Tuesday, November 22, 2011

வரலாறு காணாத பணமதிப்பின் வீழ்ச்சியும் அதன் வரலாறும்


சர்வதேசச்  சந்தையில்  டாலர் மதிப்புக்கு ருபாயின் மதிப்பு 52.73 ஆகியிருக்கிறது.  எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ருபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது என புள்ளி விபரங்கள் அதிர்ச்சியோடு சொல்கின்றன. நிலைமைகளை  ரிசர்வ் வங்கி கூர்மையாக கவனித்து வருவதாகவும், உடனடியாக தலையிடுவதா வேண்டாமா என ஆய்வு செய்து வருவதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். நிதியமைச்சர் கையைப்  பிசைந்துகொண்டே, “யூரோ மண்டலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவே இதுவென்று” சொல்கிறார்.   கூடவே இன்னொன்றும் சொல்கிறார். “வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வல்லமையை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதன் அறிகுறி” என்றும் சொல்கிறார். இந்தப் பார்வைதான் பணமதிப்பின் வீழ்ச்சியை விட அதி பயங்கரமானது.

இப்படி முதலீடுகளை இழுப்பதற்காக, முதலாளித்துவம் நடத்திய விபரீதங்களைத்தான் இன்று உலகம் முழுவதும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.  உலகின் ஒவ்வொரு நாட்டையும் ஆட்டைப்படைக்கிற வல்லமை கொண்டதாக சர்வதேச நிதிமூலதனமே விஸ்வரூபமெடுத்தது. இன்று அதற்கு நேர்ந்திருக்கும் சிக்கலில் முதலாளித்துவம் திசை தெரியாமல், தீர்வு தெரியாமல் தவிக்கிறது. மக்களுக்கான அரசாங்கமாக இல்லாமல், கார்ப்பரேட்களின் ஏவலாளிகளாகிப் போன அதிகார பீடங்கள் இப்போதும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாய் தெரியவில்லை.  நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் அதைத்தான் சொல்கின்றன.

அந்நிய முதலீடு, தாராள மயம் என்று வாயைப் பிளந்து, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை கவனிக்க மறுத்தவர்களுக்கு இன்னும் உண்மைகள் உறைக்கவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துபோகும் சமூகத்தில் உற்பத்திக்கும், முதலீடுகளுக்கும் என்ன மதிப்பு இருக்கப் போகிறது. இந்த வெற்றிடத்தை அறியாமல் பொருளாதாரப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் அழுத்தமாகவும், தெளிவாகவும் உண்மைகளை எடுத்துரைக்கிறார்,  சி.பி.எம் கட்சியின் எம்.பி சீதாராம் யெச்சூரி.  உலகத்தின் நெருக்கடிகளையும், இந்தியாவின் தேவைகளையும் விளக்கும் அவரது கருத்துக்களில் இந்த நெருக்கடிக்கான வரலாறும்  இருக்கிறது, தீர்வும் இருக்கிறது.


 நோய்க்கு வித்திடும் மருந்துகள்!
-சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,

2008 நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த வழிமுறைகள், மேலும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்; அத்தகைய மீட்சி முழுமை பெறும் முன்னரே புதிய நெருக்கடியில் சிக்கி இரட்டைத் தாழ்வு மந்தத்தில் போய் முடியும் என நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நான் கணித்தது போலவே நடந்துவிட்டது என்பது குறித்து நான் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் கடன்களை அரசாங்கக் கடன்களாக மாற்றுகிற இந்த உத்திகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மீட்புத் திட்டம் என்ற பெயரில் எந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை கொள்ளையாய் அள்ளிக்கொடுக்கப்பட்டதோ, அந்தக் கம்பெனிகள் உருவாக்கிய நெருக்கடிதான் அர சுக்கடன்கள் பெருமளவு பெருகியதற்கு அடிப்படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்று அந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை அழகாக ஜோடிக்கப்படுகிறது; அந்நிறுவனங்களின் மேலதிகாரிகள் கணிசமான போனஸ் பெறுகிறார்கள். ஆனால், மறுபுறத்தில் அரசாங்கங்கள், கடன்சுமைகளைக் களைவது என்ற பெயரால் கடுமையான சிக்கனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இதனால், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நிலை சின்னாபின்னமாகியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில், வால் ஸ்டிரீட்க்கு எதிரான இயக்கங்கள் தொடருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

