8845.html).
2003 இல் ரிச்சர்ட் ஹெயின்பேர்க் என்கிற கல்வியாளர் "தி பார்ட்டி இஸ் ஓவர்" என்கிற புத்தகத்தை எழுதினார் (http://en.wikipedia.org/wiki/The_Party%27s_Over:_Oil,_War,_and_the_Fate_of_Industrial_Societies).
2005 இல் மேட் சிம்மன்ஸ் என்கிற எழுத்தாளர், "ட்வைலைட் இன் த டெசர்ட்" என்கிற புத்தகத்தில் சவுதி அரேபியாவின் எண்ணை இருப்பு குறித்து எழுதினர்.
இப்படியாக ஏராளமான புத்தகங்களும் கட்டுரைகளும் "பீக் ஆயில் நெருக்கடி" குறித்து எழுதப்பட்டன. குறிப்பாக 2004 மற்றும் 2005 இல் மட்டும் 25 முக்கியமான புத்தகங்கள் வெளியாகின. இங்கொன்றும் அங்கொன்றும் சில நாடுகளில் எண்ணை தீர்ந்து போன செய்திகளாக இருந்தது, உலகம் முழுவதிலும் எண்ணைப்பற்றாக்குறை வரும் என்கிற எச்சரிக்கை மணியோசையினை ஆய்வாளர்கள் எழுப்பினர். ஆனாலும் நாம் இந்நெருக்கடிக்கு தயாராகவில்லை. ஒட்டுமொத்த எண்ணை வளத்தில் பாதியளவிற்கு நாம் பயன்படுத்தித் தீர்த்தபின், எண்ணை உற்பத்தி சரியத்துவங்கும். ஆனால் உலகின் மக்கள்தொகையும் நம்முடைய எண்ணை தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆக, எண்ணை, இயற்கை எரிவாயு, நிலக்கரி, யுரேனியம் போன்ற உற்பத்தி செய்யமுடியாத இயற்கை பொருட்களை, நமக்குப் பின்னால் வருகிற தலைமுறையினருக்கு இல்லாமல் செய்து, முடிந்தவரை பயன்படுத்தித் தீர்க்கிறோம்.
எண்ணை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிற 48 இல் 32 நாடுகள் ஏற்கனவே "பீக் ஆயில்" நிலையினை அடைந்துவிட்டன (ஜெர்மனி, பிரான்சு, மெக்சிகோ, ரஷியா, அமெரிக்கா உள்பட). 2020 இல் பீக் ஆயில் நெருக்கடி உலகளவில் வரலாம் என்று சர்வதேச எரிபொருள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. சமீபத்தில் குவைத் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அறிக்கையிலோ, "பீக் ஆயில் நெருக்கடி" 2014 இலேயே வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. 2005 ற்குப்பிறகு எண்ணை உற்பத்தி உயராமலும் 2011 இல் சிறிய அளவில் உயர்ந்திருப்பதும் இச்செய்திகளை உறுதிசெய்யும் வகையில் இருக்கின்றன.
பீக் ஆயில் நெருக்கடியினை சந்தித்த அமெரிக்கா போன்ற நாடுகளும் நிரந்தர மாற்றுத்தீர்வினை நோக்கி நடைபோடாமல், மற்ற நாடுகளை சுரண்டி எண்ணையெடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் பீக் ஆயில் நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட கியூபா இதனை எப்படி எதிர்கொண்டது என்கிற ஆய்வு, உலகின் மற்ற நாடுகளுக்கெல்லாம் பயன்படுவதோடு பாடமாகவும் இருக்கும்.(தொடரும்...)
இக்கட்டுரைத்தொடரின் இரண்டாம் பகுதி -
கியூபா- நெருக்கடிகள் கடந்த மக்கள் தேசம் (பகுதி-2)
-இ.பா.சிந்தன்
கட்டுரை நல்ல ஆரம்பம்
ReplyDeleteஅடுத்த பகுதி படிக்க ஆர்வமாக இருக்கிரது!
நானும் இதை பற்றி சில விஷயங்கல் செவி வலியாக கேல்வி பட்டு இருக்கேன் அவ்வலவுதான்!
தொடருங்கல்!
---
தம2