Wednesday, November 9, 2011

டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும்

‘‘டிராபிக் ராமசாமி போன்ற மனிதர்களை கொண்டாடத் தொடங்கினால்தான் நாடு உருப்படும்” இப்படி முகநூலில் (பேஸ் புக்கில்) ஒரு நண்பர் கூறியிருந்தார். “மனிதர் விடாமல் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி விதிமீறியக்  கட்டடங்கள் சிலவற்றுக்காவது சீல்வைக்கச் செய்துவிட்டாரே” என பாராட்டியிருந்தார்.

அவர் கூறியது ஒருவகையில் சரிதான். தீப்பிடித்துவிட்டதாகவோ, குண்டுவைக்கப்பட்டிருப்பதாகவோ யாரோ ஒரு வதந்தியைக் கிளப்பினால் போதும் பயபீதியில் மிரண்டோடும் கூட்ட நெரிசலில் மிதிபட்டே நூற்றுக் கணக்கில் செத்திருப்பர். கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் கருகிச்செத்த கோரக் காட்சி இங்கேயும் அரங்கேறியிருக்கலாம். சீல் வைக்கப்பட்ட பலகட்டடங்களின் நிலை அதுதான்.

அப்படி ஒரு சோகம் நடக்கும் முன்பே சீல் வைக்கப்பட்டது மகிழ்ச்சியே. டிராபிக் ராமசாமியின் பொதுநல வழக்கும் அதில் நீதி மன்றம் காட்டிய கெடுபிடியும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது. இதற்கே 15 ஆண்டு களுக்கு மேல் உருண்டோடிவிட்டது. மாறி மாறி வந்த கழக ஆட்சிகள் விதிமீறிய கட்டடங்களை பணம் காய்ச்சி மரங்களாகத்தான் பார்த்தன. அதற்கேற்ப அடக்கி வாசித்தன. இதெல்லாம் நினைவில் அலைபாயும்போதே வேறு சில காட்சிகளும் மனத்திரையில் ஆடுகின்றன.

பொங்கல் மற்றும் இதரப் பண்டிகையையொட்டி கிராமவீதிகளுக்கே வந்து பெட்ரமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜவுளியை ஏலம் போட்ட நாட்கள் போயொழிந்தன. வீடு தேடி புடவை, வேட்டி, போர்வை என விற்பதும் வழக்கம். பொதுவாக இந்தியச் சந்தையை வெண்டர்ஸ் ஓரியண்டட் அதாவது வீடுதேடி வந்து பொருள் விற்கும் வகையது என்பர். மக்களைத்தேடி இங்கு சந்தைவரும். ஆனால் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ மக்கள்தான் சந்தையைத் தேடிப் போவார்கள். அதனை ‘மார்க்கெட் ஓரியண்டட்’ என்பர்.

கடந்த நூற்றாண்டில் நகரங்களில் முளைத்த ஜவுளிக்கடைகள் மக்களை ஈர்க்கத்துவங்கின. ஜவுளி என்பதே தமிழ்ச்சொல் அல்ல என்பதிலிருந்து அது நமக்கு புதிய வரவு என்பது சொல்லாமலே விளங்கும். இந்தக் கடைகள் தலைச்சுமையாகவும் சைக்கிளிலும் விற்பனை செய்த பலரை அத்தொழிலைவிட்டே ஓட்டியது. அதேசமயம் புதிய நகரக் கடைவீதிகள் பல்லாயிரம்பேரை வியாபாரிகளாக்கியது. பல்லாயிரம்பேருக்கு வேலை வாய்ப்பானது. நடைபாதை வணிகமும் பெருகியது.

