Monday, March 7, 2011

இந்திய விடுதலைக்கு எழுச்சிமிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழி


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி என்று அழைக்கப்படும் தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள் கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் தாண்டிக் குதித்தார்கள். இந்தக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசாக ஆக்கப் போகிறது, அமெரிக்காவிற்கு நிகராக மாற்றப் போகிறது, சீனாவைத் தாண்டி முன்னேறப் போகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். இதை நம்பி சில எதிர்க்கட்சிகளும், சில விவசாய சங்கங்களும், சில தனி நபர்களும் புதிய கொள் கைகளை வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள். அன்று அநேகமாக இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தான் என்றால் அது மிகையல்ல, உண்மை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தக் கொள்கைகளை எதிர்த்து நிறைவேற்றிய தீர்மானத்தில், இது இந்திய நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தும், ஏழைகளின் அடிப்படைத் தேவைகளை சீர்குலைக்கும், ஒரு சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கி, பெரும் பகுதி மக்களை வாழ வழியின்றிச் செய்திடும் என்று விவரமாக எடுத்துக் கூறியது. அன்றைக்கு ப.சிதம்பரம் மற்றும் காங் கிரஸ் கட்சித் தலைவர்கள் ‘‘இந்தக் கொள் கைகள் இந்தியாவைப் பளபளப்பாக ஒளிரச் செய்யப் போகிறது, விரைவில் ஒளிரும் இந் தியாவைப் பார்ப்பீர்கள்’’ என்றார்கள். ஆனால் ஒளிரும் இந்தியாவிற்குப் பதிலாக நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் பட்டினி கிடக் கும் இந்தியாவை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்று நமது நிலைபாட் டைக் கேலி செய்து ப.சிதம்பரம் அளித்த பேட்டி என்ன தெரியுமா? ‘‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் பழைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் புதிய நிலைமை என்ன வென்று தெரியாது. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பைகளிலும் ஏராளமான காசை இந்தக் கொள்கைகள் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றன. ஆகவே அவர்கள் அந்தக் காசைக் கொண்டு அரிசி உட்பட எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள லாம். அவர்கள் பட்டினிக் கிடந்து பதற வேண் டிய அவசியம் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் தேவையின்றிக் கவலைப்பட வேண்டாம்,’’ என்றார்.

இன்று பதினைந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு, ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் யாரை வாழ வைத்திருக்கின்றன, யாருடைய வாழ்வை அழித்திருக்கின்றன என்பதைச் சற்று விவரமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு நிறுவனமும் சொத்து மதிப்பு (ரூபாய்- கோடிகளில்) 1990இலும் 2009இலும் பின்வருமாறு:

நிறுவனம் 1996 2009

1. அம்பானி 3241 4,25,187

2. டாடா 6851 2,30,827

3. ஜிண்டால்ஸ் - 56,937

4. எல் & டி 1130 44,544

5. மஹிந்த்ரா 620 38,363

6. ஜெயப்பிரகாஷ் 484 25,202

7. டிவிஎஸ் 929 21,267

8. பஜாஜ் 1228 28,521

கடந்த பதினைந்து ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 60 மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 100 மடங்கிற்குக்கூட அதிகரித்துள்ளன. தமிழ கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவ காரத்தில் சம்பந்தப்பட்ட ஆ.ராசா மற்றும் கலைஞர் குடும்பச் சொத்துக்களும் ஏறத்தாழ இதே அளவு உயர்ந்திருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி நாட்டின் செல்வத்தை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கவர்ந்து சென்றுள்ளனர். வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் முதலாளித்துவம் என்று இதைத்தான் அழைக்கிறார்கள்.

நவீன தாராளமயக் கொள்கைகளால் இந் தியா ஒளிரும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியதுபோல் இந்தியா ஒளிர்வதற்குப் பதி லாக, ஒழிந்துகொண்டு, அழிந்துகொண்டுதான் இருக்கிறது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளார்கள். ஒரு நாளைக்கு 50 பேர், 30 நிமிடங் களுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள் கிறார் என்ற முறையில் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்று பரிசீ லிக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடதுசாரிக் கட்சிகளும் மூன்று முக்கிய காரணங்களைக் கூறுகின்றன.

முதலாவதாக, அரசு, வேளாண் இடு பொருட்களுக்கு அளித்து வந்த மானியங் களை வெட்டிக் குறைத்தது. அதன்மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கான செலவினங் கள், போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகி யவை உயர்ந்தன, உயர்ந்துகொண்டே இருக் கின்றன. உர மானியம் சென்ற ஆண்டு செல வினத்தைவிட 3 ஆயிரம் கோடி ரூபாய் வெட் டப்பட்டிருக்கிறது. யூரியா விலை 10 விழுக் காடு உயர்ந்திருக்கிறது. உரம் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படி யாக மூடப்பட்டு வருகின்றன. உரம் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் கைவிடவும் அரசு தீர்மானித் திருக்கிறது. விரைவில் விவசாயிகள் முழுமை யாக ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங் களின் தயவில் உரங்களை, அவர்கள் நிச்ச யிக்கும் விலைக்கு வாங்க வேண்டிய கட் டாயத்திற்குத் தள்ளப்பட இருக்கிறார்கள்.

