Friday, January 14, 2011

வார்த்தை ஜாலங் களால் வெகுநாட்கள் மக்களை ஏமாற்ற முடியாது


சட்டமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கவலையோடு குறிப்பிட்டபோது இடைமறித்த நிதி அமைச்சர் க.அன்பழகன்,

விலைவாசி உயர்வு குறித்து தனது ஆழ்ந்த வேதனை யை தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த விலை உயர்விற்கு காரணமான பதுக்கல் முதலாளிகள் யார்? வெங்காய வியாபாரிகள் யார்? என்பதை மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சொன்னால், நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைப்பதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள் ளார்.

அது மட்டுமல்லாமல் பூகம்பம், கடும் மழை, பெரும் வறட்சி ஏற்பட்டால் யாரை குறை சொல்ல முடியும்; அது போலத் தான் விலைவாசி உயர்வும். இதற்கு யாரைக் கண்டிப்பது? விலைவாசியை குறைக்க வழிகள் இருந்தால் கம்யூ னிஸ்ட்கள் அரசிற்கு வழி கூறலாம் எனவும் திருவாய் மலர்ந்துள்ளார்.

ஆட்சி, அதிகாரம் என்ற அரியணையில் அமர்ந்துகொண்டு விலைவாசியை குறைக்க வழி கேட்கும் தமிழக நிதி அமைச்சரின் போக்கு வியப்பிற்குரியது. ஒரு அரை நூற்றாண்டுக்காலம் தமிழக அரசில் அமைச்சர் பதவி வகித்து வருபவர், 1967-ல் தமிழ்நாட்டில் கடும் விலை வாசி உயர்வின் காரணமாகவே காங்கிரசி டமிருந்து ஆட்சியை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பொறுப்புமிக்க அமைச்சர், விலைவாசி உயர்வு என்பது இயற்கை இன்னல்களை போன்றது என்று கூறி யிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

விலைவாசிக்கு என்ன காரணம்? எப்படி குறைக்க முடியும் என்பதை தமிழ கத்திற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கும் உரிய முறையில் ஆலோசனைகளை கூறிவருவது மார்க்சிஸ்ட் கட்சியாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோசனை களை திமுக இடம் பெற்றிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுங் காணாமல் விட்டுவிட்டது பேராசிரிய ருக்கு தெரியாதா?

பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே எப்பொழுது வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளலாம் என அறிவித்தது திமுக பங்கேற்றுள்ள ஐ.மு. கூட்டணி ஆட்சியல்லவா? விலைவாசி உயர்விற்கு இது முக்கிய காரணம் என்பது அறிவார்ந்த அமைச்சருக்கு தெரியாதா?

ஊக வணிகத்தை தடை செய்ய வேண் டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவது இடதுசாரிகளல்லவா?

மத்திய அரசு குறைந்த விலைக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துவிட்டு, அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்ததை இந்திய நாட்டுமக்கள் அறியாதவரா?
தவறான கொள்கையின் காரணமாக பொது விநியோக முறையை சீரழித்தது மன்மோகன் சிங் அரசு என்பது அமைச்சருக்கு தெரியாதா? இதற்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து போராடி வருவதும் உண்மையல்லவா.

கட்டுப்பாடற்ற வணிகத் தை கொண்டுவந்து காய்கறி கடைவரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, அரசின் கட்டுப்பாட் டில் எதுவும் இல்லை என்ற நிலையை உருவாக்கிய ஐ.மு. கூட்டணி அரசில் திமுக முக்கிய கூட்டாளியல்லவா?

மேற்கு வங்கத்தில் எரிபொருள் விலை ஏறினால் அதற்கொப்ப மாநில அரசின் வரியை உயர்த்தாமல் உள்ள தைப்போல் தமிழக அரசு செய்யமுன் வருமா? மேற்கு வங்கத்தில் 19-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்வதைப் போல் தமிழ்நாட்டில் செய்திட முன் வருமா?

வெங்காய இறக்குமதி குறித்து பேசும் அமைச்சர், பதுக்கல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டுவர தயாரா? இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் உணவுப் பொருள்கள் ஊக வணிகத்தில் சிக்கிக்கொண்டு தவிப்பது அரசிற்கு தெரியாதா?

விலைவாசி உயர்வால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, இலவசம் என்ற பெயரில் சொற்ப பொருட்களை கொடுத்து விளம்பரம் செய்வதை தவிர்த்து, அனைத்து உணவுப் பொருட்களையும் மலிவு விலையில் தருவதற்கு அரசு தயாரா?

பூகம்பம் வறட்சியுடன் விலைவாசி யை ஒப்பிட்டு பேசும் அமைச்சர், இவை வருவதை முன்கூட்டி அறிந்திட விஞ்ஞானம் வழிவகுத்திருப்பதை அறியாத வரா? பருவ மழை பொய்த்துப் போனால் மக்களின் உணவு தேவைக்கு முன் கூட்டியே சேகரித்து வைப்பது அரசின் கடமை என்பதை மறந்துவிட்டாரா அமைச்சர். தமிழக அரசின் உணவுத் துறையும், தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும் விலைவாசியை கட் டுப்படுத்திட வகுத்த திட்டங்கள் என்ன என்ன என்பதை விளக்கிட அமைச்சர் முன்வருவாரா? திட்டங்கள் ஏதும் இல்லை என்றால், இவைகள் எதற்காக உள்ளன என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டியது அமைச்சரின் பொறுப் பல்லவா?

