தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக் கள் மீட்கப்படும் என சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகத் தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், அரசு நிலங் கள் ஆகியவை தலித் மக்களிடமிருந்து மிரட் டப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந் நிலங்களையும் தமிழக முதல்வர் மீட்பதற் கான நடவடிக்கையை எடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள்.
மதுரையில் உள்ள எவிடென்ஸ் (சாட் சியம்) என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோயம் புத்தூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கட லூர், காஞ்சிபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித் மக்களை நேரடியாக சந்தித்து ஆய்வு நடத்தி யுள்ளதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் கள் வெளியாகியுள்ளன.
தற்போது நிலமுள்ள தலித்துகள்
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலித்துகளில் தற்போது நிலம் உள்ள தலித் துகளின் எண்ணிக்கை 34 சதவீதமாகும். நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை 66 சத வீதமாகும். நிலம் இருக்கக்கூடிய தலித்து களில் 10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்தி ருப்பவர் 3 பேர் மட்டுமே. 6 லிருந்து 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே. 1 லிருந்து 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் 28 பேர். 51 சென்ட் முதல் 99 சென்ட் நிலம் வைத் திருப்பவர்கள் 7 பேர். அதிகபட்சமாக 10 சென்ட்டுக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் 48 பேர். நிலம் இருப்பவர்களில் 50 பேர் வீட்டு மனை வைத்திருப்பவர்கள். நன்செய் நிலம் உள்ள வர்கள் 13 பேர். புன்செய் நிலம் உள்ள வர்கள் 32 பேர். நிலம் வைத்திருக்கக்கூடிய 99 தலித் துகளில் 45 பேருக்கான நிலம் அர சால் வழங் கப்பட்டதாகும். இவற்றில் பஞ்சமி நிலம் வைத்திருப்பவர்கள் 12 பேர். தொகுப்பு வீட் டிற்கான நிலம் வைத்திருப்பவர்கள் 10 பேர். சிறப்பு திட்டங்களால் நிலம் பெற்றவர்கள் 12 பேர்.
தலித்துகளும் நிலஉரிமை மீறல்களும்
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளும் நில உரிமை மீறலால் பாதிக் கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 247 பேர் (82 சதவீதம்) சாதி இந்துக்களாலும், 7 பேர் (1.7சதவீதம்) சாதி கிறிஸ்தவர்களாலும், தனியார் நிறுவனங்களால் 21 பேரும் (7.5 சத வீதம்), திருச்சபையால் 5 பேரும் (1.7 சதவீதம்), அரசால் 19 பேரும் (6 சதவீதம்) பாதிக்கப்பட் டுள்ளனர்.
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 நபர்களில் 17 பேர் (5 சதவீதம்) 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை பறிகொடுத்தவர்கள். 170 பேர் (56 சதவீதம்) 1 - 5 ஏக்கர் நிலத்தை பறி கொடுத்தவர்கள். 10 சென்ட்டுக்குள் நிலத்தை பறிகொடுத்தவர்கள் 53பேர். (18 சதவீதம்). நிலம் பறிக்கப்பட்ட ஆண்டு ஆய்விற்கு எடுத் துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளில், 1970க்கு முன்பு 80 தலித்துகளின் நிலம் பறிக் கப்பட்டிருப்பது தெரியவருகிறது. 1970 லிருந்து 1980 இடையே 59 தலித்துகளின் நிலமும், 1981 லிருந்து 1990 இடையே 44 தலித்துகளின் நிலமும், 1991 லிருந்து 2000 ஆம் ஆண்டு இடையே 41 தலித்துகளின் நிலமும் பறிக்கப் பட்டுள்ளன.
கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 இடையே 76 தலித்துகளின் நிலம் பறிக்கப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தலித் துகளின் நிலம் பறிப்பு இரண்டு மடங்காக அதி கரித்துள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது.
நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித்துகளில் 195 தலித்துகளின் நிலம் அர சால் வழங்கப்பட்டுள்ளது. 90 தலித்துகளின் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. மற்றவர் களுக்கெல்லாம் நிலம் தானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
குறைந்த விலைக்கு நிலத்தை பறிகொ டுத்தவர்கள் 93 பேர் ஆவர். பொருளுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண் ணிக்கை 42. கடனுக்காக நிலத்தை பறி கொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 98. வட்டிக்காக நிலத்தை பறிகொடுத்த தலித் துகளின் எண்ணிக்கை 40. நிலத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து, வழி தடங்கலை மறித்து அதன் மூலம் நிலத்தை விற்க நிர்ப்பந்திக் கப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 78. அரசு நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொ டுத்த தலித்துகளின் எண்ணிக்கை 16. தனி யார் நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 19 பேர் ஆவர்.
