கேள்வி: “சினிமாத் துறையை எனது வீட்டுத்துறையாக பங்கிட்டுக் கொள்வதாக கூறுகிறார்கள்... எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக் கூடாதா..?” என்று கலைஞர் கேட்கிறாரே...
இந்த கேள்வியை சற்று மாற்றி, கலைஞர் குடும்பத்தாரைத் தவிர, வேறு யாரும் கலைத்துறையில் இருக்கக் கூடாதா? என்பதே இப்போது எழுந் துள்ள உண்மையான கேள்வி!
கலைத்துறையில் கலைஞரின் குடும்பம் கூடாது என்பதல்ல; அந்த ஒரு குடும்பத்தின் ஏகபோகமாக கலைத் துறை மாற்றப்பட்டு விடக்கூடாது என் பதே திரைத்துறையினரின் ஒட்டு மொத்த மனக்குமுறலாகும்.
ஒரு காலத்தில் பெரியதிரையைச் சார்ந்து சின்னத்திரை இயங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரண மாகவும், தொலைக்காட்சி வலைப்பின் னல் உலகளாவிய முறையில் பரவி யுள்ள காரணத்தாலும், பெரியதிரை இன்றைக்கு சின்னத்திரையைச் சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. சின்னத்திரையை கையில் வைத்திருந் தால், பெரியதிரையை முழுமையாக ஆக்கிரமிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கேபிள் உட்பட சின்னத்திரையை தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற் குள் கலைஞர் குடும்பம் கொண்டு வந்துவிட்டது. இவர்களை பகைத்துக் கொண்டு, யாரும் திரைப்படம் தயா ரிக்க முடியாது என்ற நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டிருந்த ஏவிஎம் நிறுவனம் கூட, கலைஞர் குடும்ப நிறுவனங்களைச் சார்ந்தே திரைப்படம் தயாரிக்க வேண் டியுள்ளது. ஏ.எம்.ரத்னம், கே.டி.குஞ்சு மோன், ஆஸ்கர் ரவிச்சந்திரன், எஸ் பிக்சர்ஸ் சங்கர் என திரைப்படத் தயா ரிப்பைத் குறைத்துக் கொண்ட அல் லது நிறுத்திவிட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
கலைஞர் குடும்பத்தை சரணாகதி அடையாமல் யாரும் திரைப்படம் தயா ரிக்க முடியாது; தயாரித்தாலும் வெளி யிட முடியாது; வெளியிட்டாலும் படத்தை ஓட்டிவிட முடியாது என்பதே இன்றைய நிலை. நீண்டகாலம் திமுக வின் அனுதாபியாக தன்னைக் காட் டிக் கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்தி ரசேகர், இன்றைய நிலையில் திமுக வுக்கு எதிரான நிலை எடுத்திருப்ப தற்குக் காரணம் அவரது மகன் நடித்த “காவலன்” படத்தை வெளியிட விடா மல் கலைஞர் குடும்பத்தினர் படுத்திய பாடே காரணம்.
ராம.நாராயணன், வி.சி.குகநாதன் தலைமையிலான “பெப்சி” அமைப்பு போன்றவற்றை திமுக தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்துள்ளது. தொழிற் சங்க தேர்தல்களின் போது, திமுக பின்பற்றும் முறையே திரைப்படத்துறை சார்ந்த சங்கத் தேர்தல்களிலும் பின் பற்றப்படுகிறது. இந்த சங்க தேர்தல் களில், கலைஞர் குடும்ப நிறுவனங் களுக்கு ஏற்பவே விதிமுறைகள் உரு வாக்கப்படுகின்றன. உதாரணமாக, புதி தாக வெளியாகும் திரைப்படங்களுக்கு பத்திரிகைகளில் ஒருபக்க அளவு விளம்பரம் தரக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனால் வேறுவழியின்றி தயா ரிப்பாளர்கள் தொலைக்காட்சி களையே நாட வேண்டியிருக்கும். ஆனால், தொலைக்காட்சி விளம்பரங் களுக்கு இத்தகைய எந்த கட்டுப் பாடும் இல்லை. பன்னாட்டு நிறுவ னங்கள் நேரடியாக தமிழ்ப்படங்களைத் தயாரிக்க முடியாது. ஏதாவதொரு உள்நாட்டு திரைப்பட நிறுவனத்துடன் இணைந்துதான் படம் தயாரிக்க முடியும். இத்தகைய வாய்ப்பு கலைஞர் குடும்ப நிறுவனங்களைத் தவிர, வேறு சிறு தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
கலைஞரின் இருபது வயது நிரம் பாத பேரப்பிள்ளைகள் கூட, ஆண் டுக்கு ரூ. 50 கோடி அளவிற்கு முதலீடு செய்ய முடிகிறது. இதற்கான வரு வாயை அவர்கள் எந்தத் துறையிலி ருந்து- எந்த சம்பாத்தியத்தின் மூலம் பெற்றார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே... இதற்கான பதிலைப் புரிந்து கொள்வதும் கடினமல்ல!
