Wednesday, December 1, 2010

பிரதமருக்கு தெரியாமல் நடந்ததா?

_______________
"திருவாளர் பரிசுத்தம் என்று மன் மோகன்சிங் குறித்து ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் உருகிக் கரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது உங்களால் தரையை ஈரமில்லாமல் வைத்திருக்க முடியாது."
_______________
கேள்வி: பிரதமருக்கோ அல்லது நிதியமைச்சருக்கோ என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? அவர்கள் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஏன் எச்சரிக்கை அடையவில்லை?

பதில் : அவர்களுக்குத் தெரியாமல் இருப்ப தற்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவு கடிதப் போக்குவரத்து நிகழ்ந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியமைச்சகத்திலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஏலம் விடப்படவேண்டும் என்று போட்டிகளுக்கான செயலாளர் வினோத்தால் தொலைத் தொடர்புத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஊடகங்களில் இது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கின்றது. 2008 மற்றும் 2010 ஆகிய வருடங்களில் இரண்டு முறை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இது பற்றித் தெரியாது என்பது மித மிஞ்சிய கற்பனையாகத்தான் இருக்க முடியும்.

என்னென்ன சாக்குப் போக்குகள் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதையே தான் செய்ததாகவும், ஒழுங்குமுறை ஆணையம் (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்ன பரிந்துரைத்ததோ அதையே தான் செய்ததாகவும் ராசா கூறுகின்றார். இது உண்மை என்று ஒரு நிமிடம் கருதிக் கொள்வோம். (யாரையும் சாராமல்) சுயேச்சையாகச் செயல்படும் ஒழுங்குமுறை ஆணையம் அளவற்ற நஷ்டம் ஏற்படுத்தும் ஒரு செயலைப் பரிந்துரைத்திருக்கின்றது. அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா? இரண்டாவது கேள்வி என்னவென்றால், கண்கூடாக அவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும்போது அரசாங்கம் ஏன் ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை தன்னுடைய மேலதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யவில்லை? அது மீறமுடியாத உண்மையாக எப்போதும் இருந்ததில்லை. இதற்கு முன்னர் பலமுறை அப்படி ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.

சந்தை விலைக்கு ஏன் புதிய உரிமங்கள் விற்கப்படவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. தான் விலையை அதிகரித்திருந்தால் புதிய நிறுவனங்களால் போட்டியிட்டிருக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் அலைக்கற்றையை மலிவான விலையில் பெற்றிருந்தார்கள் என்று ராசா கூறுகின்றார். ஹட்ச் நிறு வனத்திற்கு 12 பில்லியன் டாலர்கள் (1200 கோடி டாலர்கள்) கொடுத்த பின்னரும் வோடாபோன் நிறுவனத்தால் நிமிடத்திற்கு வெறும் 60 பைசா மட்டும் கட்டணம் விதிக்க முடிகிறது என்றால், ஏராளமான லாப விகிதம் இருக்கின்றது என்று பொருள். எனவே இந்த வாதம் தவிடுபொடியாகின்றது.

மேலே கேள்வி கேட்டது டெகல்கா வார இதழின் சோமா சௌத்ரி. பதில் சொன்னவர் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப் பின் முன்னாள் தலைவருமான ராஜீவ் சந்திரசேகர். (டெகல்கா, டிசம்பர் 4, 2010).

அது மட்டுமில்லை, முன்னர் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தவர். இப்போது தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினர். 2ஜி அலைக்கற்றை ஊழல் நடக்கப் போகின்றது என்று 2007ம் ஆண்டே இவர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என டெகல்கா இதழ் தெரிவிக்கின்றது.

திருவாளர் சுப்பிரமணியம் சுவாமி ஏதோ தான்தான் இந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் போலவும், யார் நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிக்கிற தர முத்திரையை மக்கள் தன்னிடம்தான் தந்திருப்பது போலவும் பந்தா பண்ணிக் கொண்டிருக்கின்றார். சவடால் பேசிக் கொண்டிருக்கின்றார். பிரதமர் ரொம்ப நல்லவராம். அவருக்கு இதில் சம்பந்தம் இல்லையாம்.

