தவிர்க்க முடியாமல், தனது தலைமையிலான அரசு இப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தில் இருப்பதாக இன்று ஜெயலலிதா அம்மையார் அறிவித்து இருக்கிறார். தமிழகத்தில் பால்விலை, மின்சாரக் கட்டணம் எல்லாம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தனக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் உட்கார வைத்த மக்களுக்கு அம்மையார் காட்டும் அன்பும், பரிவும், நன்றியும் இதுதான். ஏற்கனவே, மத்தியில் பொறுப்பிலிருக்கும் காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியால் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து கொண்டிருக்கிறது. கூடவே மாநில அரசின் இந்த விலை உயர்வு நடவடிக்கைகளால் மக்கள் மேலும் நெருக்கடிக்கும், துயரத்திற்கும் ஆளாக வேண்டியதிருக்கும்.
மத்தியில் உள்ள அரசு, மாநில அரசுக்கு பொருளாதார உதவி அளிக்கவில்லையென்றும், முந்தைய திமுக ஆட்சியின் மோசமான ஆட்சியால் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதென்றும் அம்மையார் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்ததாம். முந்தைய அரசு மோசமானது என்றுதான் மக்கள் திமுகவை ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றினார்கள். இந்த அம்மையார் எதாவது நல்லது செய்வார் என்று நம்பித்தான் மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள். அதே திமுகவை காரணம் காட்டி, அதே மோசத்தையே இந்த அம்மையாரும் செய்வதற்கா மக்கள்வாக்களித்தார்கள்? மக்களுக்கு எப்போதும் நம்பிக்கைத் துரோகம் செய்வதைத் தவிர வேறு எதையும் இவரது ஆட்சிக்காலங்களில் பார்க்க முடிந்ததில்லை.
இந்த சிக்கலைத் தீர்த்து, சரிவிலிருந்து தமிழகத்தை மீட்க, இது தவிர ‘வேறு வழியில்லை’ என்று ஜெயலலிதா காரணங்களை அடுக்கியிருக்கிறார். மக்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நம்ப வைக்க முடியும் என்று அவர் நினைப்பது புரிகிறது. ஆமாம், கருணாநிதியையும், இவரையும் விட்டால் ‘வேறு வழியில்லை’ என்று மக்கள் நினைப்பதால்தான் இந்த அம்மையார் தெனாவெட்டாக இப்படியெல்லாம் பேச முடிகிறது.
கருணாநிதியின் பெயர் தாங்கிய எதையும் தமிழகத்தின் வரலாற்றிலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்றும், தடயங்களே இருக்கக் கூடாது என்றும் வெறி கொண்டு திரியும் இந்த அம்மையார், அதே கருணாநிதியின் மக்கள் விரோதக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார். கருணாநிதி மீது அப்படியொரு காழ்ப்புணர்ச்சியும், தனிப்பட்ட பகைமையும் பாராட்டும் ஜெயலலிதாவுக்கு , உள்ளுக்குள் கருணாநிதியின் நடைமுறைகளே ரொம்பப் பிடித்தமாயிருக்கிறது. இலவச கலர் டிவி கொடுத்துவிட்டு, மக்களிடமிருந்து வாழ்க்கையை அபகரிக்க ஒருவர் நினைத்தால், மிக்ஸியையும் சேர்த்து கொடுத்து அதே கொடுமையை இன்னொருவர் செய்கிறார். மக்களை வாட்டுவதிலும், வதைப்பதிலும் இருவரும் ஒன்றுபோல் கரம் கோர்த்து நிற்கிறார்கள். இதைத்தான் தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என காமராஜர் குறிப்பிட்டு இருந்தார்.
தான் வந்தால் தமிழகத்தை வெளிச்சமாக்குவேன் என்று வாக்குறுதிகளை அள்ளி அள்ளிக் கொட்டிய ஜெயலலிதாவின் ஆட்சியில் இப்போது மின்சார வெட்டுக்கு நேரமும் இல்லை, அளவும் இல்லை. தமிழகத்தின் இருண்ட காலத்து ராஜா, ராணி இருவரின் பெயர்களையும் சேர்த்து மக்கள் வரலாற்றில் இருந்து ஒருநாள் முற்றிலுமாக துடைத்தெறிவார்கள்.
மத்தியில் உள்ள அரசு, மாநில அரசுக்கு பொருளாதார உதவி அளிக்கவில்லையென்றும், முந்தைய திமுக ஆட்சியின் மோசமான ஆட்சியால் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதென்றும் அம்மையார் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்ததாம். முந்தைய அரசு மோசமானது என்றுதான் மக்கள் திமுகவை ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றினார்கள். இந்த அம்மையார் எதாவது நல்லது செய்வார் என்று நம்பித்தான் மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள். அதே திமுகவை காரணம் காட்டி, அதே மோசத்தையே இந்த அம்மையாரும் செய்வதற்கா மக்கள்வாக்களித்தார்கள்? மக்களுக்கு எப்போதும் நம்பிக்கைத் துரோகம் செய்வதைத் தவிர வேறு எதையும் இவரது ஆட்சிக்காலங்களில் பார்க்க முடிந்ததில்லை.
இந்த சிக்கலைத் தீர்த்து, சரிவிலிருந்து தமிழகத்தை மீட்க, இது தவிர ‘வேறு வழியில்லை’ என்று ஜெயலலிதா காரணங்களை அடுக்கியிருக்கிறார். மக்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நம்ப வைக்க முடியும் என்று அவர் நினைப்பது புரிகிறது. ஆமாம், கருணாநிதியையும், இவரையும் விட்டால் ‘வேறு வழியில்லை’ என்று மக்கள் நினைப்பதால்தான் இந்த அம்மையார் தெனாவெட்டாக இப்படியெல்லாம் பேச முடிகிறது.
கருணாநிதியின் பெயர் தாங்கிய எதையும் தமிழகத்தின் வரலாற்றிலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்றும், தடயங்களே இருக்கக் கூடாது என்றும் வெறி கொண்டு திரியும் இந்த அம்மையார், அதே கருணாநிதியின் மக்கள் விரோதக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார். கருணாநிதி மீது அப்படியொரு காழ்ப்புணர்ச்சியும், தனிப்பட்ட பகைமையும் பாராட்டும் ஜெயலலிதாவுக்கு , உள்ளுக்குள் கருணாநிதியின் நடைமுறைகளே ரொம்பப் பிடித்தமாயிருக்கிறது. இலவச கலர் டிவி கொடுத்துவிட்டு, மக்களிடமிருந்து வாழ்க்கையை அபகரிக்க ஒருவர் நினைத்தால், மிக்ஸியையும் சேர்த்து கொடுத்து அதே கொடுமையை இன்னொருவர் செய்கிறார். மக்களை வாட்டுவதிலும், வதைப்பதிலும் இருவரும் ஒன்றுபோல் கரம் கோர்த்து நிற்கிறார்கள். இதைத்தான் தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என காமராஜர் குறிப்பிட்டு இருந்தார்.
தான் வந்தால் தமிழகத்தை வெளிச்சமாக்குவேன் என்று வாக்குறுதிகளை அள்ளி அள்ளிக் கொட்டிய ஜெயலலிதாவின் ஆட்சியில் இப்போது மின்சார வெட்டுக்கு நேரமும் இல்லை, அளவும் இல்லை. தமிழகத்தின் இருண்ட காலத்து ராஜா, ராணி இருவரின் பெயர்களையும் சேர்த்து மக்கள் வரலாற்றில் இருந்து ஒருநாள் முற்றிலுமாக துடைத்தெறிவார்கள்.
0 comments:
Post a Comment