இதில் கொடுமை என்னவென்றால், 30 தலித்துகள் கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானியங்களுக்காக நிலத்தை பறிகொ டுத்துள்ளனர். சாராயம், கள் போன்ற மதுபா னங்களுக்காக 5 தலித்துகள் நிலத்தைப் பறி கொடுத்துள்ளனர். உணவுக்காக 5 தலித்துகள் தங்கள் நிலத்தை பறிகொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், தேவிநாயக் கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாத னுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம் ரூ.300 கடனுக்காக பறிக்கப்பட்டுள்ளது. திண்டுக் கல் மாவட்டம், கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலக் கண்ணன் என்பவருக்கு 1985ம் ஆண்டு தமி ழக அரசு 3 ஏக்கர் 40 சென்ட் நிலம் கொடுத் துள்ளது. இந்நிலத்தை கடந்த 1994ம் ஆண்டு 8 படி கம்புக்காக சாதி இந்து ஒருவர் ஏமாற்றி பறித்துள்ளார். விழுப்புரம், மேல்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேனி. இவருக்கு தமிழக அரசு கடந்த 1965ம் ஆண்டு 4 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. இந்நிலம் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு சாராயத்திற்காக பறிக்கப்பட் டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என்று கூறப்படுகிறது. விழுப்புரம், குதிரை சந் தல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாயி. இவரது 4 ஏக்கர் நிலத்தை 5 படி தானியம் மற்றும் ரூ. 100 கொடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முருகன் என்பவரது நிலமும் இதே கிராமத்தில் சாதி இந்துக்களால் பறிக்கப்பட்டிருக்கிறது. திண் டுக்கல், சின்னகரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்த மான அரசு கொடுத்த 60 சென்ட் நிலத்தில், 15 சென்ட் நிலத்தை ஒரு பஞ்சாயத்து தலைவர் 2005 ஆம் ஆண்டு பறித்துள்ளார். தற்போது இந்த நிலம் சாதி இந்துக்களின் பொதுப் பாதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சில ஆண்டுகளுக்கு முன்பு இவ ரது தாத்தாவிற்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை அப்பகுதி சாதி இந்துக்கள் ஊர் மயா னம் அமைப்பதற்காக இலவசமாக கேட்டு, மயானம் அமைத்துள்ளனர். இவரது நிலம் மட்டுமல்லாமல், சில சாதி இந்துக்களின் நிலம் ஊர் மயானம் அமைப்பதற்கு கொடுக் கப்பட்டுள்ளது. ஆனால் இம்மயானத்தில் தலித்துகளின் சடலத்தை புதைக்க அனுமதியில்லை. 65 சென்ட் நிலத்தை கொ டுத்த ராஜேந்திரனின் உறவினர்களோ, சமூ கத்தைச் சேர்ந்தவர்களின் சடலத்தை புதைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின் றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுங் குன்றம் தாலுகா, பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் உள்ளிட்ட 50 பயனாளிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலத்தினை தமிழக அரசு கடந்த 1963ம் ஆண்டு வழங்கி யுள்ளது. இந்நிலங்கள் அனைத்தும் சாதி இந் துக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு நியாயம் கேட் கச் சென்ற இப்பகுதி தலித் மக்கள் மீது தாக் குதல் நடந்தது மட்டுமல்லாமல், போலீசா ரால் பொய்வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்கீரனூர் கிராமத் தைச் சேர்ந்த தலித் பெண்ணான காட்டேரி யம்மாளுக்குச் சொந்தமான 50 சென்ட்டுக்கு மேலான நிலம் குறைந்த விலைக்கு பறிக்கப் பட்டுள்ளது. இவ்வழக்கு தற்போது தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக் காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி, பெரியகுறவக்குடி கிராமத் தைச் சேர்ந்த 74 தலித் மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு வீடு கட்டுவதற் கான நிலம் வழங்கியுள்ளது. ஆனால் இதுநாள் வரை தமிழக அரசு வழங்கிய நிலத்தில் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி சாதி இந்துக்கள், தலித் மக்களுக்கு ஒதுக்கிய நிலத்தை ஆக் கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், அம் மக்களை மிரட்டியும் தாக்கியும் வருகின்றனர். இதேபோன்று உசிலம்பட்டி அருகில் உள்ள சொக்கதேவன்பட்டி கிராமத்தில் 51 தலித் குடும்பத்தினருக்கு 2002ம் ஆண்டு தமிழக அரசு நிலம் வழங்கியிருக்கிறது. இப்பகுதி சாதி இந்துக்களும் தலித்துகளுக்கு நிலத்தை கொடுக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாகை மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத் தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட் டோரும் கடனுக்காக சாதி இந்துக்களிடம் நிலத்தை பறிகொடுத்துவிட்டு இருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாத காலம் டீ சாப்பிட்ட கடனுக்காக தலித் ஒருவரின் 1 ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. தஞ் சை மாவட்டத்தில் சாதி இந்து ஒருவரிடம் கா தணி விழா நடத்துவதற்காக தலித் ஒருவர் கடன் கேட்டிருக்கிறார். சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவழித்த சாதி இந்து, தலித்துக்கு சொந்த மான 80 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியுள் ளார். இச்சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.
