Sunday, December 11, 2011

தமிழகத்தில் தலித்களின் நிலை


நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம் என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நடவடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. குறிப் பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவில் ஆளும் வர்க்கமாக திகழ்ந்த நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மன்னர்கள் சாதிய பாகுபாட்டை உறுதிப் படுத்தி கட்டிக் காத்தனர். நில உடைமை சமூக அமைப்பிலிருந்து நவீன கருவிகளின் மூலம் சமூக உற்பத்தியை நோக்கி மாற்றங்கள் உருவாகி வரக்கூடிய காலத்திலும் தமிழகத்தில் சாதிய படிநிலைகளை பாதுகாக்கும் ஏற்பாடுகள் தொடர் கின்றன, இன்றும் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், திருமணமண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஊர்கள், சாலைகளின் பெயராலும், அக மண முறைகளின் உள்ளார்ந்த விசயங்களாலும் கட்டமைக்கப்படு கின்றன. தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக் களுக்காக குரல் கொடுத்த தந்தை பெரியார் பலகட்ட போராட்டங்களை நடத்தினார், சுயமரியாதை இயக்கமும் இதில் முன்னின்றது.

இதன் பின் தோன்றிய திராவிடர் கழகம் இதை உரக்க பேசியது. ஆனால் அதிலிருந்து உருவான திமுக, அதிமுக, மதிமுக போன்ற அமைப்புகள் எல்லாம் இது குறித்து எந்த சிந் தனையையும் செலுத்தியதாக தெரியவில்லை. 1967ல் ஆட் சிக்கு வந்த திமுகவும் அதன்பின் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. பிராமணியத் திற்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் இதர சாதியினருக்குள் இருந்த உள் முரண்பாடுகளையும், பகை மைகளையும் களைய எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அதை தங்களுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டனர்.

இன்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 129 அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் ஒருவர் கூட பயிலவில்லை. மேலும் 30 பள்ளிகளில் 5 சத தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். இதர பள்ளிகளில் 20 சதத்திற்கும் குறைவான தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். பள்ளிகளில் இன்றும் பல இடங்களில் தலித் மாணவர்களை கடைசி இருக்கையில் உட்கார வைப்பது. பாகுபாடு கடைபிடிப்பது போன்ற தீண்டாமையின் வடிவங்களும் இருந்து கொண்டுதான் வருகின்றன. தலித் பகுதி மக்கள் மிக மோசமாக சந்திதித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று கல்வி நிலையங்களில் படிப்பை பாதியில் நிறுத்துவது ஆகும்.

 அருந்ததியர் சமூகத்தில் இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என அன்னை தெரசா கிராமப்புற வளர்ச்சிக்கட் டளையின் ஆய்வு கூறுகிறது, 5 ம் வகுப்பில் 60 சதவீதமும், 8ம் வகுப்பில் 45 சதவீதமும், 10ம் வகுப்பில் 20 சதம் என்ற அடிப்படையிலே செல்கின்றனர் என்ற வேதனையான விபரம் மனித மனங்களை உறைய வைக்கிறது, ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மாண வர் விடுதிகளின் நிலைமையோ இன்னும் கொடுமை யாக உள்ளது, 1565 விடுதிகள் சேரிகளைப் போலவே காட்சியளிக்கிறது, தமிழக அரசு சிறைகைதிகளுக்கு கூட ஒரு நாள் உணவிற்கு ரூ 25 முதல் 30ம்., போலீஸ் நாய்க்கு 65 ரூபாயும் ஒதுக்குகிறது, ஆனால் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவனுக்கு 18 ரூபாய் ஒதுக்குகிறது, இது உழைக்கும் மக்களாகிய தலித் மக்கள் குறித்த ஆட்சியாளர்களின் அக்கறை புரிய வைக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் 19 சதம் தலித் மக்கள் உள்ளனர். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒவ் வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் தலித் மக் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, நகர மேம்பாடு என்ற பெயரால் தலித் மக்கள் சேரிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்., அடையாறு போன்றவற்றின் கரைகளில் பெரும் பகுதி தலித் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக் கென்று குடிநீர், சாக்கடை, கழிப்பறை, சுகாதார வளாகங் கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது.

தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டித் தரப்பட்டுள்ளது, குடிசையில்லா நகரம் என அறிவித்து அங்கிருந்த தலித் மக்களையெல்லாம் நகரை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையையே அரசு செய்தது, பாதுகாப்பின்மை காரணமாக தலித்துகள் தங்கள் சொந்த சமூக மக்களின் அருகாமையிலேயே வசிக்க விரும்புகின்றனர். இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியான ரூ 3821 கோடியை கடந்த திமுக அரசு வேறுபணிகளுக்கு திருப்பி விட்டது,

இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதே பட்டியல் சாதி யினரின் நலனை பாதுகாக்க பல பிரிவுகள் உருவாக் கப்பட்டன, அதன்படி 1979ல் சிறப்பு உட்கூறுதிட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பின்னர் 11 வது ஐந் தாண்டு திட்டத்தில் சப் பிளான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இதன்படி ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமை சார்ந்த மற்றும் உரிமையை பெறுவதற்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது, தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் (1995.-2010) 14298 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என ஒரு புள்ளிவிபரங்கள் தெரி விக்கிறது. இந்த நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தலித் மக்களுக்காக நில விநியோகத்திற்கு பயன்படுத்தி யிருந்தால் ஓர் ஆண்டிற்குள் அனைவருக்கும் நிலத்தை வழங்கியிருக்க முடியும்.

தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்கள் 78,98,932 பேர், இதில் 9,03,548 பேரிடம். அதாவது 11 சதமான தலித்களிடம் மட்டுமே நிலம் உள்ளது, ஆனால் உண்மையில் 4 லட்சம் பேரிடம் வெறும் 2 ஏக்கர் நிலம் அளவு மட்டுமே உள்ளது, இது மொத்தநிலப்பரப்பில் 7 சதம் மட்டுமே ஆகும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மிகக்குறைவான அளவே தலித்துகளிடம் நிலம் உள்ளது, ஈரோட்டில் 17 சதம் தலித் மக்கள் தொகைக்கு 2 சதம் நிலமும், கோவையில் 16 சதம் தலித் மக்கள் தொகைக்கு 1.38 சதமும், நீலகிரியில் 30 சதத்திற்கு 0.90 சதம் நிலமும் உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் 4 இலட்சம் ஏக்கர் உயர் சாதி யினரிடமும், மீதி 1 லட்சம் ஏக்கர் நிலமே இதர சாதியினருக்கு ஏலம் விடப்படுகிறது.

ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் சாதிய ஒடுக்கு முறையும், வன்முறைகளும் ஏராளமாக நிகழ்ந்த வண் ணம் இருந்தது. ஆனால் மேற்கு வங்க நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தின் இடது சாரி அரசாங்கம் காரணமாகும். ஏனென்றால் 13 லட்சம் ஏக்கர் நிலத்தில் 7 லட்சம் ஏக்கர் நிலம் (54சதம்) தலித் மக் களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ள அவர்கள் கௌரவத்துடனும், மரி யாதையுடனும் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை கவனிக்க வேண்டியுள்ளது, இது அந்த மாநிலத்தில் சமூக ஒடுக்குமுறை என்பதற்கு பதில் சமூக ஒற்றுமையை பேணி காத்தது. இதனால் தான் அங்கே தலித் பஞ்சாய்த்து தலை வர் மீதான வன்முறைகளோ, படுகொலைகளோ நடை பெறவில்லை.