இதுமட்டுமின்றி, தமிழகம் முழு வதும் திரையரங்குகளை, கலைஞர் குடும்பத்தார், கிட்டத்தட்ட தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இவர்கள் தயாரிக்கும் உப்புப்பெறாத - உருப்படாத படங் களை, தொடர்ந்து ஓட்டுமாறு நிர்ப் பந்திப்பதும், மக்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களை தூக்குமாறு செய்வதும் இன்றைக்கு நடைமுறையாக மாறிவிட்டது.
அன்றைய கால திராவிட இயக் கத்தைப் போன்று, பகுத்தறிவு, சுய மரியாதை சார்ந்த படங்களை, கலை ஞரின் பேரப்பிள்ளைகள் இன்றைக்கு தயாரிப்பதில்லை. அப்படி தயாரித் தால் கைதட்டி வரவேற்க தமிழகம் தயாராக இருக்கிறது. ஆனால், இன் றைக்கு இவர்கள் தயாரிக்கும் அல்லது விநியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களின் உள்ளடக்கம், அஞ்சா நெஞ்சனிசம், அண்ணனிசம், தாதாயிசம் ஆகியவையே!
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அராஜகங்களுக்கும் அளவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை நகரின் பிரதான சாலைகளில் படிப் பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. ஆனால், கலைஞர் குடும்ப நிறு வனங்களுக்கு இந்த விதி பொருந் தாது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்த, “குருவி” என்ற திரைப் படத்திற்காக சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தை பல நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, விளையாட வந்த சிறுவர்களையும், இளைஞர்களையும் அடித்து விரட் டினர். இதேபோல படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல இடங் களிலும், கலைஞர் குடும்ப நிறுவனங் களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படு கிறது.
கலைஞரின் பேரப்பிள்ளை ஒருவர் தயாரித்த திரைப்படம் தொடர்பாக சம்பளப் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்கு நர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் சூர்யா, வடிவேலு ஆகியோர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட் டதும் நிகழ்ந்தது. திரைத்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மாநில அரசு அதிகாரத்தை மட்டுமன்றி, மத்திய அரசு அதி காரத்தையும் பயன்படுத்த கலைஞர் குடும்பத்தினர் தயங்குவதில்லை. ஏதா வது ஒரு காரணத்தைக் காட்டி, முதல் வருக்கு பாராட்டு விழா நடத்துவதும் அதில் பங்கேற்குமாறு, சினிமா கலை ஞர்களை நிர்ப்பந்திப்பதும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து கொண்டே இருந்தது. இதை ஒரு விழாவில், நடிகர் அஜீத், முதல்வர் முன்னிலையிலேயே சுட்டிக் காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அதை ஆமோ தித்தார். பிறகு இருவரும் கோபாலபுரம் செல்ல நேர்ந்தது தனி திரைக்கதை.
தொலைக்காட்சி வளர்ச்சி காரண மாக நல்ல திரைப்படங்கள் கூட ஓடாத சூழ்நிலையில், பல தயாரிப்பு நிறுவனங் கள் தயாரிப்பையே நிறுத்திவிட்ட நிலையில், கலைஞர் குடும்பத்தினர் மட்டும் பல்வேறு பெயர்களில் ஆண் டுக்கு பல படங்களை தயாரித்து வெளி யிடுவது எதனால்? கலர் படங்களில் கறுப்பு வெள்ளையாகும் என்ற ரச வித்தை ஒருபுறமிருக்க, கலைத் துறையை தங்களது ஏகபோகத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண் ணமும்தானே காரணம்!
திரைப்படத் தயாரிப்பு, கொள் முதல், விநியோகம், வெளியிடுதல், ஒலிநாடா வெளியிடுதல், பத்திரிகை கள், எப்எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் விளம்பரப் படுத்துதல் என கலைத்துறையின் அனைத்துப் பிரிவுகளையும் கலைஞர் குடும்பத்தார் ஆக்டோபஸ் போல வளைத்துள்ளது கண்டு, கலைத்துறை மிரண்டு நிற்கிறது. இந்த அராஜகத்திற்கு முடிவுகட்ட ஆட்சிமாற்றம் அவசியம் என்பதை உணர்ந்தே இருக் கிறது.
