Tuesday, December 14, 2010

கவனமுடன் படிக்க வேண்டிய நூல்...


இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை மறுவாசிப்பு செய்ய ஹெச்.ஜி.ரசூல் எழுதிய “இஸ்லாமியப் பெண்ணியம்” என்கிற இந்த நூல் பயன்படும்.

இஸ்லாமியத்தில் பெண்ணிய வாசிப்பின் மூலம் பெண்கள் மீதான ஒடுக்குமுறை சார்ந்த கருத்துக்களை ஓரளவு தகர்க்க முடியும். தலாக், நான்கு திருமணம், சுன்னத் ( ஆண்குறி நுனி சீரமைப்பு ) குறித்தவை பொது விவாதமாக இருந்து வருகிறது. மனித உயிர் தோற்றத்திலேயே ஆணாதிக்க கருத்தை ஆழப்பதித்தே இஸ்லாம் துவங்குகிறது. அல்லா தனது சாயலில் ஆதாம் என்ற ஆணைப்படைத்து அவனிலிருந்து பெண் என்பவள் படைக்கப்பட்டாள் என்ற கருத்தை விதைத்துவிட்டது. ஆணில் பெண் அடக்கம் என்ற புரிதலிலிருந்து குரா னும், ஹதீசும் போதிக்கப் பட்டுவிட்டது. இருப்பினும் அதில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும் சொல்லப்படு வது மறுப்பதற்கில்லை. ஆண், பெண் என்ற உயிரியல் அடையாளத்தை ஆணுக்கு சாதகமாக மாற்றியுள்ளது. இஸ்லாமிய பெண்ணியம் என்ற இச்சிறு நூலின் மூலம் பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்துக்களை நொறுக்கும் பணியை ஹெச்.ஜி.ரசூல் துவக்கியுள்ளார்.

குரான், ஹதீஸ் நூல்களை அவர் நியாயப்படுத்தவில்லை என்றாலும் அதில் உள்ள நியாயத்தை தேடி அறிந்து விளக்கியுள்ளார். பெரும் பகுதி இஸ்லாமியர்களே அறியாத பண் பாட்டு சொற்களுக்கு அர்த்தத்தை விளக்கியுள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் என்பது 7ம் நூற்றாண்டில் வானவர் மூலம் அரபி மொழியில் இறக்கப்பட்டதெனவும்; அதீஸ் என்பது நபிகள் நாயகம் (வரஹ்) மறைந்து 200 ஆண்டுகளுக்கு பிறகு சுன்னி முஸ்லிம்களால் துவக்கப்பட்ட தெனவும் இந்நூலில் தகவல் உள்ளது. இஸ்லாம் பலதாரமணத்தை அங்கீ கரிக்கிறது. ஆண்கள் நினைத்த நேரத் தில் முத்தலாக் சொல்லி மனைவியின் உறவை துண்டித்துக் கொள்ளலாம். அறிவியல் வளர்ச்சியில் தொலைபேசி, தந்தி, இணைய தளத்தில் கூட தாம்பத்ய பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும் என்று ஆண்கள் தங்கள் மேலாதிக்க கருத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். மனைவிக்கு தகாத உறவு இருப் பதாக கணவர் குற்றச்சாட்டு வைத்தால் தலாக் பஞ்சு மிட்டாய் வாங்குவது போல் எளிதாகிவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யவே சிலர் இஸ்லாத்திற்கு மாறும் அபாயம் உண்டு.

பலதார மணத்திற்கு அடிப்படை வாதிகள் சொல்லும் நியாயம் யாதெ னில் போர்க் காலத்தில் மாண்டவர்களின் மனைவியருக்கு வாழ்க்கை கொடுப்பது அடிமை, அனாதை ஆகியோரையும் ஒரு சேர மணக்கலாம் என்பதாகும். இந்த மனைவிமார்களை சமமாகவும், திருப்தி கரமாக வைத்திருக்க வேண்டுமென்பது இறை கட்டளையாக உள்ளது. - ( அன் னிஸா அத்தியாயம் 4. வசனம் 3 )

நான்கு திருமணம் என்பது முஸ்லிம்களின் வாழ்வில் யுத்தச் சூழலில் எடுக்கப்பட்ட கருத்தாகும். ஆனால் போரற்ற அமைதியான இந்த சூழல்க ளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் களின் மீது இதை திணிப்பது சரியன்று என ஆசிரியர் சாடுகிறார்.

தலாக் முறைக்கு முன்னர் முத்ஆ, ஈலா, ழிஹார், லீஆன் ஆகிய நடை முறைகள் பின்பற்றப்பட்டிருந்தது. முத்ஆ என்ற முறை வாணிபத்திற்காகவும், போருக்காகவும் வெளியூர் செல்லும் ஆண்கள் தற்காலிகமாக குடும்பம் நடத்தும் முறையாக இருந்தது. இதற்கு தலாக் சொல்ல வேண்டியதில்லை. ஈலா: மனைவியை நான்கு மாதங்கள் வரை தள்ளி வைக்கும் கணவனின் சத்திய வாக்காகும்.

ழிஹார்: மனைவியை தாயைப் போல் பாவித்து உடல் உறவு கொள்ளாமல் இருப்பது இதை நீக்க இரண்டு மாதம் நோன்பிருக்க வேண்டும்.

