Sunday, November 13, 2011

வெற்றியைத் தந்தவர்களுக்கு....

உள்ளாட்சி அமைப்புகள் இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்திருத்தங்கள் 73 மற்றும் 74வது மூலமாக அதிகாரமிக்க அமைப்பாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையும் முறையாக தொடர்ச்சியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக உள்ளாட்சி தேர்தல் என்பது நடத்தப்படாமல் இருந்து வந்தது.

தற்சமயம் 1996 முதல் 2011 உள்ளாட்சி தேர்தல் வரை நான்கு தடவை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்றம்,  சட்டமன்றம் அடுத்தபடியாக மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்யும் இடமாக இம்மன்றங்கள் உள்ளது. உள்ளாட்சி மன்றங்கள் தான் மக்களுக்கு சேவை செய்யும் மிக நெருக்கமான இடங்களாகும்.
   

ஜனநாயகத்தை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல அதிகாரத்தை பரவலாக்குவது அவசியமாகும். அதிகாரத்தை பரவலாக்கிட இந்தியா போன்ற பெரும் ஜனத்தொகை கொண்ட நாட்டில் உள்ளாட்சி மன்றங்கள் மிக முக்கிய கருவியாகும்.
   

அதிமுக விற்கு பெரும் வெற்றியை அளித்துள்ள இத்தேர்தல் முடிவிற்கு காரணம் கடந்த கால திமுக ஆட்சியின் வெறுப்பு இன்னமும் மக்கள் மத்தியில் மிக ஆழமாக பதிந்துள்ளதே காரணம். தலைநகர் முதல் குமரி முனை வரை தலைமை துவங்கி கடைசி உடன் பிறப்பு வரை உள்ளாட்சிகளில் செய்த அக்கிரமங்கள் தான் அவை. கட்டட வரைபட அனுமதி துவங்கி மக்களின் அடிப்படைத் தேவையான சாலை, சாக்கடை, குடிநீர் கல்வி சுகாதாரம் என அனைத்து இடங்களிலும் உள்ளாட்சிகளில் கழக கண்மணிகளின் கமிஷன் ஆட்சியே நடைபெற்றது.
   

அத்தோடு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை. செய்த பணிகளின் தரம் பற்றி எழுதத் தேவையான காகிதம் செய்வதற்கு தமிழகத்தின் காடுகளில் உள்ள மரம் போதாது.   
   
உள்ளாட்சி அமைப்புகள் செய்யும் முக்கிய பணிகள்
   

1.குடிநீர், 2.சாக்கடை, 3.சாலை, 4.தெருவிளக்கு, 5.கட்டட வரைபட அனுமதி, 6.கல்வி, 7.சுகாதாரம்,  8.சான்றிதழ் வழங்குவது போன்றவையாகும். 1.வீட்டுவரி, 2.தண்ணீர் வரி, 3.காலிமனை வரி போன்ற வரிகளை வசூலித்தும் மத்திய-மாநில அரசுகள் தரும் நிதியின் மூலமாகவும் இப்பணிகளை நிறைவேற்றி வருகிறது.

கிராம ஊராட்சி
   

கிராம ஊராட்சி தலைவருக்கு யாருக்கும் இல்லாத சிறப்பு அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் காசோலையில் கையெழுத்திடும் உரிமையாகும். கிராம ஊராட்சியில் மூன்று விதமாக வங்கி கணக்குகளை அரசின் வழிகாட்டுதலோடு பராமரித்து வருகின்றனர். ஊராட்சியிலோ ஊராட்சிக்கு அருகிலேயோ உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இக்கணக்குகள் துவக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கணக்குகளை தலைவர் மற்றும் துணைத் தலைவர் இணைந்து கையெழுத்திட்டு இயக்கி வரலாம். கிராம ஊராட்சிக்கு வரவினம் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் திட்டம் சிறப்பு நிதி ஆகியவற்றை இக்கணக்கில் வைக்கின்றனர். பின்னர் கிராம சபை கிராம ஊராட்சிக் கூட்டத் தீர்மானம் அடிப்படையில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றுவதற்கு தற்சமயம் உள்ள நிதி வரவினம் என்பது பொதுவாக மோசமாகவே உள்ளது.
   

