உலகின் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் நேட்டோ ராணுவக் கூட்டாளி களும் இணைந்து செயல்படுத்திய அராஜக அரசியல் இன்றைக்கு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட அனைத்து அரபு நாடுகளிலும் உணவு தானிய விலையை பல மடங்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த நாடுகளில் மிகப் பெருமளவு எண்ணெய் வளம் குவிந் திருக்கும்போதிலும் கூட மக்கள் குடிநீருக்கு தவிக் கிறார்கள்; பெருவாரியான மக்களுக்கு வறுமை வாரி வழங்கப்பட்டுள்ளது; எண்ணெய் வியாபாரம் மூலம் கிடைக் கும் மிகப் பெரும் சொத்துக்கள் எல்லாம் குறிப்பிட்ட பிரி வினரின் கைகளுக்கு சென்றடைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரியல்எஸ்டேட் அதிபர்களும், மன்னர் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சிறு எண்ணிக் கையிலான நபர்களும், கோடிக்கணக்கான பில்லியன் டாலர்களை கொண்டிருக்கிற செல்வந்தர்களாக வலம் வருகிறார்கள்.
தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய வக்கில்லாத அரசுகள் ஏவுகிற கடுமையான அடக்குமுறையால், இஸ்லாமிய கலாச்சாரமும், நம்பிக்கையும் மிகுந்த மக்களை கொண்ட அரபு உலகம் கொந்தளித்துப் போயிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உருவான இந்த அரசுகள் காலனிய ஆதிக்க கட்டமைப்பையே ஆட்சி முறையாக பாவித்து அதிகாரம் செலுத்தி வருகின்றன.
கேம்ப் டேவிட் ராணுவத் தளத்தில் அமெரிக்காவோடு கைகோர்த்துக் கொண்டு அரபு உலகத்திற்கு துரோகம்செய்த ஹோஸ்னி முபாரக்கை பார்த்தோம். 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந் தங்கள் அமலில் இருக்கும் போதிலும் கூட இன்று வரை யிலும் பாலஸ்தீன அரபு அரசு உருவாக முடிய வில்லை; இஸ்ரேல் என்பது, அமெரிக்கா மற்றும் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் ஒரு சக்தி மிக்க அணு ஆயுத கூட்டாளி நாடாக இணைந்து நிற்பதையும் பார்க்கிறோம். அமெரிக்கா வின் இத்தகைய ராணுவ - தொழில் கூட்டணி, ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலுக்கும், இதர பல அரபு நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை அள்ளி வழங்கி வருகிறது; பகைமையையும், வெறுப்பையும் ஏற்றுமதி செய்கிறது.
இப்போது எரிமலை வெடித்துக் கிளம்பியுள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது நேட்டோவுக்கு தெரிய வில்லை. லிபியாவில் நடக்கும் கண்டனத்திற்குரிய சம்ப வங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இவர்கள் முயற்சிக்கிறார்கள். லிபியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பில் இன்றைக்கு யாரும் இல்லை. ஆனால், அமெரிக்க பேரரசு தனது உலகளாவிய ஊடக பலத்தின்மூலம், பெரும்பாலும் பொருத்தமில்லாத தகவல்களை மிகத் தீவிரமாக பரப்பி வருகிறது. வன்முறை, பதட்டம் குறித்த அனைத்து தகவல் களும், செய்திகளும் பொருத்தமற்றவையாக முன்வைக்கப் படுகின்றன. தவறான தகவல்கள் ஊதப்படுகின்றன.
லிபியாவில் ஒரு உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருக் கிறது என்பது தெரிகிறது. இது எப்படி, ஏன் ஏற்பட்டது? இத னால் ஏற்படும் பின்விளைவுகளால் பாதிக்கப்படப் போவது யார்?
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் மீண்டும் மீண்டும் சொல்கிறது: “லிபியாவும், அல்ஜீரியாவும் எண்ணெய் உற்பத்தியை முடக்கிவிட்டால் விலைகள் பேரல் ஒன்றுக்கு 220 டாலரை தாண்டிவிடும்; ஓபெக் அமைப்பின் பெட்ரோலிய உற்பத்தி திறன் கணிசமாக குறைந்து விடும்; இது படிப்படியாக விலையை மேலும் அதிகரிக்கும்”.
