எதையாது செய்து நான் என்றும் ஏகாதிபத்திய அடிமை என்று நிருப்பிக்க தொடர்ந்து பல்வேறு மாசோதாக்களை கொண்டுவந்து குறிப்பாக அமெரிக்காவிடம் நல்லபெயர் எடுக்க முயற்சி செய்து வருகிறார் பிரதமர். ஏற்கனவே அன்னிய முதலீட்டு மசோதா காத்துகிடக்கிறது. இன்நிலையில் மன்மோகன்சிங் அரசு புதிய மரபனு மசோதாவை கொண்டுவர துடிக்கிறது. அதுகுறித்து இந்து நாளேட்டில் வந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள “இந்திய உயிரி தொழில் நுட்பம் ஒழுங்காற்று ஆணைய மசோதா நிறைவேற்றப்படுமேயானால், அது நம் நாட்டின் விவசாயம், மக்கள் உடல் நலம், மற்ற பிராணிகளின் உடல் நலம், சுற்றுப் புறச்சூழல் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும். இந்தியாவில் மரபணு தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகள் ஏற்கனவே குறைபாடுகளுடன் உள்ளன. இதனால்தான் அன்றைய சுற்றுப்புறச் சூழல் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்திரிக்காயை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு காலவரையற்ற தடையை விதித்தார். ஆச் சரியம் என்னவென்றால், இந்திய மரபணு பொறியியல் ஒப்புதல் குழு பி.டி. கத்திரிக் காயை இந்தியாவிற்குள் நுழைவதற்கு ஒப் புதல் அளித்திருந்தது. அதையும் மீறியே அன்றைய அமைச்சர் தடையை விதித்தார். மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களுக்கு எளிதான முறையில் ஒப்புதல் வழங்க வழி செய்வதே இம்மசோதாவின் நோக்கமாகும். இம்மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய மசோதா.
மசோதாவின் சில முக்கியமான அம்சங்கள்
திட்டமிடப்பட்டுள்ள ஆணையத்தில் மூன்று நிரந்தர உறுப்பினர்களும் இரண்டு உறுப்பினர்கள் சுழல் முறையிலும் நிய மிக்கப்படுவர். மூன்று பிரிவுகளைக் கொண்ட இவ்வாணையத்தின் ஒவ் வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை அதி காரி கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பார். இவர்களுக்கு உதவி செய்திட அமலாக்கப் பிரிவு, விளைவுகளை மதிப்பிடும் பிரிவு, அறிவியல் ஆலோசனைக்குழு, சுற் றுச்சூழல் பாதிப்பு கணக்கிடும் குழு, மத் திய உயிரித் தொழில் நுட்ப ஆலோசனைக் குழு, மாநிலங்கள் அளவிலான உயிரி தொழில் நுட்ப ஆலோசனைக் குழு என்று ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட உள் ளன.
இக்குழுக்களில் எல்லாம் இன்றைய உயிரி தொழில் நுட்பத்தின் நுட்பங்கள் பற்றி எதுவுமே தெரியாத அதிகாரிகளே பொறுப்பேற்பார்கள். மசோதாவின் எந்த இடத்திலும் குடிமைச் சமூகங்களின் பங்கேற்பு பற்றி பேசப்படவில்லை. இம் மசோதாவின் பல்வேறு அம்சங்கள் சாதாரண குடிமக்களை பாதிக்கும் விதமாக உள்ளன. இருப்பினும் அவர்கள் சார்பாக இவ்வாணையத்திடம் முறையிட குடிமைச்சமூகங்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. இவ்வாணையம் மத்திய அரசின் எத்துறையின் கீழ் செயல்படும் என்பதும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவின் உயிரிதொழில் நுட்பத் துறைதான் மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. இத் துறையே இவ்வாணையத்தின் உறுப்பினர்களை நியமிக்கப் போகிறது என்பது எந்த வகையில் நியாயமானதாகும்? இவ்வாணையத்தின் உறுப்பினர்கள் நேர் மையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்பட் டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி விவசாயம், மாநிலங்களின் உரிமைகளுக்குள் அடங்கும். எனவே மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களை அனுமதிப்பது குறித்த முடிவை மாநிலங்களே எடுக்க முடியும். அடிப்படையிலேயே இம்மசோதாவின் அம்சங்கள் மாநிலங்களின் உரி மைகளில் குறுக்கீடு செய்யும் விதம் அமைந்துள்ளன.
