Friday, December 10, 2010

பெண்களும், குழந்தைகளும் படிக்கக் கூடாத கமல்ஹாசனின் கவிதையாம்!


மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில்  ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார். "நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.” என்று  முடித்திருந்தார்.

அந்தக் கவிதை இதுதான். முதலில் ஒரு பெண் ஆணின் மனநிலையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

பெண்:

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னைக் கொள்வர்

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்.

இந்த இடத்திலிருந்து ஆண் ஆரம்பிக்கிறான். அவன் பெண்ணின் மனநிலையை பேசுகிறான்.

ஆண்:

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
(சக்)களத்தி வேண்டும் என்றான்

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?

அதுவும் இதுவும் எதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கே அது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!

கவிதை முடிகிறது. இப்போது நாம் பேசுவோம். ஒரு விஷயம் மோசமாக இருந்தால் அதனை ஒட்டு மொத்த சமூகமே வெறுத்து ஒதுக்க வேண்டும் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே கட்டுரையாளர் “பெண்களும், குழந்தைகளும்’ படிக்க வேண்டாம் என்கிறார். அதாவது ஆண்கள் மட்டும் படிக்கலாமாம். ஆண்களும் பெண்களும் சம்பந்தப்பட்ட கலவியலை ஆண்கள் மட்டும் பேச வேண்டுமாம்.

இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத  தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.

மேற்கண்ட பாடலில், வக்கிரங்களை “கமர்சியல்” என்ற பெயரில் ஒளித்துப் பரிமாரும் கபடம் இல்லை.மாறாக, கலவி குறித்ததொரு விவாதத்தை துவக்குகிறது.

மனதின் அழுக்குகளையும், சமூகம் கற்பித்திருக்கிற தவறான புரிதல்களையும் பொதுவெளியில் பேசுவதாகவே இருக்கிறது இந்தக் கவிதை. இதனைக் கொண்டு பாலியல், உளவியல் குறித்து  நமது புரிதல் பற்றிய பார்வைகளை மோத விடலாமேயனி, கலவியல் குறித்து பேசுவதே தவறு என்று பொருட்படுத்தி, வசவு பாடினால் அதில் பரபரப்பு அன்றி, வேறு எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை.

இன்றைய ஊடகங்களின் ஆபாச, வியாபாரத் தாகுதல்களுக்கு மத்தியில், மெளனத்தைக் காட்டிலும் விவாதங்களே அவசியம். படிப்போம், பேசுவோம் ... ஒரு திறந்த விவாதமே இக்கவிதைக்கான எதிர்வினையாக அமையும்.

8 comments:

  1. "சரியான மனிதர் தவறான கட்சியில்" " இது வாஜ்பாய் குறித்த அப்பாவிகளின் கருத்து. நமது தினமலர் போன்ற ஊடகங்கள் இதை ஆமோதித்து தொடர்ந்து எழுதின. சரியான மனிதன் ஒரு தவறான கட்சியில் எப்படி இருக்கமுடியாதோ அப்படி ஒரு தவரான பத்திரிக்கையால் சரியாக எழுத முடியாது என்பதற்கு தினமலரே சிறந்த உதாரணம்.
    பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் தெய்வீகமக புகழ்வதில் தினமலருக்கு உள்ள விருப்பம் நாம் அறிந்தத்தான். அதனால்தான் அவர்கள் இப்படி எழுதுகின்றனர்.
    வாத்சாயனாரின் காமசூத்திரம் 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் - பெண் உறவு குறித்த இந்துமத கருத்துக்களை தாங்கிப்பிடிக்கும் தினமலரில் இந்த பாடல் குறித்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
    ஆண் மட்டுமே பாலியல் தேவைகளை பேச வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு இது

    ReplyDelete
  2. னாத்திகர் கமல் பெரியாரின் காமலீலைகள் பற்றி கவிதை எழுதி இருக்கலாமே ஏன் வரலட்சுமி விரதம் போன்றவற்றி ,அரங்கநாதரை பற்றி எழுத வேண்டும்?

    ReplyDelete
  3. சமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளின் ஒன்றாக உளவியல் குறித்த தெளிவின்மையையும் கூறலாம் ... கலவியலில் ஒவ்வொருவருக்கும் ஆசைகள் உண்டு, அது மனித இயல்பு. அந்த இயல்பைப் புரிந்துகொள்ள விவாதங்கள் தேவைப்படுகின்றன. விவாதம் எழும்பினால்தான், குடும்பங்களை ஜனநாயகப்படுத்துவது சாத்தியம்.

