அரசியல் தலைவர்களும் பெரும் தொழிலதிபர் களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் உள்ளிட்ட ஒரு பெரும் கூட்டம் தான் அரசுக்கு வரி செலுத்தாமலும், தங்களுக்குப் பெருமளவு பணம் வரும் வழியை அரசுக்குத் தெரிவிக்காமலும் அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் திரட்டிய கள்ளப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்குவதற்கான தந்திரம் ஏற்றுமதிக் கணக்கிலான மோசடி மூலம் செய்யப்படுகிறது. இதுவும் மத்திய அரசுக்குத் தெரிந்தே நடக்கிறது. மிகப்பெரும் வசதி படைத்த இந்தியர்களின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் பல்வேறு வெளிநாடுகளின் வங்கிகளில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது என்பது வெளிப்பட் டுள்ள கணக்கின்படி தெரிகிறது. இவற்றில் மிக அதிக தொகை போடப்பட்டுள்ளது ஸ்விஸ் வங்கிகளிலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் பேர் ஸ்விஸ் நாட்டுக்குப் பயணமாகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் இந்நாட்டுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்கிறவர்கள். இந்த இரு பிரிவுகளிலும் அதிகம் பேர் இந்தியர்கள்தான். உச்சநீதி மன்றம் கேள்வியெழுப்பிய பிறகுதான், வெளிநாடுகளின் வங்கிகளில் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பெயர் முதலான விவரங்களைத் தரவேண்டுமென ஸ்விஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இந்திய அரசு கோரியுள்ளது. இதுவும் கூட கருப்புப் பண முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்துத்தான் கோரியுள்ளது. சுவிஸ்வங்கியில் மூன்று கேரள எம்.பி.க்களுக்கும் கணக்கு உள்ளதென்ற செய்தி வந்ததைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருப்புப் பணக்காரர்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை என்று சொன்னது இந்த உறுதி மொழியின்படிதான்.
கருப்புப் பணம் குறித் துத் தொடர்ந்து செய்திகள் வருவதாலும், கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க சர்வதேச அளவில் முயற்சி நடப்பதாலும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கான வேலை மிக வேகமாக நடைபெறுகிறது.
சுரங்கத் தொழில், பங்கு மார்க்கெட், மருந்துக் கம்பெனி வட்டாரங்கள்தான் ஏற்றுமதியில் பொய்க் கணக்குகளை உருவாக்கி, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க உதவுகின் றன. இதற்கு அரசு நிர்வாகங்களும் உதவியாக இருக் கின்றன. 2010-11 ல் ஏற்றுமதி யில் 79 சதவிகிதம் அதி கரிப்பு என்பது இதன் மூலம்தான் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. செம்பு உப கரணங்களின் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்தது என் கிற கணக்கு தொழில் துறையை அதிரச் செய்துள்ளது. இந்த அளவுக்கு செம்பு உபகரணங் களை ஏற்றுமதி செய்வதற்கான செம்பு உற்பத்தித்திறன் இந் தியாவிடம் இல்லை. செய்யாத ஏற்றுமதியைச் செய்ததாகக் காட்டி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு இது ஓர் உதாரணம்.
ஸ்விஸ் வங்கியில் மிக அதிகமாய்க் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தியர்கள்தான் என்பது ஸ்விஸ் பாங்கிங் அசோ சியேசன் வெளியிட்ட கணக்கில் ஏற்கெனவே தெளிவாகியிருக்கிறது. தேசத்தின் ஜிடிபியின் 40 சதவிகித தொகை அந்நிய நாடுகளில் சட்ட விரோத மாகச் சேமிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர்
0 comments:
Post a Comment