Sunday, December 11, 2011

சேமிப்புக்குப் பரிசு சயனைடு குப்பியா?

தேர்பவனியின் போது தேர்ச்சக்கரங்களுக்கு அருகில், சிலர் கட்டைகளுடன் சேர்ந்தே வருவதைக் கவனிக்க முடியும். தேரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் அந்த ஏற்பாடு. இல்லையென் றால் தேர் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் இருப்போருக்கும், மேலே இருப்பவர்களுக்கும் பெரும் சேதாரத்தை விளைவிக்கும். அது போலத்தான் மக்களை முழுமையாக நேசிக்காத ஆட்சியாளர்கள், தங்களை சேமநல அரசு என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் மிக அவசியம். தற்போதைய மத்திய அரசை ஆளும் ஐ.மு. கூட்டணி அரசினைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. அதன் விளைவு தான் இரக்கமற்ற முறையில், பெட்ரோல் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வுகள், தொடர்ந்து அரங்கேறுகிறது. வருங்கால வைப்பு நிதியைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கவும், அந்நிய மூலதனத்தை இத் துறையில் அனுமதிக்கும் மசோதாவை முன்மொழியப் போவதாக தற்போதைய அறிவிப்பும் இருக்கிறது.

முன்னாள் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ப. சிதம்பரம் ஆகியோர் முயற்சித்து செய்ய முடியாது போன விஷயத்தை, பிரணாப் முகர்ஜி செய்து முடிக்க எத்தனிக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை 1952 ல் இருந்து வருங்கால வைப்பு நிதி திட்டம் அமலாகி வருகிறது. உலகின் பல நாடுகளில் நூற்றாண்டு காலமாக அமலாகி வந்தாலும், இந்தியாவில் 60 ஆண்டுகால பாரம்பரியம்தான் இந்த துறைக்கு இருக்கிறது. வளர்ந்த பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறை வான சதத்திலான மக்கள் பிரிவினரே ஓய் வூதியம் பெறும் வாய்ப்புக் கொண்டோராக உள்ளனர்.

சுமார் 5 கோடி தொழிலாளர் மற்றும் நடுத் தர வர்க்கத்தினரின் சேமிப்புத் தொகையாக வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. பல கோடிக்கணக்கில் உள்ள அணிதிரட்டப்படாத தொழிலாளருக்கு சொந்தமான நிதியும் வைப்பு நிதி கணக்கில் உள்ளது. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் தொகை தொழிலாளர்களின் பணமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தொகை வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், மிகப்பெரியதாகும். தாரளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள் கைகளின் தாக்கத் தினால், மேற்படி தொழி லாளர் மற்றும் நடுத்தர மக்களின் பணத்தின் மீது அந்நிய முதலீட்டாளர்கள் கண் வைத்து ஆக்கிரமிக்க காத்திருக்கின்றனர். இது உலக வங்கி மற்றும் பல கமிட்டிகளின் செயல்பாடு கள், அறிவிப்புகள் மூலம் அறியமுடியும்.

பொது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதி கரிக்கிற போது, வருங்கால வைப்பு நிதி மூலமான ஓய்வூதியம் வழங்குவதன் காலமும் நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இது குறித்து ஆய்வுசெய்யத் துவங்கிய உலக வங்கி, ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான ஆலோசனையை வடிவமைத்தது. அதில் மூன்று முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

ஒன்று, ஏழ்மையைப் போக்குவதற்கான வரி வருவாயில் இருந்து அரசு நிர்வகிக்கும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். இரண்டு, ஓய்வு காலத்திற்கான சம்பள சேமிப்புகளைத் தனியார் நிர்வாகத்திற்கு உட்படுத்தும் கட்டாய ஓய்வூதியத் திட்டம். மூன்று, வயது முதிர்ந்த காலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு களைப் பெறுவதற்கான ஆவல் கொண்டவர் களுக்கான சுய விருப்ப கூடுதல் ஓய்வூதியத் திட்டம். முதல் பரிந்துரையைக் கண்டுகொள் ளாத மத்திய அரசு, தனியார் மற்றும் அந்நிய முதலீட்டிற்கான ஏற்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள், வருங்கால வைப்பு நிதியை அரசே பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒன்று, அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் மிகப் பெரும் சரிவை ஏற்படுத்திய பங்குச் சந்தை வணிகம். இதன் மூலம் உலகமே மிகப் பெரும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து, அதிலிருந்து மீள இயலாது நீடித்து நிற்கும் நிலை.

இரண்டு, கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனம். இந்திய பொதுத்துறையைச் சார்ந்த 13 வங்கிகளில் 5630 கோடி ரூபாயையும், தனியார் துறையைச் சார்ந்த 4 வங்கிகளில் 582 கோடி ரூபாயும் கிங்ஃபிஷர் நிறுவனம் கடன் பெற்றுள்ளது. திவால் கணக்கு காட்டியுள்ள நிலையில் இது வராக் கடனாக பராமரிக்கப்படலாம். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திற்கும், இதர பல நிறுவனங்களுக்கும் இதுபோல் கடன் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வர வேண்டிய கடனை, வராக்கடன் பட்டியலில் வைத்து, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர்கள் பலமுறை அறிக்கை வாசித்திருக்கிறார்கள்.

