Monday, May 2, 2011

கொத்தடிமையாக மறுத்த தலித் கொலை:


உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் நிர்காஜானி கிராமத் தில் கொத்தடிமையாக வேலை செய்ய மறுத்த தலித் கொலை செய்யப்பட்டு, அவரது சடலத்தை சாலையில் இழுத் துச் சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல் வேறு பகுதிகளில் இப்போதும் பணக்கார உயர்சாதியைச் சேர்ந்தவர்கள், தலித்துகளைக் கொத்தடிமைகளாக நடத்துவதும், கொத்தடிமைகளாக இருந்து வேலை செய்ய மறுப்பவர் களைக் கொலை செய்வது உட்பட பல் வேறு கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்படுத்துவதும் நடைபெற்றுக் கொண் டுதான் இருக்கின்றன.

முசாபர் நகர் மாவட்டம் நிர்காஜானி கிராமத்தில் கரம்சந்த் (வயது 42) என் பவரை தங்கள் கிராமத்தில் உள்ள பணக்காரர்களின் வயல்களில் வேலை செய்ய மறுத்ததற்காக கொலை செய்து, அவரது சடலத்தை சைக்கிளில் வைத்து ஊர்வலமாகக் கிராமத்திற்குள் எடுத் துச் சென்றுள்ளனர். தங்களுக்கு வேலை செய்ய மறுக்கும் எவராக இருந்தாலும் இந்தக் கதிதான் ஏற்படும் என்று மற்ற தலித்துகளை மிரட்டியுள்ளனர்.

பின்னர் பிணத்தைச் சுற்றி நின்று கோரமான முறையில் நடனமாடி விட்டு, பிணத்தை வாய்க்காலில் எறிந்து விட் டுச் சென்றுவிட்டனர்.

தன் தந்தையைக் காப்பாற்ற வந்த கரம்சந்தின் மகன் மோனு என்பவரை யும் கிராமத்தினர் தாக்கியுள்ளனர். மோனு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம யத்தில் காவல்துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் போபா காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, கொலை செய்தவர்கள் கிராமத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களில் ‘பேகார்’ அல்லது ‘பேகாரி’ என்னும் கொத்தடிமை முறை மத்தியகாலக் கட்டத்திலிருந்து அம லில் இருந்து வந்தது. இதன்படி தலித் துகள் கிராம உயர்சாதியினருக்கு கட்டா யமாக உடல் உழைப்பை இலவசமாக நல்கிட வேண்டும். அவர்களில் ஒரு சில பேருக்கு பெயரளவில் ஏதோ கூலி வழங்கப்படும். தலித்துகள் எவரேனும் தங்களுக்கு என்று சொந்தமாக நிலம் வைத்திருந்து அதனைப் பார்த்துப் பரா மரிக்கவேண்டியிருந்தாலும், அத னைப் புறக்கணித்துவிட்டு உயர்சாதி யினரின் நிலங்களைத்தான் அவர்கள் பார்த்து, பராமரித்திட வேண்டும்.

இந்தக் கொடுமையான சட்டத்தை 1976ஆம் ஆண்டு மத்திய அரசு ஒழித்து விட்டது. ஆயினும் நடைமுறையில் இன்னும் பல பகுதிகளில் இது நடந்து வருகிறது.

சம்பவத்தன்று கரம்சந்த்தும் அவ ரது மகன் மோனுவும் தங்களுடைய வய லில் வேலை செய்து கொண்டிருந்தி ருக்கிறார்கள். அப்போது அக்கிராமத் தைச் சேர்ந்த உயர்சாதி நிலப்பிரபுக் களான அம்ரேஷ், தனபால் மற்றும் ரமேஷ் சிங் என்பவர்கள் மேலும் பத்து பேருடன் அவ்விடத்திற்கு வந்துள்ள னர். கரம்சந்திடம் வேலையை நிறுத்தி விட்டு தங்கள் வயலுக்கு வந்து கோதுமை அறுவடையைச் செய்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். கரம் சந்த் அவர் கள் காலில் விழுந்து கும்பிட்டு, தன் னால் வர இயலாது என்று மறுத்திருக் கிறார். உடனே அவர்கள், அவரைத் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் தாக்கு தல்களிலிருந்து தப்புவதற்காக கரம் சந்த், அங்கிருந்த கோவிலின் உச்சிக்கு ஏறிச் சென்றிருக்கிறார். அப்போது அம் ரேஷ், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். சம்பவ இடத்திலேயே கரம்சந்த் உயிர் பிரிந்துவிட்டது.

பின்னர் அவர்கள் கரம்சந்த் உடலை, சைக்கிளில் வைத்து, கிராமத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். தங்கள் கட்டளையை மீறும் எவராக இருந்தாலும் அவர்கள் இவ்வாறு கொல் லப்படுவார்கள் என்று கூச்சலிட்டுள் ளனர்.

கரம்சந்த் உடலைத் தன்னிடம் ஒப் படைத்துவிடுமாறு அவரது மனைவி ராஜேஷ்குமாரி கேட்டுள்ளார். அதற் கும் அவர்கள் அவரைப்பார்த்து கொக்க ரித்து, பிணத்தைத் தர மறுத்துவிட்ட னர். பின்னர் கரம்சந்த் சடலத்தை ஒரு வாய்க்காலில் எறிந்துவிட்டுச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக ஐவரைக் கைது செய்திருப்பதாகவும், 12 பேர் தலை மறைவாக இருப்பதாகவும் முசாபர்நகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பி.சிங் தெரிவித்திருக்கிறார். (ந.நி.)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)