அத்வானியின் ரத யாத்திரை நிறைவு விழாவுக்கு வாழ்த்துச் சொன்னதும்,தன் பிரதிநிதியை அதில் பங்கேற்கச் செய்ததும் ஊழல் ஒழிப்பில் அம்மாவிற்கு உள்ள பாசமா? இல்லை.அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்துக்கு அம்மா வாழ்த்துச் சொல்லவில்லையே? [அந்த உண்ணாவிரதம் குறித்து எமக்கு விமர்சன பூர்வமான கருத்துகள் உண்டு அது தனி] இன்னும் சொல்லப்போனால் பிரதமரை விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதை எதிர்த்தவர்.பின் ஏன் திடீரென அத்வானிக்கு ஆதரவு?
இது திடீர் ஆதரவு அல்ல. தொடரும் சம்பவங்களை கூர்ந்து கவனிப்போர் இது சாதா நட்பல்ல சங்பரிவாரத்தோடான இறுக்கமான உறவின்தொடர்ச்சி என்பதை அறிவர். ரத்தயாத்திரை,கரசேவை,கோத்திரா எனத்தொடரும் ரத்த பாசம் இது என்பதை மறுக்க முடியாது.
நடுநிலை முகமூடி போட்டிருக்கும் இந்துத்துவ மதவெறித் தத்துவ சார்பு ஏடுகளான தினமணி,தினமலர்,துக்ளக் போன்ற ஏடுகளும்,அது போன்ற அறிவுஜீவிகளும் விழுந்து விழுந்து முட்டுக்கொடுப்பது ஏன்? கொடூர பஸ்,பால்,மின் கட்டண உயர்விர்வினை மனச்சாட்சியைக் கொன்றுவிட்டு ஆதரிப்பதின் மர்மம் என்ன? ரத்த[யாத்திரை] பாசமும் சுரண்டும் வர்க்க பாசமும் அன்றி வேறென்ன?
அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தின்போது சென்னையில் உண்ணாவிரதம் இருந்த மேல்தட்டு அறிவுஜீவிகள் இடஒதுக்கீடுதான் ஊழலின் ஊற்றுக்கண் என்று சொன்னது வாய்தவறிச் சொன்னதல்ல; அவர்களின் அடிப்படைப்புரிதலே அப்படித்தான். அவர்கள் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானவர்களே. அது ஒருபுறம் இருக்கட்டும் காந்திய வழியே தமது வழி என்கிற இவர்கள் ஜெ அரசு அநியாயமாக விலை ஏற்றுகிறபோது லாபநட்ட தத்துவம் பேசி வலிய முட்டுக்கொடுப்பதேன்?
காந்தியின் அளவு கோல் என்ன, “ஒரு செயலைச் செய்கிறபோது அது கடையனுக்கும் கடையனான தரித்த நாராயணர்களுக்கு எவ்விதத்தில் உதவும் என்று பார்க்க வேண்டும்”.ஜெயின் கட்டண விலை உயர்வு அவர்களை மேலும் மிதித்துத் துவைக்கிறது என்பதல்லவா உண்மை.
இப்படி நடப்பவற்றை எல்லாம் ஒன்றோடொன்று இணைத்தும் பொருத்தியும் பார்க்கப் பழகாதவரை நாம் அரசியலில் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்போம்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
6 months ku munnal azhaithdu vantha podu modhien nanpar ena theriyatha unkaluku /? 2 latcham arasu paniyalarkalai ore kaiyeluthil dismis seithavar ena theriyadu ponathai neenka marandutdinka , sila MLA Seatdukaga , MAKKAL MARAKALA , neenka varka nalanai marandu rompa naalachu sir .........
ReplyDelete