கலைத்துறையில் கலைஞரின் குடும்பம் கூடாது என்பதல்ல; அந்த ஒரு குடும்பத்தின் ஏகபோகமாக கலைத் துறை மாற்றப்பட்டு விடக்கூடாது என் பதே திரைத்துறையினரின் ஒட்டு மொத்த மனக்குமுறலாகும்.
ஒரு காலத்தில் பெரியதிரையைச் சார்ந்து சின்னத்திரை இயங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரண மாகவும், தொலைக்காட்சி வலைப்பின் னல் உலகளாவிய முறையில் பரவி யுள்ள காரணத்தாலும், பெரியதிரை இன்றைக்கு சின்னத்திரையைச் சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. சின்னத்திரையை கையில் வைத்திருந் தால், பெரியதிரையை முழுமையாக ஆக்கிரமிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கேபிள் உட்பட சின்னத்திரையை தங்களது முழுமையான கட்டுப்பாட்டிற் குள் கலைஞர் குடும்பம் கொண்டு வந்துவிட்டது. இவர்களை பகைத்துக் கொண்டு, யாரும் திரைப்படம் தயா ரிக்க முடியாது என்ற நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டிருந்த ஏவிஎம் நிறுவனம் கூட, கலைஞர் குடும்ப நிறுவனங்களைச் சார்ந்தே திரைப்படம் தயாரிக்க வேண் டியுள்ளது. ஏ.எம்.ரத்னம், கே.டி.குஞ்சு மோன், ஆஸ்கர் ரவிச்சந்திரன், எஸ் பிக்சர்ஸ் சங்கர் என திரைப்படத் தயா ரிப்பைத் குறைத்துக் கொண்ட அல் லது நிறுத்திவிட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
கலைஞர் குடும்பத்தை சரணாகதி அடையாமல் யாரும் திரைப்படம் தயா ரிக்க முடியாது; தயாரித்தாலும் வெளி யிட முடியாது; வெளியிட்டாலும் படத்தை ஓட்டிவிட முடியாது என்பதே இன்றைய நிலை. நீண்டகாலம் திமுக வின் அனுதாபியாக தன்னைக் காட் டிக் கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்தி ரசேகர், இன்றைய நிலையில் திமுக வுக்கு எதிரான நிலை எடுத்திருப்ப தற்குக் காரணம் அவரது மகன் நடித்த “காவலன்” படத்தை வெளியிட விடா மல் கலைஞர் குடும்பத்தினர் படுத்திய பாடே காரணம்.
ராம.நாராயணன், வி.சி.குகநாதன் தலைமையிலான “பெப்சி” அமைப்பு போன்றவற்றை திமுக தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்துள்ளது. தொழிற் சங்க தேர்தல்களின் போது, திமுக பின்பற்றும் முறையே திரைப்படத்துறை சார்ந்த சங்கத் தேர்தல்களிலும் பின் பற்றப்படுகிறது. இந்த சங்க தேர்தல் களில், கலைஞர் குடும்ப நிறுவனங் களுக்கு ஏற்பவே விதிமுறைகள் உரு வாக்கப்படுகின்றன. உதாரணமாக, புதி தாக வெளியாகும் திரைப்படங்களுக்கு பத்திரிகைகளில் ஒருபக்க அளவு விளம்பரம் தரக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனால் வேறுவழியின்றி தயா ரிப்பாளர்கள் தொலைக்காட்சி களையே நாட வேண்டியிருக்கும். ஆனால், தொலைக்காட்சி விளம்பரங் களுக்கு இத்தகைய எந்த கட்டுப் பாடும் இல்லை. பன்னாட்டு நிறுவ னங்கள் நேரடியாக தமிழ்ப்படங்களைத் தயாரிக்க முடியாது. ஏதாவதொரு உள்நாட்டு திரைப்பட நிறுவனத்துடன் இணைந்துதான் படம் தயாரிக்க முடியும். இத்தகைய வாய்ப்பு கலைஞர் குடும்ப நிறுவனங்களைத் தவிர, வேறு சிறு தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
கலைஞரின் இருபது வயது நிரம் பாத பேரப்பிள்ளைகள் கூட, ஆண் டுக்கு ரூ. 50 கோடி அளவிற்கு முதலீடு செய்ய முடிகிறது. இதற்கான வரு வாயை அவர்கள் எந்தத் துறையிலி ருந்து- எந்த சம்பாத்தியத்தின் மூலம் பெற்றார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே... இதற்கான பதிலைப் புரிந்து கொள்வதும் கடினமல்ல!