விவசாய இடுபொருட்களின் விலை களை இனி அரசு நிர்ணயிக்காது. மாறாக, இவற்றை சந்தை சக்திகள் (ஆயசமநவ குடிசஉநள) நிர்ணயிக்கும் என்று அரசு கூறுகிறது. இதன் பொருளைப் புரிந்துகொள்வது எளிது. அதா வது இனி வேளாண் இடு பொருட்களின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக் காது, அரசு அவற்றின் விலைகளை நிர்ணயிக் காது. மாறாக, இவற்றை ஏகாதிபத்திய கார்ப் பரேட் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்தி டும். இவ்வாறு மான்சாண்டோ போன்ற நிறு வனங்களின் தயவில் விவசாயிகளைத் தள் ளிவிட அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டாவதாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களின் விலைகள் குறைந்துகொண்டே போகின்றன.

மூன்றாவதாக, வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளித்து வந்த கடன் வசதிகள் குறைந்தன. நாட்டில் 62 சதவீதம் பேர் ஏழை விவசாயிகள். இவர்க ளுக்கு அரசு நிதி நிறுவனங்கள் மூலமாகக் கடன் பெறும் வசதி கிடையாது. அரசாங்கமும் பொது முதலீட்டை அதிகப்படுத்தி, அவர் களுக்கு உதவ முன்வரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள், தனியார் கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்களது கடன் வலையில் வீழ்ந்த விவசாயிகள் மீள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அநேகமாக அதில் சிக்கியவர்களில் பெரும் பகுதியினர் தற்கொலைப்பாதையைத்தான் தேடிச் சென்றிருக்கிறார்கள்.

விவசாயிகளில் பெரும்பகுதியினர் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, விவசாயத் தொழி லாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி 50 விழுக்காட்டிற்கும் மேலான சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயத்தைத் தொடர ஆர்வம் காட்ட வில்லை. கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோ ராண்டும் 33 லட்சம் விவசாயிகள் இவ்வாறு நிலத்தை விட்டு வெளியேறிக் கொண்டி ருக்கிறார்கள்.

இந்த மூன்றும்தான் அடிப்படைக் கார ணங்கள் என்று இடதுசாரிகள் மட்டுமல்ல, அரசு நிர்ணயித்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலை மையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையமும் தெரிவித்துள்ள உண்மையா கும். இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் உட்பட விவசாயிகளின் அடிப்படைப் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காண எந்த ஆலோச னையையும் அளித்திடவில்லை. மாறாக விவசாயிகளையும், கிராமங்களையும் வெளி நாட்டு முதலாளிகள் கையிலே ஒப்படைத்து, நடைபெறும் தற்கொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

விவசாயத் தொழிலாளர்கள் வேலையில் லாததால் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுத்திட ஐ.மு. கூட்டணி-1 ஆட்சிக்காலத்தில் இடதுசாரி களின் நிர்ப்பந்தத்தின்பேரில் தேசிய கிரா மப்புற வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் கிராமப்புற விவசா யத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறு நாள் வேலையாவது அளிக் கப்பட்டது. ஆனால் இப்போது என்ன நிலை மை? பட்டினி கிடந்து வந்த விவசாயிகளுக்கு சற்றே பசியாற்றி வந்த தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் இன்றைய தினம் பல இடங்களில் கொள்ளையடிப்பவர்களின் கூடாரங்களாக மாறிப்போயிருக்கின்றன.

நாட்டின் இறையாண்மையே கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. நாடும் நாட்டு மக்களும் தங்கத் தட்டில் வைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விருந்தாக்கப் பட்டு வருகிறார்கள். பட்ஜெட்டில் கூட பன் னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவ் வாறு காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் பன்னாட்டு நிறுவ னங்களுக்குச் சேவை செய்யும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

20.8 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாக உலா வருகிறது என்பது சமீபத்திய செய்தி. இதில் உள்நாட்டில் உலாவும் கறுப்புப் பணம் கணக்கில் சேராது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் நாட்டை பன் னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக ஒப் படைப்பதற்கு முன்னர், இவர்களை அதிகாரத் திலிருந்து விரட்ட வேண்டிய அவசியம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு துனீசியா, எகிப்து, லிபியா போன்று எழுச்சி மிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழியாகும்.

கே.வரதராசன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)