இன்றைய தினத்தில் இவ்வளவு பெரும் விலையை யார் கொடுக்கப் போகிறார்கள். உணவு நெருக்கடியின் மீது இது ஏற்படுத்தப்போகும் தொடர் விளைவுகள் எப்படி இருக்கும்?
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் இப்போது புலம்புகிறார்கள். அரபு உலகில் ஜனநாயகமற்ற அரசாங்கங்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மேற்கத்திய நாடுகள் தவறு செய்துவிட்டன என்று குவைத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பேசியிருக்கிறார். பளிச்சென்று ஒப்புக் கொண்ட தற்கு அவரை பாராட்ட வேண்டும். லிபியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் ரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறை தொடர அனுமதிக்க முடியாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியும், திரிபோலியில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டதாக வந்துள்ள செய்தி “நம்பும்படியாக” இருக்கிறது என்று இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச் சர் பிராங்கோ பிராட்டினியும் கூறியுள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூன், சர்வதேச சமூகம் என்ன தீர்மா னிக்கிறதோ அதை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் செயல் படுத்தும் என்று கூறியிருக்கிறார். உண்மையில் பான் கீ - மூன், பாரக் ஒபாமாவின் வார்த்தைகளுக்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி, கடந்த புதனன்று ஒரு தகவலை வெளியிட்டார். லிபியாவில் என்ன செய்வது என்பது குறித்து நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் கூட்டாளிகளோடு பேசுவதற்காக வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண் டன் ஐரோப்பாவுக்கு செல்வார் என்பதே அந்த தகவல்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக வலதுசாரி குடியரசுக் கட்சியின் தலைவர் ஜான் மெக்கெயின், இஸ்ரேலுக்கு ஆத ரவான அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோசப் லிபர்மான் போன்றவர்களிடமெல்லாம் மேற்கண்ட பிரச்சனைக்கு ஒப்புதல்வாங்கிவிட்டார் ஒபாமா.
அமெரிக்காவின் திட்டத்திற்கு ஏற்ப சர்வதேச அரங்கின் மனநிலையை தனது மிகப் பெரும் ஊடக பலத்தின் மூலம் இந்தப் பேரரசு தயார்ப்படுத்திவிட்டது. இனி லிபியாவில் ராணுவத் தாக்குதல் நடத்துவது மட்டுமே பாக்கி. திட்ட மிட்டப்படி கடாபியின் ஆட்சியோ அல்லது உயிரோ பறிக்கப் படாமல் சம்பவங்கள் நீடித்தால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் எண்ணெய்க்கும், ஐரோப்பிய கூட்டாளிகள் மூலம் பேரரசு உத்தரவாதப்படுத்திக் கொண்டுவிட்டது.
எந்த சம்பவம் நடந்தாலும் அதில் ஒபாமாவின் பங்கு முக்கியமானது. லிபிய தேசத்தில் இப்படியொரு தாக்குதல் நடந்து மிக அதிக ரத்தம் சிந்தப்பட்டால் அரபு மற்றும் இஸ் லாமிய உலகின் பதில் என்னவாக இருக்கும்? எகிப்தில் முபாரக் ஆட்சியை வீழ்த்திய மகத்தான கிளர்ச்சி, லிபியா வில் நேட்டோவின் தாக்குதலை தடுத்து நிறுத்திவிடுமா? தவறான காரணங்களை முன்வைத்து இராக்கிற்குள் இவர்களது படை நுழைந்தபோது 10 லட்சத்திற்கும் மேற் பட்ட அரேபிய குடிமக்களின் அப்பாவி உயிர்கள் பறிக்கப் பட்டன. திட்டம் வெற்றியடைந்தது. ஜார்ஜ் டபிள்யு புஷ்சும் வெற்றி பெற்றார்.
இராக்கைப் போல, லிபியாவுமா?
லிபியாவுமா? பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கை
பிடல் காஸ்ட்ரோ
(கிராண்மா, பிப்.27)
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
0 comments:
Post a Comment