சர்வதேசச் சந்தையில் டாலர் மதிப்புக்கு ருபாயின் மதிப்பு 52.73 ஆகியிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ருபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது என புள்ளி விபரங்கள் அதிர்ச்சியோடு சொல்கின்றன. நிலைமைகளை ரிசர்வ் வங்கி கூர்மையாக கவனித்து வருவதாகவும், உடனடியாக தலையிடுவதா வேண்டாமா என ஆய்வு செய்து வருவதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். நிதியமைச்சர் கையைப் பிசைந்துகொண்டே, “யூரோ மண்டலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவே இதுவென்று” சொல்கிறார். கூடவே இன்னொன்றும் சொல்கிறார். “வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வல்லமையை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதன் அறிகுறி” என்றும் சொல்கிறார். இந்தப் பார்வைதான் பணமதிப்பின் வீழ்ச்சியை விட அதி பயங்கரமானது.
இப்படி முதலீடுகளை இழுப்பதற்காக, முதலாளித்துவம் நடத்திய விபரீதங்களைத்தான் இன்று உலகம் முழுவதும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. உலகின் ஒவ்வொரு நாட்டையும் ஆட்டைப்படைக்கிற வல்லமை கொண்டதாக சர்வதேச நிதிமூலதனமே விஸ்வரூபமெடுத்தது. இன்று அதற்கு நேர்ந்திருக்கும் சிக்கலில் முதலாளித்துவம் திசை தெரியாமல், தீர்வு தெரியாமல் தவிக்கிறது. மக்களுக்கான அரசாங்கமாக இல்லாமல், கார்ப்பரேட்களின் ஏவலாளிகளாகிப் போன அதிகார பீடங்கள் இப்போதும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாய் தெரியவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் அதைத்தான் சொல்கின்றன.
அந்நிய முதலீடு, தாராள மயம் என்று வாயைப் பிளந்து, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை கவனிக்க மறுத்தவர்களுக்கு இன்னும் உண்மைகள் உறைக்கவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துபோகும் சமூகத்தில் உற்பத்திக்கும், முதலீடுகளுக்கும் என்ன மதிப்பு இருக்கப் போகிறது. இந்த வெற்றிடத்தை அறியாமல் பொருளாதாரப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் அழுத்தமாகவும், தெளிவாகவும் உண்மைகளை எடுத்துரைக்கிறார், சி.பி.எம் கட்சியின் எம்.பி சீதாராம் யெச்சூரி. உலகத்தின் நெருக்கடிகளையும், இந்தியாவின் தேவைகளையும் விளக்கும் அவரது கருத்துக்களில் இந்த நெருக்கடிக்கான வரலாறும் இருக்கிறது, தீர்வும் இருக்கிறது.
இப்படி முதலீடுகளை இழுப்பதற்காக, முதலாளித்துவம் நடத்திய விபரீதங்களைத்தான் இன்று உலகம் முழுவதும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. உலகின் ஒவ்வொரு நாட்டையும் ஆட்டைப்படைக்கிற வல்லமை கொண்டதாக சர்வதேச நிதிமூலதனமே விஸ்வரூபமெடுத்தது. இன்று அதற்கு நேர்ந்திருக்கும் சிக்கலில் முதலாளித்துவம் திசை தெரியாமல், தீர்வு தெரியாமல் தவிக்கிறது. மக்களுக்கான அரசாங்கமாக இல்லாமல், கார்ப்பரேட்களின் ஏவலாளிகளாகிப் போன அதிகார பீடங்கள் இப்போதும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாய் தெரியவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் அதைத்தான் சொல்கின்றன.
அந்நிய முதலீடு, தாராள மயம் என்று வாயைப் பிளந்து, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை கவனிக்க மறுத்தவர்களுக்கு இன்னும் உண்மைகள் உறைக்கவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துபோகும் சமூகத்தில் உற்பத்திக்கும், முதலீடுகளுக்கும் என்ன மதிப்பு இருக்கப் போகிறது. இந்த வெற்றிடத்தை அறியாமல் பொருளாதாரப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் அழுத்தமாகவும், தெளிவாகவும் உண்மைகளை எடுத்துரைக்கிறார், சி.பி.எம் கட்சியின் எம்.பி சீதாராம் யெச்சூரி. உலகத்தின் நெருக்கடிகளையும், இந்தியாவின் தேவைகளையும் விளக்கும் அவரது கருத்துக்களில் இந்த நெருக்கடிக்கான வரலாறும் இருக்கிறது, தீர்வும் இருக்கிறது.
-சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,
2008 நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த வழிமுறைகள், மேலும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்; அத்தகைய மீட்சி முழுமை பெறும் முன்னரே புதிய நெருக்கடியில் சிக்கி இரட்டைத் தாழ்வு மந்தத்தில் போய் முடியும் என நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நான் கணித்தது போலவே நடந்துவிட்டது என்பது குறித்து நான் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் கடன்களை அரசாங்கக் கடன்களாக மாற்றுகிற இந்த உத்திகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மீட்புத் திட்டம் என்ற பெயரில் எந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை கொள்ளையாய் அள்ளிக்கொடுக்கப்பட்டதோ, அந்தக் கம்பெனிகள் உருவாக்கிய நெருக்கடிதான் அர சுக்கடன்கள் பெருமளவு பெருகியதற்கு அடிப்படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இன்று அந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை அழகாக ஜோடிக்கப்படுகிறது; அந்நிறுவனங்களின் மேலதிகாரிகள் கணிசமான போனஸ் பெறுகிறார்கள். ஆனால், மறுபுறத்தில் அரசாங்கங்கள், கடன்சுமைகளைக் களைவது என்ற பெயரால் கடுமையான சிக்கனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இதனால், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நிலை சின்னாபின்னமாகியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில், வால் ஸ்டிரீட்க்கு எதிரான இயக்கங்கள் தொடருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
கிரீஸ்
இந்த நெருக்கடியின் பின்னணி யில் அரசியல் எதிர்விளைவுகளும் தோன்றி வருகின்றன. கிரேக்க பிரதமர் ஜார்ஜ் பாப் பென்ட்ரோ சென்ற வாரம் ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் கிரீஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமா, அதன் தொடர்ச்சியாக யூரோவிலிருந்து விலக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அச்சுறுத்திய பின்னரே அவர் ராஜினாமா செய்தார். வாக்கெடுப்பு நடைபெற்றிருந் தால் ஐரோப்பிய யூனியன் முழுமையும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்; ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய பிற ஐரோப்பிய பொருளாதாரங்களை, ஏன், உலகப் பொருளாதாரத்தையும் கூட ஒரு பொருளாதார மந்தச் சுழற்சிக்குள் தள்ளியிருக்கும். கிரீஸ் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது, கொந்தளிப்பான உலக நிதிச் சந்தையை சாந்தப்படுத்துவது என்ற நோக்கில் ‘தேச ஒற்றுமை’ என்ற பெயரில், அவசர கதியில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இம்முயற்சி, வளர்ந்து வரும் வேலையின்மை, சமூகத்துறைக்கான செலவினங்களில் வெட்டு, உழைக்கும் நேரம் அதிகரிப்பு, குறைந்த கூலி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள கிரேக்க மக்களிடம் எவ்வித பிரதிபலிப் பினையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை கண்டிராத எண்ணிக்கையில் தேசம் தழுவிய வேலை நிறுத்தங்களை கிரீஸ் நாடு சந்தித்து வருகிறது.
இத்தாலி
இத்தாலியின் அரசியலில் 17 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி இப்போது பதவி விலகியுள்ளார். இத்தாலியின் கடன், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசுப் பத்திரங்களின் வட்டி 7 சதவீதத்தை தொட்டு விட்டது. இத்தகைய வட்டி விகித அளவில்தான், முதலில் அயர்லாந்து, பின்னர் கிரீஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் மீட்புக்கான கோரிக்கை வைக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. இப்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாங்கம், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்ட யுள்ளது. முதலில் உடனடியாக 60 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் அளவிற்கு நடவடிக்கை தேவைப்படுகிறது. இவற்றில் ஊதிய முடக்கம், ஓய்வுபெறும் வயதை உயர்த் துவது, மதிப்புக்கூடுதல் வரி உயர்வு ஆகியன அடங்கும். இவை அனைத்தும் மக்கள் மீது மேலும் துயரங்களைக் குவிப்பவையேயாகும்.
ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டின் நிலைமையும் இதுவே. இவ்வருடம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் என்பது பூஜ்யம். நம்ப முடியவில்லை. எனினும் அதுவே உண்மை. வேலையின்மை விகிதம் 22 சதவீதத்தைக் கடந்துள்ளது. பெருமளவுக்கு அதிகமான கடன் சுமை சேர்ந்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியின் பிடியிலேயே தொடர்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால்களை அரசாங்கத்தின் திவாலாக மாற்றிய முந்தைய நடவடிக்கைகளே தற்போதைய நெருக்கடிக்கு வித்திட்டன. அதைப்போலவே, இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, தாங்க இயலாத பெரும் பெரும் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் தற்போதைய உத்தி மற்றுமொரு ஆழமான நெருக்கடிக்கு வித்திட்டு வருகிறது. இதனால் உருவாகவிருக்கும் நெருக்கடி 1929ம் உலகினை உலுக்கிய பெரு வீழ்ச்சியின் உக்கிரத்தை விட, பல பரிமாணங்களில் மிக மோசமாக இருக்கும்.
