Wednesday, January 4, 2012

நாட்டை யாரால் காப்பாற்ற முடியும்?




கொல்கத்தாவின் ஏழு அடுக்குமாடி அம்ரி தனியார் மருத்துவமனையில் விடியற்காலை ஏற்பட்ட தீவிபத்தில் 90 நோயாளிகள் மரணம். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாபவேட்டைக்கு பணம் மட்டுமல்ல, உயிரும் பலியாகியது. இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்து 8 பேரின் உயிரை காப்பாற்றிய கேரளத்தின் தியாகச் செல்விகள் வினிதா , ரம்யா ஆகிய இருவரும் கூலித்தொழிலாளர்களின் மகள்கள். மற்றொரு விஷயம் 8ம் வகுப்பு சிறுவன் சுஜித்காயல் காப்பாற்றிய 6 நோயாளிகள். மருத்துவமனைக்கு பின்புறமுள்ள குடிசைவாசி. உயிர்களை பறிக்கும் நவீன தாராளமயம். நேர் எதிராக தங்கள் உயிரை அர்ப்பணிக்க தயங்காத ஏழை, எளிய சாதாரண மக்கள். இதுதான் சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான முரண்பாட்டின் குணாம்சம்.

நடுங்க வைக்கும் குளிரில் காகித தாள்களை போர்வையாக்கி நகரத்து வீதிகளில் ஏழைகள் படுத்துறங்கும் நிலைமையில் இவ்வுலகம் 21ம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறமோ, தினசரி பல ஆயிரங்கோடி ரூபாய் அளவில் பணப்புழக்கம். அமெரிக்காவின் நடவடிக்கைகளின் காரணமாக ஊகபேர வணிகம் இரண்டாயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. விழிபிதுங்கும் விலைவாசி. இனி என்னாகுமோ என்று நிம்மதியற்ற மக்கள். எல்லாம் நவீன தாராளமயத்திற்கே வெளிச்சம்.

20 ஆண்டுகளாக செயல்படும் நவீன தாராளமய, உலகமய நெறிகளும் கொள்கைகளும் புவியில் பேராதிக்கம் பெற்றுள்ளது. சந்தைப்பொருளாதாரம், தனியார் நிறுவனங்கள் , தனியார்மயம், அரசு கட்டுப்பாடற்ற வர்த்தகம் அதன் தாரகமந்திரம். ஒரு சிலர் பெரும்செல்வங்களைக் குவிக்கின்றனர். மக்களின் பிழைப்பு சாதனங்கள், உடைமைகள் பறிக்கப்பட்டு மூலதனமாகிறது. மூலதனக் குவியல் வரலாறு காணாத வகையில் நடைபெறுகிறது. அதன் வழியில் குறுக்கிடக்கூடிய அனைத்தையும் அடித்து நொறுக்கி தள்ளிட சகல விதத்திலும் தனது பேராற்றலை பிரயோகிக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் வறுமையும், வேலையின்மையும் தலைவிரித்தாடுகிறது. ஆனாலும் கட்டற்ற வர்த்தக மண்டலங்களை ஏற்கிறார்கள். உலகமயம் மூன்றாம் உலகநாடுகளின் சுயசார்பை இல்லாமல் செய்துவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், நிதியாதாரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் ஆன்மாவைத் தவிர அனைத்தையும் விலைக்கு வாங்குகின்றன. இயற்கை வளங்கள், ஆலைகள், ஒட்டுமொத்த தகவல் தொடர்பு சாதனங்கள், சேவைப் பிரிவுகள் இன்னும் பலவற்றையும் விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வியாபாரத்தை உலகெங்கிலும் நடத்திவருகிறார்கள். சமமற்றவர்கள், சக்தியற்றவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட் டியிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுதான் நடக்கிறது. இந்தப் பாதை வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?

நம்மிடையே இருந்த சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் எங்கே ? ஏழை நாடுகளிலிருந்து வேலைக்கு எடுத்து அழைத்துச் செல்கிறார்கள். சந்தைகளில் அடிமைகளை விலைக்கு வாங்குவதைப்போல. செல்வந்த நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அதேநேரத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றக்கூடிய தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்குவதே பல்கலைக்கழகங்களின் தலையாயப் பணியாக இருக்கிறது. செல்வந்த நாடுகளிலும் வேலையின்மை என்பது தீவிரத்துவம் வாய்ந்த பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் முதலீடுகளை அதிகரித்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகையில், மறுபுறம் அதிக அளவில் மக்கள் வேலையின்மைக்கு ஆளாகிறார்கள். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கியதாகவே இந்த அமைப்பு இருக்கிறது. மனித சமூகத்திற்கு இதனால் என்ன பயன் ?.

