இப்படி ஒரு கொடுமை தமிழகத்தில்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த மண்ணில் சாதிய ஆதிக்கம் ஆழப் புரையோடியிருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி இது.
கயத்தார் ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சில் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்திற்கான கூட்ட அறிவிப்பு உள்ளாட்சி விதிமுறைகளின்படி கலெக்டர், திட்ட அலுவலர், எம்.பி., எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கயத்தார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் உள்ளிட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பின்படி கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும், கேமிராமேன்களையும் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மாணிக்க ராசா, அலுவலக வளாகத்தில் தடுத்து நிறுத்தி, உங்களை யார் அழைத்தது... ? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்....? அடுத்த கூட்டத்திற்கு கூப்பிடு கிறோம்; அதற்கு பிறகு வாருங்கள்; இப் போது கூட்டம் ஆரம்பிக்கப்படாது; நீங் கள் போன பிறகுதான் கூட்டம் ஆரம் பிக்கப்படும் என அதிகார தோரணையுடன் பேசி, செய்தியாளர்களை வெளியேறச் சொன்னார்.
அடுத்த நிமிடமே அவரது ஆதரவாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் கேமிராமேன்களையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களை விரட்டியதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, கவுன்சில் கூட்டத்தில் சாதிக்கொடுமை தலை விரித்தாடுவது தெரியவந்தது.
கயத்தார் ஊராட்சி ஒன்றியப்பெருந் தலைவராக பதவி வகிப்பவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பெருமாள் (45). துணைத்தலைவராக இருப்பவர் ஆளுங்கட்சியான அதிமுகவின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் மாணிக்கராசா. இவர் பெருமாளை ஒன்றியத் தலைவராக செயல்படவிடாமல் தடுத்து, சாதி ஆதிக்கத்தால் மிரட்டி அடக்கி வைத்துள்ளார். அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே தலைவர் இருக்கையில் அமர்ந்து, கவுன்சில் கூட்டத்தை இவரே தலைமை வகித்து நடத்தி வருகிறார் என்பது வெளிச்சமாகியுள்ளது.
கடந்த உள்ளாட்சி பதவிக்காலத் திலும் இதே தலித் பெண் பெருமாளை செயல்படவிடாமல் தடுத்தவர் மாணிக் கராசா என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெறும் நாட்களில், தலைவர் பொறுப்பில் உள்ள பெருமாளை கூட் டத்திற்கு வரவிடாமல் தடுத்துநிறுத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபடுவதும், தலைவர் வரவில்லை என்பதைக் காரணம் காட்டி, துணைத்தலைவர் பொறுப்பில் உள்ள மாணிக்கராசா தலைவர் இருக்கையில் அமர்ந்து கூட்டம் நடத்துவதும் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த பதவிக்காலம் முழுவதும் தற்போதும் சாதிய ஆதிக்கம், அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பது அரசு அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தெரிந்திருந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை.
மக்களுக் கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ, முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட் டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திலோ, மக்கள் பிரதிநிதியான தலித் பெண்மணியான பெருமாள், தலைவர் நாற் காலியில் அமர்ந்து கூட்டத்தை நடத் துவதற்கு அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே அனுமதிக்கவில்லை. கலெக்டர் அலுவலகம் முதல் லோக்கல் போலீஸ் வரை கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். செய்தி சேகரிப்பதற்குக் கூட தடை ஏற்படுத்தப்படுகிறது என்றால் எத்தகைய சூழ்நிலை அங்கு நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
- தீக்கதிர்
எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்..
ReplyDelete