ஆனாலும் கூட இந்திய வங்கிகள் 2008 உலக பொருளாதார நெருக்கடி காரணமாக, எந்த சேதாரத்தையும் சந்திக்கவில்லை. இதற்கு காரணமாக பிரதமரும், அன்றைய நிதி அமைச்சரும், திட்டக் கமிஷன் துணைத் தலைவரும், சோனியா காந்தியும் குறிப்பிட் டது, ”இந்திய வங்கித் துறை பொதுத்துறை வசம் இருப்பதே” என்பதாகும். அமெரிக்க வங்கிகளே திவால் என்கிற கடலில் தத்தளிக்கிற போது, தடுமாற்றமே இல்லாமல் சென்றது இந்திய பொதுத்துறை வங்கிகள் என்ற பெருமை, நமது நாட்டிற்கு இருக்கிறது. கடந்த காலத்தில் வங்கித்துறையில், அந்நிய முதலீட்டிற்கு முயற்சி செய்ததும், அதை இடதுசாரிகள் தடுத்ததும் மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்க வங்கிகள் பொருளாதார மந்தத் திற்கு வழிவகுக்க பிரதான காரணம், அந்த நாட்டில் வங்கிகள் பங்குச்சந்தையில் மட்டும் தீவிரம் காட்டியதாகும். வருங்கால வைப்பு நிதியை, அடமான கடன் பத்திரங்களில் முத லீடு செய்து, பங்குச்சந்தை வர்த்தகத்தில் பயன்படுத்தியதே ஆகும். விளைவு, அந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார இழப்பிற்கு ஆளாகினர். அவர்களின் முதிய வயதில் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத் திற்கு பெரும் தடங்கல் வந்து சேர்ந்தது. எனவே தான் அவர்கள் வால்ஸ்ட்ரீட் ஆக்கிர மிப்புப் போராட்டத்தை இரண்டு மாத காலமாக நடத்தி வருகின்றனர்.

இதன் பாதிப்பு ஐரோப்பாக் கண்டத்திலும் தீவிரம் பெறுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். இப்போராட்டத்தில் இன் னொரு பகுதியினரும் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்தவர்கள்தான் அந்தப் பகுதியினர். அமெரிக்க காப்பீட்டு குழுமம் என்ற நிறுவனம் உள்ளிட்ட, காப்பீட்டு நிறு வனங்களிலும் காப்பீட்டுத் தொகை செலுத்தி யவர்கள் ஆவர். காப்பீடு இருந்தும் மருத்வச்சிகிச்சைக்கு பலமாதங்கள் காத்திருக்க வேண்டிய அவலம் உருவானதே அவர்களும் போராட்டத்தில் இணைவதற்குக் காரணம். காப்பீட்டுப் பத்திரங்களைக் கூட பங்கு வர்த் தகத்தில் ஈடுபடுத்தியவர்கள்தான், உலக நிதி சந்தையில் கோலோச்சும் தனியார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும், இந்திய அரசு, ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை முன்வைக்கப் போவதாக அறிவித்திருப்பது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது. கொடிய நோய்களில் இருந்தும், இயற்கை இடர்பாடுகளில் இருந்தும் தப்பிய இந்திய முதியோர்களுக்கு சயனைடு குப்பியைப் பரிசாகத் தருவது போன்றது. இதற்கான துணிச்சல் மத்திய அரசுக்கு வரக்காரணம், ஆட்சிக் கூட்டணியில் இருப்போர் பலவீனமானவர்களாக இருப்பது என்றால் தவறல்ல.

திமுக தலைவர்கள் 2ஜி வழக்குகளில் தடுமாறுகின்றனர். சி.பி.ஐ சோதனைகளில் இருந்து தப்புவதற்காக ஆதரிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலக் கட்சிகள். அமைச்சரவையில் இடம் இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ். மிரட்டுவதற்கு வசதியானதாக காங்கிரஸ் இருப்பதைப் பயன்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ். பொருளாதாரக் கொள்கைகளில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. எனவே ஐ.மு. கூட்டணி-2 என்கிற அரசை எந்த பொருளாதாரக் கொள்கைகளின் மீதும் கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. குறைந்த பட்ச பொதுத் திட்டம் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

எனவே மேற்படிக் கட்சிகள் ஓய்வூதியத் துறையில் அந்நிய முதலீடு என்ற மசோதாவை எதிர்ப்பார்கள் என்று, இந்திய நடுத்தர வர்க்கமும், தொழிலாளர்களும் எதிர்பார்ப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. 2004 ல் இருந்து 2009 வரை இருந்த ஐ.மு.கூட்டணி -1 அரசு ஓய்வூதியதாரர்கள் மீது அல்லது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் கடுமையான பொருளாதாரக் கொள்கைகளை எளிதாக பின்பற்ற இயலவில்லை. காரணம், இடது சாரிகள் 63 பேர் வெளியில் இருந்து ஆதரவு என்பதன் மூலம் செய்த கண்காணிப்பாகும்.. பிரதமர் மன்மோகன்சிங் தான் நினைக்கிற பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரிகளிடம் விவாதிக்காமல் முன்வைக்க முடியாத நிலை இருந்தது. ஒருகட்டத்தில், நான் அடிமையைப் போல் நடத்தப்பட்டேன் என்று புலம்புகிற அளவிற்கு மன்மோகன்சிங் தள்ளப்பட்டார். எந்த இடத்திலும் இடதுசாரிகள் தங்களின் குடும்ப உறுப்பினர் அல்லது கட்சிக்காரரின் தேவைக்காக பிரதமரை நிர்ப்பந்திக்கவில்லை. அப்படி பிரதமரும் குற்றம்சாட்ட முடியாது.

எனவே இன்றைய இந்திய பொருளாதாரக் கொள்கைகளை மக்களுக்கு சாதகமாக மாற்றாவிட்டாலும், தாக்குதல் தொடுக்காமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துகிற சக்திகள் நாடாளுமன்றத்தில் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் நம் கழுத்துகளில் கட்டப்படும் சய னைடு குப்பிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

- எஸ்.கண்ணன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)