Wednesday, December 14, 2011

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி!

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு பொதுவான பார்வை என்னவாக இருக்கிறது?

சந்தைக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒரு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது என்பதே இதற்கு  பதில். கடந்த காலத்தில் இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து ஒரு நெறிமுறை இல்லாமல் நடந்து கொண்டதன் விளைவாக மிகப்பெரிய அளவில் கடன் குவிந்துவிட்டது. இதன் காரணமாக சந்தைக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. ‘சந்தை’ என்பதன் கண்ணோட்டத்தில் இந்த நெருக்கடியின் தீர்வு இந்த அரசாங்கங்கள் தங்களுடைய செலவினங்களை சுருக்கிக் கொள்வதைப் பொறுத்தும், மிகக்கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தும்தான் அமையும் என்பதாகும். அதாவது செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டிக்கொள் என்பது போன்ற உத்தரவுகள் சந்தையால் பிறப்பிக்கப்படும். அவை ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யப்படும் என்பதால் இந்த உத்தரவுகள் அரசாங்கங்களால் மீறப்படுவதில்லை. இந்தக் கருத்தானது பொதுவான முதலாளித்துவக் கொள்கையின் குணாம்சத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

‘சந்தை’யும் கிரீசும்

‘சந்தை’ என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், அது ஏதோ மனிதர்களையே சார்ந்திராத, சுயமாக அறிவு நுட்பமும், விவேகமும் கொண்டுள்ள அமைப்பு போன்று கருதப்படுகிறது. அதையும் தாண்டி, மனிதர்களின் முட்டாள்தனங்களையே அதுதான் சரி செய்வது போலவும், எனவே அது மரியாதைக்கும் கீழ்ப்படிதலுக்கும் உரிய அமைப்பு என்பது போன்றும் இன்று கருதப்படுகிறது.

கிரீஸ் நாட்டின் பிரதமராக இருந்த பபான் ட்ரியோ, கிரீஸ் அரசாங்கம் இழந்துவிட்ட ‘சந்தை’யின் நம்பகத்தன்மையை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக, ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுக் கொடுத்த மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பொது வாக்கெடுப்பிற்கான பொது மகஜர் வடிவமாக்கினார். இந்த சிக்கன நடவடிக்கைகளின் மூலம் கிரீஸ் நாடு தனது பொதுக் கடனிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்பது அவரது கணிப்பு. அதே நேரம் இந்த நடவடிக்கைகள் பொது மக்களின் மீது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதால் அவர்களது கருத்துக்களை அறிய வேண்டுமென்று பொது வாக்கெடுப்பிற்கு விட நினைத்தார். உடனே, முதலாளித்துவ வட்டாரத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மிகப் பெரிய கூக்குரல் எழுந்தது. நமது நாட்டு செய்தித்தாள்கள் கூட பபான்ட்ரியோவின் இந்த முடிவிற்கு எதிராகத் தலையங்கம் எழுதின. அவர்கள் எல்லோ ரும் இப்படி ஒரு புதுமையான, விசித்திரமான, முட்டாள்தனமான நடவடிக்கையைப் பார்த்து பயந்துவிட்டனர். எனவே, என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல், மக்களிடையே பொது வாக்கெடுப்பிற்கு விடும் தன்னுடைய திட்டத்தினை பபான்ட்ரியோ கை விட்டு விட்டார்.

கிரீஸ் நாட்டு அனுபவத்தின் பின்னணியில் உண்மையில் சர்வதேச நிதி மூலதன நல விரும்பிகள் சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசாங்கங்கள் பழைய முறையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து செலவுகள் செய்வது என்பதைத் தொடரக்கூடாது என்பது தான். அதாவது பழைய “சேம நல அரசு” என்பதன் மிச்ச சொச்சங்களாக கொஞ்சம் நஞ்சம் இருக்கும் அரசாங்கச் செலவினங்களைக் கூட தொடரக் கூடாது என்பதுதான்.

