மக்களின் உழைப்பில் விளைந்த பயன்களைத் தின்று கொழுத்துத் திமிரேறிப் போய் உண்ட களைப்பைத் தீர்க்க திண்டுகளில் சாய்ந்து கிடக்கிற அரசர்களையும் அவர்களின் அடிவருடிகளையும் மகிழ்விப்பதற்கானவை கலையும் இலக்கியமும் இல்லை.
மாடாய் உழைத்தும் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கிற மனிதர்களின் விடுதலைக்கு பூபாளம் இசைப்பவை! கலைஞர்களும் இலக்கிய கர்த்தாக்களும் அவர்களுக்குப் பேருவகையுடன் பரிசளிக்கிற போராயுதங்கள்! இந்த உண்மையை இப்பூவுலகைப் பொசுக்கத் துடிக்கும் ஏகாதிபத்திய எஜமானின் கன்னத்தில் அறைந்து, இன்னொருமுறை எடுத்துக் காட்டியுள்ளான் உலகப் புகழ்பெற்ற கிதார் இசைக் கலைஞன் மக்கானா!
மக்கானா. ஏழு வயதில் பாடத் தொடங்கி 14 வயதில் சிறந்ததொரு தொழில்முறைக் கலைஞனாய் ஒளிவீசியவன்; ஏற்கெனவே 2009இல் வெள்ளை மாளிகையில் தனது கிதாரை மீட்டியவன். இந்த ஹவாய் தேசத்து இளம் கலைஞன் இவ்வார இறுதியில் சனிக்கிழமையன்று தனது மண்ணில் ஹோனலூலு நகரில் அமெரிக்க மக்களின் நம்பிக்கைத் துரோகியான ஒபாமாவின் தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட 19 அல்லது 20 உலகத் தலைவர்களை மகிழ்விப்பதற்காக அளிக்கப்பட்ட விருந்தில் அவர்களை இசை மழையில் நனைக்க அழைக்கப்பட்டான்; அங்கே அவன் செய்ததோ அதியற்புதச் செயல்!
அக் கூட்ட அரங்குக்கு வெளியே இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த ‘ஹோனலூலுவைக் கைப்பற்றுக’ எனும் போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் அவனை முழுமையாக ஆட்கொண்டது! அதன் பொருட்டு அன்று காலையே அவன் ஒரு பாடலை வடித்திருந்தான்; அந்த விருந்தில் தனது கிதாரை மீட்டுவதற்குப் பதிலாக தான் அணிந்திருந்த’ டிசர்ட்டை‘யைத்திறந்து காட்டினான்; அது அந்த தேசத்தின் மிகச் சிறந்த வழியனுப்பும் வாழ்த்து மொழியாம் ‘அலோஹா!’ வுடன் கூடிய“அலோஹாவுடன் கைப்பற்றுவோம் ! ‘ எனும் வாசகத்தைத் தாங்கியிருந்தது.
“நாங்களே வெகுபலர்” எனும் தலைப்பைக் கொண்ட அப் பாடலின் வரிகள் அவனிடமிருந்து பொங்கியது...
‘ இங்கே வாருங்கள் இருக்கைகளில் அமருங்கள்!
எம் கோபக் கனலை கொட்டிடும் நேரம்
இங்கே வாருங்கள் இருக்கைகளில் அமருங்கள் !
கூண்டில் எமை அடைத்தீர் ! கொடுமைகள் பல செய்தீர் !
எம் உழைப்பின் பயனை ஒட்டச் சுரண்டிட
சட்டங்கள் போட்டீர் திட்டங்கள் தீட்டினீர் !
வாஷிங்டன் தரகர் வழிப்பறிக் கொள்ளையராய்
எம் சுதந்திரம் பறிக்கிறார் !
அதற்கெதிராய்க் கொடி தூக்கும் எமைப் பார்த்து
கோலோச்சும் அதிகாரி கொடுவாளை வீசுகிறான் !
இவர்களை இருந்த இடம் தெரியாமல்
கருவறுக்கும் நாள்வரை கலைந்துசெல்ல மாட்டோம் யாம்!
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
தனியொரு மனிதனின் தாழ்நிலை போக்கிட
தீட்டப்பட்ட தேசத்தின் சட்டம்
இன்றந்த ஒரு சிலரால் உருமாற்றப்படுகிறது
வில்லங்கம் ஏதுமின்றி
எல்லாம் அவர்களுக்கே
என்றாகி விட்டதின்று
நம்மைப் போல்வரா அந்த நயவஞ்சகர் ?
