Sunday, December 12, 2010

அடிப்படைகளின் மீது ஒரு விசாரணை!

                                
 வரலாறு எப்போதும் மனிதர்களின் விருப்பமாகவே இருந்துள்ளது. தங்களது முன்னோர்கள் வாழ்ந்த முறையை கற்றுணர விருப்பமற்ற மனிதனை கானுதல் அறிது. கடந்த கலங்களின் நாகரீகங்களை, வாழ்வியல் முறையை அறிந்துக்கொள்வதிலும் தங்களை அத்துடன் அடையாளப் படுத்திக்கொள்வதிலும் மனித சமூகம் ஒருவித பெருமிதம் கொள்கிறது.
இந்த பெருமிதம் ஒருவகையில் மக்கள் திரட்சிக்கும் வழிவகை செய்கிறது. அந்நியர்கள் தங்கள் தேசத்தை அடிமைப்படுத்திய காலங்களில் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டினர் தங்களது முன்னோர்களின் பெருமைகளை உயர்த்திப்பிடித்தே மக்களை திரட்டி போராடி உள்ளார்கள். நினைவில் வையுங்கள்; உண்மைக்கு புறம்பான அடிப்படைகளற்ற வரலாறு மக்களை பிளவுபடுத்துவதிலும் அவர்களுக்குள் மோதல்களை உருவாக்குவதிலும் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டச் சம்பவம். உண்மைகள் மீது மத நம்பிக்கைகள் சார்ந்த புனைவை கட்டமைத்து பல்லாயிரம் மக்களின் உயிரைக்குடிக்க வரலாறு பயன்பட்டத்தை யாரும் மறுக்க முடியாது. 1528 முதல் 1914 க்குள் 77 முறை அந்நியர்கள் அயோத்தி மீது படையெடுத்ததாகவும் இந்த சமயங்களில் ராமர் பிறந்த இடத்தை காக்க 3.5 லட்சம் இந்துக்கள் மடிந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளின் பாடதிட்டத்தில் எழுதியுள்னர். இதற்கு அறிவியல் ரீதியான வரலற்று சான்றுகள் எதுவும் கிடையாது. ஆகவே வரலாற்றை மிகவும் கவனத்துடன் அனுக வேண்டியுள்ளது.

    இந்திய வரலாற்றில் வியாபாரத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சியை அமைக்க ராபட் கிளைவ் பிளாச்சி யுத்தத்தில் வெற்றியை ஈட்டிய பின்பும் 100 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது. காரணம் அவர்கள் வால் முனையில் நம்மை அடிமைப் படுத்த துவங்கவில்லை. இங்கிருந்த குறுநில மன்னரக்ள், மன்னர்கள், மொகலாய பேரரசின் அனுகூலங்களை பெற்று மெல்ல மெல்ல வளர்ந்து வந்தனர். பின்பு 1835 ஆம் ஆண்டு வாக்கில் பேரரசரின் பெயரை நீக்கிவிட்டு கிழக்கிந்திய கம்பெனி நாணயங்களை அச்சிடத் துவங்கிய பின்புதான் இந்திய மக்களுக்கு அது ஒரு அந்நிய ஆட்சியின் ஆதிக்கம் என முழுமையாக பிடிபடத்துவங்கியது. அதே ஆண்டில் பாரசீகத்தை நீக்கிவிட்டு ஆங்கிலத்தை அரசவை மொழியாக மாற்றினர். அதன் பிரகு இங்கிருந்த மன்னர்களை செல்வாக்கு இழக்கச்செய்து மொத்த ஆட்சியையும் கைப்பற்றினர். இவர்களின் அதிகார பசியை எதிர்த்து நடந்ததுதான் 1857 கிளர்ச்சி.