முதலில் மார்க்சிஸ்ட் கட்சியாலும், பின்னர் மற்ற எதிர்க்கட்சிகளாலும் இரண்டு வருடங்களாக எழுப்பப்பட்டு வரும் ஒரு பிரச்சனையில், சர்வ வல்லமை படைத்த பிரதமர் இத்தனை நாள் வாயே திறக்காமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? கிட்டங்கிகளில் நாறும் உணவு தானியங்களைக் கொடுத்தாவது பட்டினி கிடக்கும் மக்களின் வயிற்றை நிரப்புங்களேன் என்று உச்சநீதிமன்றம் சொன்னால், கொள்கை விஷயத்தில் எல்லாம் நீங்கள் தலையிடாதீர்கள் என்று உச்ச நீதிமன்றத்திற்கே சொல்கின்ற அளவிற்கு அதிகாரம் படைத்த (?)மன்மோகன் சிங் இந்தப் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் அதற்கு என்ன பொருள்?

மொத்த பழியையும் ராசா மீது போட்டு விட்டு அல்லது திமுக மீது போட்டு விட்டு தனக்கு இந்தக் கொள்ளையில் கூட்டே இல்லை என்று காங்கிரஸ் தப்பிக்கப் பார்க்கின்றது. உண்மையில் பிரதமருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கருதுவதற்குப் போதுமான நியாயம் உண்டு. ஏனெனில் பிரதமருக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு.

முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “இந்தியாவின் மொத்த அதிகார வர்க்கமும் இந்த நிகழ்வை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் செயல்முறை விதிகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாரை முட்டாளாக்குகின்றீர்கள்? எந்த அமைச்சகத்திடமிருந்தும் எந்த கோப்பையும், எந்த ஆவணத்தையும் எடுத்துக்கொள்ள பிரதமருக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது. நிதி சம்பந்தப்படவை என்றால் நிதியமைச்சருக்கும் எந்த கோப்பையும் கேட்டு வாங்கும் உரிமை இருக்கின்றது.’’ (சிக்பிலாசபி நெட்வொர்க் இணையதளம்)

செயல்முறை விதிகளின்படி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான எந்த முடிவும் அமைச்சரவையின் மூலம் மட்டுமே எடுக்கப்பட முடியும். இந்த இணையதளம் மேலும் கூறுகின்றது.

“2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது பிரதமர் அலுவலகத்தின் முழுத்தோல்வியாகும். இந்த அரசாங்கத்திற்குத் தலைவர் யார்? இந்திய மக்களுடைய நலன்களின் பாதுகாவலர் யார்? பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் அல்லது அமைச்சரவைச் செயலாளர் போன்றவர்களுக்கு ராசா அச்சம், நாணம் இன்றி மேற்கொண்டு செயல்படுவதிலிருந்து தடுப்பதற்கு பத்து நிமிடங்கள் தான் ஆகும். நாயர் தொலை பேசியை கையில் எடுத்து தொலைத் தொடர்புத்துறையின் செயலாளரை உடனடியாகப் பிரதமரைச் சந்திக்கும்படிச் சொல்ல வேண்டும், அவ்வளவுதான்” என்று அந்த முன்னாள் அதிகாரி மேலும் கூறுகின்றார்.

ஆனால், அது நடக்கவில்லை. ஒரு வேளை அது நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தால்,“எந்த ஐஏஎஸ் அதிகாரியாவது பிரதமரின் அலுவலகத் திலிருந்து வரும் அழைப்பை புறக்கணிக்க முடியுமா?’’என்று அதற்கும் அவரே பதில் கூறுகின்றார்.

யார் அமைச்சராக இருக்கலாம், கூடாது என்று தீர்மானிக்கும் அதிகாரம் முற்றிலும் பிரதமருக்கு உரியது. ‘பிரதமருக்கு இப்பிரச்சனையில் உண்மையிலேயே அக்கறை இருந்தது என்றால் அவர் நீண்ட காலத்திற்கு முன்னரே ராசாவை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகின்றார்.

திருவாளர் பரிசுத்தம் என்று மன் மோகன்சிங் குறித்து ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் உருகிக் கரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது உங்களால் தரையை ஈரமில்லாமல் வைத்திருக்க முடியாது.

-அசோகன் முத்துசாமி

6 comments:

  1. எதேச்சையாக உங்கள் பதிவிற்கு வந்தேன். உங்கள் கருத்துக்கள் மிக தெளிவாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் பிரதமர் எனக்கு தெரியாமல் நடந்தது என்று கண்டிப்பாக சொல்ல முடியாது.

    ReplyDelete
  2. இல்லை பிரதமருக்கு தெரியாது...
    கண்டிப்பாக பிரதமருக்கு தெரியாது...
    நான் சொல்லுகிறேன்பிரதமருக்கு தெரியாது...

