Monday, November 8, 2010

ஒபாமாவின் கொள்கைகளை எதிர்ப்பது ஏன்?



அமெரிக்காவின் 44வது அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். உலகின் அதி காரம் வாய்ந்த பதவி என்று கருதப்படும் இந்த பதவிக்கு ஆப்பிரிக்கர் - அமெரிக்கரான கறுப் பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா தேர்வு செய் யப்பட்ட பிறகு அவர் இந்தியா வருவது இது முதன்முறையாகும்.

அமெரிக்க அதிபராக பல அறிவு ஜீவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் 1789ம் ஆண்டு ஏப்ரல் 30ம்தேதி பதவியேற் றார். அதன் பிறகு 219 ஆண்டுகள் கழிந்த பிறகு தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டில் ஜனாதிபதியாக வர முடிந்துள் ளது. எவ்வளவுதான் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருந்தபோதும், ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் சமூக வாழ்க்கையில் இனவெறி எந்தளவுக்கு புரையோடி போயுள் ளது என்பதை இதன் மூலம் உணர முடியும்.

நவம்பர் 8ம்தேதி நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்ற உள்ளார். அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடது சாரி உறுப்பினர்களும் அவரது உரையை கேட்க உள்ளனர். கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற் றிய உரையை இடதுசாரிக் கட்சிகள் புறக் கணித்தன.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ்சுக்கு நாடாளுமன்றத்தில் உரை யாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது அரசை இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தது தான் இதற்கு காரணம்.

ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் ஒபாமா இந்தியா வந்துள்ளதாக கூற முடியாது. அமெ ரிக்காவில் நடந்த மாகாண இடைத்தேர்தலில் அவரது ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந் ததோடு செனட் சபையில் அவரது கட்சி சிறு பான்மையாக குறுகி விட்டது. இதனால் அவ ரது பதவிக்கு ஆபத்து இல்லை என்றபோதும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டு மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற போகிறார் என்பது கூர்மையாக கவனிக்கப்படும்.

தேர்தலின்போது பாரக் ஒபாமா படாடோ பமாக அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா குறித்து வெளியான புள்ளி விபரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளது. அந்நாட்டின் 90 சத வீத மக்கள் கடுமையான பொருளாதார சிக்க லில் சிக்கியுள்ளனர். வேலையின்மை தொடர் ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை வாசி விண்ணை தொடுகிறது. 2008ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வரு கிறது என்பதை கணிப்புகள் கூறுகின்றன.

உற்பத்தியை பெருக்குவது எப்படி என்று உலகிற்கு அமெரிக்கா உபதேசம் செய்கிறது. சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச நிதி அமைப்பு களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு பல்வேறு நிர்ப் பந்தங்களை தருவதோடு, ஆலோசனை களை வழங்குகிறது அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டின் பொருளாதார நிலையோ மிக வும் பரிதாபகரமான நிலையிலேயே உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 140 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. மேலும் 829 வங்கிகள் சிக்கலில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் கடந்த கால ஆட்சியாளர் கள் பின்பற்றிய உள்நாட்டு, வெளிநாட்டு கொள் கைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர் ஒபாமா. ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம். 2009 அக்டோபரில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்த விபரத்தை பதிவு செய்துள்ளன.

முந்தைய புஷ் நிர்வாகம் ஏற்படுத்திய பல சிக்கல்களை, கோளாறுகளை தீர்ப்பதற்கு ஒபாமா அளித்த பல வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன பிரச்சனைகளில் முந்தைய நிர் வாகம் மேற்கொண்ட அதே அணுகுமுறை யையே ஒபாமா நிர்வாகமும் பின்பற்றுகிறது. இராக் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியவில்லை. அந்த நாட்டில் முறையான ஜனநாயக ஆட்சியை நிறுவவும் இல்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள்தான் அந்தநாட்டின் பொரு ளாதாரத்தை தீர்மானிக்கின்றன. உலக நாடு களை சுரண்டுவதே அவர்களது நோக்கம். எல்லா வளமும் உள்ள அமெரிக்க நாட்டின் வர்க்க குணம் என்பது ராணுவ தளவாட- தொழிலை (Military Industrial Complex) அடிப்படையாக கொண்ட ஒரு நாடாகவே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால் ஒரு நாள் தீபாவளியை நம்பி சிவகாசி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகம் முழு வதும் போர் வெடித்து வேட்டுச் சத்தம் கேட் டுக் கொண்டேயிருந்தால்தான் அமெரிக்கா வின் பொருளாதாரம் நிலைபெற முடியும்.