நிலங்களும் வன்கொடுமைகளும்
தலித்துகள் நிலம் வைத்திருந்தபோது சாதி இந்துக்களால் 240 தலித்துகள் மீது வன்கொடுமை நடந்துள்ளது. நிலஉரிமையால் 5 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 146 தலித்துகள் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு இழிவாகப் பேசப்பட்டுள்ளனர். 45 தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நிலஉரிமை மீறலுக்கு எதிரான சட்டத் தலையீடு
பல்வேறு கொடுமைகளை தலித்துகள் சந்தித்தாலும், 65 சம்பவங்களுக்கு மட்டும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. புகார் கொடுக்கப்பட்ட 65 சம்பவத் தில் கூட 15 சம்பவத்தில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப் பாக 3 வழக்குகள் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, 2 வழக்கில் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எங்கெல்லாம் பஞ்சமி நிலங்கள் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதுடன், பஞ்சமி நிலம், தலித் மக்களுக்கு அரசு கொடுத்த நிலம், தலித் மக்களின் சொந்த நிலங்கள் போன்ற வற்றை பறித்த நிலைகள் குறித்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் குறைதீர்ப்பு கமிட்டி மூலமாக உண்மைகளை கண்டறிந்து, அதன டிப்படையில் தீவிர விசாரணை மேற் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நீதி வழங் குவதற்கு முறையான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளை யும் ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள எவிடென்ஸ் (சாட் சியம்) என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோயம் புத்தூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கட லூர், காஞ்சிபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித் மக்களை நேரடியாக சந்தித்து ஆய்வு நடத்தி யுள்ளதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் கள் வெளியாகியுள்ளன.
தற்போது நிலமுள்ள தலித்துகள்
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலித்துகளில் தற்போது நிலம் உள்ள தலித் துகளின் எண்ணிக்கை 34 சதவீதமாகும். நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை 66 சத வீதமாகும். நிலம் இருக்கக்கூடிய தலித்து களில் 10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்தி ருப்பவர் 3 பேர் மட்டுமே. 6 லிருந்து 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே. 1 லிருந்து 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் 28 பேர். 51 சென்ட் முதல் 99 சென்ட் நிலம் வைத் திருப்பவர்கள் 7 பேர். அதிகபட்சமாக 10 சென்ட்டுக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் 48 பேர். நிலம் இருப்பவர்களில் 50 பேர் வீட்டு மனை வைத்திருப்பவர்கள். நன்செய் நிலம் உள்ள வர்கள் 13 பேர். புன்செய் நிலம் உள்ள வர்கள் 32 பேர். நிலம் வைத்திருக்கக்கூடிய 99 தலித் துகளில் 45 பேருக்கான நிலம் அர சால் வழங் கப்பட்டதாகும். இவற்றில் பஞ்சமி நிலம் வைத்திருப்பவர்கள் 12 பேர். தொகுப்பு வீட் டிற்கான நிலம் வைத்திருப்பவர்கள் 10 பேர். சிறப்பு திட்டங்களால் நிலம் பெற்றவர்கள் 12 பேர்.
தலித்துகளும் நிலஉரிமை மீறல்களும்
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளும் நில உரிமை மீறலால் பாதிக் கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 247 பேர் (82 சதவீதம்) சாதி இந்துக்களாலும், 7 பேர் (1.7சதவீதம்) சாதி கிறிஸ்தவர்களாலும், தனியார் நிறுவனங்களால் 21 பேரும் (7.5 சத வீதம்), திருச்சபையால் 5 பேரும் (1.7 சதவீதம்), அரசால் 19 பேரும் (6 சதவீதம்) பாதிக்கப்பட் டுள்ளனர்.