    பிரதமருக்கே தெரியாமல் அவரின் சுவிஸ் / லங்கை வங்கி கணக்கில் ஊழல்வாதிகள் டெபசிட் செய்திருப்பர்கள்.

    பதவிக்காலம் முடிந்து தேர்தலில் தோற்றால் , சுக்ராம் 20000 கோடி திருடி பிரபல தொலைதொடர்பு நிருவனம் பினாமி பெயரில் ஆரம்பித்தது போல் , எதாவது செய்ய தோன்றும்பொது தான் அவருக்கு தெரியும்.

    அப்போது அது அவரின் அனுபவ சொத்து ஆகி இருக்கும்...

    இப்படி செய்வது ஊழல் வதிகளின் தவறு பிரத்மருடையது இல்லை...

    ReplyDelete
  3. Rs. 1 .76 Lakhs Crores - இதெல்லாம் ஒரு வகையில் Theoretical Derivals or Extrapolation தான்!
    அதற்காக யாரும் ''சுடவில்லை' என்பதாகாது. கூட்டு கொள்ளை என்பது பொருந்தும். Scientific and Systematic Loot Leader அறிவாலயத்தில் இருந்து ஆர்கெஸ்ட்ரா செய்திருப்பார். - அண்ணாவின் பெயரால். அன்னைக்கு பெரிய Size Cake துண்டு போயிருக்கும்!! சின்ன ராசாவிற்க்கு கேக்கு வெட்டிய கையை ''நக்கும்'' பாக்கியம் தவிர கரை படிந்த கத்தியை வைத்துக்கொள்ளும் பொறுப்பும் கண்டிப்பாக கிடைத்திருக்கும்.

    ராஜாவை கை விட்டால் பின்னாலேந்து குத்த கத்தி ஒதவும்!! சுப்பிரமணிய சாமி சொன்னாப்போலே ராசாவின் உயிருக்கு ஆபத்து வந்தா யாரை சந்தேகிப்பது?

    இடைத்தேர்தலில் கடலில் பெரும்காயம் கரைப்பது போல் எடுத்து செலவு செய்தாங்களே!! எப்படி சார் முடியும்.
    அப்படி இருந்தும் பீகாரில் ''ஊத்திக்கிச்ச்சே''. அதுமாதிரியே நம்ம ஊர்லேயும் புட்டுக்குமா?
    போன முறை ஒரே ஒரு சன் சேனல்லே கூவிநாரு!! இந்த முறை தசாவதாரம் மாதிரி பத்து சேனல்லே தெரிவாரு. எந்திரன் விளம்பரம் தோத்துடும்!!!1

    ReplyDelete
  4. அருள்!

    இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் எல்லாம் இருக்கிறதோ. அதற்காகத்தானே நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க மறுக்கிறது அரசு. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    bandhu!
    மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.


    வினோத்!
    ஹா..ஹா.. ஹா....!
    அதுவும் நடக்கும்.
    நன்றி.


    cnsone!
    கிண்டலும், கோபமும் கலந்த வார்த்தைகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். உண்மைதான். எந்திரன்கள் தோற்பார்கள். மனிதர்கள் ஜெயிப்பார்கள்.

    ReplyDelete
  5. //திருவாளர் சுப்பிரமணியம் சுவாமி ஏதோ தான்தான் இந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் போலவும், யார் நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிக்கிற தர முத்திரையை மக்கள் தன்னிடம்தான் தந்திருப்பது போலவும் பந்தா பண்ணிக் கொண்டிருக்கின்றார். சவடால் பேசிக் கொண்டிருக்கின்றார்.//

    பலரும் இது பற்றி பேசினாலும் எழுதினாலும் ராசா மீது வழக்கு தொடர வேண்டும் அனுமதி கொடுங்கள் என்று பிரதமர் பார்வைக்கு அதிகாரபூர்வமாக கொண்டு சென்று தொடர்ந்து விடாமால் முன்னெடுத்து சென்றது சுவாமி தானே.
    இப்போ நாம் கூடத் தான் பலதும் எழுதுகிறோம். அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லாத எதற்கும் தீர்வு எப்படி கிடைக்கும் ?

    http://wp.me/p12Xc3-19 (Mr Clean Singh Vz Joker சுப்ரமணிய சுவாமி)

    ReplyDelete
  6. அப்புரூராக மாறிய சுப்புவை விட்டுவிடுங்கள் என்கிறீர்களா?

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)