Thursday, June 16, 2011

கல்வி பெறும் உரிமை பெற தேவை ஒரு மக்கள் அரசு

கல்வி பெறும் உரிமைச் சட்டம் இயற்றப் பட்டு ஓராண்டு காலம் முடிந்துவிட்டது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றபடி கல்வியறிவு பெறுவதற்காகக் காத் திருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குழந் தைகளும் ஓராண்டைக் கடந்துள்ளனர். குழந் தைகள் சத்துணவின்றி புறக்கணிக்கப்படு வது போல் இச்சட்டமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் நாள் முதல் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கொடுப்பது என்ற கனவு நிறைவேறாத தாகவே உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கால வரையரையுடன் வந்துள்ள இச்சட்டம், அதன் தொடக்க நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில்தான் ஓராண்டுக்குப் பின்ன ரும் உள்ளது. சட்டத்தின் ஒரு முக்கியமான பிரிவினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட் டத்தின் பிற பகுதிகளை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு தடையேதும் இல்லை. இருப்பினும் மாநில அரசுகளின் கவனம் இதன்பால் முழுவதுமாகத் திரும்பவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து பேசும் போது, இந்தியக் கூட்டாட்சியில் கல்வி, மாநிலங்களின் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, ஆரம்பக்கல்வி குறித்து தலையிடு வதில் மிகச்சிறிய பங்கே உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு, மாநில அரசு களை இச்சட்டத்தினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் பொறுப்பை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இம் முயற்சியில் மிகச் சிறிய வெற்றியே பெற்றுள் ளது. ஏன்?

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக் கிய அம்சம், தரமான கல்வி பெறுவதை அனைத்துக் குழந்தைகளின் உரிமையாகப் பார்க்கிறது. சட்டத்தின் ஐந்தாம் பிரிவு, தரமான ஆரம்பக்கல்வியை அடைவதற்கான அடிப்ப டைத் தேவைகளைப் பட்டியலிடுகிறது. இதில் கற்றலுக்கு உகந்த ஆசிரியர்-மாணவர் விகி தாச்சாரம், பாடத்திட்ட சீர்திருத்தம், மதிப் பிட்டு முறையில் மாற்றம் ஆகியன அடங்கும். இவைகளின் வெற்றி ஆசிரியர்களின் முயற்சி யில்தான் உள்ளது. இதுவே இன்றைய மிகப் பெரிய சவாலாகும்.

குழந்தைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதே இன்றைய உடனடித் தேவை யாகும். தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்விக் குழு(சூஊகூநு) நிறுவப்பட்ட போது, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை உரிய முறையில் ஆய்வு நடத்தி உரிமங்களை வழங்கிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இக்குழு அதன் வேலையைச் சரியாகச் செய்யாததால் பிரச் சனை முற்றிப் போய் உள்ளது. ஆயிரக்கணக் கில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எவ்விதத் தரமும் நேர்மையுமின்றி வெறும் லாப நோக்குடன் செயல்பட்டு வருகின்றன.

கல்வி பெறும் உரிமைச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும் கல்வித் திட்டம், ஆசிரியர் பயிற்சி, மாணவர் மதிப்பீடு இவற்றை நிர்ணயிக்கவும் மேம்படுத்தவும் ஒரு கல்வி ஆணையத்தை உருவாக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங் கள் இத்தகு ஆணையத்தை உருவாக்கவில் லை என்பது கசப்பான உண்மையாகும். பெரும்பான்மை மாநிலங்கள் அவைகளின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனங்களையே (ளுஊநுசுகூ) இதற்கான ஏற்பா டாக அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அவைகளின் நடுநிலைப் பள்ளிக் கல்வி நிறு வனத்திடமே (க்ஷடியசன டிக ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) இப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கென்று தனி ஆணையம் ஏதும் இம்மாநிலங்களில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் அவை களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு பணி களுடன் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தையும் கண்காணிக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவி லேயே கேரளாவில் மட்டுமே மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. கார ணம் இந்நிறுவனத்திற்குத் தேவையான அந் தஸ்தையும் மரியாதையையும் இடது ஜனநா யக முன்னணி அரசு அளித்துள்ளது. கேரளா வில் புதியதாகப் பதவி ஏற்றிருக்கும் அரசு இத னை சீர்குலைத்துவிடாது என்று நம்புவோம். பிற மாநிலங்களும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரத்தையும் அந்தஸ்தையும் வழங்கி அவைகளைப் பலப்படுத்திட வேண்டும். கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை அமல் படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் , ஊக்கத்தையும் இங்கிருந்து பெறும் வகையில் இந்நிறுவனங்களை வளர்த்திட வேண்டும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் ஆசிரியர்களுக்கும், அதிகாரி களுக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள் ளன. குழந்தைகளை ஏதேனும் ஒரு கட்டத் தில் பெயிலாக்கி வெளியே அனுப்பும் பழக்கத் தில் ஊறிப் போனதிலிருந்து விடுபடுவதற்கு ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்கிறது. அதே போல் குழந்தையை மையப்படுத்திய கற்பித் தல் முறையையும், தேர்வுகளைத் தவிர்த்து விட்டு மாணவர்களைத் தொடர் மதிப்பீடு செய்யும் முறையையும் முற்றிலும் வித்தியாச மாக உணருகிறார்கள். குழந்தைகளை அடிப் பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஆசிரியர் களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. குழந் தைகளை அச்சுறுத்தியே படிக்க வைக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு எத்தகு கல்வி கொடுப்பது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். கற்றல், கற்பித்தல் எதுவும் நடக்காமல் இவைகள் குழந்தைகளை பராமரிப்பு மையங்களாகவே செயல்படுகின்றன. இம்மையங்களில் பணி யாற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படாமையால் எதையும் கற்றுக் கொடுக்காமல் பகல் முழுவதும் குழந்தை களைப் பராமரிக்கும் ஆயாக்களாகவே செயல் படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு வரு வார்கள், இலவச மதிய உணவு உண்பார்கள், சென்றுவிடுவார்கள் என்பதே வழக்கமாகியுள் ளது. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பது குறித்த அக்கறை யாரிடமும் இல் லை. இதனாலேயே ஏழைப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அவர்கள் வாழும் இடத்துக்கு அருகில் அல்லது சிறிது தூரத் தில் இருக்கும் தனியார் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகள் குழந் தைகளை அடித்து உதைத்து பாடங்களைத் திணித்து தேர்வுகளுக்குத் தயார் செய்கின் றன. தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல் லாமையால் ஏராளமான பாலர் பள்ளிகளில் குழந் தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனர்.

