தி.மு.க., ஆட்சியில் உயிரற்ற கம்ப்யூட்டர், காகிதங்களுக்கு மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது; மனிதனுக்கு மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது!''
"காசு வாங்கினேன், பையில போட்டேன். போன இடம் தெரியல... காதலி பார்ப்பா காரணம் கேட்பா ஏது சொல்றதுன்னு புரியல... விதவிதமா துணிகள் இருக்கு விலையைக் கேட்டா மயக்கம் வருது... எதை எதையோ வாங்கணும்னு மனசுல, அதை எண்ணாம இருக்கவும் வழியில்ல' - என்ற, பட்டுக்கோட்டை கல்யணசுந்தரத்தின் பாடல் வரிகளைப் போல தான், இன்றைய தமிழக நடுத்தர மக்களின் வாழ்க்கை உள்ளது.நுகர்வு கலாசாரத்திலிருந்து நீந்திக் கரையேற முயற்சிக்கின்றனர்; அவர்களால் முடியவில்லை. கரையிலும் நில்லாமல், நீரிலும் இல்லாமல், திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றனர். எதார்த்த வாழ்க்கையில், இருப்புக்கும், தேவைக்குமான இடையில் போராடிக் கொண்டிருக்கும் அவர்களால், கல்விக் கட்டணம், வாகனக் கட்டணம், மின் கட்டணம், மருத்துவச் செலவு ஆகியவற்றை சமாளிக்க முடியாமலும், அதை வெளிக்காட்ட முடியாமலும் தவிக்கின்றனர்.
கடந்த ஐந்தாண்டுகளில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வின் தவறான பொருளாதாரக் கொள்கையால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிடமும், உலக வங்கியிலும் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, அவர்கள் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டு, நாட்டை கடனாளி ஆக்கி உள்ளனர்.அது போல, வீட்டுக் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோகக் கடன், பர்சனல் லோன் போன்றவற்றுக்காக, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்ட நடுத்தர மக்களும் கடனாளியாக நிற்கின்றனர்.செம்மொழி மாநாட்டை நடத்தியவர்களுக்குத் தெரியும், தமிழில் உயர்திணை, அஃறிணை என இரண்டு திணைகள் இருப்பது. காங்கிரஸ், தி.மு.க., ஆகியவற்றின் ஆட்சியில் உயிரற்ற கம்ப்யூட்டர் மற்றும் காகிதங்களுக்கு மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது; மனிதனுக்கு மதிப்பு குறைந்து கொண்டே போகிறது.குறிப்பாக, பெண்களின் நிலை மோசமடைந்துள்ளது. செலவுகளை ஈடு செய்ய முடியாமல், பல குடும்பத்தில், பெண்கள், வீட்டிலும் வேலை செய்து, வெளியில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தமும் வந்துவிட்டது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள், விவசாயிகளைப் போல படங்களில் வேடமேந்தி நடித்துள்ளனர். தற்போதுள்ள கதாநாயகர்கள் எவரும், விவசாயிகள் போல வேடமேற்று நடிப்பது கூட இல்லை. காரணம், விவசாயிகளுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. ஐந்தாண்டுகளில் விவசாயம் செய்யவே விளை நிலங்கள் இல்லை. ரியல் எஸ்டேட்களுக்கும், பொருளாதார மண்டலங்களுக்கும் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிடுகின்றன. விதைகளை அடுத்த போகத்துக்கு விவசாயிகள் சேமித்து வைப்பர். இப்போது, பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து மலட்டு விதைகளை வாங்கும் சூழல் நிலவுகிறது."கிரைண்டர் தருகிறேன், மிக்சி தருகிறேன்' என்கின்றனர். விற்கும் விலைவாசியில், அவற்றில் அரைக்க உணவுப் பொருகள்களை வாங்க முடியாமல், நடுத்தர மக்கள் நிற்கின்றனர்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். சிறுதொழில் தொடங்க, வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. முதலாளிகளுக்கு, வட்டித் தள்ளுபடியுடன் கடன்களை வாரி வழங்குகின்றனர்.
நன்மாறன்எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கட்சி:""
0 comments:
Post a Comment