யார் யார் பதுக்கல் பேர்வழிகள் என்பது கம்யூனிஸ்ட்களை விட, அவர்களிட மிருந்து தேர்தலுக்கு நன்கொடை பெறுபவர்களுக்கு தெரியாதா? உணவுப் பொருள் தானியங்கள் இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு ஏதும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? அத்தியா வசியப் பொருட்கள் பராமரிப்புச்சட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? எல்லா கட்டுப்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டு பதுக்கல் பேர்வழிகளை காட்டுங்கள் என்பதா?

கேரள கம்யூனிஸ்ட் அரசு விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திட நிதி நிலை அறிக்கையில் 80 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ( கேரள அரசின் நிதி நிலை மதிப்பு ரூ.11,030 கோடியாகும்). இதைப் போல் ஐந்து மடங்கு வருவாயை கொண்ட தமிழக அரசு, விலைவாசியை கட்டுப்படுத்திட எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது?

தமிழக மக்கள் கடுமையான விலை வாசி உயர்வால் தத்தளித்துக்கொண் டுள்ளபோது, நிதிஅமைச்சர் விலைவாசி உயர்வு குறித்து வியாக்கியானம் செய்வார் என்றால், 1967 ம் ஆண்டை அவர் மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. “பருப்பு விலை என்ன ஆச்சு? பக்தவத்சலம் அண்ணாச்சி” என்றெல்லாம் 1967 தேர்தல் களத்தில் திமுக தரப்பிலிருந்து முழக்கம் எழுந்தது. இன்று விலைவாசித் தீ வீடு தோறும் பற்றி எரிகிறது. தமிழக மக்கள் மீண்டும் உரிய முறையில், விலை வாசிக்கெதிராக 1967-ல் தீர்ப்பளித் ததைப்போல் இந்த ஆண்டும் தீர்ப் பளிப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத் தரப்பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற் கொள்கையில், ஒரு மாணவர் விலை வாசி உயர்வு குறித்து கேட்டபோது, எனது பாட்டி இந்திராகாந்தி இருந்திருந்தால் விலைவாசி குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருப்பார். கூட்டணி ஆட்சியான தால் நடவடிக்கை எடுக்க முடியவில் லை என தெரிவித்துள்ளார். இதற்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துவரும் தேசியவாத கட்சியின் பொதுச் செய லாளர் தாரிக் அன்வர் கன்டனம் தெரி வித்துள்ளார். இதே கூட்டணியில் அங் கம் வகித்து வரும் திமுகவின் பொதுச் செயலாளர் இதற்கு கண்டனம் தெரிவிக்க தயாரா?

விலைவாசியின் சீற்றத்தை உணராத வராக காட்டிக்கொள்ள நிதிஅமைச்சர் முற்படுகிறார். விலைவாசியின் கொடு மையால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள, அமைச்சர் சட்டமன்றத்தில் விலைவாசி உயர்வினை நியாயப்படுத்தி பேசியிருப்பதைக்கண்டு ஆவேச மடைந்துள்ளனர்.

வார்த்தை ஜாலங் களால் வெகுநாட்கள் மக்களை ஏமாற்ற முடியாது. தன் பசி தீர்க்கும் வழியினை மனிதன் கண்டறிவான். அப்போது அவனை யாரும் தடுத்து நிறுத்திட முடி யாது என்பதே வரலாறு நமக்கு உணர்த் தியுள்ள பாடம்!

5 comments:

  1. கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ. 1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.

    ReplyDelete
  2. சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்றின்படி, 40 சதவீதம் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டார்கள் அல்லது விட்டுவிடத் தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விளைநிலங்கள் அரசின் அனுமதியுடனும், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் வீட்டுமனைகளாக்கப்படுகின்றன. காரணம், ஊருக்குப் பசி தீர்க்கும் விவசாயம், விவசாயிக்குப் படியளக்கவில்லை,

    ReplyDelete
  3. உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் விலை ஏற்றத்திற்கு முழு முதல் காரணம் விவசாய அமைச்சர் சரத்பவாரும் மன்மோகன் சிங்கும் மட்டுமே. கிரிக்கெட் துறைக்கும் வியாபாரிகள் தொழிலதிபர்கள் நலன் மீது மட்டும் அக்கறை செலுத்தும் ஊழல் சரத்பவாரும் கண்மூடி ஆதரிக்கும் பிரதமரும் சவுக்கடி பெற வேண்டியவர்கள்

    ReplyDelete
  4. பண முதலைகளுக்குப் பணியாது, பெருகி வரும் ஊழல்களுக்கு துணை போகாது,அவற்றை உண்மையான அக்கறையுடன் ஒழிப்பதும்,தேவைக்கு குறைவாக உற்பத்தி ஆகும் பொருட்களை ஏற்றுமதி செய்யாதிருப்பதுமே விலை வாசி குறைய எடுக்கப்படும் ஆரம்ப நடவடிக்கைகளாகும்.பதுக்கல்காரர்களை தொடர்ந்து கண்காநித்தாலே போதும் விலைவாசி கட்டுக்குள் இருக்கும்.

    ReplyDelete
  5. புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் மக்களை கசக்கி பிழிந்து முதலாளிகளின் மூலதனத்தை பெருக்கியதுதான் பொருளாதார புலி மன்மோஹன்சிங் அரசின் சாதனை. வுலகவங்கியின் அதிகாரியாக இருந்தவருக்கு மக்களை சந்திக்காமலே, ஓட்டுக்களை வாங்கமலய்யே பிரதமர் பதவியில் அமர்ந்தவருக்கு மக்களைபற்றி கவலைபட நேரமில்லை. அமெரிக்காவின் விசுவாசமிக்க ஊழியராக செயல்படுவதில்தான் ஆர்வம் அதிகம் காட்டுகிறார். அதனால் தான் விலைவாசி உயர்வை பற்றி விவாதிக்க கூடிய கூடம் முடிவு எடுக்கமலய்யே கலைகிறது

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)