2009ல் பி.டி கத்திரிக்காய் பிரச்சனை எழுந்த போதே பத்துக்கும் மேற்பட்ட பல் வேறு அரசியல் கட்சிகளின் தலைமை யிலிருந்த மாநில அரசுகள், தங்கள் மாநி லங்களில் பி.டி. கத்திரிக்காயை அனு மதிக்க மாட்டோம் என்று உரக்க உரைத்தன.
இம்மசோதாவின் 28வது பிரிவு இவ் வாணையத்தின் அறிவிப்புகள் எல் லாம் வாணிப ரகசியங்கள் என்பதால், அவை கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறுகிறது. எனவே குடி மைச் சமூகங்கள் இவ்வாணையத்தின் எந்த ஒரு பிரிவையும் கேள்விக்குள்ளாக்க முடியாது.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவ ரையும் பாதிக்கப் போகும் இப்பொருள் குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட் டறிவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. இம்மசோதாவின் 81, 86, 87.2 ஆகிய பிரிவுகள் இவ்வாணையத்தின் முடிவுகளை ஏற்கனவே நிலவி வரும் எந்த வொரு சட்டங்களும் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறது. மசோதாவின் 86வது பிரிவிலேயே பிறிதொரு பகுதியில் இவ் வாணையத்தின் முடிவுகள் எதுவும் ஏற் கனவே இருக்கும் சட்டங்களுக்கு எதி ராகச் செயல்படாது என்று சொல்லி முரண்படுகிறது.
மோசமான விளைவுகள்
நவீன உயிரி தொழில் நுட்பத்தை வரை யறை செய்யும் மசோதாவின் 3.ச பிரிவு இன்றைய உயிரி தொழில்நுட்பத்தின் உள்ளார்ந்த பல்வேறு அம்சங்களையும் புறக்கணித்து, குழப்பத்தை விளைவிக் கிறது. இச்சட்டத்தினால் இந்தியாவின் பல்கலைக்கழகங்களிலும், உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களிலும் அன் றாடம் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடையூறு ஏற்படும்.
ஏனென்றால் இவ்வாணையத்தின் ஒப்புதல் பெற்றே உயிரி தொழில்நுட்பம் குறித்த எந்தவொரு ஆராய்ச்சியிலும் ஈடு பட முடியும். இவ்வாணையத்தின் ஒப்பு தல் பெற்றே பல்கலைக்கழகங்கள் மாண வர்களுக்கு இப்பாடத்தைப் போதிக்கவும் முடியும். மசோதாவின் அட்டவணை 1ல் எந்தெந்த உயிரினங்களெல்லாம் ஆணை யத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வட்டவணையில் மனிதர்களுக் கும் மற்ற பிராணிகளுக்கும் பயனளிக்கக் கூடிய செயற்கை உயிரியல் மூலம் உரு வாக்கப்படும் பொருட்களின் பட்டி யலும் கொடுக்கப்பட்டுள்ளது. மசோ தாவை வடி வமைத்தவர்களுக்கு உயிரி தொழில் நுட் பம் பற்றி போதிய ஞானம் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அட்டவணை 1ன் கீழ் வரும் மற்றொரு பிரிவின்படி (2.ன), இவ் வாணையத்தின் அனுமதியின்றி இந்தி யாவில் எந்தவொரு மருத்துவமனை யிலும் அங்க மாற்றுச் சிகிச்சையும் செய் திட முடியாது.
மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தை எந்த வழி முறையைப் பின்பற்றி தேர்ந் தெடுக்கப்பட்டது என்பது குறித்த உண் மையையும் வெளியிட வேண்டிய தில்லை. முதலில் மரபணு மாற்றப்பட்ட பயிரினத்திற்கு உண்மையிலேயே தேவை இருக்கிறதா என்ற சமூக-பொருளாதார ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் என்ற முடிவுக்கு வந் தால், மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தை ஏற்றுக்கொள்ளும் சூழல் இந்திய விவ சாயத் துறையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். மரபணு மாற்றப் பட்ட பயிரினத்தைக் இந்தியாவிற்குள் கொண்டுவருவது இன்றியமையாதது என்ற முடிவுக்கு வரும் பட்சத்தில், அதற் கான சோதனைகளை மேற்கொள்ள சுதந் திரமாகச் செயல்படும் தரமான ஆய்வுக் கூடங்கள் பற்றி மசோதா எதுவும் பேச வில்லை.