இன்றைக்கு உலகில் 700 முதல் 800 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. சிறிதாகவோ, பெரியதாகவோ நூற்றுக்கும் மேற்பட்ட நாடு களில் அமெரிக்க ராணுவம் உள்ளது. பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிடுகிறது. முன்பு ஈரானுக்கும், இராக்குக் கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றது போல இப்போது இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற் பனை செய்கிறது.

1950களில் நாம் உணவுக்கு அமெரிக்கா விடம் கையேந்தி நின்றோம். பிஎல் 480 என்ற சட்டத்தின்படி நமக்கு உணவு வழங்க வகை செய்யப்பட்டது. அமெரிக்க ஒபாமா தன்னு டைய மக்களுக்கு வேலைகேட்க சீனாவை யும், இந்தியாவையும் நாட வேண்டிய நிலை யில் உள்ளார். ஒபாமா ஒற்றை ஆளாக இங்கு வரவில்லை. அவருடன் 250க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உடன் வருகிறார்கள். அமெ ரிக்காவில் தயாராகும் ராணுவ தளவாடங்கள், விமானங்கள், அணு உலைகள் ஆகியவற் றுக்கு சந்தை தேடி இங்கே வருகிறார் ஒபாமா. இவற்றை நாம் வாங்கினால் அவர்களுடைய நாட்டில் தொழில்வளர்ச்சி ஏற்படும், இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும். அவர்களது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை இறக் குமதி செய்து, நமது சந்தையில் விற்க வேண் டும் என்று கோரிதான் வந்துள்ளார்.

ஒபாமாவின் முதல்நாள் பயணத்திலேயே அமெரிக்க நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் 2.2 பில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உடன்பாடு செய்துகொண்டுள்ளன. இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிக்குமென குதூகலிக் கிறார் இந்திய பெருமுதலாளி டாடா. அமெ ரிக்காவில் 50ஆயிரம் பேருக்கு இந்த உடன் பாடுகளால் வேலை கிடைக்கும் என்கிறார் ஒபாமா. ஆனால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் என்பதை ஏற்கனவே நிராகரித்துவிட்டார். உயர் தொழில் நுட்ப விஷயங்களில் கட்டுப்பாடு படிப்படி யாகத்தான் தளர்த்தப்படும் என்றும் கூறி விட்டார்

ஆனால் விவசாயம், உயர் கல்வி, இன்சூ ரன்ஸ், வங்கி ஆகியவற்றில் அந்நிய முத லீட்டை அதிகரிக்க வேண்டுமென்று அமெ ரிக்கா நிர்ப்பந்தம் செய்கிறது. இதற்கு மன் மோகன்சிங் அரசும் துணைபோகிறது. சில் லரை வர்த்தகத்தில் தங்களை அனுமதிக்க வேண்டுமென்று வால்மார்ட் அதிகாரிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் தங்களது மால்களை நிறுவ அனுமதிக்க வேண்டுமென அவர்கள் நிர்ப்பந் திக்கின்றனர். சில்லரை வர்த்தகத்தில் வால் மார்ட்டை அனுமதித்தால் 4 கோடி சில்லரை வர்த்தகர்களின் நிலை, வாழ்க்கை சீரழியும்.

போபால் விஷவாயு விபத்துக்கு காரண மான ஆண்டர்சனை ஒப்படைப்பது குறித்து ஒபாமா எந்த உறுதிமொழியும் அளிக்க வில்லை. கியூபாவின் மீதான பொருளாதார தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக்காண்டு தீர்மானம் நிறைவேற் றியபோதும் அதை அலட்சியப்படுத்துவோர் பட்டியலிலேயே ஒபாமாவும் உள்ளார்.

ஒபாமா ஜனாதிபதியாக வந்ததால் கறுப் பின மக்களின் வாழ்க்கை விடிந்துவிட வில்லை. அமெரிக்காவில் வேலையின்மை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் கறுப் பின மக்களின் வேலையின்மை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இனவெறி என்பது பல் வேறு வடிவங்களில் அமெரிக்க சமூக வாழ் வில் தொடரவே செய்கிறது.

எந்தவொரு தனிநபரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சி களோ எதிர்ப்பதில்லை. அவர் பின்பற்றும் கொள்கை என்ன? அவர் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதை பொறுத்தே ஆதரவு அல்லது எதிர்ப்பு என் பதை முடிவு செய்கிறது. அந்த வகையில் ஒபாமா இந்தியாவை ரட்சிக்க வரவில்லை. மாறாக, சுரண்டலை, நிர்ப்பந்தத்தை தீவிரப் படுத்தவே வருகிறார். மரண வியாபாரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவே இங்கு வருகிறார். அவரது வருகையை எதிர்க்க இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து தேசபக்தர்களும் முன்வர வேண்டும்.

நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரிக்கட்சிகள் நடத்திட உள்ள ஏகா திபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசமே அணி திரளட்டும்.

- டி.கே.ரங்கராஜன் எம்.பி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)