இரண்டு நாட்களுக்கு முன்புதான் மோடி மதநல்லிணக்கத்திற்காகவும், அமைதிக்காகவும் மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர உண்ணாவிரதம் இருந்தார். இப்படியொரு முகமூடியை சமீபகாலங்களில் அடிக்கடி அணிந்து பார்க்கிறார். மதவெறி அரசியலில், அவரது ஆட்சி நடத்திய மனிதப் படுகொலைகளின் ரத்தக்கறைகளக் கழுவிட அவருக்கு காந்தி தேவைப்படுகிறார். ஆனால் உண்மைகள் புதைக்கப்படுவதில்லை. அவை திரும்பத் திரும்ப வெளியே வந்து மோடியின் முகத்திரையை மட்டுமல்ல, அவரது முகத்தையும் கிழித்துக் கொண்டே இருக்கின்றன.
2004ம் ஆண்டு மோடி அரசு ‘என்கவுண்டர்’ என்ற பெயரில் நடத்திய படுகொலைகளின் பின்னணி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மற்றும் இன்னும் மூன்று இளைஞர்களை மோடியின் காவல்துறை சுட்டுக்கொன்றது. அவர்கள் பாகிஸ்தான் தீவீரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என்றும், மோடியக் கொல்ல வந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டது.
காவல்துறையுடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் மோதலில் இறக்கவில்லை, அவர்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக்குழு கூறியுள்ளது. கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற முத்திரை குத்தி, முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த அகமதாபாத் மாநகர நீதிபதி எஸ்.பி.தமங், 243 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். கொலை செய்யப்பட்ட நான்கு பேரும் 2004 ஜூன் 12 ஆம் தேதியன்று மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டனர் என்றும், அகமதாபாத்திற்கு கொண்டு வந்து அவர்களைக் காவல்துறையினர் படுகொலை செய்தனர் என்றும் தனது அறிக்கையில் அவர் கூறியிந்தார். தங்கள் பதவி உயர்வுக்காகவும், முதலமைச்சரிடமிருந்து பாராட்டு பெறவுமே அவர்கள் இவ்வாறு செய்தனர் என்றும் தமங் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர்களையும் தனது அறிக்கையில் தமங் பட்டியல் இட்டிருந்தார்.
பிணத்தின் மீது துப்பாக்கிச்சூடு
இஸ்ரத் ஜஹான் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலையிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். 2004 ஜூன் 15 அன்று என்கவுன்ட்டர் நாடகத்தை ஆடியபோது இஸ்ரத் ஜஹானின் பிணத்தை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்திருக்கிறார்கள். இஸ்ரத் மட்டுமல்ல, ஜாவேத் குலாம் ஷேக் என்ற பிரனேஷ்பிள்ளை, அம்ஜத் அலி மற்றும் ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகிய மூன்று பேரும் கூட முன்பே கொலை செய்யப்பட்டுவிட்டனர். இந்த விபரங்களைக் கண்டுபிடித்து தமங் தனது ஆய்வறிக்கையைத் தந்தார். ஆனால் இந்த அறிக்யை மாநில அரசு ஏற்காமல் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவும் தற்போது இது என்கவுன்ட்டர் அல்ல, காவல்துறையினர் நடத்திய படுகொலைச் செயல்தான் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.அமின் ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை யார் எடுத்து நடத்துவது என்பதை உயர்நீதிமன்றம் இன்னும் முடிவுசெய்யவில்லை. ஆனால் மத்தியப் புலனாய்வுக்குழு(சி.பி.ஐ) அல்லது தேசிய விசாரணை முகமை ஆகிய இரண்டில் ஒன்றிடம்தான் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்கதையான “என்கவுன்ட்டர்கள்”
நரேந்திர மோடியின் மீதான கறையைத் துடைக்கிறோம் என்று கிளம்பிய காவல்துறை அதிகாரி களின் வேட்டை தீவிரமாக நடந்தது. 2003ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குஜராத்திற்கு வந்து நரேந்திர மோடியைக் கொல்ல வந்தார்கள் என்று அனைவரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அகமதாபாத்தின் கேலக்சி திரையரங்குக்கு அருகில் தங்களைத் தாக்க வந்தார் என்று கூறி சாதிக் ஜமால் மேஹ்தர் என்பவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இது நடந்தது 2003. ஜனவரி 13, பின்னர் இஸ்ரத் ஜஹான் மற்றும் பலர். அதற்குப்பிறகுதான் நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுசர் பீவி கொலையாகிறார்கள். இந்த வழக்கில்தான் வன்சாரா, அமின் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
2006 ஜனவரி 7, அன்று ரஹீம் காசிம் சும்ரா என்பவரை காந்திநகர் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.2006 மார்ச் 7, அன்று மோடியைக் கொலை செய்யப் பயங்கரவாதத் திட்டத்தைத் தீட்டினார்கள் என்று கூறி நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு காவல்துறையினருடன் “மோதியதால்” கொல்லப்பட்டவர்களின் பட்டியல் தொடர்கிறது. நான் மாநில உளவுப்பிரிவுத் தலைவராக இருந்தபோது, எல்லா உளவுத்துறைத் தகவல்களும் முஸ்லிம்கள் பற்றியதாகவே இருந்தன. மாநிலத்தையே சூறையாடிக் கொண்டிருந்த இந்துத்துவக்குழுக்கள் பற்றி எந்தவிதஉளவுத்துறைவிபரங்களும் இருக்கவில்லை என்கிறார் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார்.
என்ன நடந்தது?
