Wednesday, November 23, 2011

மோடி அரசின் மற்றுமொரு போலி என்கவுண்டர்


இரண்டு நாட்களுக்கு முன்புதான் மோடி மதநல்லிணக்கத்திற்காகவும், அமைதிக்காகவும் மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர உண்ணாவிரதம் இருந்தார். இப்படியொரு முகமூடியை சமீபகாலங்களில் அடிக்கடி அணிந்து பார்க்கிறார். மதவெறி அரசியலில், அவரது ஆட்சி நடத்திய மனிதப் படுகொலைகளின் ரத்தக்கறைகளக் கழுவிட அவருக்கு காந்தி தேவைப்படுகிறார். ஆனால் உண்மைகள் புதைக்கப்படுவதில்லை.  அவை  திரும்பத் திரும்ப வெளியே வந்து மோடியின் முகத்திரையை மட்டுமல்ல, அவரது முகத்தையும் கிழித்துக் கொண்டே இருக்கின்றன.

2004ம் ஆண்டு மோடி அரசு ‘என்கவுண்டர்’ என்ற பெயரில் நடத்திய படுகொலைகளின் பின்னணி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மற்றும் இன்னும் மூன்று இளைஞர்களை மோடியின் காவல்துறை சுட்டுக்கொன்றது. அவர்கள் பாகிஸ்தான் தீவீரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என்றும், மோடியக் கொல்ல வந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டது.

காவல்துறையுடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் மோதலில் இறக்கவில்லை, அவர்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக்குழு கூறியுள்ளது. கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற முத்திரை குத்தி, முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த அகமதாபாத் மாநகர நீதிபதி எஸ்.பி.தமங், 243 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். கொலை செய்யப்பட்ட நான்கு பேரும் 2004 ஜூன் 12 ஆம் தேதியன்று மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டனர் என்றும், அகமதாபாத்திற்கு கொண்டு வந்து அவர்களைக் காவல்துறையினர் படுகொலை செய்தனர் என்றும் தனது அறிக்கையில் அவர் கூறியிந்தார். தங்கள் பதவி உயர்வுக்காகவும், முதலமைச்சரிடமிருந்து பாராட்டு பெறவுமே அவர்கள் இவ்வாறு செய்தனர் என்றும் தமங் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர்களையும் தனது அறிக்கையில் தமங் பட்டியல் இட்டிருந்தார்.

பிணத்தின் மீது துப்பாக்கிச்சூடு

இஸ்ரத் ஜஹான் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலையிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். 2004 ஜூன் 15 அன்று என்கவுன்ட்டர் நாடகத்தை ஆடியபோது இஸ்ரத் ஜஹானின் பிணத்தை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்திருக்கிறார்கள். இஸ்ரத் மட்டுமல்ல, ஜாவேத் குலாம் ஷேக் என்ற பிரனேஷ்பிள்ளை, அம்ஜத் அலி மற்றும் ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகிய மூன்று பேரும் கூட முன்பே கொலை செய்யப்பட்டுவிட்டனர். இந்த விபரங்களைக் கண்டுபிடித்து தமங் தனது ஆய்வறிக்கையைத் தந்தார். ஆனால் இந்த அறிக்யை மாநில அரசு ஏற்காமல் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவும் தற்போது இது என்கவுன்ட்டர் அல்ல, காவல்துறையினர் நடத்திய படுகொலைச் செயல்தான் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.அமின் ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை யார் எடுத்து நடத்துவது என்பதை உயர்நீதிமன்றம் இன்னும் முடிவுசெய்யவில்லை. ஆனால் மத்தியப் புலனாய்வுக்குழு(சி.பி.ஐ) அல்லது தேசிய விசாரணை முகமை ஆகிய இரண்டில் ஒன்றிடம்தான் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்கதையான “என்கவுன்ட்டர்கள்”

நரேந்திர மோடியின் மீதான கறையைத் துடைக்கிறோம் என்று கிளம்பிய காவல்துறை அதிகாரி களின் வேட்டை தீவிரமாக நடந்தது. 2003ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குஜராத்திற்கு வந்து நரேந்திர மோடியைக் கொல்ல வந்தார்கள் என்று அனைவரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அகமதாபாத்தின் கேலக்சி திரையரங்குக்கு அருகில் தங்களைத் தாக்க வந்தார் என்று கூறி சாதிக் ஜமால் மேஹ்தர் என்பவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இது நடந்தது 2003. ஜனவரி 13, பின்னர் இஸ்ரத் ஜஹான் மற்றும் பலர். அதற்குப்பிறகுதான் நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுசர் பீவி கொலையாகிறார்கள். இந்த வழக்கில்தான் வன்சாரா, அமின் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

2006 ஜனவரி 7, அன்று ரஹீம் காசிம் சும்ரா என்பவரை காந்திநகர் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.2006 மார்ச் 7, அன்று மோடியைக் கொலை செய்யப் பயங்கரவாதத் திட்டத்தைத் தீட்டினார்கள் என்று கூறி நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு காவல்துறையினருடன் “மோதியதால்” கொல்லப்பட்டவர்களின் பட்டியல் தொடர்கிறது. நான் மாநில உளவுப்பிரிவுத் தலைவராக இருந்தபோது, எல்லா உளவுத்துறைத் தகவல்களும் முஸ்லிம்கள் பற்றியதாகவே இருந்தன. மாநிலத்தையே சூறையாடிக் கொண்டிருந்த இந்துத்துவக்குழுக்கள் பற்றி எந்தவிதஉளவுத்துறைவிபரங்களும் இருக்கவில்லை என்கிறார் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார்.

