Saturday, February 26, 2011

ஈரைப் பேனாக்கும் ஊடகங்கள் மக்கள் கடலைக் கண்டு கொள்ளாதது ஏன்?


புதுதில்லியில் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் அழைப்பிற்கு இணங்கி லட்சோபலட்சத் தொழிலாளர்கள் பேரணியாக வலம் வந்தனர். இந்த மகத்தான தொழிலாளர் பேரணியை இந்திய ஊடகங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அலட்சியப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.

நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு சுண்டுவிரலில் சுளுக்கு என்றால் அரை நாள் நிகழ்ச்சி களை நிறுத்திவிட்டு, அதுபற்றிய செய்தி களை வெளியிடும் தொலைக்காட்சி நிறு வனங்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணிக்கு ஒரு சில விநாடிகள் ஒதுக்கிவிட்டு விட்டுவிட்டன. அச்சு ஊடகங்கள் இவ்வளவு பெரிய நிகழ்வை உள் ளூர் செய்தியாக்கிவிட்டன.

முகநூல் புகைப்படங்கள்

இந்தப் பேரணி நடைபெற்ற சாலையில் ஒரு பத்திரிகையின் அலுவலகம் உள்ளது. தங்களுக்கு ஒதுக்கியுள்ள அறையில் உட்கார்ந்தவாறே அப்பத்திரிகையினர் புகைப்படம் எடுத்திருக்க முடியும். ஆனால் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப் படத்தை அப்பத்திரிகை பிரசுரித்திருந்தது. இவ்வாறு பத்திரிகைகள் புறக்கணித்ததை வைத்து மெயில் டுடே பத்திரிகை கீழ்க் கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இந் தப்பத்திரிகையும் பேரணி செய்தியை வெளி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


“தங்களின் பிரம்மாண்ட பேரணி பற்றி மிகவும் குறைவான அளவில் பத்திரிகை கள் செய்தி வெளியிட்டது குறித்து தொழிற் சங்கத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ள னர். மேற்கு ஆசியா மற்றும் உலகின் மற்ற பகு திகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு நேரம் ஒதுக்கும் தேசிய தொலைக்காட்சி கள் மற்றும் நாளிதழ்கள், முதன்முறையாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டுப்பேரணியைக் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகின் மற்ற பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப் படும் விலையுயர்வு, தொழிலாளர் சட்ட மீறல் கள், வேலையின்மை, சமூகப் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சனைகளைத்தான் தில்லிப் பேரணியும் எழுப்பியது என்கிறார்கள்.

தேசியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தச் செய்தியை ஒளிபரப்பவில்லை. ஆனால் அதேவேளையில், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ் மற் றும் ஏ.எப்.பி. ஆகியவை செய்தி வெளியிட் டன. பிபிசி மற்றும் சிஎன்என் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒளிபரப் பின. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மற் றும் உழைப்பாளிகளின் பிரச்சனைகளை எதிரொலித்ததாக பேரணி பற்றி இந்த ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், இந் திய வரலாற்றில் பொதுப் பிரச்சனைகளுக் காக முதன்முறையாக அனைத்துத் தொழிற் சங்கங்களும் கைகோர்த்ததை பத்திரிகை கள் பிரசுரித்திருக்க வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர் ந்து மேற்கொண்டு வந்த சிஐடியுவின் தலைவர் ஏ.கே.பத்மநாபன்,

மேலும் பேசிய அவர், லிபியா உள் ளிட்ட மற்ற நாடுகளில் நடக்கும் போராட் டங்களை எழுதி பக்கங்களை பத்திரிகை கள் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். துனீ சியாவில் உணவு, சுதந்திரம் மற்றும் கவு ரவத்திற்காகப் போராடுகிறார்கள். இந்தி யாவில் கவுரவமாக வாழ சமூகப் பாதுகாப்பு கோரியும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக்கோரியும் போராடியுள்ளனர். சொந்த நாட்டில் லட்சக்கணக்கான தொழி லாளர்களின் உணர்வுகளை இந்திய ஊட கத்துறை புரிந்து கொள்ளவில்லை என்று ஆவேசத்தோடு குறிப்பிட்டார்.