இல்லை இல்லை
அவர்களின் பிடியில் அரசு இயந்திரம்
இந்நிலை மாறும் அந்நாள் வரை
எமக்கிங்கில்லை இன்ப சுதந்திரம்
இவர்களை இருந்த இடம் தெரியாமல்
கருவறுக்கும் நாள்வரை கலைந்துசெல்ல மாட்டோம் யாம்!
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
தொந்தி பெருத்தவரின் தோள்சுமக்கும் பேரரசு
அவர்தம் நலன்காக்கும் ஆதிக்கச் சண்டைகளில்
எம் வீட்டுப் பிள்ளைகளின் இன்னுயிரைப் பலிகொடுக்கும்!
எல்லார்க்கும் ஒரு சில இம்மண்ணில் சொந்தம்!
என்றாலும் இத் திருடர் எதை எமக்கு விட்டுவைத்தார்?
எனவேதான் சொல்கின்றோம் கவனமாய்க் கேளுங்கள்!
எம் வாட்டத்தைத் தீர்க்காது வாய்ப்பந்தல் போடாதீர் !
இழப்பதற்கு ஏதுமில்லை என்பதனால் எம் கூட்டம்
நாளும் பொழுதுமாய் வளர்ந்து வருகிறது !
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
உம்மால் ,
எதிரும் புதிருமாய் எமைப் பிளக்க முடியாது
எம் கோபவிழிநீங்கி உம்கோரமுகம் மறையாது
உம் ஒதுக்கல் கொள்கை எம் ஒற்றுமையை
உருக்குப்போல் வார்த்தெடுக்கும் !
உம்மோடு எம்உறவு இனியில்லை ஒருபோதும்!
எமதரசு விலைக்கில்லை
நம்பிக்கைத் துரோகிகளாம் வங்கிகட்கு இனி இங்கே
மீட்பில்லை மீட்பில்லை !!
வெல்லும் நாள் வரையில்,
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
மாடாய் உழைத்தும் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கிற மனிதர்களின் விடுதலைக்கு பூபாளம் இசைப்பவை! கலைஞர்களும் இலக்கிய கர்த்தாக்களும் அவர்களுக்குப் பேருவகையுடன் பரிசளிக்கிற போராயுதங்கள்! இந்த உண்மையை இப்பூவுலகைப் பொசுக்கத் துடிக்கும் ஏகாதிபத்திய எஜமானின் கன்னத்தில் அறைந்து, இன்னொருமுறை எடுத்துக் காட்டியுள்ளான் உலகப் புகழ்பெற்ற கிதார் இசைக் கலைஞன் மக்கானா!
மக்கானா. ஏழு வயதில் பாடத் தொடங்கி 14 வயதில் சிறந்ததொரு தொழில்முறைக் கலைஞனாய் ஒளிவீசியவன்; ஏற்கெனவே 2009இல் வெள்ளை மாளிகையில் தனது கிதாரை மீட்டியவன். இந்த ஹவாய் தேசத்து இளம் கலைஞன் இவ்வார இறுதியில் சனிக்கிழமையன்று தனது மண்ணில் ஹோனலூலு நகரில் அமெரிக்க மக்களின் நம்பிக்கைத் துரோகியான ஒபாமாவின் தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட 19 அல்லது 20 உலகத் தலைவர்களை மகிழ்விப்பதற்காக அளிக்கப்பட்ட விருந்தில் அவர்களை இசை மழையில் நனைக்க அழைக்கப்பட்டான்; அங்கே அவன் செய்ததோ அதியற்புதச் செயல்!
அக் கூட்ட அரங்குக்கு வெளியே இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த ‘ஹோனலூலுவைக் கைப்பற்றுக’ எனும் போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் அவனை முழுமையாக ஆட்கொண்டது! அதன் பொருட்டு அன்று காலையே அவன் ஒரு பாடலை வடித்திருந்தான்; அந்த விருந்தில் தனது கிதாரை மீட்டுவதற்குப் பதிலாக தான் அணிந்திருந்த’ டிசர்ட்டை‘யைத்திறந்து காட்டினான்; அது அந்த தேசத்தின் மிகச் சிறந்த வழியனுப்பும் வாழ்த்து மொழியாம் ‘அலோஹா!’ வுடன் கூடிய“அலோஹாவுடன் கைப்பற்றுவோம் ! ‘ எனும் வாசகத்தைத் தாங்கியிருந்தது.