கிரீஸ் 

இந்த நெருக்கடியின் பின்னணி யில் அரசியல் எதிர்விளைவுகளும் தோன்றி வருகின்றன. கிரேக்க பிரதமர் ஜார்ஜ் பாப் பென்ட்ரோ சென்ற வாரம் ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் கிரீஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமா, அதன் தொடர்ச்சியாக யூரோவிலிருந்து விலக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அச்சுறுத்திய பின்னரே அவர் ராஜினாமா செய்தார். வாக்கெடுப்பு நடைபெற்றிருந் தால் ஐரோப்பிய யூனியன் முழுமையும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்; ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய பிற ஐரோப்பிய பொருளாதாரங்களை, ஏன், உலகப் பொருளாதாரத்தையும் கூட ஒரு பொருளாதார மந்தச் சுழற்சிக்குள் தள்ளியிருக்கும். கிரீஸ் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது, கொந்தளிப்பான உலக நிதிச் சந்தையை சாந்தப்படுத்துவது என்ற நோக்கில் ‘தேச ஒற்றுமை’ என்ற பெயரில், அவசர கதியில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இம்முயற்சி, வளர்ந்து வரும் வேலையின்மை, சமூகத்துறைக்கான செலவினங்களில் வெட்டு, உழைக்கும் நேரம் அதிகரிப்பு, குறைந்த கூலி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள கிரேக்க மக்களிடம் எவ்வித பிரதிபலிப் பினையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை கண்டிராத எண்ணிக்கையில் தேசம் தழுவிய வேலை நிறுத்தங்களை கிரீஸ் நாடு சந்தித்து வருகிறது.

இத்தாலி

இத்தாலியின் அரசியலில் 17 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி இப்போது பதவி விலகியுள்ளார். இத்தாலியின் கடன், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசுப் பத்திரங்களின் வட்டி 7 சதவீதத்தை தொட்டு விட்டது. இத்தகைய வட்டி விகித அளவில்தான், முதலில் அயர்லாந்து, பின்னர் கிரீஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் மீட்புக்கான கோரிக்கை வைக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. இப்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாங்கம், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்ட யுள்ளது. முதலில் உடனடியாக 60 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் அளவிற்கு நடவடிக்கை தேவைப்படுகிறது. இவற்றில் ஊதிய முடக்கம், ஓய்வுபெறும் வயதை உயர்த் துவது, மதிப்புக்கூடுதல் வரி உயர்வு ஆகியன அடங்கும். இவை அனைத்தும் மக்கள் மீது மேலும் துயரங்களைக் குவிப்பவையேயாகும்.

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் நிலைமையும் இதுவே. இவ்வருடம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் என்பது பூஜ்யம். நம்ப முடியவில்லை. எனினும் அதுவே உண்மை. வேலையின்மை விகிதம் 22 சதவீதத்தைக் கடந்துள்ளது. பெருமளவுக்கு அதிகமான கடன் சுமை சேர்ந்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியின் பிடியிலேயே தொடர்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால்களை அரசாங்கத்தின் திவாலாக மாற்றிய முந்தைய நடவடிக்கைகளே தற்போதைய நெருக்கடிக்கு வித்திட்டன. அதைப்போலவே, இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, தாங்க இயலாத பெரும் பெரும் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் தற்போதைய உத்தி மற்றுமொரு ஆழமான நெருக்கடிக்கு வித்திட்டு வருகிறது. இதனால் உருவாகவிருக்கும் நெருக்கடி 1929ம் உலகினை உலுக்கிய பெரு வீழ்ச்சியின் உக்கிரத்தை விட, பல பரிமாணங்களில் மிக மோசமாக இருக்கும்.