சந்தை என்பதே வழிபாட்டுக்குரிய தெய்வமாகிவிட்டது. எல்லா நேரங்களிலும் இவை பற்றிய புனிதவேதங்கள் ஓதப்பட்டு வருகின்றன. நுகர்வு சமூகத் தில் நிலவிவரும் ஆடம்பர மோகமும், சந்தை பொருளாதாரத்தின் ஆதாயங்கள் பற்றிய அபத்தமான கருத்தோட்டமும் மக்களை பாதிக்கிறது. ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை வர்த்தக விளம்பரம் காட்டப்படுகிறது. கருத்துப் பிரச்சாரம் மூலம் மக்கள் மனதில் விஷவித்தை விதைக்கிறார்கள். வளராத சூழலில் இரட்டிப்பான வாகன உற்பத்தி என்பது ஏற்க முடியாத முன்மாதிரிகள். பலகோடி விளைநிலங்கள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். இதன் விளைவு, நெல் மணி விளைவிக்க ஒரு சாண் இடம்கூட மிஞ்சாது. சமூக மேம்பாட்டிற்கான நிதியாதாரங்களை இதுபோன்ற வழிகளில் விரயமாக்கி, மூன்றாம் உலக நாடுகளின் அழிவிற்கே வகை செய்கிறது. இது கருத்துக்களின் விளைவேயன்றி வேறல்ல.

இயற்கை வளங்களை அழித்துவருவதன் வாயிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள கேடுகள் மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. காற்றும், நிலத்தடி நீரும், நதிகளும், கடலும் ஏன் பிரபஞ்சமே சுற்றுச்சூழலால் மாசடைகிறது. முன்கூட்டி அறியமுடியாத வகையில் பருவகால மாறுபாடுகள் நிகழ்கின் றன. இன்றைய தினம் மனித இனத்திற்கே கடுஞ்சோதனையான கட்டமாகும். மனித சமூகத்தின் மனசாட்சியை அசைய வைக்கிறது. முதலாளித்துவத்தால் ஏற்பட்ட கேடு இவை. இதை யாராலும் மறுக்க முடியுமா?

விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கோடீஸ்வரர்களால் உலகெங்கிலும் பொருளாதாரப் பேரழிவினை ஏற்படுத்த முடிகிறது என்றால், என்னவிதமான பொருளாதார நிலை தற்போது நிலவி வருகிறது?. அதேநேரத்தில் சிக்கல் வலுக்கும்போது, மயக்கமளிக்கும் வகையில் பொய்யாலும், பேச்சுத்திறனாலும் மக்களை மோசடி செய்கிறார்கள். எல்லாம் சரியாகவே இருக்கிறது. பொருளாதாரம் சீரான நிலையில் தங்கு தடையின்றி செல்கிறது. இந்த வாசகத்தைதான் அவர் கள் அடிக்கடி சொல்கிறார்கள். உண்மையில் உலகெங்கிலும் மக்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார்கள்.

தவறான கருத்தோட்டங்களை, துவேஷத்தை மாற்றிட பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இனபேத உணர்வு வெகு ஆழமாக கூடுதலாகவே மக்கள் மனதில் குடிகொண்டுள்ளது. இதுபோன்ற நஞ்சினை ஆள்வோர் ஊட்டியிருக்கின் றனர். பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். மிகவும் மோசமான இனப்பாகுபாட்டு கலாச்சாரம் மக்கள் மனதில் திணிக் கப்பட்டதன் விளைவே இது.