“நாங்களே வெகுபலர்” எனும் தலைப்பைக் கொண்ட அப் பாடலின் வரிகள் அவனிடமிருந்து பொங்கியது...
‘ இங்கே வாருங்கள் இருக்கைகளில் அமருங்கள்!
எம் கோபக் கனலை கொட்டிடும் நேரம்
இங்கே வாருங்கள் இருக்கைகளில் அமருங்கள் !
கூண்டில் எமை அடைத்தீர் ! கொடுமைகள் பல செய்தீர் !
எம் உழைப்பின் பயனை ஒட்டச் சுரண்டிட
சட்டங்கள் போட்டீர் திட்டங்கள் தீட்டினீர் !
வாஷிங்டன் தரகர் வழிப்பறிக் கொள்ளையராய்
எம் சுதந்திரம் பறிக்கிறார் !
அதற்கெதிராய்க் கொடி தூக்கும் எமைப் பார்த்து
கோலோச்சும் அதிகாரி கொடுவாளை வீசுகிறான் !
இவர்களை இருந்த இடம் தெரியாமல்
கருவறுக்கும் நாள்வரை கலைந்துசெல்ல மாட்டோம் யாம்!
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
தனியொரு மனிதனின் தாழ்நிலை போக்கிட
தீட்டப்பட்ட தேசத்தின் சட்டம்
இன்றந்த ஒரு சிலரால் உருமாற்றப்படுகிறது
வில்லங்கம் ஏதுமின்றி
எல்லாம் அவர்களுக்கே
என்றாகி விட்டதின்று
நம்மைப் போல்வரா அந்த நயவஞ்சகர் ?
இல்லை இல்லை
அவர்களின் பிடியில் அரசு இயந்திரம்
இந்நிலை மாறும் அந்நாள் வரை
எமக்கிங்கில்லை இன்ப சுதந்திரம்
இவர்களை இருந்த இடம் தெரியாமல்
கருவறுக்கும் நாள்வரை கலைந்துசெல்ல மாட்டோம் யாம்!
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
தொந்தி பெருத்தவரின் தோள்சுமக்கும் பேரரசு
அவர்தம் நலன்காக்கும் ஆதிக்கச் சண்டைகளில்
எம் வீட்டுப் பிள்ளைகளின் இன்னுயிரைப் பலிகொடுக்கும்!
எல்லார்க்கும் ஒரு சில இம்மண்ணில் சொந்தம்!
என்றாலும் இத் திருடர் எதை எமக்கு விட்டுவைத்தார்?
எனவேதான் சொல்கின்றோம் கவனமாய்க் கேளுங்கள்!
எம் வாட்டத்தைத் தீர்க்காது வாய்ப்பந்தல் போடாதீர் !
இழப்பதற்கு ஏதுமில்லை என்பதனால் எம் கூட்டம்
நாளும் பொழுதுமாய் வளர்ந்து வருகிறது !
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
உம்மால் ,
எதிரும் புதிருமாய் எமைப் பிளக்க முடியாது
எம் கோபவிழிநீங்கி உம்கோரமுகம் மறையாது
உம் ஒதுக்கல் கொள்கை எம் ஒற்றுமையை
உருக்குப்போல் வார்த்தெடுக்கும் !
உம்மோடு எம்உறவு இனியில்லை ஒருபோதும்!
எமதரசு விலைக்கில்லை
நம்பிக்கைத் துரோகிகளாம் வங்கிகட்கு இனி இங்கே
மீட்பில்லை மீட்பில்லை !!
வெல்லும் நாள் வரையில்,
வீதியை நீதிமன்ற நெடுஞ்சுவரை
கனவான்கள் நீங்கள் காற்று வாங்கும்
கவைக்குதவா உங்கள் அலுவலகக் கட்டடத்தை
கைப்பற்றும் இயக்கத்தைக் கைவிடவே மாட்டோம் !
வெகு பலராம் எமது விழைவுகளைப் புறந்தள்ளி
ஒரு சிலர்க்காய் உம் அரசுத் தேர் உருளும்வரை
ஓயாது எமது சமர் உறங்காது எம் விழிகள் !
0 comments:
Post a Comment