Thursday, December 15, 2011

நல்லிணக்க நாயகர்!


‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண்டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

_____________________

இந்திய விடுதலைப்போராட்ட பேரியக்கத்தின் போது காங்கிரஸ் கட்சி, தவணை முறையில் சலுகை கேட்டு மனு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ‘பூரண விடுதலை’ என்ற முழக்கத்தை முதன் முதலாக முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு மாநிலங்களின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்த போது, தட்சிணபிரதேசம் போன்ற காரிய சாத்தியமற்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் மொழி வழி மாநிலங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, தனித்துவம் பாதுகாக்கப்பட மொழி வழி மாநிலங்களே சிறந்த தீர்வாக அமைய முடியும் என்பது பொதுவுடைமை இயக்கத்தின் தொலை நோக்குப் பார்வை.

1952ம் ஆண்டு தேசத்தின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திராவின் பெரும் பகுதி, கர்நாடகத்தின் ஒரு பகுதியைக் கொண் டதாக சென்னை ராஜதானி இருந்தது. அந்தத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் அடிப்படையில் தந்தை பெரியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. நியாயமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்த ராஜாஜி கட்சி தாவிகளின் உதவியோடு காங். ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.

சென்னை ராஜதானி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பி.ராமமூர்த்தி தலைமையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தமிழிலும், கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மலையாளத்திலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தெலுங்கிலும் இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாகவே ஆந்திர, கேரள மாநிலங்கள் உருவாகின.

அதன்பின்னரும் கூட சென்னை ராஜதானி என்றேஅழைக்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு இதற்கு உடன்பட மறுத்தது. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரடியாக வந்து பி.ராமமூர்த்தி உண்ணா விரதத்தை கைவிடுமாறும், அனைவரும் சேர்ந்து தொடர்ந்து போராடலாம் என்றும் கூறினார்.

‘இன்றைய ஆட்சியில் வாழ்வதை விட நான் சாவதே மேல்’ என்று கூறிவிட்டார் சங்கரலிங்கனார். 77 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவரது மரண சாசனத்தின்படி அவரது உடல் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் இறுதி நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

சென்னை தமிழகத்தோடு தக்கவைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது அவரது வரலாற்றாசிரியர் என்.ராமகிருஷ்ணன் கூறும் தகவல்.

1953ம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மணி நேரம் தமிழிலேயே நுட்பமான பொருளாதார விஷயங்களை எடுத்துரைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த சி.சுப்பிரமணியம், தமிழில் பொருளாதார பிரச்சனைகளை விளக்கமுடியும் என்பதை ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று கூறித்தான் தமது பதிலுரையை துவக்கினார்.

1956ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி என்று பிரகடனப்படுத்தும் சட்டமுன் வடிவை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த பி.ராமமூர்த்தி எழுந்து, இந்நாள் தமிழ் நாட்டின் திருநாள் என்று நெஞ்சம் நெகிழ வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் ஆட்சிமொழி ஆனால் மட்டும் போதாது. பயிற்று மொழி ஆகவும் வேண்டும் என்றார். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறவில்லை என்பது நெஞ்சில் முள்ளாய் உறுத்தும் நிஜம்.

நெய்வேலியில் அனல் மின்நிலையம் அமைந்ததிலும், திருச்சியில் ‘பெல்’ நிறுவனம் அமைந்ததிலும், சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை தமிழக தொழில் வளர்ச்சியின் வரலாறு அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.

மதவெறி சக்திகளால் இன்று முடக்கப் பட்டுள்ள சேதுக்கால்வாய் திட்டம் குறித்து 1967ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மகத்தான தலைவர் பி.ராமமூர்த்தி.

1952ம் ஆண்டு பெரியாறு அணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் இருந்து மின் உற்பத்தி செய்யும் புனல்மின் திட்டம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ராமமூர்த்தியை அழைத்து இது குறித்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதல்வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 2பைசா தருவதென்று பேசி, அதற்கு பட்டம் தாணுப் பிள்ளையை சம்மதிக்கச் செய்தார் பி.ராமமூர்த்தி.

