Tuesday, December 6, 2011

அம்பேத்கரின் கனவு!

எல்லோருக்கும் உடலால் முகமுண்டு, ஆனால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் முகமிழந்து போனவர்களுக்காக தன் பன்முகம் கொண்டு போர்க்கொடி உயர்த்தியவர்தான் அம்பேத்கர். சமத்துவம் என்பதே அவரது அடிநாதம். ஆகவே தான் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், உதிரி தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் நலன் குறித்து நிறைய பேசினார், எழுதினார், வாய்ப்பு கிடைத்த போது சட்டமாக்கினார்.

"சமூக பொருளாதார சமத்துவம் என்னும் லட்சியத்தை பிரகடனம் செய்யும் துணிவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.  சுயநலம் பிடித்த சில தனிமனிதர்களின் கட்டுப்பாட்டில் உற்பத்தி சாதனங்கள் இருக்கும் வரையில் அத்தகைய பிரகடனமே சாத்தியமில்லை. கலப்பையில் இரண்டு மாடுகளைத்தான் பூட்டுவார்கள். காந்தியம் என்பது உழுபவனையும் சேர்த்து மூன்றாவது மாடாக அதில் பூட்டுவது போன்றது." (தொகுதி 37 பக்கம் 212). காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கிருந்த முரண்பாடுகளுக்கு சமூகவியல் காரணங்கள் மட்டுமல்ல, வலிமையான பொருளியல் காரணங்களும் இருந்தன என்பதைத்தான் மேற்கண்ட அம்பேத்கரின் வரிகள் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துகிறது.

நில உடைமையாளர்களின் மகிழ்ச்சியில்தான், ஏழை விவசாயிகளின் வருத்தங்களுக்கான அடித்தளம் உள்ளது. எனவே நிலமற்றவர்களுக்கு நிலத்தை பகிர்ந்து அளித்திட வேண்டும். நிலங்கள் துண்டாடப்படுவதும், சிறு நில உடைமையும்தான் விவசாய முன்னேற்றமின்மைக்கு காரணம், ஆகவே நிலங்கள் இணைக்கப்பட்டு பண்ணைகள் உருவாக வேண்டும் என்கிற எதிர்மறையான கருத்தை தவறான அரசியல் பொருளாதார நிலைபாடு என்கிறார்.

இது நிலமற்ற பெரிய பட்டாளத்தை உருவாக்கும். பெரும் பகுதி மக்களுக்கு உழைக்கும் வாய்ப்பே இருக்கிறது. விவசாயத்தை தவிர வேறு ஊதியம் தரும் வேலை எதுவும் இல்லாததால் அனை வரும் சிறு துண்டு நிலமாவது பெரும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். நிலவுடமை எவ்வளவு சிறிதாகப் போனாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை, அவற்றை அவர்கள் இயன்ற அளவு பயிரிடுகின்றனர். எனவே நிலம் துண்டாடப்படுகிறது என்பதை விட நிலம் பயிரிடப்படுகிறது என்பதுதான் உண்மை என்கிறார்.

பெரும் நில உடைமைகள் ஒழிக்கப்பட்டு அரசே அந்நிலங்களை உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். நில முதலாளித்துவம் ஒழிப்பு என்பது கூட்டுறவு முறையில் விவசாயம் செய்வது. ஆகவே விவசாயத்தில் அரசு முதலீடு அதிகரிக்க வேண்டும். நில அடமான வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றை தொடங்குமாறும் அவரது சுதந்திரத் தொழிற்கட்சி பரிந்துரைத்தது. விவசாயத்தில் தற்போது உள்ள தீமைகளில் இருந்து விடுபட கூட்டுறவு முறை விவசாயமே ஒரே வழி எனவும், தன்னைப் பொறுத்தவரை சோவியத் முறையிலான விவசாயமே மிகச் சிறந்ததாகும் என்றும் அம்பேத்கர் குறிப்பிகிறார். விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் தொழிற்சாலையில் பணிபுரிவோர் பெறும் நன்மைகள் விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் முறையினை செயல்படுத்த வேண்டும். அதோடு விவசாயத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காத கிராமப்புற மக்களுக்கு பிற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா மொழிமயமாக வேண்டும் என 1918-லேயே அம்பேத்கர் தனது கருத்துக்களை வெளியிடுகிறார்.