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 நபர்களில் 17 பேர் (5 சதவீதம்) 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை பறிகொடுத்தவர்கள். 170 பேர் (56 சதவீதம்) 1 - 5 ஏக்கர் நிலத்தை பறி கொடுத்தவர்கள். 10 சென்ட்டுக்குள் நிலத்தை பறிகொடுத்தவர்கள் 53பேர். (18 சதவீதம்). நிலம் பறிக்கப்பட்ட ஆண்டு ஆய்விற்கு எடுத் துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளில், 1970க்கு முன்பு 80 தலித்துகளின் நிலம் பறிக் கப்பட்டிருப்பது தெரியவருகிறது. 1970 லிருந்து 1980 இடையே 59 தலித்துகளின் நிலமும், 1981 லிருந்து 1990 இடையே 44 தலித்துகளின் நிலமும், 1991 லிருந்து 2000 ஆம் ஆண்டு இடையே 41 தலித்துகளின் நிலமும் பறிக்கப் பட்டுள்ளன.
கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 இடையே 76 தலித்துகளின் நிலம் பறிக்கப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தலித் துகளின் நிலம் பறிப்பு இரண்டு மடங்காக அதி கரித்துள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது.
நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித்துகளில் 195 தலித்துகளின் நிலம் அர சால் வழங்கப்பட்டுள்ளது. 90 தலித்துகளின் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. மற்றவர் களுக்கெல்லாம் நிலம் தானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
குறைந்த விலைக்கு நிலத்தை பறிகொ டுத்தவர்கள் 93 பேர் ஆவர். பொருளுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண் ணிக்கை 42. கடனுக்காக நிலத்தை பறி கொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 98. வட்டிக்காக நிலத்தை பறிகொடுத்த தலித் துகளின் எண்ணிக்கை 40. நிலத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து, வழி தடங்கலை மறித்து அதன் மூலம் நிலத்தை விற்க நிர்ப்பந்திக் கப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 78. அரசு நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொ டுத்த தலித்துகளின் எண்ணிக்கை 16. தனி யார் நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 19 பேர் ஆவர்.
இதில் கொடுமை என்னவென்றால், 30 தலித்துகள் கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானியங்களுக்காக நிலத்தை பறிகொ டுத்துள்ளனர். சாராயம், கள் போன்ற மதுபா னங்களுக்காக 5 தலித்துகள் நிலத்தைப் பறி கொடுத்துள்ளனர். உணவுக்காக 5 தலித்துகள் தங்கள் நிலத்தை பறிகொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், தேவிநாயக் கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாத னுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம் ரூ.300 கடனுக்காக பறிக்கப்பட்டுள்ளது. திண்டுக் கல் மாவட்டம், கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலக் கண்ணன் என்பவருக்கு 1985ம் ஆண்டு தமி ழக அரசு 3 ஏக்கர் 40 சென்ட் நிலம் கொடுத் துள்ளது. இந்நிலத்தை கடந்த 1994ம் ஆண்டு 8 படி கம்புக்காக சாதி இந்து ஒருவர் ஏமாற்றி பறித்துள்ளார். விழுப்புரம், மேல்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேனி. இவருக்கு தமிழக அரசு கடந்த 1965ம் ஆண்டு 4 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. இந்நிலம் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு சாராயத்திற்காக பறிக்கப்பட் டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என்று கூறப்படுகிறது. விழுப்புரம், குதிரை சந் தல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாயி. இவரது 4 ஏக்கர் நிலத்தை 5 படி தானியம் மற்றும் ரூ. 100 கொடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முருகன் என்பவரது நிலமும் இதே கிராமத்தில் சாதி இந்துக்களால் பறிக்கப்பட்டிருக்கிறது. திண் டுக்கல், சின்னகரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்த மான அரசு கொடுத்த 60 சென்ட் நிலத்தில், 15 சென்ட் நிலத்தை ஒரு பஞ்சாயத்து தலைவர் 2005 ஆம் ஆண்டு பறித்துள்ளார். தற்போது இந்த நிலம் சாதி இந்துக்களின் பொதுப் பாதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சில ஆண்டுகளுக்கு முன்பு இவ ரது தாத்தாவிற்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை அப்பகுதி சாதி இந்துக்கள் ஊர் மயா னம் அமைப்பதற்காக இலவசமாக கேட்டு, மயானம் அமைத்துள்ளனர். இவரது நிலம் மட்டுமல்லாமல், சில சாதி இந்துக்களின் நிலம் ஊர் மயானம் அமைப்பதற்கு கொடுக் கப்பட்டுள்ளது. ஆனால் இம்மயானத்தில் தலித்துகளின் சடலத்தை புதைக்க அனுமதியில்லை. 