உலக அளவில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவிலும் சுற்று சூழல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அப்படி ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இன்று பிரதானமாக இருப்பது மக்காத பிளாஸ்டிக். இது எங்கிருந்து வந்தது ? எப்படி நம் இந்திய மண்ணில் நிலைகொண்டு செல்லாய் அரிக்கிறது? என்று சற்று உற்று நோக்கினால் காங்கிரசின் வஞ்சக சூழ்ச்சி வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது.
1990 ம் ஆண்டுகளில் கேடுகெட்ட புதிய பொருளாதார கொள் கையை இந்தியாவிற்குள் காங்கிரஸ் அனுமதித்தது. அதன் காரணமாக பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரிகள் தளர்த்தப்பட்டது. அதன் மூலம் பல தொழில் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் புதிது புதிதாக முளைக்க துவங்கின. அதில் ஒன்றுதான் பிளாஸ்டிக். இந்தியாவில் காலம் காலமாக சணல் மற்றும் பேப்பர்களில் உருவாக்கப் படும் பைகள் உள்ளிட்ட பொருட் கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் பிளாஸ்டிக் நிறுவனங்கள் உள்ளே நுழைந்ததும் பாரம்பரிய சணல், தோல் மற்றும் மரம் சார்ந்த தொழில்களை முடக்கும் வண்ணம், குறைந்த விலையில் பிளாஸ்டிக்கை உருவாக்கி அதிக அளவில் மக்கள் நுகரும் வகையில் கொண்டு சென்றது.
ஆனால் அதனை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளை மறைத்து நுகர்வை பரவலாக்கியது. இந்த நிலையில் இந்திய பாரம்பரிய தொழில்களான சணல், மற்றும் தோல் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைய ஆரம்பித்தது. அதாவது 1970ம் ஆண்டுகளில் சணல் தொழில் மூலம் அந்நிய செலாவணி வருவாய் 30 சதவிகிதம் இருந்தது. பிளாஸ்டிக் வருகைக்கு பின் தற்போது வெறும் 1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே போல் தோல் தொழிலும் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது.
இதில் வெடிக்கை என்னவென்றால் பிளாஸ்டிக் இந்திய பாரம்பரிய தொழில்களை மட்டும் முடங்க செய்யதில்லை. மாறாக இந்திய மண்ணையே மலட்டு தன்மையடையச் செய்து கொண்டிருக்கிறது.
சென்னையில் ஒரு நாளில் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருட்களின் அளவு 1,86,000 கிலோவாகும்.
பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரும் நகரங்களில் தினமும் வரும் பிளாஸ்டிக் கழிவுபொருட்களின் அளவு 2,00,000 கிலோ என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் வெறும் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதம் அனைத்தும் மண்ணில் வீசி எறியப்படுகிறது.
ஒரு வாழைப்பழத் தோலை கீழே வீசி எறிந்தால் அது 2 முதல் 10 நாட்களுக்குள் மக்கி மண்ணோடு மண்ணாகிவிடும். அதுவே மண்ணுக்கு உரமாகவும் மாறி விடும். அதே போல் காகிதம் 2 முதல் 5 மாதங்களில் மக்கிவிடும். சணல் 3 முதல் 14 மாதங்களில் மக்கி விடும். தோல் காலணி 25 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகளில் மக்கி விடும். ஆனால் பிளாஸ்டிக் பைகள் மக்க 100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகிறது.
இதோடு இந்த பிளாஸ்டிக்குகள் மண்ணிற்குள் தண்ணீர் செல்வதை தடுக்கிறது. ஏற்கனவே காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் மழையின் அளவு நாளுக்கு நாள் குறைந்து மண் வறண்டு காணப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீரோடு, காற்றையும் உள்ளே செல்லவிடாமல் அடைத்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் ஓட்டத்திற்கு ஆங்காங்கே தடை ஏற்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் உயிர்மச்சிதைவு ஏற்படுவதில்லை. மரப்பொருட்கள், காய்கறி தோல்கள், காகிதம் உள்ளிட்ட பொருட்கள் உயிர்மச் சிதைவு ஏற்படும். அதாவது மண்ணில் உள்ள பாக்டீரியா, பூஞ்சைக்காளான்கள் போன்ற நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் பொருட்கள் சிதைந்து அது மண்ணோடு மண்ணாக கலந்து விடுகிறது. உலோகப்பொருட்கள் கூட வேதி மாற்றங்களினால் காலப்போக்கில் துருப்பிடித்து அழிந்து விடுகிறது. ஆனால் பிளாஸ்டிக் அவ்வாறு சிதைவதில்லை.
