Thursday, December 15, 2011

காயங்களுக்கு மருந்தாகும் கால்பந்து!


“கால்பந்து மைதானங்கள் கொலைக்களங்களாகவே இருந்தன. கல்லெறிந்தும், தூக்கில் போட்டும் கொலைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். இவற்றையெல்லாம் நான் நேரடியாகப் பார்த்தேன்” என்கிறார் ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹமீதுல்லா யூசுப் சாரி. கடந்த வாரத்தில் புதுதில்லியில் உள்ள நேரு மைதானத்தில் தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் இறுதியாட்டம் வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பிம்பத்தை வைத்திருந்த புதுதில்லிவாழ் மக்களுக்கு அந்த அணி மட்டுமல்ல, போட்டியைப் பார்த்து ரசிக்க ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த கால்பந்து ரசிகர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். போரால் சீர்குலைந்து கிடக்கும் அந்த நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் ரசிகர்கள் புதுதில்லிக்கு வந்திருந்தனர்.

இறுதியாட்டத்தில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது. இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இருந்தாலும், எந்தவித ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் நாட்டிலிருந்து வந்திருந்த அணியின் போராட்ட குணம் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டது. அந்த அணி இறுதியாட்டம் வரை முன்னேறியதற்கு கோல் கீப்பர் ஹமீதுல்லா யூசுப்சாரியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

தாலிபான் ஆட்சிக்காலத்தைக் கண்டவர் யூசுப்சாரி. பெரும் வன்முறையைக் கண்டு அவரது குடும்பத்தில் பெரும்பான்மையானவர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு இடம் பெயர்ந்தனர். ஆனால் கம்பளிகளைத் தயாரிக்கும் தொழிலைச் செய்து கொண்டே ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தொடர்ந்து வசிப்பது என்ற முடிவை ஹமீதுல்லா எடுத்ததற்கு கால்பந்து ஆட்டம் மீது அவருக்கு இருந்த காதலே காரணமாகும். ஒருமுறை அவரது இருப்பிடம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவரது குடும்பத்தினர் சிலர் அதில் கொல்லப்பட்டனர். ஹமீதுல்லா உயிர் பிழைத்தார்.

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் அணிக்கே இத்தகைய வாழ்க்கை அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஹமீதுல்லாவைப் போலவே, அணியில் உள்ள ஒவ்வொரு ஆட்டக்காரரும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதினர். அதில் பலரும் தனித்து விடப்பட்டவர்கள் போலப் பல காலம் இருந்தனர். ஏராளமான இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சுதந்திரமாக இயங்குவதே கால்பந்து விளையாடுவதுதான் என்றிருந்தது. இதனால்தான் கால்பந்து அணியின் ஒவ்வொரு வெற்றியும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு தோல்வியும் கற்றுக் கொள்வதன் அங்கமாகப் பார்க்கப்பட்டது.

ஆட்டக்காரர்களுக்கு உத்வேகம் அளிக்க புதிய உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் புதிதாக கேப்டன் நியமிக்கப்படுகிறார். இது குறித்துக் கருத்து தெரிவிக்கும் அணியின் பயிற்சியாளர் முகம்மது யூசுப் கர்கார், இது ஆட்டக்காரர்களுக்கு பெரும் அளவில் உத்வேகம் அளிக்கிறது. 90 நிமிடங்களுக்கு அவர் தலைமைப் பொறுப்பேற்று விளையாட முடியும். பொறுப்பானவராக அவர் மாற முடிகிறது. சக ஆட்டக்காரர்களுக்கு மரியாதை கொடுக்கவும், அன்புடன் அணுகவும், புரிந்து கொள்ளவும் இது உதவுகிறது என்கிறார்.

கடந்த தலைமுறை ஆப்கானிஸ்தான் கால்பந்து ஆட்டக்காரர்கள் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். 1980களில் பல மாணவர்கள் இந்திய கால்பந்து கிளப்புகளில் இடம் பிடித்து விளையாடினர். அப்துல் ஜாகிர் என்ற ஆட்டக்காரர் தில்லி கால்பந்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவராவார். அவரால் வேறு எந்த கால்பந்து கிளப்பிலும் இடம் பெற்றிருக்க முடியும். மைதானத்தில் அவரது வேகத்தைப் பார்த்து அசந்து போனவர்கள் உண்டு. ஆனால் அவர் தில்லியைச் சேர்ந்த மூன்லைட் கால்பந்து கிளப்பில் தொடர்ந்து விளையாடி வந்தார். தற்போது அணியில் இடம் பெற்றுள்ள பலர் ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடுகிறார்கள். ஷாரிட்யார் என்ற ஆட்டக்காரர் ஜெர்மனியின் லீக்கில் விளையாடுகிறார். தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் அவரது திறமை ரசிகர்களின் கவனத்துக்கு உள்ளாகியது.

தில்லியில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணியை உற்சாகப்படுத்த வந்திருந்த ரசிகர்களில் ஜாஹ்ரா மஹ்மூதியும் ஒருவராவார். அவர்தான் ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்து அணியின் கேப்டன். தாலிபான்களின் ஆட்சி முடிவுற்றபிறகு சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற முதல் தலைமுறைப் பெண்களில் இவரும் ஒருவர். எங்கள் நாட்டில் பெண்கள் கால்பந்து விளையாடுவது என்பது புதிய அம்சமாகும் என்கிறார் அவர். தங்கள் பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டாலும், அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகக் கால்பந்து விளையாடுபவர்களும் உண்டு.

பெண்களின் பங்கேற்பை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் சமூக ரீதியான மாற்றங்களாகவே பலரும் பார்க்கிறார்கள். தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியை தொலைக்காட்சிக்காக வர்ணனை செய்ய வந்திருந்த சமீர் பயாத், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். எங்கள் நாட்டு மக்கள் கொண்டாடுவது நிச்சயம் என்று இறுதியாட்டத்திற்குப் பிறகு குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் நட்சத்திர ஆட்டக்காரர் பலால் அரிசோ நார்வேயில் குடியேறியிருக்கிறார். ஆனால் தனது தேசிய அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பவர். 22 வயதாகும் இவர் நார்வேயில் உள்ள அஸ்கெர் கால்பந்து கிளப்பில் இடம் பெற்றிருக்கிறார். நார்வே கிளப்பில் விளையாடுவது பணத்திற்காகவா என்ற கேள்வியை சிலர் அவரிடம் எழுப்பியபோது, பணம் இரண்டாம் பட்சம்தான். எங்கள் நாட்டு மக்களின் முகங்களில் புன்னகையைத் தவழச் செய்வதற்காகவே நாங்கள் விளையாடுகிறோம். காயங்களை விளையாட்டால் குணப்படுத்த முடியும் என்பதுதான் எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் அம்சமாக இருக்கிறது. எங்கள் நாட்டை மீண்டும் கட்டியமைக்க கால்பந்து மூலம் எங்களால் முடிந்த ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்தார்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)