இது குறித்து பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இன்றும் அனைவரும் மனதில் நிறுத்தவேண்டிய ஒன்றாகும்.

‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண் டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

1957ம் ஆண்டு தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கேரளத்தில் அமைந்தது. கேரளத்திலிருந்து அரபிக்கடல் நோக்கிப் பாய்ந்த பரம்பிக்குளம், ஆழியாறு நதிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடவேண்டும் என்பது நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். இது குறித்து முதல்வராக இருந்த இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்களிடம் பி.ராமமூர்த்தி பேசினார். இரு பெரும் தலைவர்களின் முயற்சியால் உருவானதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். ஆழியாறு பரம்பிக்குளம் நதிகளில் அணை கட்டி நீரை தேக்கி வைத்து, உபரி நீரை தமிழகத்திற்குத் தருவது என்றும் அதற்காகும் செலவுகளை இரு மாநில அரசுகளும் சமமாக ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரு அரசுகளும் செலவினை ஏற்று அணை கட்டப்பட்டது. இதன் மூலம் கோவை, ஈரோடு மாவட் டங்களுக்கு பாசனவசதி கிடைத்தது.

ஒன்றாக இருந்த பஞ்சாப் மாநிலம், பஞ்சாப், ஹரியானா என்று பிரிக்கப்பட்ட, பிறகு சண்டிகர் நகர் யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. இருதரப்பிலும் கொந்தளிப்பான சூழ்நிலை. அப்போது அப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் துடன் பெரும் பங்காற்றியவர் தோழர் பி.ராம மூர்த்தி.

அசாமில் பிரிவினை கோஷம் எழுந்த போதும் தோழர் பி.ராமமூர்த்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கட்சியின் சார்பில் முன்னின்றார். அவரது சக தோழரும் போராளியுமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித்து வரைந்துள்ள சொற்சித்திரம் இது: ‘நாட்டை எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக தேசிய பிரச்சனைகளை பி.ஆர். வெகுவிரைவில் புரிந்துகொள்வார். பஞ்சாப் மாநில சீரமைப்பிலும், அதிலிருந்து தோன்றிய பிரச்சனைகளிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அசாம் குறித்து அவர் எழுதிய பிரசுரமானது அச்சமயத்தில் கட்சியின் கண்ணோட்டத்தை விளக்கியது.’

1978ம் ஆண்டு சீமென்ஸ் என்ற ஜெர்மானிய நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை விழுங்க முயற்சி செய்தபோது அதை எதிர்த்து சத்திய ஆவேசத்துடன் போராடியவர் பி.ஆர். அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தனியொரு நூலாகவே வெளிவந்தது. இன்றைக்கு சில்லரை வர்த்தகத்தையும் கூட விழுங்க வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வாய்பிளந்து வருகின்றன. நடை பாவாடை விரித்து நலுங்கு பாடுகிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

தோழர் பி.ராமமூர்த்தி உயர்த்திப்பிடித்த தேசபக்த, வர்க்க ஒற்றுமை பதாகையை ஏந்தி தேசத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க போராடுவதே அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

- மதுக்கூர் ராமலிங்கம்

(இன்று தோழர்.பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்)

2 comments:

  1. நல்லிணக்கத்திற்கான நல்ல மனிதரை அதுவும் தமிழகத்தை சார்ந்த ஒரு மாமேதையை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி. அதுவும் இன்றைய சூழலில் நினைவு கூறுவது பொருந்தத்தக்கது.கம்யூனிஸ்ட்டுகளின் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகத்தான சாதனைகள், வாழ்க்கைக்குத்தேவையான பல அனுபவங்களும் புதைந்து கிடக்கிறது. கண்டிப்பாக கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறுகளை படிப்போம் நான் யார் என படிப்போம் உலகத்தெளிவு பெறுவோம்.

    ReplyDelete
  2. காலத்திற்குத்தேவையான தலைவர்களின் வரலாறு.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)