தாராளமய உலகமய கத்தில் இந்தியா நுழைந்ததும் வர்த்தகங்களின் தன்மை மாறலாயிற்று. ஜவுளிக்கடைகள் ஜவுளிக்கடலாயின. மின்னணு ஊடகங்களின் விளம்பரப் பொறியில் மக்கள் விழலானார்கள். மெகா சீரியல், மெகாத் தொடர்கள்,மெகா ஷோக்கள், மெகா தயாரிப்புகள் என எங்கும் மெகா மோகம் தலைவிரித்தாடலாயின. இவ்வளவு ஏன், இருபது கோடிச் செலவில் உண்ணா விரதம் இருந்த அன்னா ஹசாரேவைத்தான் காந்தியவாதி என்கிற காலம் இது. இந்த காலக்கட்டத்தில் பெருநகரங்களில் மெகா ஸ்டோர்கள் உருவெடுத்தன. அவை சின்ன மீன்களை விழுங்கி பெரிய மீன்களாக உருவெடுத்தன. அனைத்து நெறிமுறைகளையும் காலில்போட்டு மிதித்துக் கொழுத்தன. மக்கள் அவற்றை நோக்கிப் படைஎடுக்கும்படி விளம்பர மகுடியை சினிமா நட்சத்திரங்கள் மூலம் ஊதினர். பெருகும் வாடிக்கையாளர் கூட்டத்தின் எதிரொலியாக கட்டடங்கள் வரம்புமீறி வீங்கின; வீதிகள் சுருங்கின; திண றின. எடுத்துக்காட்டாக கூறுவதெனில் சென்னையில் தி.நகர் மெகா வியாபாரக் கேந்திரமானது.

தி.நகரில் சென்று பொருட்கள் வாங்குவதுதான் நாகரிகமானது; கவுரவமானது என்ற மாயை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களை தொற்றுவியாதியைப் போல் கவ்வியது. அந்த மாவட்டங்களின் நடுத்தர வியாபாரிகள் பிழைப்பில் மண் விழுந்தது. பஸ்-ரயில் போக்குவரத்தும் பெரும் நெரிசலைச் சந்தித்தன.

இதே காலகட்டத்தில் தகவல்தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, குறிப்பாக கணினித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மத்திய தர மக்களில் ஒரு பகுதியினரிடம் பணப் புழக்கத்தை அதிகரித்தது. வெளிநாடு சென்று வரும் அவர்களிடம் மேலைநாடுகள் போல் இங்கு சாலைவசதி, கார்பார்க்கிங், மெகா வணிக வளாகங்கள், போன்ற எதிர்பார்ப்புகள் ஓங்கின. ஊடகங்களில் எதிரொலித்தன.

இதற்காகவே காயை நகர்த்திய உலக வங்கி, ஐஎம்எப் போன்றவற்றின் செயல் மேடையாக அரசும்,மாநகராட்சியும், பெரு நகரவளர்ச்சிக் குழுமமும் உருமாறின. போக்கு வரத்துக்கு இடையூறு, எனவே அண்ணா சாலையில் ஊர்வலம் போராட்டம் கூடாது. தூய்மை மிகமுக்கியம்.எனவே மெரினாவில் பொதுக்கூட்டங்கள் கூடாது. குடிசைகள் சென்னையின் எழிலையும் சுகாதாரத்தையும் கெடுக்கின்றன. எனவே அப்புறப்படுத்த வேண்டும். நடைபாதைக்கடைகளால் டிராபிக் ஜாம் ஏற்படுகின்றன. எனவே அவற்றை காலிசெய்யவேண்டும்.இவ்வாறான குரல்கள் கேட்கத் தொடங்கின. டிராபிக் ராமசாமிகள் உருவாயினர். பொதுநலவழக்குகள் புனையப்பட்டன. நீதிமன்றங்கள் வர்க்கப்பாசத்தோடு ஒத்து ஊதின. சென்னையின் முகப்பொலிவை மட்டுமல்ல ஆத்மாவையே மாற்றியமைக்கும் உலகவங்கிச் சதி அரங்கேறலாயிற்று.