முதல் இந்தியச் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்படுகின்ற 1857 ஆம் ஆண்டு நடந்த இந்திய பெருங்கிளர்ச்சி பல வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் அனைத்தும் பெரும்பாலும் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களாள் பதிவு செய்யப்பட்டதாகவே உள்ளது. அவர்களின் பெரும்பாலான ஆவனங்களை வைத்து இந்திய வரலாற்று ஆய்வு மையத்திற்கு சுரேந்திரநாத் சென் எழுதிய புத்தகம்தான் 1857. இந்த கிளர்ச்சியில் பங்கு கொண்ட ஒரு இந்தியர் கூட இதுகுறித்து பதியவில்லை என்பது ஆச்சரியமனாதுதான். கிட்டத்தட்ட 700 பக்கங்களுக்கு மேல் விரிந்து படர்ந்துள்ள இப்புத்தகம் பல அசைக்கமுடியாத ஆதரங்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆதாரங்கள் முன்பே சொல்லப்பட்டது போல கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை பற்றிய அறிக்கைகள், மாவட்ட ஆட்சியராளர்களுக்கிடையே நடந்த அலுவளவிலான உடையாடல்கள், அரசை மறு கட்டமைப்பதற்கு அலுவளவிளான கடிதப் பதிவுகள், தன்வரலாற்றுக் குறிப்புகள், அல்லது ஆங்கிலேயர்கள் தங்கள் விசாரனைக்காக தயாரித்த சான்றுகளும் குற்றச்சாட்டு அறிவிப்புகளும், உளவாளிகளின் அறிக்கைகள், ஆள்பவரிடம் பலனடைய விசுவாசமிக்க சுதேசிகள் எழுதிய குறிப்புகள் போன்ற ஆங்கிலேயர்களின் படைப்புகளிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிளர்ச்சிக்கும் கொழுப்புத் தடவப்பட்ட தோட்டாக்களை ஆங்கிலேயர்கள் படுத்தியதுதான் காரணம் என பலரால் சொல்லப்படுகிறது. இது அப்போராட்டத்தை பற்றவைக்க ஒடு சிறு பொறியாய் பயன்பட்டிருக்கலாமே அல்லாது இதுவே காரணம் இல்லை என்பதை இந்நூல் படித்து முடிக்கும் போது உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வெளித்தோற்றத்தைவிட மேலும் வலிமை படைத்த பல காரணங்கள் இருந்தது என்பதை காரணங்கள் மற்றும் முன்விளக்கம் என்ற பகுதிகளில் விரிவாக அலசப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஆங்கில அரசு தலையிட்ட பல சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது. இந்து கோயில்களை கிருத்துவர்களான அந்நியர்கள் மேலாண்மை செய்யத் துவங்கியது, தலைமுடி, மீசையை ஒழுங்கமைக்கச் சொன்னது, சதி என்ற உடன்கட்டை பழக்கத்தை தடுத்தது போன்ற நடவடிக்கைகளால் இந்திய மக்கள் கிளர்ந்தனர் என்று சென் குறிப்பிடுகிறார். ஆனால் இந்திய சமூகத்தில் உள்ள மேல்தட்டு வர்க்க மக்களின் பழக்கங்களே இவைகள். இந்திய நாட்டின் பெரும்பாண்மையான மக்கள் சதி என்ற பழகத்தை கைகொள்ளவில்லை. இது உயர்சாதியினரின் பழக்கமாகவே இருந்தது. ஆக இந்திய நாட்டின் உயர்குல மக்களின் கோபம் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தூண்டியது எனக்கொள்ளலாம்.

அடுத்து ட்ல்ஹவுசியின் கோட்பாடு இந்த கிளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது. அவரது கோட்பாட்டின்படி இந்தியாவில் இருந்த ஒவ்வொரு தனி அரசையும் ஆங்கிலேய நிலப்பகுதியுடன் இனைத்தார். வாரிசு இல்லாத அரசுகள் அவர்களுக்கு தானாய் வந்து சேர உதவியது இந்த கோட்பாடு உதவியது. இதனால் கோபம் அடைந்த மன்னர்கள் தங்களின் மணிமுடியை மீண்டும் கைப்பற்ற இந்த கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். ஆனால் ஒரு கட்டுக்கோப்பாந போராட்டமாக இதை இந்திய கிளர்ச்சியாளர்களால் நடத்த முடியவில்லை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் எப்படி போராட்டம் ஒருங்கினைக்கப்பட்டது என்பதை முழுமையாக இந்நூல் விலக்கவில்லை.

 மீரட், டெல்லி, கான்பூர், அயோத்தி, பீஹார், ஜான்சி, ராஜபுதானமும் மத்திய இந்தியாவும், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் அந்த கிளர்ச்சியின் போது நடந்த சம்பவங்களை சென் ஆங்கில அதிகாரிகளின் குறிப்புகளின் வழி நின்று விளக்குகிறார். அதனாலோ என்னவோ நம்மை துரோகம் செய்து அடக்கியாள வந்தவர்களை மிகவும் மேன்மையாக குறிப்பிடுவதும், இந்தியர்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் குறிப்பிடுவதும் இந்த புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. உதாரணத்திற்கு ஜான் நிக்கல்சன் என்ற அதிகாரியை கீழ்வருமாறு அறிமுகம் செய்கிறார் சென். "அவர் வீரகாவியங்களில் வரும் வீரர்களின் வரிசையில் வைக்கத் தகுந்தவர். காவிய வீரர்களின் வீரத்தையும், கொடுமையையும் அவரிடத்தில் கானலாம். பாய்ந்துவரும் வேங்கையையே தன் கைவாளால் வெட்டி வீழ்ந்தும் தீரன். அஞ்சா நெஞ்சன். கொடுமையான வெயிலிலும் ஓயாது போர் செய்யும் உடலுரம் பெற்றவர்" இப்படி ஆங்கிலேயர்களை பாராட்டும் சென், இப்புதகம் முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய இந்திய சிப்பாய்களை கீழ்மக்கள், தாழ்ந்த சாதியினர், கட்டுபாடட்றவர்கள், கொலைபாதகம் செய்பவரக்ள் என்ற ஆங்கிலேயர் குறிப்புகளில் உள்ள வார்த்தைகளாலே எழுதியுள்ளார்.

