Sunday, November 13, 2011

ரதயாத்திரையும்... ரத்த ஆறுகளும்....

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மெய்ப்புற ஒன்றுடையாள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
   

என்றான் மகாகவி. பாரதி. ஆம் இந்தியா பல மொழிகளை, இனங்களை, கலாசாரங்களைக் கொண்ட நாடு. இவை அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டே கூட்டாட்சி தத்துவத்தின் மூலம் ஒன்றுபட்ட இந்தியாவாக நாம் அனைவரும் இந்தியனாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டில் தான் இந்திய அரசியல் சாசனமே 1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
   

இந்தக் கூட்டாட்சி தத்துவத்திற்கு என்றுமே எதிராகத்தான் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் அகண்ட பாரதம், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் திருவாளர் லால்கிஷன் அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட  ரதயாத்திரையில் பல ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் (இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்) படுகொலை செய்யப்பட்டனர். உயிரோடு எரிக்கப்பட்டனர். பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர். சிறுபான்மை மக்களின் தேவாலயங்களும், மசூதிகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக  நாடு முழுவதும் இந்துக்களில் ஒரு பகுதியினர் வன்முறையில் இறக்கிவிடப்பட்டனர். இந்தியாவின்  ஒற்றுமை கேள்விக் குறியாக்கப்பட்டது. இத்தகைய மதக் கலவரங்களை நடத்தி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக அரசியல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக மாற்றினார்கள். தற்போது, மீண்டும் நல்லவர்களைப் போல வேடம் தரித்து நியாயம் பேச கிளம்பிவிட்டார்கள்.
   

நரி  செத்தாலும் கண்ணு ரெண்டும் ஆட்டுமேல் என்பார்களே அது போலத்தான் இன்று பி.ஜே.பி க்கும்.  எல்.கே. அத்வானியின் ஊழலுக்கு எதிரான ரதயாத்திரைக்கும், மத்தியில் உள்ள  காங்கிரஸ் கூட்டணி ஊழலில் தத்தளிக்கின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் 1,76,000 கோடி,  எஸ்  பேண்டு ஸ்பெக்ட்ரத்தில் 2 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 80 ஆயிரம் கோடி, ஆதர்ஷ் குடியிருப்பில் ஊழல் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இச்சூழலை தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும், பெரும் பணக்காரர்களும் பல லட்சக் கணக்கான கோடிகளை வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ளதை நாட்டிற்கு திருப்பிக் கொண்டுவர வேண்டும் என கூப்பாடு போடுகின்றனர் பி.ஜே.பி யினர்.
   

ஊழலுக்கு எதிராக முதலில் அன்னா ஹசாரேயை களம் இறக்கினார்கள். அன்னா ஹசாரே அவர்கள் முதலில் மோடி அரசை கைகாட்டி அரசு என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொன்னார். இந்தியாவில் 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத மாநிலத்தை உதாரணம் சொல்லவில்லை. ஆனால் பிறகு ஹசாரே மோடிக்கு எதிராகவும், பி.ஜே.பிக்கு எதிராகவும் பேசியதும் அன்னா ஹசாரேவை ஜோக்கர் என வர்ணித்தினர்.  சாமியார் போர்வையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்த பாபா ராம்தேவை களம் இறக்கினார்கள். பாபா ராம்தேவும் டாம்பீகமாக சுமார் 20 கோடி ரூபாயில் ஏர்கூலர், மெத்தை, குளியலறை, கழிவறை என ராம் லீலா மைதானத்தில்  உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து,  நாடகத்தைத்  தொடங்கினார். அவர் தொடங்கிய அந்த நாடகம் ஒரு இரவு கூட தங்காமல் ஓடி மறைந்தது.  பாபா ராம்தேவுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி என ரெய்டு... இத்தியாதி  ஏற்பாட்டின் மூலம் காங்கிரஸ் அரசாங்கம் அந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
   

ஊழலுக்கு எதிராக பி.ஜே.பி எடுத்த அஸ்திரங்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் என பேசியவர்களெல்லாம் பேர் வாங்கும் நிலையில், அடுத்த பிரதமர் கனவில் உள்ள அத்வானிக்கு அச்சம் இயல்பாக ஆக்ரமித்துக்கொண்டு ஹசாரேயும், பாபா ராம் தேவும் பலன் அளிக்கவில்லை. பிறகு இந்தியாவில் மத ஒற்றுமையை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை தொடங்கினார்கள் அதுவும் முழுமையாக, நாடகத்தை நடத்த முடியாமல் வேறுவழியின்றி பாதியிலேயே முடிக்க வேண்டியதாயிற்று. எனவே  எல்.கே அத்வானி தலைமையில் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை என அத்வானி அஸ்திரத்தை எடுத்துள்ளனர்.

யார் இவர்கள்
   

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தேசப்பிதா என அனைவராலும் போற்றப்பட்ட, எளிமைக்கு இலக்கணமாய் திகழ்ந்த மகாத்மா காந்தியை 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று சுட்டு கொன்ற  நாதுராம் கோட்சே வின் வாரிசு தான் எல்.கே. அத்வானியும், பி.ஜே.பி யும் என்பதை நாடு மறக்காது.
   

இந்திய நாட்டில் உள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சாதி இந்துக்களும் வறுமையில் வாடுகின்றனர். பொருளாதாரப் பிடிப்பு இல்லாமல் உள்ளார்கள், இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று சொன்னது மண்டல் கமிஷன் மண்டல் பரிந்துரையை மரியாதைக்குரிய வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது அமல்படுத்த முயன்ற ஒரே காரணத்திற்காக நாடு முழுவதும் கலவரங்களை நடத்தி  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தவர்கள் தான் பி.ஜே.பி யினர் என்பதை நாடு மறக்காது.
   