ஆணையத்தின் வானளாவிய அதிகாரம்
ஒரு நிலத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர் விளைவிக்கப்படுகிறது என்பதைக் கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என் பதையும் சட்டம் சொல்லவில்லை. இதன் அருகாமையில் விளைவிக்கப்படும் சாதாரண பயிரினத்தை இது நிச்சயம் பாதிக்கும் என்கிற போது இவ்வறிவிப்பு மிக முக்கியமானது. மசோதாவிலேயே மிக மோசமான பிரிவு 62 ஆகும். இது விதி மீறலையும் அதற்கான தண்டனையையும் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆணையத்தின் ஒப்புதலுடன் வரும் மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தைப் பற்றி யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அது குற்றமாகக் கருதப் படும். அதற்கான தண்டனையாக மூன்று மாத சிறை வாசமும், ஐந்து லட்சம் ரூபாய் தண்டல் தொகையும் விதிக்கப்படும். ஆணையத்தின் முடிவே இறுதியாகும். இதை எந்த மன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. உயிரி தொழில் நுட்ப ஆணையத்தின் உயர்மட்டக் குழுவில் இருக்கும் ஐந்து அதிகாரிகளே வானளா விய அதிகார த்தைப் பெற்றவர்கள் ஆவர். இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரி தொழில் நுட்ப வல்லுநர்களின் கூற் றுக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாது.
மசோதா கொண்டுவருவதற்கான காரணம் என்ன?
இன்றைய உலகின் மிகப் பெரிய வியாபாரம் உணவுப் பொருள் வியாபாரமாகும். இதை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே உலகைக் கட்டுப்படுத்து பவர்கள் ஆவார்கள்.
உணவு உற்பத்தியில் மேலாதிக்கம் செலுத்திட, விவசாயம் சார்ந்த உரம், விதை, பூச்சிக் கொல்லி மருந்து போன்ற இடு பொருட்களின்பால் மேலாதிக்கம் இருந்திட வேண்டும். விதை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சில பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் உரிமத்தை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு, உலகையே ஆட்டிப்படைக்கத் திட்டமிடுகின்றன.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் இக்கம்பெனிகள் அந்நாட்டு அரசுடன் மிகவும் நெருக்கமாகவும் உள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் நிலவும் இன்றைய நெருக்கடிக்கு கார ணமே, ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களை அனுமதிக் காதது ஆகும். ஒரு உற்பத்திப் பொருளில் 9சதவீதம் மரபணு மாற்றப்பட்டிருந்தாலே அது விற்பனைக்கு வரும்போது தெளி வாகக் குறிப்படப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் காட்டயப்படுத்து கின்றன. அமெரிக்காவில் இத்தகு அறி விப்பு தேவையில்லாததால் அமெரிக்க மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு எந்தளவிற்கு மரபணு மாற்றப்பட்டிருக் கிறது என்பதையே அறியமாட்டார்கள்.
இந்திய மக்களின் விழிப்புணர்வு
இந்தியாவில் மிகச் சமீப காலமாகவே மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மீதான எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதியளிக் கும் குழு, இவற்றை முனைப்புடன் விற் பதற்கு உதவி செய்து, பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் சேவகர்களாகச் செயல் படுகிறது. ஆனால் இன்று இந்திய மக்கள் மிகவும் தெளிவுடனும் விழிப்புணர் வுடனும் இருக்கிறார்கள். இதனால்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தம், பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளின் வலி யுறுத்தல், இந்திய அரசின் ஆதரவு இவை அனைத்தையும் மீறி பி.டி கத்திரிக்காயை இந்தியாவில் தடை செய்ய முடிகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மீதான எதிர்ப்பு நம் நாட்டில் இன்று வலுவடைந் துள்ளது. இன்றிருக்கும் குறைந்தபட்ச விதிகளின் துணை கொண்டே இவை களைத் தடுக்கவும் முடிகிறது.
பீஹார், மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இத்தகு பயிர்களை சோதிப்பதற்கும் விளைவிப்பதற்கும் தடை செய்துள்ளன. தங்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தடை யாக இருக்கும் இந்தியச் சூழலை மாற்ற நினைக்கின்றன பன்னாட்டு பகாசுர விதைக் கம்பெனிகள். இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே இம் மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்திய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த எண்ணங்களைப் புரிந்து கொண்டு இம்மசோதாவை மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கைவிடும் என்று எதிர்பார்ப்போம்.
புஷ்பா பார்கவா
தமிழில்: பேரா. பெ.விஜயகுமார்.
0 comments:
Post a Comment