என்ன நடந்தது?

ஜூன் 15, 2004

இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் அகமதாபாத் நகரில் காவல்துறையினருடனான “மோதலில்” சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 2009

போலி என்கவுன்ட்டர் என்று இதை அகமதாபாத் மாநகர நீதிபதி எஸ்.பி.தமங் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 2010

இந்த வழக்கையும் விசாரியுங்கள் என்று குஜராத் கலவரங்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழுவை குஜராத் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

டிசம்பர் 2010

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு தனது விசாரணையைத் துவக்கியது.

ஜனவரி 28, 2011

இந்த என்கவுன்ட்டர் போலியானது என்று சிறப்புப் புலனாய்வுக்குழுவின் உறுப்பினர் சதீஷ் வர்மா நீதிமன்றத்திடம் அறிக்கை தருகிறார்.

நவம்பர் 21, 2011

சிறப்புப் புலனாய்வுக்குழு தனது அறிக்கையைத் தருகிறது. அதிலும் இந்த என்கவுன்ட்டர் போலி என்று கூறப்பட்டதால் புதிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையானதாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்னதாகவே இஸ்ரத் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிறது அறிக்கை.

அதிர்ச்சி தரும் விபரங்கள்


* இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேரும் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கிறார்கள்.

*அவர்களின் காயம் ஏ.கே.56 ரைபிளைக் கொண்டு சுட்டதால் ஏற்பட்டதாகும். ஆனால் அத்தகைய ரைபிள்கள் காவல்துறையினரிடம் இல்லை.

* மோதலின்போது தங்களை நோக்கி 70 தோட்டாக்கள் வந்ததாகக் காவல்துறையினர் கூறினர். ஆனால் ஒன்றைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

* சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவர்கள் கொல்லப்பட்டனர்.

* குண்டுகள் அப்போதுதான் துளைத்தன என்பதைக் காட்ட பிணங்கள் மீது குண்டுகளைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.



மோடி பதவி விலக வேண்டும்

குஜராத்தில் பாஜகவின் நரேந்திர மோடி அரசின் காவல்துறை நடத்திய இஷ்ரத் ஜஹான் படுகொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டுமானால் முதலமைச்சர் பதவியிலிருந்து நரேந்திர மோடி உடனடியாக விலக வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்குற்றத்தை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் கூடிய புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்ற உயர்நீதி மன்றத்தின் உத்தரவு உடனடியாக செயலாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.

இந்த வழக்கில் மற்றுமொரு மிக முக்கியமான கேள்வியும் விசாரணைக்குள்ளாக் கப்பட வேண்டிய தேவை உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாத்தது என்பது, முதலமைச்சரின் அனுமதியும் ஆதரவும் இன்றி, அரசாங்கத் தின் உயர் அதிகாரிகளது ஒத்துழைப்பு இன்றி நடந்திருக்குமா? இந்த வழக்கின் ஒவ்வொரு முக்கியக்கட்டத்திலும் நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு மோடி அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. 2002ம் ஆண்டு நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் தொடர்பாக இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 9 வழக் குகளில் இந்த அரசு என்ன செய்ததோ அதையே மேற்கண்ட வழக்கிலும் செய்தது. குற்றவாளிகளைப் பாதுகாத்ததில் முதலமைச்சரின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்படவேண்டுமானால், மோடி அதிகாரத்தில் நீடிக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டு மானால் மோடி, பதவியி லிருந்து வெளியேற வேண்டும்.

இந்த வழக்கில் ஆதாரங் களை போலியாக்க முயற்சித்த மத்திய விசாரணை அமைப்புகளின் குறிப்பிட்ட சில மூத்த அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிறப்புப்புலனாய்வுக்குழுவின் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. அவர்களது பங்கு பற் றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக பொருத்தமான நடவடிக் கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறது.



1 comment:

  1. மனுசன மனுஷன் சாப்புடுறாண்டா தம்பி பயலே...
    அடேங்கப்பா லாலு மத்திய அமைச்சரனபோதும் அவரை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்களும்
    பக்கம் பக்கமாக எழுதிய அறிவிஜீவிகளும் தற்போது எங்கு சென்றனர் என தெரியவில்லை. இந்த அயோகியத்தனங்கள்
    எல்லாம் ஊழலுக்கான யாத்திரைகளில் மத நல்லிணக்க உண்ணாவிரதங்களில் வராதோ?

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)