1936ல் அம்பேத்கர் துவங்கிய சுதந்திரத் தொழிற் கட்சி தனது கொள்கை பிரகடனத்தில், தொழிலாளர் நலன் பற்றி, தொழில் வளம் உயர்வதற்கு தொழிலாளர் நலன் மிக அவசியமானது,  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல், தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்தல், நியாயமான கூலி, ஊதியத்துடன் விடுமுறை, குடியிருப்புகள் அமைத்தல், தேவைக்கேற்ப தொழிற்சாலைகளின் நிர்வாகத்தை அரசே ஏற்றல் வேண்டுமென தெரிவிக்கிறது.

1936ல் பம்பாய் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அம்பேத்கர் அமர்ந்தார். 1938 செப்டம்பரில் ஆளும் காங்கிரஸ் அரசு தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில், தொழில் தகராறுகள் மசோதாவை கொண்டு வந்தது. இம்மசோதா கொடூரமானது, தொழிலாளர்களை பழி வாங்கும் இரத்த வெறி கொண்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான உரிமை ஒரு புனிதமான உரிமை என்பதைப் போன்றே வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் புனிதமானது.

மேலும் இம்மசோதாவிற்குத் தொழில் தகராறுகள் மசோதா என்பதற்குப் பதிலாக தொழிலாளர்களின் சிவில் உரிமைகளை முடக்கும் மசோதா என்றே பெயரிட்டிருக்க வேண்டுமென்று அம்மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் அம்பேத்கர் உரையாற்றினார்.

பின்னர் 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் நிர்வாகக்குழுவில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் சட்டத்தை மத்திய சட்டசபையில் முன் மொழிந்தார். சட்டம் நிறைவேறியது. முத்தரப்பு மாநாடுகளை நடத்தி தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அடித்தளமிட்டார்.

இவ்வாறு சுரண்டப்படும் வர்க்கமான தொழிலாளர்களின் பக்கம் நின்று வாதிடுகிற அம்பேத்கர் "தொழிலாளர்கள் சாதி பார்வையை மீறி ஒரு தொழிலாளர் முன்னணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இருக்க இடமும், அணிய ஆடையும், உண்ண உணவும் கிடைக்கும். உலகின் உணவு மற்றும் சொத்துக்களின் உற்பத்தியாளர்களாகிய நீங்கள் பட்டினி கிடந்து சாக நேரிடாது (தொகுதி 37 பக்கம் 221) என தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் தொழிலாளர் ஒற்றுமைக்கு இடையூறராக உள்ள சமூகத் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக பேசுகிறார். சாதி அமைப்பு தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் பிரிக்கின்றது. மனிதர்களை சில சாதிகளாகப் பிரித்து அஞ்சறைப் பெட்டியில் போடுவது போல் போட்டு விட முடியாது. எங்கெல்லாம் ஒரு கூட் டம் தம் சொந்த (சாதி) நலன்களைக் காத்துக் கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் வெறுப்பு மனப்பான்மை காணப்படும். இந்த மனநிலையே மற்ற கூட்டத்தாரோடு இணக்கமாவதைத் தடுக்கிறது.

ஆகவே தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வர ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியோடு இனம், சமயம், சாதி ஆகிய பின்னணியில் பகைமை கொள்வதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து களைவதன் மூலம் தான் அத்தகைய ஒற்றுமையை கொண்டு வர முடியும் என அம்பேத்கர் நம்பினார்.

சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகிய அனைத்து தளங்க ளிலும் மானுட சமத்துவம் சிறகடித்துப் பறக்கிற ஒரு நவ இந்தியாவே அம்பேத்கரது கனவாக இருந்துள்ளது. இப்போதும் நம் முன் இருக்கிற கடமையும் அதுவே.

- கே.சாமுவேல்ராஜ்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)