கல்வி பெறும் உரிமைச் சட்டம் வெற்றி யடைந்திட வருகின்ற நான்காண்டு காலத் திற்குள் பத்து லட்சம் ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த பத்து லட்சம் ஆசிரியர் களுக்கு யார் பயிற்சி கொடுப்பது? குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள்? தேசிய அளவிலான இந்தச் சவாலைச் சமாளிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பல்கலைக்கழகங்களில் இதற்கான சலனங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற் றத்தை அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட் டுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கூட ஆசிரியர் பயிற்சியை புறந்தள்ளியுள்ளன. எனவே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாக அஞ்சல் வழிக் கல்வி ஒன்றே தென்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்கிடுவதற்கான ஏற்பாடு கள், செலவுகள் குறித்த விவாதங்கள் எந்த மட்டத்திலும் இன்னும் நடைபெறவில்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவை எதிர்த்து மேட்டுக்குடி மக்களுக் கான பள்ளிகளின் நிர்வாகிகள் உச்ச நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப் பள்ளி கள் மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சத வீதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக் கிட வேண்டும். தங்கள் பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்குச் சமமாக எப்படி ஏழைக்குழந்தைகளை உட்கார வைக்க முடியும்? இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது? 25 சதவீத இட ஒதுக்கீட்டினால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு கட்டப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. அரசு குறிப்பிடும் இத்தொகை போது மானதாக இருக்காது என்றும் இப்பள்ளி நிர் வாகிகள் கருதுகின்றனர்.

இவ்வழக்கில் அரசு வெற்றி பெற்றால் மேட்டுக்குடிப் பள்ளிகளின் மேட்டுமைத் தனத்தை சிறிது அசைக்க முடியும். இதைத் தாண்டி இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இவ்விரு வர்க்கப் பிரிவினரையும் சேர்த்து வைத்துப் பாடம் நடத்திட தனி பயிற்சி அளித்திட வேண்டும். கொல்கத்தா நகரில் உள்ள “தி லொரோட்டோ” பள்ளி நிர்வாகம் இதில் பெரும் வெற்றிபெற்று உள்ளது. இப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி சிரில், தன்னுடைய பள்ளியில் வர்க்க பேதங்கள் இல்லாமல் குழந்தைகள் ஒன்றாகப் பழகி பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்று கூறுகின்றார். வர்க்க பேதங்கள் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி யின் அனுபவத்தை மற்ற பணக்கார பள்ளிகள் கற்றுக் கொள்ள வேண்டும். பணக்கார குழந் தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் போது இரு பிரிவினரும் பயன் அடைவர் என்பதே உண்மையாகும். இவ்வுண்மையைப் பணக்கார பெற்றோரும் பள்ளி நிர்வாகிகளும் உணர்ந்திட வேண்டும்.



கிருஷ்ணக் குமார்
கட்டுரையாளர்,
முன்னாள் டைரக்டர் என்சிஇஆர்டி
தமிழில் : பேரா.பெ.விஜயகுமார்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)