நாங்கள் அனைவரும் ஒன்று திரண் டுள்ளோம். எப்போதும் இல்லாத அள விலான இந்த ஒற்றுமையை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பேரணி பெரும் வெற்றி பெற்றது என்கிறார் ஐ.என். டி.யு.சி.யின் தலைவரான ஜி.சஞ்சீவ ரெட்டி. பேரணியின்போது எந்தவித அசம்பாவித மும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தலை வர்கள் அக்கறை காட்டினர். பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் காவல்துறையிடம் தொடர்பு கொண்டிருந்தோம். லட்சக்கணக்கானோர் தலைநகருக்குள் வந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது இயல்புதான் என் றார் ஏ.கே.பத்மநாபன்.

பெரிய தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறை, காப்பீட்டு நிறுவனங்கள், அரசு அலு வலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரி வோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம், தேசிய சுகாதாரத்திட்டம், பாரத் நிர்மாண், மதிய உணவுத்திட்டம் மற்றும் அங்கன்வாடி ஆகி யவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கா னோர் பேரணியில் கலந்து கொண்டனர் என்று விளக்கினார் ஏ.கே.பத்மநாபன். மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதி ராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும் ஒன்று சேர்ந்து, இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் மக்கள் விரோதக் கொள் கைகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட் டுக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார் அவர்.”

இவ்வாறு மெயில் டுடே செய்தி வெளி யிட்டுள்ளது.

3 comments:

  1. அடப்பாவிகளா உங்களுக்கு கருணையே இல்லையா?இவ்வளவு கூட்டம் கூடிஇருக்கிறது அவ்வளவையும் மறைத்து விட்டிர்களே.இது நியாயமா?

    ReplyDelete
  2. இந்த‌ இந்திய தொலைக்காட்சி ஊட‌க‌ங்க‌ளின் முக்கிய‌னமாவை அனைத்தும் வெளிநாட்டின‌ரின் கைக‌ளில் இருக்கிற‌து. செய்திப் ப‌த்திரிகைகள் பெரும்பாலும் பெரிய‌ தொழில‌திப‌ர்க‌ளின் கைக‌ளில்.பின் எப்ப‌டி உழைப்பாள‌ர்க‌ளின் போர‌ட்ட‌ கூட்ட‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுவார்க‌ள்?

    க‌லைஞர் டிவி சாகித் பால்வா 214 கோடி (க‌ட‌ன்) வாங்கியது பற்றி, த.கிருஷ்ண‌ன் பற்றி பேசுமா? ச‌ன் நியூஸ் சான‌ல், தெக‌ல்ஹா வெளியிட்ட‌ அல்ல‌து அருண் ஷோரி கூரிய‌‌ மாற‌னின், ம‌லேசிய‌ மேக்சிஸ் கம்யூனிகேச‌னும், அப்ப‌ல்லோ ரெட்டியும் வாங்கிய‌ ப‌ங்குக‌ளைப் பற்றி ஒரு நிமிட‌மாவ‌து பேசுமா? ச‌ரி, ஜெயா டிவி தான் த‌ர்மாபுரி ப‌ஸ் எரிப்பு ப‌ற்றி ஒரு வார்த்தையாவ‌து பேசுமா? இவ்வ‌ளவு ஏன் குமுத‌ம் இன்று திமுக‌ பற்றி உண்மையாய் விம‌ர்சிக்குமா?