ஊராட்சிகள்  குடிநீர் சுகாதாரம் சாலை சாக்கடை தெருவிளக்கு நிறைவேற்றிட வருமானம் இல்லாமல் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் நிதியை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். ஆனால் மத்திய-மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கும் நிதியளவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தமிழகத்தில் உள்ளது. கேரளா, மேற்குவங்கம் 30 சதவீதத்திற்கும் மேலான நிதியை ஒதுக்குகின்றனர். மாவட்ட ஊராட்சிக்கு தனிப்பட்ட சொந்த வருமானம் கிடையாது. மத்திய-மாநில அரசுகளின் நிதி கிடைத்தால் மட்டுமே மாவட்ட ஊராட்சிகள் பணியினை திட்டமிட முடியும். அதேப் போன்றே ஊராட்சி ஒன்றியங்களும் நிதி கிடைத்தால் மட்டுமே பணியினை செய்ய முடியும். ஊராட்சி ஒன்றியங்கள் பள்ளிக்கூடங்களில் கட்டட பராமரிப்பு பொறுப்பை தன்வசம் கொண்டுள்ளது. இப்பராமரிப்பு பணிகளுக்குக் கூட பணம் இல்லாமல் மோசமான நிலைமையில் பல பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. சொந்த பொறுப்பில் ஏதேனும் வணிக வளாகங்கள் இருந்தால் மட்டுமே இதற்கு வருமானம் கிட்டும். மாவட்ட ஊராட்சியும் ஊராட்சி ஒன்றியங்களும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அதிகாரம் ஏதுமற்ற அலங்கார பொம்மைகளாகவே உள்ளன. மாவட்ட வளர்ச்சி குறித்து திட்டமிடுதலை மாவட்ட ஊராட்சியோ ஊராட்சி ஒன்றியம் முன்னேற்றம் குறித்த முயற்சியை ஊராட்சி ஒன்றியமோ செய்வதற்கு அதிகாரமோ நிதியோ இல்லை. இந்நிலையை மாற்றி மாவட்ட திட்டக்குழுவை போல மாவட்ட ஊராட்சியையும் கொண்டு வந்து அதிகாரம் அளித்திடுவது உள்ளாட்சியில் ஜனநாயகத்தை வளர்த்திட உதவிடும்.

மாநகராட்சி
   

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சட்டத்தின்படி இம்மன்றங்களின் செயல்பாடு என்பது அமையும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக மக்கள் நகரங்களை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலைமையை மத்திய-மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கியுள்ளன. இதனால் நாள் தோறும் நகர்ப்புறங்களில் குடியேறும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நகரங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் என்பது தரமான போதுமான அளவு கிடைப்பதில் பெரும் இடைவெளி உள்ளது. ஒரு தனி மனிதனுக்கு குறைந்தபட்சம் நல்ல குடிநீர் 160 லிட்டர் அளிக்கப்பட வேண்டும். ஆனால் 70 லிட்டர் கூட மாநகராட்சிகளில் தற்சமயம் தரப்படவில்லை. சுகாதாரம்: சாக்கடையை பராமரிப்பது பாதாள சாக்கடைகளை உருவாக்குவது குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளுக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை.

இப்பிரச்சனைகளை கண்டு கொள்ளவில்லை. கட்டட வரைபட அனுமதி தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவது, ரியல் எஸ்டேட் போன்ற நிலம் சார்ந்த அனுமதிகளில் ஏராளமான முறைகேடுகள் உள்ளாட்சி மன்றங்களில் நடைபெறுகிறது. சந்தை மதிப்பிற்கும் உள்ளாட்சி மன்றங்களில் விதிக்கப்படும் வரி அளவிற்கும் மிகப்பெரிய மாறுபாடு உள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கமிஷனைப் பொருத்தே இதன் மாறுபாடு கூடுவதும் குறைவதுமாக உள்ளது. இதனால் மக்கள் செலுத்தக்கூடிய வரியும் அரசின் திட்ட பணமும் பெருமளவு கொள்ளையடிக்கப்படுவதோடு, ஊழலும் தலைவிரித்தாடுகிறது. நிறைவேற்றப்படுகின்ற பணிகள் மிக மோசமான அளவிற்கு தரமற்றதாக இருக்கின்றது. ஒரே பணியை இதனால் மீண்டும் மீண்டும் உள்ளாட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றது.

இக்காரணத்தால் மக்களின் பணம் விரயமாவதோடு ஊழலும் ஒழுங்கீனமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்ளாட்சியில் பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி மேயரில் 10ல் 6 பேர் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உரிய முறையில் அதற்குரிய அதிகாரங்களோடு பணியாற்ற வைப்பது அரசின் கடமையாகும். சாதி ரீதியாகவோ சமூக ரீதியாகவோ தடைகள் ஏற்படாமல் பெண்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் உள்ளாட்சி அதிகாரத்தை தகுந்த முறையில் நிறைவேற்றிட பயிற்சியும் பாதுகாப்பும் செய்திடுவதின் மூலமாக உள்ளாட்சியை ஜனநாயகப்படுத்தி சமூகத்தை மேம்படுத்திட வேண்டும்.

ஆளும் கட்சி பெருவாரியான இடங்களை பெற்றுள்ளதால் உள்ளாட்சி மன்றங்களை முறையாக நடத்திடும் முழு பொறுப்பும் அதிமுகவுக்கே உள்ளது.  எதிர் கட்சிகள் சிறிய எண்ணிக்கையில் இருக்கின்ற போதும் அவர்களின் விவாதத்திற்கு உரிய பதிலும் நடவடிக்கைகளும் எடுப்பது அவசியமாகும். எதிர் கட்சிகளுக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைக்காத மன்றங்களில் ஆளும் கட்சியே எதிர்கட்சிக்கு உரிய பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகும்.  எனவே தற்சமயம் அமோக வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு கடந்த ஆட்சியைப் போலவே செயல்படாமல் கடந்த காலத்தில் செய்யப்படாமல் உள்ள ஏராளமான அடிப்படை பணிகளை வருங்காலத்தில் செய்திடுவதே மக்கள் அளித்த தீர்ப்பிற்கு தரும் மரியாதையாகும்.

எஸ். பாலா

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)