வெறும் வாயை மென்ற இவர்களுக்கு விதிமீறிய கட்டடங்கள் அவலாயின. 15 ஆண்டுகள் போராடி சீல் வைக்கிற அளவுக்கு வென்றனர். அது சரிதான். அதேநேரம் அந்த வணிகநிறுவனங்களை நம்பி நிற்கிற பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை திடீரென வீதியில் தூக்கி எறியப்பட்டால் என்ன ஆகும் என்ற கவலை டிராபிக் ராமசாமிகளுக்கும் இல்லை. நீதிமன்றங்களுக்கும் இல்லை. நாயை அடிப்பதானால்கூட தப்பிக்க வழிவிட்டு அடிப்பார்கள். அந்த மிருகாபிமானம்கூட இந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது காட்டப்படவில்லை. அங்காடித் தெரு சினிமா இவர்களின் வாழ்க்கைப்பாட்டில் ஒரு பகுதியை காட்டின. முழுவதும் அறிந் தால் கண்களில் இரத்தம் கொட்டும். கெட்டும் பட்டணம் போ என பிழைக்க வந்தவர்கள் இன்று சென்னை நகர வீதிகளில் குப்பையாய் கொட்டப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வுரிமை பற்றியும் குறைந்தபட்ச கண்ணியமான பணிச்சூழல் பற்றியும் ஊடகப்புலிகளுக்கோ, அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ டிராபிக் ராமசாமிகளுக்கோ அக்கறை ஏதும் எப்போதும் இருந்ததில்லை.

இப்போது இவர்கள் கவலையே வேறு. ஏழைகள் உள்ளே நுழையக்கூட முடியாத எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும் வால்மார்ட்டுகளும்தான் இவர்களின் ஒரே கனவு. அதற்கு இடையூறாக உள்ள எல்லாம் அவர்கள் கண்களை உறுத்தும்.அந்த கனவு அவென்யூக்களில் கார்பார்க்கிங் செய்யவே ரூ.200/- உள்ளேபோய் வெளியே வந்தால் குறைந்த பட்சம் ரூ.3000/-காலியாகிவிடும். பெரும்பாலோரின் அரை மாதச் சம்பளம் அது. புதைப்பதற்குக்கூட போதுமானதாகஅல்லாத கையகல ரூம் வாடகை ரூ.5000/-யை தாண்டுகிறது. வீட்டுமனை விலையோ பலகோடி. இங்கே சாதாரண மனிதர்கள் பிழைக்க முடி யாது. வாழமுடியாது. நடைபாதை வியாபாரமும் போச்சு. நடுத்தர வியாபாரமும் நொடிஞ்சாச்சு. சின்னமீன்களை விழுங்கி அடாவடிச் செயல்கள் மூலம் கொழுத்த சரவணாக்கள், போத்தீஸ்கள் உட்பட அனைத்தையும் விழுங்க வால்மார்ட் திமிங்கிலங்கள் வாய்பிளந்து நிற்கின்றன. அரசும் நீதிமன்றங்களும் அதற்குத்தான் நடைபாவாடை விரிக்கின்றன.

‘சென்னை யாருக்கு?’ இக்கேள்வியை உரக்க கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐம்பது ரூபாய் கூலிக்காரன் வாழ கையேந்திபவன்களும், கோடீஸ்வரர்கள் டாம்பீகமாக வாழ நட்சத்திர ஹோட்டல்கள், கடைகளும் என்கிற பன்முனைதான் இந்திய யதார்த்தம் என மேற்கத்திய நிபுணர்கள் பீற்றியதுண்டு. சென்னை நகரில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. நடைபாதைக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை, குடிசைகள் முதல் சாதாரண மக்கள் குடியிருப்புவரை அனைத்தையும் பிய்த்து எறிந்துவிட்டு வசதிபடைத்தவர்களின் கனவு நகரமாக சென்னையை சிருஷ்டிக்க மௌனமாக ஒரு உலகவங்கிச்சதி அரங்கேறுகிறது. டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும் அதன் குறியீடு தான். வாய்பொத்தி மெய்பொத்தி இருக்கப் போகிறோமா? ஒரு விழுக்காடு மக்களுக்காகவா? 99 விழுக்காடு மக்களுக்காகவா?என வால்ஸ்ட்ரீட்டுக்கு எதிராக போராட்ட முழக்கம் அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் கேட்கிறது. அதைப்போல சென்னை யாருக்கு? வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமா? அனைவருக்குமா? இக்கேள்வி வீதிகள்தோறும் இடி முழக்கமாய் எதிரொலிக்கவேண்டிய நேரம் நெருங்கி விட்டது.இன்னுமா மௌனம்? உரக்கப் பேசுக.

- சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)