அரசாங்கங்கள் தங்களுக்கான மீட்புத் திட்டங்களை வெட்டிச் சுருக்கக்கூடாது; ஆனால், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்காக செய்யப்படும் செலவினங்களை குறி வைத்து கடுமையாக வெட்டிக் குறைப்பதன் மூலமே பொருளாதார சுழற்சிக்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என் றும் நிதி மூலதனம் விரும்புகிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒரு காலத்தில் ஐரோப்பிய சேம நல அரசு என்று புகழ் பெற்ற அரசாங்கங்களின் மிச்ச சொச்சங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.

இறுதிக் கட்டத் தாக்குதல்

இதையே வேறு விதமாகக் கூறுவதென்றால், ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி என்பது வேறு ஒன்றுமில்லை; சட்டத்தை மீறி பலவந்தமாக ஐரோப்பிய ஜனநாயகத்தின் மீதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐரோப்பிய சேம நல அரசுகள் மீதுமான நிதி மூலதனத்தின் அத்து மீறிய தாக்குதலே. இந்த சேம நல அரசு என்பது எப்படி இருந்தது என் றால், ஒரு முதலாளித்துவ அரசாக இருந்த போதிலும் அதனுடைய வர்க்கக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தொழிலாளி வர்க்கத்தின் நலன்களிலும் அக்கறையும் பொறுப்பும் உடையதாக இருந்தது. இத்தகைய சேமநல அரசின் மீதான தாக்குதல், எப்போது நிதி மூலதனம் உச்சத்திற்கு வந்ததோ அப்போது எழுந்தது. குறிப்பாக, தேசிய அரசுகள் நிறைந்த இந்த உலகத்தில், நிதி மூலதனம் என்பது உலகமயமான போது இந்த தாக்குதல் ஆரம்பமானது. நாம் இப்போது பார்ப்பது இறுதிக் கட்ட தாக்குதல். ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய கட்டிடத்தையே உலுக்குகிற, நொறுக்கித் தள்ளுகிற இறுதியான முயற்சி. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதாரண உழைக்கும் மக்களின் மீது அக்கறை கொண்ட, வர்க்கங்களைத் தாண்டி வெளிப்படையாக நிற்கக் கூடிய சமூக ஜனநாயக அடையாளம் பதித்த பழைய முதலாளித்துவ அரசிற்குப் பதிலாக, நிதி மூலதனத்தின் உண்மையான அதிகாரத்திற்குட்பட்ட ஒரு அரசினை நிலைநிறுத்துவதற்கான இறுதிக் கட்ட முயற்சி இது.

ஐரோப்பிய சமூகத்தின் ஜனநாயகத் தன்மையின் பாரம்பரியத்திலிருந்து பின்னோக்கிச் செல்வது என்பதன் பொருள், ஐரோப்பாவின் ஐனநாயகத்திற்கு ஒட்டு மொத்தமாக மூடுவிழா நடத்துவது என்பதுதான். கிரீசுக்கான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை பொது வாக்கெடுப்பிற்கு விட வேண்டுமென்ற அந்நாட்டுப் பிரதமரின் முன்மொழிவின் மீது எழுந்த பரபரப்பிற்கான காரணம், இந்த சிக்கன நடவடிக்கைத் திட்டமே ஜனநாயகத்திலிருந்து பின்னோக்கிச் செல்வதை சுட்டிக் காட்டுகிறது என்பதால்தான். சாதாரண மக்களின் முதுகின் மீது சுமையை ஏற்றுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் கடுமையான நிகழ்வுகள் இனிமேல் தீர்மானிக்கப்பட இருக்கின்றன என்பதால்தான்.

‘நெருக்கடி’ என்பதன் உட்பொருள்


இந்தப் பின்னணியில் “நெருக்கடி” என்பதற்கான மிகச் சரியான வரையறையைப் புரிந்து கொள்ள வேண்டும். “நெருக்கடி” என்ற வார்த்தை தேசிய அரசாங்கங்களால் நிதி மூலதனத்திடமிருந்து பெற்ற கடன்களை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்பதை, அல்லது அந்த கடன்களை திருப்பிக் கொடுப்பதை இந்த அரசாங்கங்கள் தள்ளிப்போடுகின்றன என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த அரசாங்கங்கள் கூடுதலாக கடன் கேட்ட போது நிதி மூலதனம் அதைக் கொடுக்கத் தயாராக இல்லாமல் இருந்ததன் காரணமாக இந்த அரசாங்கங்களுக்கு எழுந்த பிரச்சனையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே ‘நெருக்கடி’யைத் தீர்க்கும் நோக்கமாகவே கடுமையான சிக்கன நட வடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. ஆனால், தொழிலாளர்களைப் பொறுத்தவரை மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்பது நெருக்கடியின் தீவிரத்தை- ஆழத்தைக் குறிக்கிறது.