65 சென்ட் நிலத்தை கொ டுத்த ராஜேந்திரனின் உறவினர்களோ, சமூ கத்தைச் சேர்ந்தவர்களின் சடலத்தை புதைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின் றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுங் குன்றம் தாலுகா, பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் உள்ளிட்ட 50 பயனாளிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலத்தினை தமிழக அரசு கடந்த 1963ம் ஆண்டு வழங்கி யுள்ளது. இந்நிலங்கள் அனைத்தும் சாதி இந் துக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு நியாயம் கேட் கச் சென்ற இப்பகுதி தலித் மக்கள் மீது தாக் குதல் நடந்தது மட்டுமல்லாமல், போலீசா ரால் பொய்வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்கீரனூர் கிராமத் தைச் சேர்ந்த தலித் பெண்ணான காட்டேரி யம்மாளுக்குச் சொந்தமான 50 சென்ட்டுக்கு மேலான நிலம் குறைந்த விலைக்கு பறிக்கப் பட்டுள்ளது. இவ்வழக்கு தற்போது தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக் காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி, பெரியகுறவக்குடி கிராமத் தைச் சேர்ந்த 74 தலித் மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு வீடு கட்டுவதற் கான நிலம் வழங்கியுள்ளது. ஆனால் இதுநாள் வரை தமிழக அரசு வழங்கிய நிலத்தில் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி சாதி இந்துக்கள், தலித் மக்களுக்கு ஒதுக்கிய நிலத்தை ஆக் கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், அம் மக்களை மிரட்டியும் தாக்கியும் வருகின்றனர். இதேபோன்று உசிலம்பட்டி அருகில் உள்ள சொக்கதேவன்பட்டி கிராமத்தில் 51 தலித் குடும்பத்தினருக்கு 2002ம் ஆண்டு தமிழக அரசு நிலம் வழங்கியிருக்கிறது. இப்பகுதி சாதி இந்துக்களும் தலித்துகளுக்கு நிலத்தை கொடுக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாகை மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத் தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட் டோரும் கடனுக்காக சாதி இந்துக்களிடம் நிலத்தை பறிகொடுத்துவிட்டு இருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாத காலம் டீ சாப்பிட்ட கடனுக்காக தலித் ஒருவரின் 1 ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. தஞ் சை மாவட்டத்தில் சாதி இந்து ஒருவரிடம் கா தணி விழா நடத்துவதற்காக தலித் ஒருவர் கடன் கேட்டிருக்கிறார். சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவழித்த சாதி இந்து, தலித்துக்கு சொந்த மான 80 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியுள் ளார். இச்சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.
நிலங்களும் வன்கொடுமைகளும்
தலித்துகள் நிலம் வைத்திருந்தபோது சாதி இந்துக்களால் 240 தலித்துகள் மீது வன்கொடுமை நடந்துள்ளது. நிலஉரிமையால் 5 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 146 தலித்துகள் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு இழிவாகப் பேசப்பட்டுள்ளனர். 45 தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நிலஉரிமை மீறலுக்கு எதிரான சட்டத் தலையீடு
பல்வேறு கொடுமைகளை தலித்துகள் சந்தித்தாலும், 65 சம்பவங்களுக்கு மட்டும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. புகார் கொடுக்கப்பட்ட 65 சம்பவத் தில் கூட 15 சம்பவத்தில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப் பாக 3 வழக்குகள் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, 2 வழக்கில் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எங்கெல்லாம் பஞ்சமி நிலங்கள் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதுடன், பஞ்சமி நிலம், தலித் மக்களுக்கு அரசு கொடுத்த நிலம், தலித் மக்களின் சொந்த நிலங்கள் போன்ற வற்றை பறித்த நிலைகள் குறித்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் குறைதீர்ப்பு கமிட்டி மூலமாக உண்மைகளை கண்டறிந்து, அதன டிப்படையில் தீவிர விசாரணை மேற் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நீதி வழங் குவதற்கு முறையான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளை யும் ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.கவிதா குமார்
0 comments:
Post a Comment