    யார‌வ‌து "விள‌ம்ப‌ர‌ லாப‌ம்" த‌ரும் முத‌லாளிக‌ளை எதிர்த்து தொழிலாளர்க‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ருவார்க‌ளா? அவர்க‌ள‌து நிலைய‌ம் அல்ல‌து உட‌மைக‌ள் தாக்க‌ப்ப‌ட்டால், "ரவுடிக‌ள் தாக்கின‌ர், அராஜ‌க‌ம், அட்டூழிய‌ம்" என ச‌ன் டிவி 'ம‌துரை தின‌க‌ர‌ன்' கொழுத்த‌ப்ப‌ட்ட‌ போது க‌த்தினார்க‌ளே, அப்ப‌டி செய்தியை ஐந்து நிமிட‌த்துக்கு ஒரு முறை ஒளி, ஒலி ப‌ர‌ப்பிக் கொண்டே க‌த்திக் கொண்டே இருப்பார்க‌ள்.

    வெளிநாட்டில் ஊர்வ‌ல‌ம், பேர‌ணி என்றால் ம‌ட்டும் டிஅர்பி ரேட்டுக்காக `ஊரான் வூட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே` என நீட்டி முழக்கி முப்ப‌து நிமிட‌ம் டிபேட் எட‌த்துவார்க‌ள் (இடையே ப‌த்து க‌ம‌ர்சிய‌ல் பிரேக்)

    ReplyDelete
  3. நம‌து இந்திய தொலைக்காட்சிக‌ளின் முக்கிய‌னமாவை அனைத்தும் வெளிநாட்டின‌ரின் கைக‌ளில் இருக்கிற‌து. செய்திப் ப‌த்திரிகைகள் பெரும்பாலும் பெரிய‌ தொழில‌திப‌ர்க‌ளின் கைக‌ளில்.பின் எப்ப‌டி உழைப்பாள‌ர்க‌ளின் போர‌ட்ட‌ கூட்ட‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுவார்க‌ள்?

    க‌லைஞர் டிவி சாகித் உஸ்மான் பால்வா 214 கோடி (க‌ட‌ன்) வாங்கியது பற்றி, த.கிருஷ்ண‌ன் கொலை பற்றி பேசுமா? ச‌ன் நியூஸ் சான‌ல், தெக‌ல்ஹா வெளியிட்ட‌ அல்ல‌து அருண் ஷோரி கூரிய‌‌ மாற‌னின், ம‌லேசிய‌ மேக்சிஸ் கம்யூனிகேச‌னும், அப்ப‌ல்லோ ரெட்டியும் வாங்கிய‌ ப‌ங்குக‌ளைப் பற்றி ஒரு நிமிட‌மாவ‌து பேசுமா? ச‌ரி, ஜெயா டிவி தான் த‌ர்மாபுரி ப‌ஸ் எரிப்பு ப‌ற்றி ஒரு வார்த்தையாவ‌து பேசுமா? இவ்வ‌ளவு ஏன் குமுத‌ம் இன்று திமுக‌ பற்றி உண்மையாய் விம‌ர்சிக்குமா?

    யார‌வ‌து "விள‌ம்ப‌ர‌ லாப‌ம்" த‌ரும் முத‌லாளிக‌ளை எதிர்த்து தொழிலாளர்க‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ருவார்க‌ளா? அவர்க‌ள‌து நிலைய‌ம் அல்ல‌து உட‌மைக‌ள் தாக்க‌ப்ப‌ட்டால், "ரவுடிக‌ள் தாக்கின‌ர், அராஜ‌க‌ம், அட்டூழிய‌ம்" என ச‌ன் டிவி 'ம‌துரை தின‌க‌ர‌ன்' கொழுத்த‌ப்ப‌ட்ட‌ போது க‌த்தினார்க‌ளே, அப்ப‌டி செய்தியை ஐந்து நிமிட‌த்துக்கு ஒரு முறை ஒளி, ஒலி ப‌ர‌ப்பிக் கொண்டே க‌த்திக் கொண்டே இருப்பார்க‌ள்.

    வெளிநாட்டில் ஊர்வ‌ல‌ம், பேர‌ணி என்றால் ம‌ட்டும் டிஅர்பி ரேட்டுக்காக `ஊரான் வூட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே` என நீட்டி முழக்கி முப்ப‌து நிமிட‌ம் டிபேட் நட‌த்துவார்க‌ள் (இடையே ப‌த்து க‌ம‌ர்சிய‌ல் பிரேக்).

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)