நேட்டோவின் லிபிய ஆக்கிரமிப்பு சதிகள் குறித்து 21.02.2011 அன்று ஆற்றிய கருத்தரங்க உரை வாசகங்களை சுட்டிக்காட்டி கிரான்மா (25.10.2011) இதழில் பிடல் காஸ்ட்ரோ எழுதிய கட்டுரை.
நேட்டோவின் லிபிய ஆக்கிரமிப்புச் சதி என்னும் தலைப்பிலான எனது உரை யில், தெளிவான கணிப்பினை சற்றேறக் குறைய 8 மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி 21 ஆம்தேதி உறுதியாக தெரிவித்திருந்தேன். அப்போது இக்கருத்து பலருக்கு கற்பனை என்றுகூட தோன்றியது. இம்முடிவுக்கு நான் அப்போது வருவதற்கான உண்மை யினை விளக்க கீழ்க்கண்ட சில வரிகளை குறிப்பிடுகிறேன்.
உள்ள எண்ணெய் வளம், உலகினை தங்கள் எண் ணம்போல் ஆட்டுவிக்கும் அரசியல் சக்தி யை உருவாக்கும் மிகப்பெரும் செல் வாதாரமாக இன்று இருக்கிறது”. “இன்றைய வாழ்வுமுறை எரிபொருளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இவ்வுல கின் சரிபாதி நாடுகளில் வெனிசுலா நாடு தான் ஒருகாலத்தில் பெட்ரோலியத்திற்கு அதிகவிலை கொடுத்துவந்தது. அந்நாட் டின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களை அமெரிக்கா தனதாக்கிக்கொண்டு தொடர்ச் சியாக கொள்ளையடித்து வந்தது”.
“இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது ஈரான், இராக், சவூதி அரேபியா மற்றும் இதர அரபு நாடுகளிலிருந்த அளப் பரிய எண்ணெய் வளத்தையும் அமெரிக்கா கொள்ளையடித்து வந்தது. இந்நாடுகள்தான் கச்சா எண்ணெய்யை உலகுக்கு அளிக்கும் முதன்மை நாடுகள். இயற்கை எரிவாயு, நீர் மற்றும் அணுசக்தி மூலமான மின்உற்பத் தியானாலும், அமெரிக்கா உள்பட உலகின் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அள விற்கு நாளொன்றுக்கு 8 கோடி பேரல்கள் (இதில் அமெரிக்காவின் பயன்பாடு மட்டும் சுமார் 1 கோடி 95 லட்சம் பேரல்கள்) ஆக அதிகரித்தது”.
“இன்று மனிதகுலம் அனுபவிக்கும் மிகப்பெரிய சோகங்களில் ஒன்றான உலகம் வெப்பமாதல், பெட்ரோல் மற்றும் எரிவாயு வை வீணாக அழிவுப்பாதையில் பயன்படுத் துவதுதான்”. “ இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மன், பிரிட்டனின் துருப்புகளுக் கிடையிலான குறிப்பிடத்தக்க யுத்தக்கள மாக இருந்த லிபியா, 1951 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்கா சுதந்திர நாடாக மலர்ந் தது”. “கியூபாவின் பரப்பளவில் மூன்று மடங்கு ஏரியாக நிலத்தடியில் தேங்கிக் கிடக்கும் நீர்வளமும் அதன்மேற்பரப்பில் கடுமையான 95 சதவீதமான பாலைப் பகுதியும்தான் லிபியா. எனவேதான் நாடு முழுவதும் புதிய நிலத்தடி நீரை விநியோ கிக்கும் குழாய் இணைப்புகளை லிபியா அமைக்கமுடிந்தது. நவீன தொழில்நுட்பம் உயர்வகை எண்ணெய் வயல்களையும், ஏராளமான நிலத்தடி எரிவாயு இருப்பையும் கண்டுபிடிக்க உதவியது”.
“1969 செப்டம்பரில் லிபிய புரட்சி நிகழ்ந் தது. அரபு பாலைப்பகுதிகளில் நாடோடி யாக திரிந்த இனக்குழுவிலிருந்து வந்த இளம் லிபிய ராணுவ வீரராக இருந்த மும்மர் அல் கடாபி எகிப்திய தலைவர் கமால் அப் துல் நாசரின் கருத்துக்களால் கவரப்பட்டார். அவரே பின்னாளில் லிபிய புரட்சியின்போது முதன்மை தலைவராக வளர்ந்தார். கடாபி யின் பெரும்பாலான அரசியல் முடிவுகள் சந்தேகமின்றி எகிப்தின் மாற்றங்களை ஒட்டியே இருந்தன, ஊழல் மற்றும் பல வீனமான மன்னராட்சியை தூக்கியெறியவும் அவைகளே காரணமாகவும் இருந்தன”.
“கடாபியின் நடவடிக்கைகள் நியாயமா னவையா, இல்லையா என்பதல்ல பிரச் சனை. இன்றைய உலகின் மனப்பாங்கு பல் வேறு வெகுஜன ஊடகங்களின் செய்தி களால் உருவாக்கப்படுகிறது. கலவையாக நடைபெற்றுவரும் பலதரப்பட்ட சம்பவங் கள், கடுமையான குழப்பங்களுக்கு மத்தி யில் வரும் விதவிதமான செய்திகளிலிருந்து லிபியாவில் என்ன நடந்து கொண்டிருக் கிறது என்ற உண்மையை மிகச்சரியாக கண்டறிய, நாம் சில காலம் காத்திருக்க வேண்டிய தேவையிருக்கிறது. எனக்கு தெளிவாக தெரியவருவது; அமெரிக்கா விற்கு லிபியாவில் அமைதி ஏற்படுவதில் அக்கறையில்லை என்பதோடு செல்வம் கொழிக்கும் அந்நாட்டை தாக்கி ஆக்கிர மிக்க நேட்டோவிற்கு கட்டளையிடுவதற்கு கூட தயங்காது என்பதுடன் இது இன்னும் சில நாட்களிலோ ஏன் சில மணித்துளி களிலோ நிகழக்கூடும் என்பதுதான்”.
“இன்று (20.02.2011) நிக்கலஸ் மது ரோங்விடமிருந்து (வெனிசுலாவின் வெளியு றவு அமைச்சர்) ஒரு முக்கியமான தகவல் வந்தது. நேற்று (19.2.2011) அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகள் துரோகத்தனமான எண் ணத்துடன் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளன. அதாவது வெனிசுலாதான் கடாபியை இயக்குகிறதாம். என்னைப் பொறுத்த வரையில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட கட மைகளிலிருந்து வழுவிச்சென்று நாட்டை கைவிடும் தலைவராக கடாபியை கற்பனை செய்ய முடியாது.
தமிழில் : பி.தட்சிணாமூர்த்தி
காஸ்ட்ரோ சொல்வதும் நியாயமாகத்தான் படுகிறது.
ReplyDeleteநன்றி
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
ReplyDelete