    ReplyDelete
  4. ஆர்கே சதீஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் புரட்டுக் கதைகளைக் காட்டி எல்லலிடுவதே இயல்பு ... ஏதோ அவர் பொய் கூறியதைப் போல பதற வேண்டாம். பிரச்சனை கடவுள் பற்றியது அல்ல. காமம் குறித்த விவாதங்கள் அவசியமா இல்லையா என்பது பற்றியது.

    ReplyDelete
  5. எனது வலைப்பூவுக்கு வந்து அழைப்பு விடுத்தமைக்கு நன்றி!

    கமலின் கவிதைக்கு எனது எதிர்ப்பை எனது வலைப்பூவில் தெரிவித்துவிட்டேன்.

    ReplyDelete
  6. கமலஹாசன் தமிழ் சினிமாவை யாருமே சிந்திக்காதவண்ணம் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்பவர்.தமிழில் உதட்டோடு உதட்டை ஒட்டச்செய்தவர்.திருமணம் ஆகாமலேயே லிவிங்டுக்கெதர் நடத்தலாம் என தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தி,இன்று பல இளைஞர்களும்,பெண்களும் திருமணம் ஆகாமலேயே,உடல் இச்சையைத்தீர்த்துக்கொள்ளும் வாழ்க்கைக்கு அச்சாரம் போட்டுள்ளனர். இ ந்தப்பாட்டும் அப்படித்தான்.லீனா மணிமேகலையின் அழகிய பெண் கவிதையத்தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கிறது. இ ந்தப்பாட்டு இனி வீட்டில் அனைவரும் பார்க்கத்தகுந்த முறையில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வரும்.காமம் குறித்து சின்ன குழ ந்தைகள் முதல் அம்மா,அப்பா,அக்கா,தங்கை, அண்ணன், தம்பி என ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும் என மாற்று விரும்புகிறதா?கமல் ஹாசன் தனது ஆபாசக்கவிதையை தனது வீட்டோடு வைத்துக்கொள்ளட்டும்..உலகநாயகன் தனது வயதுக்கேற்றவாறு நடந்து கொள்ளட்டும்..எதற்குத்தான் விவாதம் என்ற விவஸ்தை கிடையாதா?

    ReplyDelete
  7. காமம் என்பது பள்ளியில் பாடமாய் இருந்திருந்தால் ,மனப்பாடம் செய்து மார்க் கிடைத்தபின் மறந்திருப்போம்

    ReplyDelete
  8. மதிப்பிற்கு உரிய ஈஸ்வரன் ஐயா அவர்களே, முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விவாதம் "பெண்களும் குழந்தைகளும் கேட்க கூடாத கவிதையா இது என்பது.." உங்கள் கருத்து பெண்கள் கேட்க கூடாது என்பதா? அப்படியென்றால், மறு கேள்வி எதுவும் கிடையாது.. நீங்கள் ஆணாதிக்கத்தின் பகுதி என்று உணர்ந்து கொள்கிறேன்.

    உங்கள் கருத்து குழந்தைகள் கேட்க கூடாது என்பதா? அப்படியென்றால், தலைவனும் தலைவியும் அன்பு செய்யும் அக நானூறு கல்வி கூடங்களில் எதற்கு? தங்கள் கருத்தை மறுதலிப்பது மட்டுமே எனது எண்ணம் அன்று. சிறு வயதில் பலான புத்தகங்களை தேடி சென்ற உங்கள் நண்பர்கள் யாவரும் இல்லையா? குறைந்த பட்சம் அரைகுறை ஆடையை தேடிய அரைகுறை வயதினர்கண்டதும் இல்லையா? கண்டதை உண்மை என்று நம்பாமல் பெற்றவர்களிடம் கலவி பற்றி விவாதம் செய்வதில் என்ன தவறு. இனியேனும் சாமி போட்ட பிச்சையாக தன்னை என்னும் குழந்தைகள் குறையட்டும்.

    அருள் அய்யா அவர்களே, காமம் என்பது பள்ளியில் பாடமாய் இருந்திருந்தால் ,மனப்பாடம் செய்து மார்க் கிடைத்தபின் மறந்திருப்போம். இல்லாத காரணத்தாலேயே என்னவென்றே புரியாமல் பல பிஞ்சுகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)