இத்தகைய கடினமான சிக்கன நடவடிக்கைகள் பெருவாரியான உலக மக்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதோடு, பெருகி வரும் வேலையின்மையையும் அதிகரிக்கும். இதன் விளைவாக உற்பத்தியில் வீழ்ச்சியும் மொத்த கிராக்கியில் ஏற்படும் சரிவினால் வணிகமும் வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலை விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியா?
இந்த அதிர்வினால் இந்தியா பாதிப்படையாது என்கிற நம்பிக்கை கானல் நீரே என்பது நிரூபணமாகி வருகிறது. அண்மையில், கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நமது பிரதமர், இந்தியப் பொருளா தாரம் குறித்து பெருமளவு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், அனைத்துப் பொருளாதாரக் குறியீடுகளும் இந்தியப் பொருளாதாரம் மந்தமாகி வருவதை மட்டுமல்ல, அது ஏற்கெனவே மந்தத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் கீழ் நிலைக்கு இறங்கியுள்ளது. தொழில் உற்பத்திக் குறியீடு 6.1 சதவீதத் திலிருந்து தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்து, செப்டம்பரில் 1.9 சதவீதமாக இறங்கியது. சென்ற ஆண்டில் 8.2சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, வேலை வாய்ப்புக்களில் வீழ்ச்சியும் ஊதியத்தில் முடக்கமும் ஏற்பட்டு, உள்நாட்டு கிராக்கியின் வளர்ச்சியினை எதிர்மறை நிலைக்கு எடுத்துச் செல்லும் அபாயமும் உள்ளது.
இவற்றிற்கெல்லாம் மேலாக ஏற்றுமதி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 81.79சதவீதத் தை தொட்ட பின் தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டு வருகிறது. தற்போது 10.8சதவீத மாகக் குறைந்துள்ளது. இறக்குமதி நிலையற்று இருக்கிற போதிலும், வர்த்தகப் பற்றாக் குறை 92 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இது 150 பில்லி யன் டாலர்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவசாயத்திற்குப் பிறகு மிகப்பெரிய வேலை அளிக்கும் துறையாக உள்ள நெசவு மற்றும் ஆடை தயாரிக்கும் துறைகளில் உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால் வேலையின்மை பெருகி வருகிறது.
இவையனைத்தும் பெருவாரியான இந்திய மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகிறது. அத்தியாவசியப் பண்டங்களின் அதிவேக விலை உயர்வால் தற்போதுள்ள வாழ்வாதார நிலை தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்தினை கட் டுப்படுத்தி விடுவோம் என அரசு ஜம்பமாகக் கூறிவந்த போதிலும் உணவுப்பணவீக்கம் 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை 26 சதவீதம், பருப்பு வகைகள் 14 சத வீதம், பழங்கள் 12 சதவீதம், முட்டை, மீன், இறைச்சி 13 சதவீதம், பால் 12 சதவீதம் என உச்சத்தில் நிற்கின்றன.
தேவை சமூக முதலீடுகளே!
இத்தகைய சூழலில், சர்வதேச நிதி மூல தனம் மேலும் பெருமளவு இந்தியாவிற்குள் வரும் வகையில் நிதித்துறையை தாராளமயமாக்க வேண்டும் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கோரிக்கை, இந்திய மக்களின் நலன்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியே ஆகும். சாமானிய மக்களின் நலன்களை காக்க வேண்டு மென்றால் ஐ.மு.கூட்டணி -2 அரசு கார்ப்பரேட்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் வரிச்சலுகைகளை தடுத்து நிறுத்த வேண்டும். (கடந்த இரு ஆண்டு பட்ஜெட்டுகளில் மட்டும் அவர் களுக்கு ரூ.5.2 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது). இதன் காரணமாக முதலீடுகளும் உயரவில்லை; அதன் பயனாக வளர்ச்சியும் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லையெனில், எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. வரிகள் முழுமையாக வசூலிக்கப்பட்டு, சமூக - பொருளாதாரக் கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமே வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் உள்நாட்டு கிராக்கியைப் பெரிதாக்கவும் இயலும்.
தமிழில் : ஜெ.விஜயா, மதுரை
நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ் (15.11.2011)
0 comments:
Post a Comment