லீஆன்: தான் நடத்தை கெட்டவள் அல்ல என அல்லா மீது சத்தியம் செய்வது ( 4 நபர் சாட்சிகள் இல்லா பட் சத் தில் ) இந்த முறைகளுக்கு பின்னரே தலாக் வந்தது. நபிக்கு பிடிக்காத வார்த்தை தலாக் என்றும் கூறப்படு கிறது. தலாக் செய்யப் படுவதை தவிர்க்க சில வழிமுறைகள் உண்டு. மனைவிக்கு அறிவுரை சொல்வது, படுக்கையிலி ருந்து தள்ளி வைப்பது, அடித்து திருத் துவது. இறுதியாக இரு குடும்பத்தார் முன்னிலையில் சமாதானம் என்ற ஜன நாயக ( ? ) முறைகள் பின்பற்றப்படும். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்ல இஸ்லாம் போதிக்க வில்லை. மூன்று தவணைகளில் மூன்று மாத விடாய் பருவங்கள் பொறுத்திருக்க வழிகாட்டியது. ஆயினும் நடைமுறை யில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்வதே உள்ளது. தலாக் செய்து பிரிந்த பின்னர் சேர்ந்து வாழ நினைத்தால் மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து, அவர்களுக்குள் உடலுறவு கொண்ட பின் தலாக் செய்ய வைத்து மறுபடியும் திரு மணம் செய்து கொள்ளலாம்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திருமணமாகாத பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுக்கப்படும். கணவ னுக்கு துரோகம் செய்யும் மனைவிக்கு கல்லடி என்ற கடினமான தண்டனை உண்டு. இதில் பெரும்பாலும் மரணம் நிகழும். மனைவிக்கு துரோகம் செய்யும் கண வனுக்கு தண்டனை குறித்து தகவல் இல்லை.

குலாஅ: திருமணத்தின் போது வழங்கப்பட்ட மகர் தொகையை ஒப் படைத்துவிட்டு பெண்ணே விடுதலை கோரலாம். ஆனால், ஆண் சம்மதித் தால்தான் விவாகரத்து கிடைக்கும். 1973ல் ஷாபானு வழக்கில் ஜீவனாம்சம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாம் தலைவர்கள் ஏற்கவில்லை. ஆனால், தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு நல்ல முறையில் வாழ்வாதாரம் வழங் கப்பட வேண்டுமென குரான் வசனம் அல்பகறா அத்தியாயம் 2 : வசனம் 241ல் கூறப்படுகிறது.

அகீகா (தானம்) : அகீகா என்பது குழந்தை பிறந்தால் பிராணிகளை தானம் கொடுக்கும் வழக்கமாகும். அரபு பழங்குடியின மக்களின் வழக்கமாக கொண்ட இந்த முறையில் ஆண் குழந்தைக்கு 2 ஆடுகளும் பெண் குழந்தைக்கு 1 ஆடும் தானம் கொடுக்க வேண்டும். பெண்சிசுக் கொலையை தடுக்கவே ஒரு ஆடு கொடுத்தால் போதும். குழந்தைகளில் ஆண் பெண் வேறுபாடு காண்பதை களைந்தால் சொர்க்கம் கிடைக்கும் என ஹதீசு கூறுகிறது.

ஹைளு (தீட்டு) பெண்களின் மாதவிடாய் காலத்தை ஹைளு என்பார்கள். இந்த நாட்களில் குரானை தொடுவதும் நோன்பு வைப்பதும் பாவம் என்ற கூற்றை புகாரி ஹதீஸ் மறுக்கிறது. தாயின் காலடியில் சொர்க் கம் உள்ளது எனும் நபியின் கூற்றுக்கு தீட்டு கோட்பாடு முரணாக உள்ளது.

“பெண்ணுக்கு எதிராக வலுவான ஒடுக்கு முறைகள் இருந்தாலும் பல பெண் அறிஞர்கள் தடம்பதித்துள்ளனர்.

சமய ஆய்வாளர்கள் சுலேமி, ராபியா, பஸ்ரிய்யா, நஃபீஸ்த்துல் மிஸ்ரிய்யா, ஆயிஷா, அல்மன் ரபியா, பீஅம்மா, செய்யதலி, பாத்திமா, கீழக்கரை நாச்சியா, செய்யது ஆசியா உம்மாள், தென்காசி ரசூல் பீவி, கச்சி பிள்ளையம்மாள் உட்பட பல பெண் அறிஞர்கள் வாழ்ந்துள் ளனர்.

அரபி மொழி என்பது தேவ பாஷை அல்ல. அரபி மக்கள் அறியும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது “அரபிகளே நீங்கள் நன்கு அறிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனை அரபி மொழியில் இறக்கி வைத்தோம்” (யூசுப் அத்தியாயம் 12: வசனம் 2 ) என்று ஹதீசு கூறுகிறது.

அல்லா ஆணுமில்லை, பெண்ணு மில்லை என்று கூறும் இஸ்லாம் இறை வன் அருள்வான், தருவான், பார்க் கிறான் என்று அன் விதி இட்டு கூறுவது முரணாக உள்ளது.

இஸ்லாம் மதத்தில் நிலவும் பெண் களுக்கு எதிரான கருத்துகளையும் வன்கொடுமைகளையும் முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும். அதற்கு முன்னதாக இஸ்லாமியர்கள் தங்களுக்குள்ளே பெண் அடிமைத்தன கருத்தை சாடி விடுதலைக்கான வழியை காண வேண்டும் என்கிறார் நூலாசிரியர். இந்நூலை மிகக் கவனமாக வாசிப்பது அவசியம்.

இஸ்லாமியப் பெண்ணியம்

ஹெச்.சி. ரசூல்,


பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ தெரு, சென்னை-18. பக். 48, விலை ரூ.10

2 comments:

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)