Friday, April 29, 2011

மோடிக்கு விசா கேட்ட அருண் ஜெட்லி:விக்கிலீக்ஸ்



பாஜக இந்து தேசியவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்பவே பயன்படுத்துகிறது என்று தற்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி 2005ம் ஆண்டு அமெரிக்கத் துhதரக அதிகாரி ராபர்ட் பிளேக்கிடம் கூறியதாக விக்கிலீக்சஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. (தி ஹிந்து, 26.3.11).

அதாவது வாக்குகளைப் பெறுவதற்காகவே அவர்கள் இந்து தேசியவாதத்தை, இந்துத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று பொருள். உடனடியாக அருண் ஜெட்லி தான் சந்தர்ப்பவாதம் என்கிற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை என்றும், தன்னுடைய கூற்றை திரித்துவிட்டார்கள் என்று பறுத்துள்ளார். பாஜகவும் அதன தலைவர்களும் அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று மறுத்துவிட்டார்கள். அதாவது இந்து மதவெறிதான் எங்களது கொள்கை என்றுள்ளார்கள். ஆனால், காங்கிரசஸ் கட்சியோ பாருங்கள் நாங்கள் பாஜக பற்றிக் கூறியது சரியாகப் போய்விட்டது என்று குதூகலிக்கின்றது.

‘பாஜகவும் இந்து மதத் தத்துவ அமைப்புகளான ஆர்எஸ் எஸ் போன்றவையும் தங்களது சுயநலனிற்காகவே மதத்தைப் பயன்படுத்துகின்றன. விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்கள் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைப் போலவே இருக்கின்றன. பாஜகவும், ஆர்எஸ் எஸ் சும் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள் என்று நாங்கள் கூறி வருகின்றோம்.’ என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியுள்ளார்.

இன்னும் பல காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர்கள் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். கபில் சிபல், அஸ் வானி குமார் போன்றோர்.
‘ பல வருடங்களாக அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் பற்றி நாங்கள் கூறி வருகின்றோம். இப்போது மக்கள் பாஜகவின் உண்மையான முகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பது கபில்சிபலின் கருத்து.

அருண் ஜெட்லி என்ன காரணத்திற்காக அப்படியொரு கருத்தைச் சொன்னார் என்பது தனி விஷயம். ஆனால், அவர் சந்தர்ப்பத்திற்காகத்தான் இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறோம் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது மடமையாகும். வெறும் வாக்குகளுக்காகத்தான் அவர்கள் இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அன்று அவர்கள் ஏன் மகாத்மா காந்தியைக் கொலை செய்ய வேண்டும்? முஸ்லிம்கள், கிறிஸ் துவர்கள்,கம்யூனிஸ்டுகள் எங்களது முதல் மூன்று எதிரிகள் என்று ஏன் குறி வைக்க வேண்டும்? ஏன் மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடைச்சட்டம் போன்றவற்றை அவர்கள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும்? மற்ற மாநிலங்களிலும் அத்தகைய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்? (தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அவை இடம் பெற்றிருக்கின்றன). ஏன் ராமரின் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்க வேண்டும்? கல்விப் பாடநூல்களில் ஏன் இந்துத்துவக் கருத்துக்களைப் புகுத்த வேண்டும்? விதவை சோனியா நாடாளக் கூடாது என்று ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? செத்த மாட்டின் தோலை உரித்தற்காக தலித்துகளை ஏன் அடித்துக் கொல்ல வேண்டும்? தங்களது மதவெளிக் கருத்துக்கு மாற்றாக கருத்து தெரிவிப்பவர்களை ஏன் தாக்க வேண்டும்? மதச்சார்பற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று ஏன் மிரட்ட வேண்டும்?

இப்படி எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். பாஜக பரிவாரம் வாக்குகளுக்காக இந்துத்துவத்தை கையில் எடுக்கவில்லை. இந்துத்துவத்தை அமல் படுத்துவதற்காகத்தான் அது வாக்குகளைக் கேட்கின்றது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்காகத்தான் அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றது. அதே கொள்கைகளின் அடிப்படையில்தான் அது மத உணர்வுகளைத் தூண்டுகின்றது. சுருக்கமாகச் சொன்னால், மத உணர்வுகளைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதன் நோக்கம் மதச்சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்துவதற்காகத்தான்.

குஜராத் படுகொலைகளை ஒரு பக்கம் ஆதரித்துக் கொண்டே மறுபக்கம் அதற்காக வருந்துவது போல் வாஜ்பாய் வார்த்தை ஜாலம் செய்தபோது அவரை வேடம் போடுகிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் விமரிசித்ததை மறந்துவிட்டார்கள். பாஜகவின் மதவாதத்தை மறைக்கும் மிதவாத முகமூடி என்று வாஜ்பாய் வர்ணிக்கப்பட்டதையும் மறந்து விட்டார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சிதான் தேர்தல் ஆதாயத்திற்காக அவ்வப்போது இந்து மதவாதத்துடன் சமசரசம் செய்து கொள்ளும். பாபர் மசூதி இடிப்பைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்காதது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட மும்பை கலவரங்கள் வழக்கில் முதல் குற்றவாளியான பால் தாக்கரே உள்ளிட்ட இதர குற்றவாளிகள் மீது மராட்டிய மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்காதது, குஜராத்தில் படுகொலைகள் நடந்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்தது என்று பல உதாரணங்களைக் கூறலாம். 1984ம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது அதைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காக சீக்கியர்களுக்கு எதிரானக் கலவரங்களை நடத்தியது காங்கிரஸ் . அதற்கு முன்னர் எழுபதுகளின் பிற்பகுதியில் ஜனதாக் கட்சி ஆட்சிக்குத் தலைவலி கொடுப்பதற்காக மறைமுகமாக பிந்தரன்வாலேயே ஆதரித்ததாக ஒரு குற்றச்சாட்டும் காங்கிரசின் மேல் உள்ளது.

எனினும், இந்து மதவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் அதை அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் அவ்வலவுதான். (தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளையும், சீக்கிய மத அடிப்படைவாதிகளையும் கூட தாஜா செய்யும்). ஆனால், பாஜகவின் திட்டமும், லட்சியமும், கொள்கையும் இந்துத்துவம்தான். இந்துத்துவ ஆட்சி அமைப்பதற்காகத்தான் அக்கட்சியே நடத்தப்படுகின்றது.
நரபட்சிணி நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்ட பின்னணியில் ‘நாங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும்தான் இந்து மதவாதத்தைப் பயன்படுத்துகின்றோம்’ என்று ஜெட்லி சொல்லியிருப்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, அருண் ஜெட்லி மோடிக்கு விசா கேட்டிருக்கின்றார். அவ்வளவுதான்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)