1991ல் ராமர் கோவிலை கட்டுகிறோம் என்ற பெயரில் 450 ஆண்டுகால பழமையான பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி உலக அளவில் இந்திய நாட்டிற்கு அவப் பெயரை தேடித்தந்தவர்கள். அது மட்டுமல்ல அதையொட்டி நாடு முழுவதும் பல ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர்கள்  பி.ஜே.பி யினர் என்பதை நாடு மறக்காது.
   

இப்படி இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் கூட்டாச்சி தத்துவத்திற்கும் என்றைக்குமே எதிரானவர்கள் தான். பி.ஜே.பி யினர் இத்தகைய மக்கள் விரோத  பி.ஜே.பி யினர் தற்போது ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை கிளம்பி இருக்கின்றனர்.
   
நேர்மையான கட்சியா பி.ஜே.பி
   

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் வாழ வழியின்றி, விவசாயம், பொய்த்து, வாங்கியக் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் என பட்டியலை தருகிறது. சூளுளுடீ இன்று ஊழலுக்கு எதிராகக் கிளம்பும்  அத்வானி, அவர்கள் ஆட்சியில் என்ன  செய்து கொண்டு இருந்தார்கள். ஊழலின் ஊற்றுக்கண் இனறு கடைபிடிக்கப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், இந்த பொருளாதார கொள்கையை கடுமையாகவும், வேகமாகவும் அமலாக்கியது வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு.
   

யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை  என்பார்கள் கிராமத்தில் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் தான் பி.ஜே.பி யினர். அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் கொஞ்சமா? பி.ஜே.பி யின் அகில இந்திய தலைவராக இருந்த திரு. பங்காரு லட்சுமணன் கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுகளை லஞ்சமாக வாங்கியதை இந்திய நாட்டில் உள்ள அனைத்துத் தொலைக் காட்சிகளும் காட்டியது.
   

வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு இராணுவத் தளவாடங்களை வாங்குவற்காக ஆயுத கம்பெனிகளிடம் கோடி கோடியாக வாங்கியதை டெகல்கா டாட். காம் பத்திரிகை படம் பிடித்து காட்டியதை பார்த்து  நாடே சிரித்தது.  கார்கில் எல்லைப் பிரச்னையில் இந்திய நாட்டு ராணுவ வீரர்கள் சொந்த பந்தங்களை மறந்து, மனைவி மக்களை மறந்து மைனஸ் டிகிரியில் எல்லையை பாதுகாக்கப் போராடிய போது எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்ற முறையில் இராணுவ வீரர்களுக்கு வாங்கிய காலணியிலும், சவப்பெட்டியிலும் கோடிக் கோடியாக கொள்ளை அடித்தது பி.ஜே.பி அரசு . இறந்து போன இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் பி.ஜே.பியும், காங்கிரசும் கூட்டுக் களிவானிகள் தானே.
   

பி.ஜே.பி ஆளக்கூடிய மாநிலங்களில் உள்ள கனிம வளங்களை தனிநபர்கள் கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தார்கள்.  நாட்டிலேயே  கனிம வளம் அதிகமாக உள்ள மாநிலம் குஜராத். மோடி  இரண்டு ஆண்டுகளே முதல்வராக இருந்த திரு. எடியூரப்பா அவர்கள் கோடி கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கனிம வளமான சுரங்கத்தை தனது கூட்டாளிகளான ரெட்டி சகோதர்களுக்கு திருட்டுத்தனமாக கொடுத்ததற்கு எடியூரப்பாவிற்கு கிடைத்த சன்மானம் 15 ஆயிரம் கோடி ரூபாய்.  நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.25 லட்சம் கோடி அரசு குடியிருப்புகளை எல்லாம் தனது குடும்ப உறுப்பினர்களிடமும், உறவினர்களுக்கும் கொடுத்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
   

இத்தகைய மக்கள் சொத்தை கொள்ளையடிக்கின்ற கட்சியான பி.ஜே.பி யின் தலைவர் தான் அத்வானி. அத்வானி தான்  நாட்டில் ஊழலை ஒழிக்க கிளம்பி இருக்கிறார்.
  

பி.ஜே.பி க்கும் , காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்  போல் காங்கிரசும், பி.ஜே.பியும் என்பதை நாடு அறியும்.
   
ஊழலை ஒழிக்க என்ன செய்வது
   

ஆளக்கூடிய எந்த அரசாக இருந்தாலும் அந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊழைப்பாளி மக்களின் நலனை பிரதிபலிக்கக் கூடிய அரசாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் எந்த அரசாக இருந்தாலும் முதலாளிகளின் நலனை பாதுகாக்கக்கூடிய அரசாகவே உள்ளது. அதன் விளைவுகள் தான் ஊழல்.  குறிப்பாக 1991ல் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவு தான் இவ்வளவு பெரிய ஊழல்.  எனவே வரும் காலங்களில் இந்தப் பொருளாதார மாற்றத்தை குறிப்பாக ஊழைப்பாளி மக்களின் நலனை பாதுகாக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கையை யார் முன் வைக்கிறார்களோ அவர்களே உண்மையான மாற்றாகவும், ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பவராகவும் இருப்பார்கள்.....

- - ஆர். வேல்முருகன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)