பாரதியும், பாவேந்தனும், வள்ளலாரும், பெரியாரும் பிறந்த தமிழக கிராமங்களில் 100க்கும் மேற் பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இன் றளவிலும் நீடித்து வருகின்றன. எவிடன்ஸ் அமைப்பு 12 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி விபரங்களை வெளி யிட்டு உள்ளது, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவ கங்கை, தஞ்சை, நாகை, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 213 கிராமங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 70கிராமங்களில் ரேசன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது. 23 கடைகளில் தலித்துகள் பிறருடன் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 2 சத கடைகளே தலித் மக்களின் வசிப்பிடங்களில் உள்ளது. 2009ம் ஆண்டு கள்ளக்குறிச்சி அருகில் தச்சூரில் காசியம்மாள் என்ற தலித் பெண்ணின் கை வரிசையில் நின்ற ஆதிக்க சாதி பெண் மீது பட்டுவிட்டது என கூறி பொது இடத்தில் அவர் மானபங்கப்படுத்தப்பட்டார். 67 சத கிராமங்களில் சலூன் கடைகளில் முடிவெட்ட முடியாது. 68 சத கிரா மங்களில் பொது குழாயில் நீர் எடுக்க தடையும் , 131 கிரா மங்களில் தனித்தனி நீர் நிலைகளும் உள்ளது. ஆரம்ப சுகா தார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொட்டு பார்ப்பதில்லை.

மதுரை கீரிப்பட்டியில் வசந்தாமாளிகை ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தலித் பெண் சேர்க்கப்பட்ட போது அங்கிருந்த ஊழியர் கொண்டை ஊசியால் பெண்ணின் பனிக் குடத்தை குத்தி சேதப்படுத்தியுள்ளார், தீண்டாமை ஒரு பாவச் செயல் என பாடப்புத்தகங்களில் அச்சடித்து கொடுத்து விட்டு 29 கிராமங்களில் பள்ளிகளில் பாகு பாடும் காட்டப்படுகிறது. தலித் மாணவர்கள் மட்டும் துப்புறவு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே போல் பேருந்துநிறுத்தங்களில் அமருவதில், டீக்கடைகள், ஓட்டல்களில் தனி பெஞ்ச், டம்ளர்கள் எனவும் பாகுபாடு காட்டப்படுகிறது. தபால்நிலையங் களில் தலித்துகள் நுழையக்கூடாது என்பதும், ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்களை இருக்கைகளில் அமர விடாமல் தடுப்பதும் தொடர் கதையாக உள்ளது. மலம் அள்ளும் தொழிலில் இன்றும் தமிழகத்தில் 50000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதாக விபரங்கள் கூறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒடைப்பட்டியில் கலையரங்கத்தில் தலித்துகள் நுழைய தடையுள்ளது. பொது சுடுகாடுகளில் புதைக்க அனுமதிக்காத நிலையும் உள்ளது, பெரும் பகுதி தலித் மக்களுக்கான சுடுகாடுகள் ஓடைகளில் உள்ளன, மழைக்காலங்களில் அவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் எந்த வழியும் இல்லாது சாலை ஒரங்களில் புதைக்கும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது, அதே போல் தலித் மக்களின் பிணங்களை ஆதிக்க சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழலும் உள்ளது, தேனி மாவட்டம் கூழையனூரில் எதிர்த்து கேட்ட சின்னாயி என்ற தலித் மூதாட்டி மீது இந்தாண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் குண்டு வீசி அவர் கொல்லப்பட்டார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலித் மக்கள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என் கிற கட்டுப்பாட்டோடு பொது இடத்தில் செல்போன் பேசக்கூடாது, பைக் ஒட்டக் கூடாது என நவீன வடிவ தீண்டாமைகளும் நிகழ்ந்து வருகிறது. நவீன காலத்தின் அறிவியல் வளர்ச்சிப் போக்கில் தீண்டாமை மாறும், மறைந்து போகும் என கருதப்பட்டு வந்தாலும், உண்மை யில் தீண்டாமையும், சாதிய படிநிலைகளும் நவீன வளர்ச்சிக்கேற்ப தங்களது வடிவங்களை மாற்றிக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. முதலாளித்துவம் தன்னுடைய நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள அடையாளங்களின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சி செய்கிறது, அதன் பகுதியாக இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை தேவையான அளவு ஊதி பெருக்கி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தலித் கட்சிகள் எல்லாம் இன்று தேர்தல் அரசியல், தமிழ் தேசியம், இன உணர்வு என பிரச்சனை களை திசைத்திருப்புகின்றன. ஒரு பகுதி அரசியல் கட்சிகள் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை நம்பி தலித்துகளை கைவிடும் போக் கையே மேற்கொள்கின்றன. நாம் தற்போதைய நிகழ்வுகளை பார்த்தோமானால் தெளிவாக தெரியும், நாலு மூலைகிணறு, கொடியங்குளம், வாச்சாத்தி, கோட்டைப் பட்டி, தாமிரபரணி, பரமக்குடி துப்பாக்கி சூடுகளும், காவல்துறை தாக்குதல்களும், திண்ணியம், காங்கேய னுர், மேலவளவு, உத்தபுரம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சினேந்தல், சிதம்பரம் நடராஜர் கோவில் என நூற்றுக்கணக்கான இடங்களின் பெயரை சொல்ல முடியும், தலித்துகளுக்கு எதி ரான நடவடிக்கைகள் என்று.... ஆரோக்கியமின்மை, தரமற்ற வாழ்க்கை, குடிநீர் பற்றாக்குறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள் கட்டமைப்பு வசதியின்மை போன்றவையும் தலித் மக்களுக்கு மிகுந்த நெருக்கடிக்களை கொடுத்து வருகின் றன.