ஜூன் 15, 2004
இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் அகமதாபாத் நகரில் காவல்துறையினருடனான “மோதலில்” சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் 2009
போலி என்கவுன்ட்டர் என்று இதை அகமதாபாத் மாநகர நீதிபதி எஸ்.பி.தமங் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 2010
இந்த வழக்கையும் விசாரியுங்கள் என்று குஜராத் கலவரங்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழுவை குஜராத் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
டிசம்பர் 2010
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு தனது விசாரணையைத் துவக்கியது.
ஜனவரி 28, 2011
இந்த என்கவுன்ட்டர் போலியானது என்று சிறப்புப் புலனாய்வுக்குழுவின் உறுப்பினர் சதீஷ் வர்மா நீதிமன்றத்திடம் அறிக்கை தருகிறார்.
நவம்பர் 21, 2011
சிறப்புப் புலனாய்வுக்குழு தனது அறிக்கையைத் தருகிறது. அதிலும் இந்த என்கவுன்ட்டர் போலி என்று கூறப்பட்டதால் புதிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையானதாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்னதாகவே இஸ்ரத் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிறது அறிக்கை.
அதிர்ச்சி தரும் விபரங்கள்
* இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேரும் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கிறார்கள்.
*அவர்களின் காயம் ஏ.கே.56 ரைபிளைக் கொண்டு சுட்டதால் ஏற்பட்டதாகும். ஆனால் அத்தகைய ரைபிள்கள் காவல்துறையினரிடம் இல்லை.
* மோதலின்போது தங்களை நோக்கி 70 தோட்டாக்கள் வந்ததாகக் காவல்துறையினர் கூறினர். ஆனால் ஒன்றைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
* சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவர்கள் கொல்லப்பட்டனர்.
* குண்டுகள் அப்போதுதான் துளைத்தன என்பதைக் காட்ட பிணங்கள் மீது குண்டுகளைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.
மோடி பதவி விலக வேண்டும்
குஜராத்தில் பாஜகவின் நரேந்திர மோடி அரசின் காவல்துறை நடத்திய இஷ்ரத் ஜஹான் படுகொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டுமானால் முதலமைச்சர் பதவியிலிருந்து நரேந்திர மோடி உடனடியாக விலக வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்குற்றத்தை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் கூடிய புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்ற உயர்நீதி மன்றத்தின் உத்தரவு உடனடியாக செயலாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.
இந்த வழக்கில் மற்றுமொரு மிக முக்கியமான கேள்வியும் விசாரணைக்குள்ளாக் கப்பட வேண்டிய தேவை உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாத்தது என்பது, முதலமைச்சரின் அனுமதியும் ஆதரவும் இன்றி, அரசாங்கத் தின் உயர் அதிகாரிகளது ஒத்துழைப்பு இன்றி நடந்திருக்குமா? இந்த வழக்கின் ஒவ்வொரு முக்கியக்கட்டத்திலும் நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு மோடி அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. 2002ம் ஆண்டு நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் தொடர்பாக இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 9 வழக் குகளில் இந்த அரசு என்ன செய்ததோ அதையே மேற்கண்ட வழக்கிலும் செய்தது. குற்றவாளிகளைப் பாதுகாத்ததில் முதலமைச்சரின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்படவேண்டுமானால், மோடி அதிகாரத்தில் நீடிக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டு மானால் மோடி, பதவியி லிருந்து வெளியேற வேண்டும்.
இந்த வழக்கில் ஆதாரங் களை போலியாக்க முயற்சித்த மத்திய விசாரணை அமைப்புகளின் குறிப்பிட்ட சில மூத்த அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிறப்புப்புலனாய்வுக்குழுவின் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. அவர்களது பங்கு பற் றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக பொருத்தமான நடவடிக் கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இக்குற்றத்தை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் கூடிய புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்ற உயர்நீதி மன்றத்தின் உத்தரவு உடனடியாக செயலாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.
இந்த வழக்கில் மற்றுமொரு மிக முக்கியமான கேள்வியும் விசாரணைக்குள்ளாக் கப்பட வேண்டிய தேவை உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாத்தது என்பது, முதலமைச்சரின் அனுமதியும் ஆதரவும் இன்றி, அரசாங்கத் தின் உயர் அதிகாரிகளது ஒத்துழைப்பு இன்றி நடந்திருக்குமா? இந்த வழக்கின் ஒவ்வொரு முக்கியக்கட்டத்திலும் நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு மோடி அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. 2002ம் ஆண்டு நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் தொடர்பாக இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 9 வழக் குகளில் இந்த அரசு என்ன செய்ததோ அதையே மேற்கண்ட வழக்கிலும் செய்தது. குற்றவாளிகளைப் பாதுகாத்ததில் முதலமைச்சரின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்படவேண்டுமானால், மோடி அதிகாரத்தில் நீடிக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டு மானால் மோடி, பதவியி லிருந்து வெளியேற வேண்டும்.
இந்த வழக்கில் ஆதாரங் களை போலியாக்க முயற்சித்த மத்திய விசாரணை அமைப்புகளின் குறிப்பிட்ட சில மூத்த அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிறப்புப்புலனாய்வுக்குழுவின் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. அவர்களது பங்கு பற் றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக பொருத்தமான நடவடிக் கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறது.
மனுசன மனுஷன் சாப்புடுறாண்டா தம்பி பயலே...
ReplyDeleteஅடேங்கப்பா லாலு மத்திய அமைச்சரனபோதும் அவரை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்களும்
பக்கம் பக்கமாக எழுதிய அறிவிஜீவிகளும் தற்போது எங்கு சென்றனர் என தெரியவில்லை. இந்த அயோகியத்தனங்கள்
எல்லாம் ஊழலுக்கான யாத்திரைகளில் மத நல்லிணக்க உண்ணாவிரதங்களில் வராதோ?
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...