Sunday, December 4, 2011

நாடகமாடும் திரிணாமுல், நயவஞ்சக காங்கிரஸ்


சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று காங்கிரஸ்-திரிணாமுல்-திமுக-என்சிபி-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்க்கட்சிகளும், அனைத்து வர்த்தகர்களும் போர்க் கோலம் பூண்டுள்ளனர். டிசம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் 5 கோடி வணி கர்கள் பங்கேற்ற வரலாறு காணாத பிரம் மாண்டமான கடையடைப்பு போராட்டம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 8 நாட்களாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்துள்ளது. 9வது நாளாக வெள்ளியன்றும் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு மிக்க போராட்டத்தைக் கண்டது. இடதுசாரிக்கட்சிகள், பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள், அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடவே கூடாது என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றன. வெள்ளியன்றும் இதுதொடர்பாக இரு அவைகளிலும் அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், 6ம் தேதி மொகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்ப தாலும் நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்கி இரண்டு வார காலம் முடிந்துள்ள நிலையில், சில்லரை வர்த்தகம், முல்லைப்பெரியாறு அணை விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்த பிரச் சனை, தெலுங்கானா விவகாரம், உத்தரப் பிரதேசத்தை நான்காக பிரிக்கும் விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்விகளும் அமளிகளும் எழுப்பிய போதிலும் இவற்றில் எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாணவோ, பதிலளிக்கவோ அரசுத்தரப்பில் சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தும் இன்னும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாகவும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும், பாஜக சார்பிலும் ஒத்திவைப்பு தீர்மானங்கள் அளிக்கப்பட்டபோதிலும், அவையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

எரிந்துகொண்டிருக்கும் எந்தப் பிரச்சனைக்கும் நாடாளுமன்றத்தில் பதிலளிப்பது இல்லை என்ற மன்மோகன்சிங் அரசின் பிடிவாதத்தால் கடந்த இரண்டுவார காலமாக நாடாளுமன்றமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித் துள்ளது.

இப்படி திட்டமிட்டு ஸ்தம்பிக்க வைப்பதே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் உள்ளாக்காமல் எப்படியேனும் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற காங்கிரஸ் தலைமையிலான அரசின் வஞ்சகமான சூழ்ச் சியே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியிருந்தார்.

இடதுசாரிக்கட்சிகளைப் பொறுத்த வரை விவாதம் எதுவும் நடக்காமல், அதற்கு அரசு இடம்கொடுக்காமல் அவை நடவடிக்கைகளை முற்றிலும் முடக்குவதை ஒருபோதும் ஏற்கவில்லை என்று தெரிவித்த அவர், கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் உட்பட மிக முக்கியமான பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோதிலும் அவை நடவடிக்கைகள் முழுமையாக முடங்குவதற்கு அரசு வழிவகுத்தது என சுட்டிக்காட்டினார். அரசின் இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், வியாழனன்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகப்பெரும் அமளியில் ஈடுபட்டு வருவது ஒரு அப்பட்டமான நாடகமே என்று குற்றம்சாட்டினார்.

அமைச்சரவைக்கூட்டத்தில் அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டு, அவையை முடங்கச்செய்யும் திரிணாமுல் உறுப்பினர்களின் நடவடிக்கையை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

“2004ம் ஆண்டு பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசு, தனது முதல் பட்ஜெட்டில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்த முடிவை அந்த அரசால் ஒரு அடி கூட முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு முடிவை மேற்கொள்ளவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அரசை உறுதிபட தடுத்து நிறுத்தின. இடதுசாரிக்கட்சிகளை மீறி அரசால் செல்ல முடியவில்லை” என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

“ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். இத்தகைய நாசகரமான முடிவை எடுக்கக் கூடாது என்று வலுவான முறையில் நிர்ப்பந்தித்தோம். ஆனால் இப்போது திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குள் இருக்கிறது. அரசுக்கு வெளியிலிருந்தே, சில்லரை வர்த்தகத்தை சீரழிக்கும் முடிவை எங்களால் தடுத்து நிறுத்த முடிந்தது என்றால், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரசால் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவை தடுத்து நிறுத்த முடியாதா? அங்கே அனுமதித்துவிட்டு வெளியில் வந்து இவர்கள் வாய்கிழியப்பேசுகிறார் கள். நாடாளுமன்றத்தில் நாடக மாடுகிறார்கள்” என்று சீத்தாராம் யெச்சூரி கடுமையாக சாடினார்.

அதுமட்டுமின்றி நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் போதே இத்தகைய ஒரு மோசமான முடிவை எடுப்பதற்கு இந்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, கடந்த காலங்களில் நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் போது அரசாங்கம் கொள்கை முடிவுகளை அறிவித்ததை இதே காங்கிரஸ் கட்சி கடுமையான முறையில் எதிர்த்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

1989ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங், தேசிய ரைபிள்ஸ் படை என்ற துணை ராணுவப்படையை நிறுவும் முடிவை, நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் போதே அறிவித்தார். அப்போது பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்தவர் இன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசின் உள் துறை அமைச்சராக இருக்கிற ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. அச் சமயத்தில் பிரதமருக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் அவையில் அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும், அன்றைய சபாநாயகர் ரபி ராய், நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும்போதே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது அவையின் மாண்பை மீறிய செயல் என்று அரசாங்கத்தை குட்டினார் என்பதை கவனிக்க வேண்டும் என்றும் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)