இந்த நிலையில் தான் சமத்துவபுரங்களை உருவாக்கு கிறோம் என கடந்த திமுக அரசு பம்மாத்து செய்தது. ஊருக்கு வெளியே கட்டப்படும் சமத்துவபுரங்களால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது.. ஒவ்வொரு கிராமத் திலும் சமத்துவபுரங்கள் மலர வேண்டும், அதற்கு இன் றைய உத்தபுரம் எப்படிஉத்தமபுரமாக மாறும் என அதி கார வர்க்கத்தின் ஒரு சிறுபகுதி மேற்கொண்ட முயற்சியால் சமூக ஒருமைப்பாட்டை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் உருவாக்கினார்களோ.. அதே போல் தமிழக ஆட்சியார்களும், காவல்துறையும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் யாவும் சலுகைகளோ, இலவசங்ளோ அல்ல மாறாக அவை அவர்களின் உரிமை என்கிற கோணத்திலிருந்து ஆதிக்க சாதியினரும் பார்க்க வேண்டிய அணுகுமுறை தேவைப்படுகிறது, அதை நோக்கிய போராட்டத்தை தொடர்ந்து தமிழக மண்ணில் நடத்த வேண்டியுள்ளது.

கால சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த தடையாக இருக்கும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.. ஆனால் கல்விநிலையம் முதல் அரசு அலுவலகங்கள் வரை இன்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆண்டுக்காண்டு நடைபெற்றாலும், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றது என பாடப்புத்தகங்களில் அச்சடித்து விநியோ கம் செய்தாலும், ஆளும் வர்க்கத்தின் உறுதியான நடவடிக்கையிலேயே தீண்டாமை ஒழிப்பை சாத்தியப்படுத்த முடியும்.

தலித் மக்களின் மேம்பாடு என்பது ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் மேம்பாட்டோடு இணைந்தது என்கிற அடிப்படையில் சாதிய பாகுபாடுகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வேகப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல் இளைய தலைமுறையும் அகமண முறையில் இருந்து புறமண முறைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும். அது தான் சாதிய கட்டமைப்பை ஒரு பகுதி உடைத்தெறிய பயன்படும்சமூகத்தின் பொதுபுத்தியிலும் மாற்றம் வரவேண்டும்.

- முத்துக்கண்ணன்

1 comment:

  1. தீண்டாமை என்பது தமிழகத்தில் இல்லவே இல்லை எனவும் இட ஒதுக்கீட்டுக்காகவே தலித்துகள் சாதிப்பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் எனவும் பரப்பப்படும் செய்திகளுக்கு இது ஒரு சிறந்த பதிலடி.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)