Friday, December 3, 2010

வெள்ளப்பெருக்கும், வீணாகும் தண்ணீரும்!





ந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் ஓரளவு கூடுதலாக தமிழகத்திற்கு மழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன. இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் என்றாலும், தமிழகம் வெள்ளக்காடாக மாறி, ஆங்காங்கே மக்கள் துன்பத்தில் மூழ்கியிருப்பது வருத்தமளிக்கிறது.

மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன. மக்களின் உடமைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றத்தால் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றாலும், வெள்ளப்பெருக்கை முறையாக தடுத்து நிறுத்தி நீரை சேமிக்க மாநில அரசு தவறி விட்டதும் ஒரு காரணமாகும். பற்றாக்குறை காலங்களில் அண்டை மாநிலங்களில் தண்ணீர் பெறுவதற்காக முயலும் மாநில அரசு, மழைக் காலங்களில் கிடைக்கும் உபரி நீர் கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. உபரி நீரை சேமிப்பதன் மூலம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், வெள்ளப் பெருக்கெடுத்து விவசாய நிலங்களையும், மக்கள் வாழும் இடங்களையும் சேதப்படுத்துவதிலிருந்து பாதுகாக்க முடிந்திருக்கும். சோழ மன்னர்களாக தங்களை சித்தரித்து மகிழ்ச்சி அடைபவர்கள், சோழ மன்னர்கள் காவிரி பெருக்கெடுக்கும் காலங்களில் சேமிப்பதற்காக அமைத்த நீர்த்தேக்கங்கள் போல, தேவை அறிந்து இக்காலக் கட்டத்தில் அமைக்க தவறிவிடுகின்றனர்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. 2005-ல் மேட்டூர் அணை ஒரே ஆண்டில் நான்குமுறை அதன் முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ல் மட்டும் 400 டிஎம்சி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டடது. 2006-ல் 300 டி.எம்.சி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2 அன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் அந்த ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் மட்டம் இருந்து வந்தது என்பது அணையின் வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்பட்டது. 2007-ம் ஆண்டு 100 டி.எம்.சி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது. இப்படி அடிக்கடி மேட்டூரிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கிறது. இந்த நீரை சேமிப்பதற்கான வழிமுறைகளை ஆராய அரசு இப்போதாவது முன்வர வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் மாவட்ட விவசாயிகள், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 110 அடிக்கு மேல் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நிச்சயம் அது தன் முழு கொள்ளளவை எட்டிவிடும். அதற்குமேலும் நீர்வரத்து இருக்கும் என்பதால் அவை அப்படியே திறந்து விடப்பட்டால் கடலூர் மாவட்டம் அதனால் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முன்கூட்டியே நீரை வெளியேற்றி வெள்ளப்பெருக்கை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது போன்று முன்கூட்டி அறிந்து செயல்படுகின்ற தேவை இன்று தமிழக அரசிற்கு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நிரம்பி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. மேட்டூரிலும் அணை நிரம்பி விட்டதால் வெளியேற்றப்படும் உபரி நீர் கடலூர் மாவட்டத்திற்கு பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எனவே வெள்ளப்பெருக்கை கட்டுப் படுத்துவதற்கும் உபரி நீரை சேமிப் பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உபரி நீர் வீணாவதை தவிர்த்து, சேமிப்பதற்காக, முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தமிழக அரசிற்கு ஆலோசனைகள் சிலவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து 24-08-2007-ல் திருச்சியில் என்.ஐ.டி-யில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியுள்ளார். ஒரு நீர்த்தேக்கம் நிறைந்து வழிந்துகொண்டிருக்கையில், ஓர் நீர்த் தேக்கம் நிரம்பாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, இவைகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும்; நீரையும் சேமிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இன்று வெளிப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் அதன் மிக அருகில் உள்ள பவானி சாகர் அணை நிரம்பாமல் உள்ளது. மேட்டூரின் உபரி நீரை பவானி சாகர் அணைக்கு திருப்ப வழி காண வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் தனது உரையில், தமிழ்நாட்டில் உள்ள நீர்த் தேக்கங்களை இணைப்பது தொடர்பாக காமராஜ் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கொடுத்துள்ள அறிக்கையை தமிழகத்தின் இரு முதலமைச்சர்களிடமும் தான் கொடுத்திருப்பதாகவும், அவர்களும் இந்தப் பிரச்சனை குறித்து அறிந்துள்ளதால் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காமராஜ் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள சாத்தனூர், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப் பாறை, சோலையாறு, பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகளை இணைப்பது குறித்தும், அதுபோலவே பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரப்பாக்கம், வீராணம் மற்றும் முகவை மாவட்டத்திலுள்ள ஏரிகளை இணைப்பதற்கும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பொதுவான நீர்வழிப் பாதை (Tamilnadu water ways GRID) அமைக்கலாம் என்றும், இந்த திட்டத்தை 5 கட்டமாக 5 முதல் 8 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியும் என்றும், இதற்கு 36,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 350 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - வைகை அணைகளை இணைப்பது என்றும், இரண்டாவது கட்டமாக 250 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - பள்ளார் நீர்த்தேக்கங்களை இணைப்பது என்றும், 3-வது கட்டமாக 150 கி.மீ. இடை வெளி உள்ள வைகை - தாமிர பரணி ஆறுகளை இணைப்பது என்றும், நான்காவது கட்டமாக 130 கி.மீ. இடைவெளி உள்ள தாமிரபரணி பெருஞ்சாணி நீர் நிலைகளை இணைப்பது என்றும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 4600 கோடி ரூபாய் ஒதுக்கினால் இத்திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற முடியும்..

இந்த திட்டத்தை நிறைவேற்றினால், அதன் காரணமாக

*    ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி சேதாரங்களை தவிர்க்க முடியும்,

*    7,50,000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு கொண்டு வர முடியும்

*    2150 மெகாவார்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்

*    நிலத்தடி நீர் உயரும் என்பதால் மின் சாரம் கொண்டு நீர் பெறுவதை தவிர்ப்பதன் மூலம் 135 மெகாவார்ட்ஸ் மின் சாரம் மிச்சம் செய்ய வாய்ப்பு உண்டு.

*    5 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரும் கிடைக்கும்

*    900 கி.மீ.தூரத்திற்கு நீர்வழிப்பாதை அமைவதால் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் சாலைப்போக்குவரத்து செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.

*    மீன் வளத்தை பெருக்க முடியும்.

*    வெளிமாநில சுற்றுலாவாசிகளை ஈர்க்க முடியும்.

இவ்வளவு நன்மைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும். இதனை வெகுஜன அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்.

-க.ராஜ்குமார்

1 comment:

  1. அருமையான திட்டங்கள், ஆனால் நம் சோம்பேறி அரசியல் வாதிகள் இதனை நிறைவேற்றுவார்களா... அவர்களை சொல்லி குற்றமில்லை , விழிப்புணர் கொஞ்சம் கூட இல்லாமல் ஓட்டுப் போடும் மக்கள் மேல் தான் தவறு உண்டு, செய் அல்லது தோற்றுப் போ என்று அவர்கள் தேர்தலில் சொன்னால் தான், நாடு முன்னேறும்

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)