கிரீஸ் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகளால் உருவாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைத் திட்டமானது, கிரேக்க மக்கள் எவ்வளவு காலத்திற்கு இந்த நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்தோ, அல்லது இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரேக்க மக்கள் எப்படி ஈடு கொடுக்கப் போகிறார்கள் என்பது குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கிரீஸ் நாட்டு அரசாங்கத்திற்கு நிதி மூலதனம் கொடுத்திருந்த கடன்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடக்கூடாது என்பதால் அதற்கான நிதிப் பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்திக்கொள்வது மட்டுமே ‘நெருக்கடி’ என்ற பிரகடனத்தின் திடமான நோக்கமாக இருந்தது. ஆனால், சாதாரண மக்களின் வாழ்நிலையில் எந்த முன்னேற்றத்தையும் தருவதாக, அவர்களுடைய விதியை மாற்றுவதாக எந்த நடவடிக்கைகளும் இந்தத் திட்டத்தில் இல்லை. எனவே, ‘நெருக்கடி’ என்பதற்கு நாம் கொள்ளும் அர்த்தத்தையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கல் சகாப்தத்தில், சமுதாயத்தின் நலன்களும் நிதிமூலதனத்தின் நலன்களும் ஒன்றாக - ஒரே பொருள் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த சமுதாயத்தினை நிர்மாணிக்கும் எளிய மக்களின் நலன்களும் சமுதாய நலன்களும் ஒன்றாகப் பார்க்கப்படு வதில்லை.

பொருளாதார வல்லுநர் பால் க்ரூக்மேன் உட்பட பல பொருளாதார நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து வாதிடும்போது, எந்த நாடுகளெல்லாம் வெளிநாடுகளிடம் இருந்து கடன் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனவோ அந்த நாடுகளில் மட்டுமே கடன் நெருக்கடி எழுந்துள்ளது என்று வாதிடுகின்றனர். அதாவது அவர்களைப் பொறுத்த வரையில், தங்களுடைய மத்திய வங்கிகள் உட்பட சொந்தப் பொருளாதாரத்தில் இருந்து கடன் வாங்க முடியாத நாடுகள்தான் கடன் நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ளன என்று வாதிடுகின்றனர்.

ஒரு நாட்டின் அரசாங்கம் அந்த நாட்டின் மத்திய வங்கியில் இருந்து கடன் வாங்கிக் கொள்ள சுதந்திரம் உடையதா, இல்லையா என்பது விஷயமல்ல. உலகப் பொருளாதாரச் சரிவின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதுதான் விவாதத்திற்கான விஷயம். உலக அளவில் ஒட்டு மொத்தமாக பொருட்களுக்கான கிராக்கி (demand) என்பதில் கூர்மையான வீழ்ச்சி ஏற்படும்போது, உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரங்களின் மீது அதனுடைய தாக்கம் பெரியதாகவோ அல்லது சிறிய தாகவோ கட்டாயம் இருக்கும். நடப்பில் உள்ள பங்கு பரிவர்த்தனை விகிதத்தின் அடிப்படையில் செயல்படும் நாடுகளில் தொழில் உற்பத்தியை விட டாலர் சம்பள விகிதம் அதிகமாக இருக்குமென்றால் (உதாரணமாக அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகள்) அந்த நாடுகளில் இந்த சரிவின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். அதே நேரம் தொழில் உற்பத்தியை விட டாலர் சம்பள விகிதம் குறைவாக இருக்குமென்றால் (உதாரணம் சீனா) இந்த சரிவின் தாக்கம் குறைவானதாக அல்லது ஒதுக்கிவிடக் கூடியதாக இருக்கும்.

மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த சரிவின் தாக்கத்திலிருந்து சாத்தியமான மூன்று வழி முறைகளில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முதலாவது வழி முறை

பிற நாடுகளை விட தன் நாட்டு பணத்தின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் அந்த நாட்டில் சம்பள விகிதம் உயராமல் பார்த்துக் கொள்ளும் முறை. அதாவது அந்த நாட்டின் தொழிலாளர்கள் தங்களுடைய உண்மைச் சம்பளத்தில் ஒரு வெட்டினை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்களை போட்டிக்குத் தயாராக வளர்த்துக் கொள்ளும் முறையின் மூலம் (பிற நாடுகள் தங்களுடைய பண மதிப்பை பதிலுக்குக் குறைக்காமல் இருக்கும் வரை இது சாத்தியமாகும்) மலிவான சம்பள விகிதத்தை தக்க வைப்பது. மற்றும் தனது நாட்டின் நிகர ஏற்றுமதியை அதிகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பெருக்குவது. இதைத் தான் beggar my neighbour policy என்கிறோம். அதாவது, வேறு ஒரு நாட்டினை தாழ்வடையச் செய்வதன் மூலம் இந்த நாடு தன்னுடைய நலனை பாதுகாத்துக் கொள்ளும் முறை. இருந்தபோதும், இது கையாள வேண்டிய மிகச் சரியான வழி முறை அல்ல.

இரண்டாவது வழி முறை

அரசாங்கத்தின் வருவாய் குறைந்த பிறகும் கூட, மிகப் பெரிய நிதிப்பற்றாக்குறை மூலமாவது அரசாங்கச் செலவினங்களை குறைக்காமல் தக்க வைப்பது, இந்த முறையைத்தான் பெரும்பாலான ஐரோப்பிய பொருளாதாரங்கள் செய்ய முயல்கின்றன. இது மாதிரியான நேரத்தில் அரசாங்கங்கள் வெளியிலிருந்து கடன் வாங்காமல் இருந்தாலும், கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த நாடுகளின் ஏற்றுமதிகள் குறைந்தாலும், மிகப் பெரிய நிதிப்பற்றாக்குறையின் மூலமாவது இந்த நாடுகளின் இறக்குமதிகள் தக்க வைக்கப்படும் என்பது தான் இதன் பொருள். எப்படி பார்த்தாலும், பிற நாடுகள் எது மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தனவோ அதே பிரச்சனைகளை இந்த நாடுகளும் சந்திக்க வேண்டியது வருகிறது.

மூன்றாவது வழி முறை

மூன்றாவது வழி முறை என்னவென்றால், உள்நாட்டில் மக்களிடையே தேவையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார சரிவிலிருந்து தனது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்வது. அதாவது இரண்டாவது வழி முறையில் கூறியது போல் மிகப் பெரிய நிதிப்பற்றாக்குறையின் மூலமாவது உள்நாட்டில் தேவையை அதிகரிப்பது. ஆனால், அதே நேரத்தில் மூலதனம் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளின் மீது ஒரு கட்டுப்பாட்டினை வைப்பதன் மூலம் ‘உலகமயமாக்கலில்’ இருந்து தொடர்பினை துண்டித்துக் கொள்வது முக்கியமானது ஆகும். அதே போல அந்த நாடானது ஒரு வேளை ஐரோப்பிய யூனியன் போன்ற ஒரு ஐக்கிய அமைப்பின் உறுப்பு நாடாக இருக்குமானால், அந்த ஐக்கிய அமைப்பிலிருந்தும் தனது தொடர்பினை துண்டித்துக் கொள்வதும் அவசியமாகிறது.

ஒரு வேளை ஒரே நேரத்தில் உலக அளவில் ஒட்டு மொத்தமாக உலகத் தேவையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளும் செயல் பாடுகளும் செய்யப்படுமானால், நிச்சயமாக அது ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கும். ஆனால், அது போன்ற செயல்பாடுகள் எதுவும் தற்போது இல்லை. அப்படிப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இல்லாத பட்சத்தில், உலக நிதி மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குத் திறந்துவிடப்பட்ட ஒரு பொருளாதாரத்தை, உலகமயமாக்கல் கொள்கையை அமலாக்குவதற்கென்றே உள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஆட்சிக்காலத் தில், சரிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்புவது வெறும் மாயையே!

- பேராசிரியர் பிரபாத் பட்நாயக்
தமிழில்:ஆர்.எஸ்.செண்பகம்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)