Monday, June 13, 2011

புஷ்சை கொன்று அட்லாண்டிக் பெருங்கடலில் வீசினால்..


ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது. 10 ஆண்டுகாலம் தேடித்தேடி, கடைசியாக பாகிஸ்தானில் அபோடாபாத் என்ற நகரில், பாகிஸ்தான் ராணுவ பயிற்சிப்பள்ளி அமைந்துள்ள மிக முக்கியமான இடத்திற்கு அருகில் சுமார் 5 ஆண்டுகாலமாக மிகப்பெரிய வீடு எடுத்து “பதுங்கியிருந்த” ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது.
தனது தேசத்தில் உலக வர்த்தக மையக் கட்டடத்தை விமானம் கொண்டு மோதித் தகர்த்து சுமார் 3 ஆயிரம் மக்களை கொன்ற, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான பின்லேடனை கொல்வதற்கு முன்பு, அவரைக் கொல்லப்போவதாகக் கூறி ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும் சுமார் 10 லட்சம் மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா.
“நாம் நம்மையே கேட்டுக் கொள்வோம். இராக்கிய தேசத்தின் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்பட 6 லட்சம் பேரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த குற்றவாளி ஜார்ஜ் டபிள்யு புஷ்சின், வீட்டிற்குள் திடீரென ஒருநாள் இராக்கிய கமாண்டோ படைவீரர்கள் புகுந்து, அவரைப் படுகொலை செய்து, அவரது உடலை அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியெறிந்துவிட்டுப்போனால் நமது நாட்டு மக்களின் உணர்வு எப்படியிருக்கும்?” என்று எழுதுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மிகச்சிறந்த அரசியல் விமர்சகரான பேராசிரியர் நோம் சாம்ஸ்கி. பாகிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை, பாகிஸ்தானுக்கேத் தெரியாமல் அதிரடியாக அந்நாட்டுக்குள் புகுந்து விமானத் தாக்குதல் நடத்தி கொலை செய்து, உடலை எடுத்துச்சென்று பசிபிக் பெருங்கடலில் வீசிவிட்டு சென்றார்கள் அமெரிக்க ராணுவ கமாண்டோக்கள்.
அடுத்த நிமிடமே தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், பின்லேடனை கொன்றதை நியாயப்படுத்தி, அரசியல் சுதந்திரமிக்க நாடான பாகிஸ்தானுக்குள் புகுந்து கொன்றதை நியாயப்படுத்தி பேட்டியளித்தார், உலகின் மிகப்பெரிய “ஜனநாயக” நாட்டின் இந்த ஜனாதிபதி. பின்லேடனைப் போன்றவர்கள் பாகிஸ்தானில் மேலும் கூடாரமடித்திருப்பது தெரியவந்தால், அபோடாபாத்தில் நடத்திய விமான தாக்குதலைப்போல பல தாக்குதல்களை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம். விடுதலை அடைந்து சுமார் 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளுமே அமெரிக்காவுடன் மிக நெருங்கிக் குலாவியதன் பலனை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது, பின்லேடனைப் போலவே!உலக வரைபடத்தில் ஆசியாவின் மிக முக்கியமான கேந்திரத்தில் அமைந்திருக்கிற ஓர் அற்புத தேசம் ஆப்கானிஸ்தான். இயல்பாகவே இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு மிக நெருங்கிய நட்பும் வரலாற்றுத் தொடர்பும் கொண்ட நாடு. பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட முஸ்லிம் மக்கள் நிறைந்த ஆப்கானிஸ்தானத்தில், அண்டை நாடான சோவியத் ரஷ்யாவின் அரசியல் தாக்கம் இயல்பாகவே ஏற்பட்டது. 1980-களில் நஜிபுல்லா தலைமையில் அமைந்த ஜனநாயக அரசை, உடனடியாக ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானத்தில் உருவாக்கி, ஊட்டி வளர்க்கப்பட்டார்கள் தலிபான்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளான தலிபான்கள், அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் முழுமையான உதவியோடு நஜிபுல்லாவை மிகக் கொடூரமாக படுகொலை செய்தார்கள். ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டது. இப்பிரதேசம் முழுவதிலும் தீவிரமத அடிப்படைவாதத்தை முன்வைத்து பயங்கர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களுக்கு உரமூட்டவும் சிஐஏவால் உருவாக்கப்பட்டவர்தான் ஒசாமா பின்லேடன்.
அன்றைக்கு சிதைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று வரையிலும் எழுந்திருக்கவே முடியவில்லை. பின்லேடனின் மரணத்தை, அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று எழுதியுள்ள கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ, “பின்லேடன் என்ற நபர் பல்லாண்டு காலமாக அமெரிக்காவின் நண்பராக இருந்தவர்; அந்த நாடுதான் அவருக்கு ராணுவப் பயிற்சி அளித்தது; சோவியத் ஒன்றியத்தின் எதிரி; சோசலிசத்தின் எதிரி” என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதமும், நிராயுதபாணியாக இருந்த ஒரு மனிதனை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அதுவும் வேறு ஒரு நாட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து சுற்றிவளைத்து படுகொலை செய்வது பயங்கரமானதே என்றும் பிடல் காஸ்ட்ரோ கூறுகிறார்.
தலிபான்களையும், பின்லேடனையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானத்தை சீரழித்த அமெரிக்கா, பின்னர் பின்லேடனைத் தேடுவதாகக் கூறிஅந்நாட்டை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. தற்போது அமெரிக்காவுக்குத் தேவை பாகிஸ்தான்.
ஆசிய பிராந்தியத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய முப்பெரும் நாடுகளை மிரட்டுவதற்கு ஆப்கானிஸ்தானைவிடவும் மிகப்பொருத்தமானதொரு வலுவான தளம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தேவைப்படுகிறது. அமெரிக்காவின் மனதில் இருக்கிற அந்த தளம் பாகிஸ்தான். அமெரிக்காவோடு மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு போர்களால் கொந்தளித்து நிற்கிற முஸ்லிம் மதஅடிப்படைவாத சக்திகளுக்கும் பணியவேண்டிய நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். பின்லேடனை அழிப்பதற்காக தனது நாட்டின் மீது விமானத்தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கடுமையாக எதிர்க்க முடியாமலும், அடுத்தடுத்து ஆண்ட ராணுவ ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாமலும் தவிக்கிறது இந்தியாவின் அண்டைநாடு.
பரிதவித்து நிற்கும் பாகிஸ்தானை குறிபார்த்து அடிக்க தருணம் பார்த்து காத்திருக்கிறது ஏகாதிபத்திய கழுகு. இந்த பின்னணியில் தான் பாகிஸ்தானுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவாக இருக்கின்றன. மும்பை தாக்குதல் உட்பட பாகிஸ்தானிய ராணுவ அரசியலின் இழிசெயல்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்க முடியாது என்ற போதிலும், ஏகாதிபத்தியக் கழுகின் கைகளில் சிக்கிவிடும் அபாயத்திலிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியர்களின் ஆதரவே பெரும் ஆறுதலாக இருக்கும்.
                                                                                                                                                                              எஸ்.பி.ராஜேந்திரன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)