நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் செவ்வாயன்று துவங்கியது. புதனன்று
காலை மக்களவைத் தொடங்கியதும், “அணை 999” என்று பெயரிட்டு வெளியாகவுள்ள
குறும்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைப்பெடுத்து மக்கள் அழிவதுபோன்று
எடுக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது என்றும் முல்லைப் பெரியாறு அணை
தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சமயத்தில் இது
போன்று ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உருவாக்கும் விதத்தில் படங்கள்
வரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்
பி.ஆர். நடராஜன் ஓர் கவன ஈர்ப்புத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
இதேபோன்று மக்களவை உறுப்பினர்கள் கணேசமூர்த்தி (மதிமுக), தம்பிதுரை (அஇஅதிமுக), டி,ஆர். பாலு(திமுக), லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியவர்களும் ஒத்திவைப்புத் தீர்மானம் தனித்தனியே கொடுத்திருக்கிறார்கள்.
இதனிடையே இந்த திரைப் படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதேபோன்று மக்களவை உறுப்பினர்கள் கணேசமூர்த்தி (மதிமுக), தம்பிதுரை (அஇஅதிமுக), டி,ஆர். பாலு(திமுக), லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியவர்களும் ஒத்திவைப்புத் தீர்மானம் தனித்தனியே கொடுத்திருக்கிறார்கள்.
இதனிடையே இந்த திரைப் படத்தை தமிழகத்தில் திரையிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
padam thiraiedamale thadai cheivadu sariyalla , 2 maanila makkalin unarvukalai thoonduvathaga erukkum kaatchikalai neekki thirai edalame . padathai thadupadu karuthdu suthanthirathai mudamakume , marxistuma eppadi .
ReplyDelete