தமிழக சட்டமன்றத் தேர்தலுக் கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவ தாக அறிவித்து 31 தொகுதிகளை பெற்றுள்ளது. கடந்த காலத்தில் கூட அல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக குறித்து பாமகவும், பாமக குறித்து திமுகவும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையோடு இணைத்து தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கி ரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பூகோளம் குறித்து அறியாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் ஆணைப்படியே தொகுதி குறித்து பேசப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காங் கிரசின் மிரட்டல் குறித்து திமுக தலைவர் கலைஞரோ, முரசொலி எழுத்தாளர் சின்னக்குத்தூசியோ எதுவும் எழுதவில்லை. ஆனால் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி களத்தில் இறங்கி, குட்டக்குட்டக் குனியக்கூடாது, திமுக சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வீரமணியின் குரல் அல்ல. கலை ஞரின் குரல்தான் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மதுவிலக்கை அமல் படுத்துவதற்காகவே அவதரித்த கட்சி யென்று கூறிக்கொள்ளும் பாமக இதற்காக திமுக அரசிற்கு பல கெடுக் களை விதித்தது. அதுகுறித்து கூட நிபந்தனை எதுவும் விதிக்காதது வியப்பிற்குரியதுதான்.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தயவு தேவையென்பதால் இலங்கைத் தமிழ ருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டார் என்று ராமதாஸ் 11.4.2009 அன்று கூறினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். மத்திய அரசு நினைத்தால் இலங்கைத் தமிழரின் உயிரை காப்பாற்றலாம். தேவைப்பட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக ராஜினாமா செய்யவேண்டு மென்று 16.4.2009 அன்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழக முதல்வர் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நிர்ப்பந்திக்குமாறு வலியுறுத்தி இருக்கவேண்டும். மாறாக இலங்கையில் தமிழர்கள் படு கொலை செய்யப்படுவதைக் கண்டித்து பொதுவேலை நிறுத்தம் நடத் துவது தேவையற்ற வேலை என்று அன்புமணி ராமதாஸ் 22.4.2009 அன்று கூறினார்.
பாமகவுக்கு பதிலளிக்கும் வகையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாமக தலைவர் ராமதாஸ் மக்களை ஏமாற்றுகிறார் என்று 7.5.2009 அன்று கூறினார்.
இந்நிலையில் பேத்தியின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்றபோது கூட்டணி உடன்பாட்டி லும் கையெழுத்திட்டார் ராமதாஸ். அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசும்போது, இது தேர்தல் திருமணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை முதல்வர் மேற்கோள் காட்டினார். திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர் பதவியை பெரிய பதவியாக கருதுவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
கூட்டணித் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கலைஞர் மாற்றி மாற்றி பேசுவதாகவும், துரோகம் செய்துவிட்டதாகவும் பாமக முன் வைத்த விமர்சனங்கள் அப்படியே உள்ளன. இவர்களது திசை திருப்பல் வேலையை நம்பிய இலங்கை தமிழர் களின் கதிதான் பரிதாபமாக உள்ளது.
பாமக திமுக திருமணமும் மறந்துபோன சங்கதிகளும்
கோமாண்டூரார்
0 comments:
Post a Comment