முரசொலியில் திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பரமத்தி சண் முகம், தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு மே நாள் கொண்டாடத் தகுதி உண்டா என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை யில், “திமுகவும், அதன் தொழிற்சங்க அமைப்பான தொமுசவும் கொண்டாட இருக்கிறது. மற்ற தொழிற்சங்க அமைப்பு களும் கொண்டாடலாம். ஆனால் கம்யூ னிஸ்டுகள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பொது மக்களிடையே மே நாள் விழாவின் சிறப்பை விளக்கிடப் போகி றார்கள்” என்று கேட்டு புளங்காகிதம் அடைந்துள்ளார்.
இவர்களது ஆட்சியில்தான் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் வைக்கும் உரிமை அடியோடு மறுக்கப்பட்டது. அதனையும் மீறி சங்கம் வைத்தவர்கள் வேலைநீக்கம், இடைநீக்கம், ஊர்மாற்றம், சம்பளப் பிடித்தம் போன்ற தாக்குதல் களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள் ளாகினர். 500க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட பொய் வழக்கு புனையப்பட்டது.
தொழிலாளர்களுக்கு எதிராக முத லாளிகளால் ஏவப்பட்ட பழிவாங்கல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை, முதலாளிகளின் நலத்துறையாக மாற்றப்பட்டது. கடந்த காலமரபுகள், வாக்குறுதிகள் என அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட் டது.
சமரசப் பேச்சுவார்த்தைக்கு முதலாளிகள் வருவார்களாம். ஆனால் தொழிற் சங்கத்தோடு பேசமாட்டார்களாம். முடிவு எடுக்கமாட்டார்களாம். முதலாளிகளின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்வார்களாம். இது தானே திமுக ஆட்சியில் தொழிலாளர் நல லட்சணமாக இருந்தது.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என மார்தட்டிக்கொள்ளும் திமுக, இந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் காண்ட்ராக்ட், கேசுவல், தினக் கூலி என்ற பேராலே உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கிற ஆட்சியாகவே தான் இருந்தது.
பாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் புனையப்பட்டு, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் மற்றும் ஏதுமறியா இளந்தொழிலாளர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்து, அவர்கள் பிணையில் வந்துவிடுவார்களே என்று எண்ணி, மேலும் அவர்கள் மீது வழக்கு புனைந்து சிறைச்சாலையிலேயே அடைத்துவைக்க நீதிமன்றத் திற்கு கைவிலங்குடன் அழைத்து வரப் பட்டதும், சட்டசபையில் முதலமைச் சரே, அவர்கள் 40 கார்களை அடித்து சேதப்படுத்தினார்கள் என்ற கொஞ்சமும் உண்மையில்லாத, நடைபெறாத நிகழ்ச் சியை நடந்ததாக பதிவு செய்து, தொழிலா ளர்களை சமூக விரோதிகள் என சித்தரிக்க முயற்சித்த திமுக தான் மேதினம் கொண்டாட தகுதியுடையதாக கட்டுரை யாளர் கருதுகிறாரோ என்ற ஐயம் ஏற் படுகிறது.
பாக்ஸ்கானில் செயல்படும் திமுக வின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வை இன்னொரு முதலாளியாகவே தொழிலாளர்கள் பார்க்கின்றனரே சென்னை உயர்நீதிமன்றம் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க தேர்தலை நடத்த வேண்டுமென்று தொழிலாளர்துறைக்கு உத்தரவிட்டும், அதை உதாசீனப்படுத் தியதுதான் திமுகவின் தொழிலாளர் நலன் காக்கும் கொள்கையா?
முதலாளிகளின் மனம் நோகாமல் இருப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் என்ற பேரில் தொழிலாளர் சட்டங் களை புதைகுழிக்குள் போட்டு மூடி மறைத்தது. அவர்கள் செய்யக்கூடிய தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை வாய்மூடி, கைகட்டி வேடிக்கை பார்த்த பெருமை திமுக ஆட் சிக்குத்தான் உண்டு.
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் சங்க அங்கீகாரத்திற்கான சட்டத்திருத்த மசோ தா ஜனாதிபதியின் ஒப்புதலுக்குத் அனுப் பி, நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்ட அரசு தனது கட்சி அரசு என்பது கட்டு ரையாளருக்கு தெரியாமல் இருக்குமா?
இந்திய தொழிலாளர் மாநாட்டில், தொமுச சார்பில் கலந்துகொண்ட பிரதி நிதிகள், வேலைநேரத்தை 8 மணிநேரம் என்பதை கூடுதலாக்க வேண்டும் என்று முதலாளிகளின் குரலையே பிரதி பலித்தார்களே, இதுவல்லவோ தொழிலாளர் நலன் காக்கும் தொழிற்சங்கம்?
25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், 8 ஆண்டுகளாக பணி யாற்றிவரும் டாஸ்மாக் ஊழியர்கள் நடத் திய போராட்டங்களை அதிகார ஆணவத் தோடு அடக்கியதையும், அரசு ஊழியர் களை புதிய சட்டமன்ற வளாகத்திற்கு அருகிலேயே அடித்து உதைத்ததும் திமுக ஆட்சியின் வேதனையாகவே தெரிகிறது. இவர்களோடு உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அரசு போக்குவரத்து தினக்கூலி தொழிலாளர் என அரசு நிறு வனங்களில் பணியாற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொகுப் பூதியம், மதிப் பூதியம் என்ற பெயராலே பணிநிரந்தரமற்று அத்தக்கூலிகளாகவே வைத்திருப்பதுதான் திமுக ஆட்சியின் சாதனை. இவர்கள் தான் கம்யுனிஸ்டுகளை பார்த்து கேட்கின்றனர்.
-----------நன்றி தீக்கதிர்
0 comments:
Post a Comment