இத்தகைய கடினமான சிக்கன நடவடிக்கைகள் பெருவாரியான உலக மக்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதோடு, பெருகி வரும் வேலையின்மையையும் அதிகரிக்கும். இதன் விளைவாக உற்பத்தியில் வீழ்ச்சியும் மொத்த கிராக்கியில் ஏற்படும் சரிவினால் வணிகமும் வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியா?


இந்த அதிர்வினால் இந்தியா பாதிப்படையாது என்கிற நம்பிக்கை கானல் நீரே என்பது நிரூபணமாகி வருகிறது. அண்மையில், கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நமது பிரதமர், இந்தியப் பொருளா தாரம் குறித்து பெருமளவு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், அனைத்துப் பொருளாதாரக் குறியீடுகளும் இந்தியப் பொருளாதாரம் மந்தமாகி வருவதை மட்டுமல்ல, அது ஏற்கெனவே மந்தத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் கீழ் நிலைக்கு இறங்கியுள்ளது. தொழில் உற்பத்திக் குறியீடு 6.1 சதவீதத் திலிருந்து தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்து, செப்டம்பரில் 1.9 சதவீதமாக இறங்கியது. சென்ற ஆண்டில் 8.2சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, வேலை வாய்ப்புக்களில் வீழ்ச்சியும் ஊதியத்தில் முடக்கமும் ஏற்பட்டு, உள்நாட்டு கிராக்கியின் வளர்ச்சியினை எதிர்மறை நிலைக்கு எடுத்துச் செல்லும் அபாயமும் உள்ளது.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஏற்றுமதி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 81.79சதவீதத் தை தொட்ட பின் தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டு வருகிறது. தற்போது 10.8சதவீத மாகக் குறைந்துள்ளது. இறக்குமதி நிலையற்று இருக்கிற போதிலும், வர்த்தகப் பற்றாக் குறை 92 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இது 150 பில்லி யன் டாலர்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவசாயத்திற்குப் பிறகு மிகப்பெரிய வேலை அளிக்கும் துறையாக உள்ள நெசவு மற்றும் ஆடை தயாரிக்கும் துறைகளில் உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால் வேலையின்மை பெருகி வருகிறது.

இவையனைத்தும் பெருவாரியான இந்திய மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகிறது. அத்தியாவசியப் பண்டங்களின் அதிவேக விலை உயர்வால் தற்போதுள்ள வாழ்வாதார நிலை தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்தினை கட் டுப்படுத்தி விடுவோம் என அரசு ஜம்பமாகக் கூறிவந்த போதிலும் உணவுப்பணவீக்கம் 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை 26 சதவீதம், பருப்பு வகைகள் 14 சத வீதம், பழங்கள் 12 சதவீதம், முட்டை, மீன், இறைச்சி 13 சதவீதம், பால் 12 சதவீதம் என உச்சத்தில் நிற்கின்றன.

தேவை சமூக முதலீடுகளே!

இத்தகைய சூழலில், சர்வதேச நிதி மூல தனம் மேலும் பெருமளவு இந்தியாவிற்குள் வரும் வகையில் நிதித்துறையை தாராளமயமாக்க வேண்டும் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கோரிக்கை, இந்திய மக்களின் நலன்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியே ஆகும். சாமானிய மக்களின் நலன்களை காக்க வேண்டு மென்றால் ஐ.மு.கூட்டணி -2 அரசு கார்ப்பரேட்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் வரிச்சலுகைகளை தடுத்து நிறுத்த வேண்டும். (கடந்த இரு ஆண்டு பட்ஜெட்டுகளில் மட்டும் அவர் களுக்கு ரூ.5.2 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது). இதன் காரணமாக முதலீடுகளும் உயரவில்லை; அதன் பயனாக வளர்ச்சியும் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லையெனில், எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. வரிகள் முழுமையாக வசூலிக்கப்பட்டு, சமூக - பொருளாதாரக் கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமே வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் உள்நாட்டு கிராக்கியைப் பெரிதாக்கவும் இயலும்.



தமிழில் : ஜெ.விஜயா, மதுரை
நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ் (15.11.2011)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)