தற்போதைய காலச்சூழலில் நெறி முறை மற்றும் கலாச்சார உணர்வுகளை சித்தரிக்கக்கூடிய திரைப்படங்களை காண்பது அரிது. பாலுணர்வு, அடியாள் கும்பல், வன்முறைகள் ஆகியவற்றை பிரத்யேகமாக சித்தரிக்கக்கூடிய திரைப்படங் களிலிருந்து மீள்வது எப்படி? வர்த்தக உணர்வு, கலாச்சாரத்தில் தகாதமுறை யில் ஊடுருவியுள்ளது. தனித்துவம், ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களை கலாச்சாரம் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது பழமைவாத மதப்பிரிவுகள் ஊடுருவுகின்றன. அவர்கள் நாட்டை பல துண்டுகளாக்க முயற்சிக்கிறார்கள். கலாச்சாரம் பற்றி பேசும் போது அரசியல் கலாச்சாரத்தை மறந்துவிடுவதற்கில்லை. மேம்பாடு, கலாச்சாரம் தேவைப்படும் நிலையில் இருக்கிறது என்றால் அது அரசியலே.

அநீதி, அசமத்துவம், நவீன தாராள வாதம், நுகர்வு கலாச்சார சமூகத்தின் ஊதாரித்தனம் என பல்வேறு சமூக மற்றும் மனிதகேடுகள் யாவுமே இன்றைய பொருளாதார அமைப்பு முறையினால், அவற்றை நம்மீது திணிக்கும் அமைப்புகளினால்தான் நேரிடுகிறது. 300 ஆண்டுகால முதலாளித்துவத்திற்குப் பின்னர் இவ்வுலகில் 80 கோடி பேர் பசியும் பட்டினியுமாக உள்ளனர்.

அனைத்துவிதமான பிரச்சாரமும், உலகமெங்கும் பரவி நிற்கும் ஊடகங்களும் புரட்சிகர நடைமுறைகளுக்கு எதிராக சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் யுத்தத்தை நடத்துகின்றன. இதனை எதிர்த்து முதலாளித்துவ அமைப்புமுறை தவிர்க்க முடியாத வகையில் வீழ்ச்சியடையும் என்று இடதுசாரிகள் நிரூபிக்க விரும்புகிறார்கள். மனிதஇனம் இப்பிரபஞ்சத்தில் அளப்பரிய சக்தி பெற்றதாகும். ஆனால் இன்றைய தினம் மனிதகுலம் ஒரு மாபெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.

இத்தகைய மாபெரும் சிக்கலில் இருந்துதான் மகத்தான தீர்வுகள் பிறக்கக்கூடும். ஒரு கம்யூனிஸ்ட் மனித இனம் அனைத்திற்காக போராடுகிறான். இல்லாமைக்கும், வறுமைக்கும் எதிராக விநியோக நீதிக்கான தொடர்ச்சியான நீடித்த போராட்டங்களை நாம் நடத்தியாகவேண்டும். பிறரின் ரொட்டியை சார்ந்து வாழும் காலம் நமக்கு வரவேக் கூடாது. மிச்சமீதியை பொறுக்குவது சிலருக்கு பழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் புரட்சியாளர்கள் ஒருபோதும் இந்த ஈனத்தை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

ஒரு நாட்டை, அதன் சுதந்திரத்தை, நேர்மையை தேசாபிமானிகளாலும் , புரட்சியாளர்களாலும், தைரியமான ஆண்களாலும், பெண்களாலும் மட்டும்தான் காக்க முடியும். கருத்துக்களுக்கான யுத்தத்தை நடத்தி வருகிறோம். உண்மையிலேயே நீதியும், நியாயமும் மிக்க உலகை அடை வது என்பதே நிகழக்கூடியதே. அப்போது மனிதகுல விடுதலை என்பது சுலப மடைகிறது.

(கட்டுரை, தோழர் பிடல் காஸ்ட்ரோ உரைகளைத் தழுவியது)
-கே.பாலச்சந்தர்

1 comment:

  1. அனைத்தும் உண்மை! ஆனால்இந்த பிரச்சனைகளை உணர்ந்த நாம் இன்றும் இந்த ஏகாதி பதிய முதலாளித்துவ அமைப்போடு சமரசம் செய்து கொண்டு பாராளுமன்றிதின் வாலாகவோ அல்லது இடது தீவீரமாகவோ தான் இருகிறோம் > நம் கண்களால் உலகை காணும் அதே நேரம் சமூகத்தின் புறநிலையை சரியாக ஆய்வு செய்து அதன் வழிநிற்போம் பொத்தாம் பொதுவாக இடது சாரி என்று பேசுவது வேலைக்கு ஆகாது !

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)