இந்திய சிபாய்கள் ஆங்கிலேயர்களையும் அவர்களது குடும்பங்களையும் கொலை செய்யும்போது ஆங்கிலேயர்கள் மீது இருக்கும் அனுதபம் லட்சக்கனக்கான இந்திய சிப்பாய்களின் குடும்பங்கள் சிதைக்கப்படும் போது நூல் ஆசிரியருக்கும் எழுந்திடாமல் இருப்பது வியப்பாக உள்ளது. ஆவண பதிவுகளில் உள்ள விபரங்களை வைத்து நேர்மையாக எழுதியதைப் போல நூல் தோற்றம் அளித்தாலும் இந்திய வரலற்று ஆய்வு மையத்தின் நூலாக உள்ள இதை இன்னும் ஆழமாய் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உணர்வு படிக்கும் போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட முடியாது. இன்று முதல் சுந்தந்திரப் போர் குறித்து நம்மிடம் உள்ள மாயைகளை புரட்டிபோட இப்புத்தகம் மிகவும் உதவும். ஜான்சிராணியும், பகதூர்ஷாவும், மங்கள் பாண்டேவும் ஏதோ ஆங்கிலேயர்களை எதிர்க்க அவதாரம் எடுத்ததைப் போல எழுதிவருவது மறுவாசிப்புக்குறியதுதான். கிளர்ச்சி நடைபெறும் காலங்களில் ஜான்சி ராணி ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்கள் இணைபபுகள் பகுதியில் உள்ளது. தன்னுடைய அதிகாரம் மீண்டும் கிடைத்தால் கிளர்ச்சியை நிறுத்த பல மன்னர்கள் மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.

மீள்பார்வை பகுதியில் இக்கிளர்ச்சி திருப்தியடையாத சிப்பாய்களின் தன்னிச்சையான போராட்ட வெளிப்பாடா? அல்லது திறமையான அரசியல்வாதிகளால் புத்திசாலித்தனத்துடன் வடிவமைக்கப்பட்டதா? இராணுவத்தினர் மட்டுமே பங்கு கொண்ட ஒரு கலகமா? அல்லது பெருபாண்மையான மக்களின் ஆதரவை பெற முயற்ச்சித்ததா? கிருத்துவர்களுக்கு எதிரான ஒரு மத ரீதியான போரா? அல்லது கருப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையில் யார் உயர்ந்தவர்கள் என்று காண இன ரீதியில் நடந்த போரா? இந்த போர் நெறிமுறைகள் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியதா? போரில் ஈடுபட்ட அனைவரும் தமது நாகரீகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஆதரவாக போராடினார்களா? போன்ர கேள்விகளை எழுப்பி அதற்கான விடையை தேட முயன்றுள்ளார்.

 எப்படி பார்த்தாலும் இந்த புத்தகம் ஒரு முக்கியமான புத்தகம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவசியம் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.

(1857 ஆசிரியர்:சுரேந்திரநாத் சென் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் விலை : 350 )

எஸ்.ஜி.ரமேஷ்பாபு


2 comments:

  1. நல்ல பதிவு ... புத்தக அறிமுகங்களை பதிவிடுவதைத் தொடரவேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. இன்று முதல் சுந்தந்திரப் போர் குறித்து நம்மிடம் உள்ள மாயைகளை புரட்டிபோட இப்புத்தகம் மிகவும் உதவும். ஜான்சிராணியும், பகதூர்ஷாவும், மங்கள் பாண்டேவும் ஏதோ ஆங்கிலேயர்களை எதிர்க்க அவதாரம் எடுத்ததைப் போல எழுதிவருவது மறுவாசிப்புக்குறியதுதான். கிளர்ச்சி நடைபெறும் காலங்களில் ஜான்சி ராணி ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்கள் இணைபபுகள் பகுதியில் உள்ளது. தன்னுடைய அதிகாரம் மீண்டும் கிடைத்தால் கிளர்ச்சியை நிறுத்த பல மன்னர்கள் மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.

    முக்கியமான கருத்து தொடர்ந்து எழுதுங்கள்தோழர்

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)