இதுமட்டுமின்றி, தமிழகம் முழு வதும் திரையரங்குகளை, கலைஞர் குடும்பத்தார், கிட்டத்தட்ட தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இவர்கள் தயாரிக்கும் உப்புப்பெறாத - உருப்படாத படங் களை, தொடர்ந்து ஓட்டுமாறு நிர்ப் பந்திப்பதும், மக்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களை தூக்குமாறு செய்வதும் இன்றைக்கு நடைமுறையாக மாறிவிட்டது.
அன்றைய கால திராவிட இயக் கத்தைப் போன்று, பகுத்தறிவு, சுய மரியாதை சார்ந்த படங்களை, கலை ஞரின் பேரப்பிள்ளைகள் இன்றைக்கு தயாரிப்பதில்லை. அப்படி தயாரித் தால் கைதட்டி வரவேற்க தமிழகம் தயாராக இருக்கிறது. ஆனால், இன் றைக்கு இவர்கள் தயாரிக்கும் அல்லது விநியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களின் உள்ளடக்கம், அஞ்சா நெஞ்சனிசம், அண்ணனிசம், தாதாயிசம் ஆகியவையே!
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அராஜகங்களுக்கும் அளவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை நகரின் பிரதான சாலைகளில் படிப் பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. ஆனால், கலைஞர் குடும்ப நிறு வனங்களுக்கு இந்த விதி பொருந் தாது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்த, “குருவி” என்ற திரைப் படத்திற்காக சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தை பல நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, விளையாட வந்த சிறுவர்களையும், இளைஞர்களையும் அடித்து விரட் டினர். இதேபோல படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல இடங் களிலும், கலைஞர் குடும்ப நிறுவனங் களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படு கிறது.
கலைஞரின் பேரப்பிள்ளை ஒருவர் தயாரித்த திரைப்படம் தொடர்பாக சம்பளப் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்கு நர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் சூர்யா, வடிவேலு ஆகியோர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட் டதும் நிகழ்ந்தது. திரைத்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மாநில அரசு அதிகாரத்தை மட்டுமன்றி, மத்திய அரசு அதி காரத்தையும் பயன்படுத்த கலைஞர் குடும்பத்தினர் தயங்குவதில்லை. ஏதா வது ஒரு காரணத்தைக் காட்டி, முதல் வருக்கு பாராட்டு விழா நடத்துவதும் அதில் பங்கேற்குமாறு, சினிமா கலை ஞர்களை நிர்ப்பந்திப்பதும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து கொண்டே இருந்தது. இதை ஒரு விழாவில், நடிகர் அஜீத், முதல்வர் முன்னிலையிலேயே சுட்டிக் காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அதை ஆமோ தித்தார். பிறகு இருவரும் கோபாலபுரம் செல்ல நேர்ந்தது தனி திரைக்கதை.
தொலைக்காட்சி வளர்ச்சி காரண மாக நல்ல திரைப்படங்கள் கூட ஓடாத சூழ்நிலையில், பல தயாரிப்பு நிறுவனங் கள் தயாரிப்பையே நிறுத்திவிட்ட நிலையில், கலைஞர் குடும்பத்தினர் மட்டும் பல்வேறு பெயர்களில் ஆண் டுக்கு பல படங்களை தயாரித்து வெளி யிடுவது எதனால்? கலர் படங்களில் கறுப்பு வெள்ளையாகும் என்ற ரச வித்தை ஒருபுறமிருக்க, கலைத் துறையை தங்களது ஏகபோகத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண் ணமும்தானே காரணம்!
திரைப்படத் தயாரிப்பு, கொள் முதல், விநியோகம், வெளியிடுதல், ஒலிநாடா வெளியிடுதல், பத்திரிகை கள், எப்எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் விளம்பரப் படுத்துதல் என கலைத்துறையின் அனைத்துப் பிரிவுகளையும் கலைஞர் குடும்பத்தார் ஆக்டோபஸ் போல வளைத்துள்ளது கண்டு, கலைத்துறை மிரண்டு நிற்கிறது. இந்த அராஜகத்திற்கு முடிவுகட்ட ஆட்சிமாற்றம் அவசியம் என்பதை உணர்ந்தே இருக் கிறது.
அன்று கலைஞரின் நாக்கில் தமிழ் துள்ளி விளையாடியது. இன்று சனி.
ReplyDeleteசன் டிவியின் படவரிசை பத்துக்கு,
ReplyDeleteஅடிபணிந்து, முக்கியத்துவம் தந்து,
அதையே விளம்பரமாக்கி பிழைப்பு நடத்திய
தயாரிப்பார்களும், விநியோகஸ்தர்களும் தான்
இதற்கு முதன் முதல்காரணம்.