மாறாக இன்று சுற்றுச் சூழலின் பிரதான எதிரியாக மாறிவிட்டது. இப்படி காங்கிரஸ் திறந்து விட்ட புதிய பொருளாதார கொள்கை இன்று இந்தியாவின் கொடையான இயற்கை வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக செல்லாய் அரித்து வருகிறது.
இதோடு காங்கிரஸ் அரசின் துரோகம் முடிந்துவிட வில்லை. இன்றும் புதிது புதிதாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதாவது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து பயன்படுத்தி விட்டு அதனை வளரும் நாடுகளின் மீது தூக்கி வீசி எறியும் வேலையை செய்கிறது. அப்படி தூக்கி விசும் பிளாஸ்டிக் கழிவு ஆண்டு ஒன்றிற்கு 160 லட்சம் டன்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவிகித கழிவுகளை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குறிப் பாக இந்தியா பங்களாதேஷைவிட 115 சதவிகிதமும், பாகிஸ்தானை விட 30 சதவிகிதமும் கூடுதலாக இறக்குமதி செய்கிறது.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபத்திற்காக மறு உற்பத்தி என்ற பெயரில் இறக்குமதி செய்கிறது. இந்த நிறுவனங்கள் முறையாக மறு உற்பத்தி செய்கிறதா என்பதை மத்திய அரசு கண்காணிப்பதில்லை. இந்நிலையில் ஐடிசி போன்ற பெரும் நிறுவனங்கள் அதனை அப்படியே இயற்கை வளம் மிகுந்த கோவை உள்ளிட்ட பல இடங்களில் தோண்டி தரையில் புதைத்து விடுகிறது. இப்படி நாடு எப்படி நாசமானாலும் பரவாயில்லை என பெரும் நிறுவனங்களுக்கும், அமெரிக்கா போன்ற ஏகபோக நாடுகளுக்கும் சேவகம் செய்வதையே காங்
கிரஸ்- திமுக கூட்டணி அரசு கொள்கையாக கடைப்பிடித்து வருகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எச்சரிக்கைக்கு பின்பு மத்திய அரசு 40 மைக்ரான் அளவிற்கு கீழ் பாலீத்தின் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என எச்சரித்திருக்கிறது. ஆனால் இதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க எந்த ஏற்பாடும் இல்லை. அதற்கும் மேலாக இந்துஸ்துான் லீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் பகுதி தற்போது பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்துகின்றன. இவைகளைக்கூட முறையாக கண்காணிக்க ஏற்பாடுகள் இல்லை.மத்திய அரசோ பெயரளவிற்கு 40 மைக்ரான் அளவிற்கும் குறைந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டாளி திமுக தமிழகத்தில் 20 மைக்ரான் அளவிற்கு குறைந்த அளவுள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என பெயரளவிற்கு அறிவித்திருக்கிறது.
மதுரை உயர் நீதி மன்றம் 2010 நவம்பர் மாதம் பிளாஸ்டிக் தடை மசோதாவை சட்டமாக்க வேண்டும் என தமிழக அரசை அறிவுறுத்தியது.. ஆனால் திமுகவோ கடைசி வரை அதனை சட்டமாக்க வில்லை. இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தனது விசுவாசத்தை காண்பித்திருக் கிறது. இப்படித்தான் திமுக ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக இயற்கை சீரழிவிற்கு வழி வகுத்து வருகிறது. எனவே இந்தியாவின் இயற்கையை பாதுகாத்திட காங்கிரஸ் - திமுகவின் கேடுகெட்ட கொள்கைக்கு முடிவு கட்டிட மக்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் இயற்கையின் இயல்பை நம் எதிர்கால சந்ததிகள் கண்ணிலாவது பார்க்க முடியும்.
0 comments:
Post a Comment