Thursday, July 4, 2013

’நீதி’க்கு அப்பாற்பட்டதா நீதித்துறை??


பல்லடம் உமா மகேஸ்வரி அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மாட்டேன் என ஏமாற்றிய குன்னூர் தங்கராஜு அவர்களை கைது செய்தது பற்றி பரபரப்பான விவாதம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. இதிலே ஆரம்பத்திலேயே எல்லோரும் செய்கிற தவறே, உமா மகேசுவரி அவர்களை காவல்துறை உதவி ஆய்வாளராகப் பார்ப்பதும், தங்கராஜு அவர்களை நீதிபதியாகப் பார்ப்பதும் தான்.  
தங்கராஜு அவர்களைக் கைது செய்த பிறகு ஜாமீனில் விட்ட நீதிமன்றத்தின் நடைமுறையும் வழக்கறிஞர் சங்கங்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களும், ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்வதை இன்னமும் நாங்கள் நம்ப வேண்டுமா? என்பது தான்.
கன்னியாகுமரியில், உடுமலை குடிமங்கலத்தில், பல்லடத்தில் என மூன்று ஊர்களில் தங்கராஜு அவர்கள் உமா மகேசுவரியுடன் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் தான் தங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தங்கராசு அவர்கள் சார்ந்திருக்கிற நீதித்துறையின் சென்னை உயர்நீதிமன்றம் தான் இரு வாரங்களுக்கு முன்பாக, திருமணம் என்றால் தாலி, சடங்கு, சம்பிரதாயம் என்பதெல்லாம் கட்டாயம் அல்ல. வயந்துவந்த இருவர், மனதொத்து சேர்ந்து வாழ்ந்திருந்தாலே, கணவன் மனைவிதான் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறார்களா? என்று வழக்கறிஞர் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியதற்கான பல்வேறு சாட்சிகளையும் (குடிமங்கலத்தில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் உட்பட) பல்வேறு ஆதாரங்களையும் உமா மகேசுவரி அவர்கள் (குறுந்தகவல்கள், புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள்) வைத்திருக்கிறார்.
திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றினால் அது பாலியல் பலாத்காரம் என்று நீதித்துறைதான் சொன்னது. அதன்படிதான் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு நீதிபதி அதை முறையாக எதிர்கொண்டு வழக்கில் வாதாடித்தான் வெற்றி பெற வேண்டுமே தவிர அவரைக் கைதே செய்யக்கூடாது என்று கற்பிப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தத்தவறுமே செய்யாதவர் என்றே வைத்துக்கொள்வோம். எந்தத்தவறுமே செய்யாதவர் முகத்தை மூடிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து ஓடுவது ஏன்?
கைது செய்யப்பட்ட (arrest) அனவைரையுமே இயந்திரத்தனமாக நீதிமன்றக்காவலுக்கு (remand) அனுப்பக்கூடாது வாதிடும் சட்ட வல்லுனர்கள் வழக்கறிஞர்கள் அல்லாத, நீதிபதிகள் அல்லாத யாருக்கேனும் இப்படிப் போராடியிருக்கிறார்களா? அதிகாரம் இருக்கிற யார் வேண்டுமானாலும் என்ன கிரிமினல் நடவடிக்கையில் வேண்டுமானாலும் ஈடுபடலாமா?
அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கப்படத்தக்க ஜாமீனில் விடமுடியாத வழக்குப் பிரிவுகளில்சனிக்கிழமை கைது செய்யப்பட்டவருக்கு திங்கள் கிழமை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. அன்றே அது கோப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்றே அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, அன்றே அவரிடமிருந்து பதில் பெறப்பட்டு அன்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதுவும் எந்த நிபந்தனையும் இல்லாமல், ஜாமீன் தாரர்கள் கோரப்படாமல், ஜாமீன் வழங்கப்பட்டு, அந்த உத்தரவும் அன்றே வழங்கப்பட்டு, அது உடனடியாக பல்லடம் நீதிமன்றம் போய் சேர்ந்து, அங்கு உடனே ஜாமீன் பத்திரம் தயார் செய்யப்பட்டு. அது உடனடியாக அங்கிருந்து கோவை மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அங்கு நடைமுறைகள் முடித்து 5 மணிக்குள்ளாக விடுதலை செய்யப்படுகிறார் என்றால், இதுபோல விரைவான நடவடிக்கைகள் யாருக்கேனும் நடத்தப்பட்டிருக்கிறதா? தங்கராஜு அவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரா? மக்கள் நலன் காக்க சிறை சென்றவரா? பொது நோக்கிற்காக சிறை சென்ற யாருக்கேனும் இதுபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? அப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் கூட நீதிபதியைத்தவிர வேறு ஒரே ஒருவருக்காவது இப்படி நடத்தப்பட்டிருக்கிறதா?
வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்களே?  பொது நோக்கத்திற்காக சிறை சென்ற யாருக்காகவேனும் இப்படிப் போராட்ட அறைகூவல் விடுத்திருக்கிறார்களா? அப்படி சிலர் சிறை சென்றபோது, இது அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கை என்று ஒதுங்கிக்கொண்ட சங்கங்கள், இன்று தங்கராஜு அவர்களுக்காக களமிறங்குகிறதே? தங்கராஜுவின் நடவடிக்கை துறை சார்ந்ததா? பொது நலன் சார்ந்ததா? தனிநபர் குற்றத்திலும் மோசமான குற்றத்தில் அல்லவா சம்மந்தப்பட்டிருக்கிறார்?
அதிகாரம் ஒன்றைத்தவிர தங்கராஜுக்காக போராடவைக்கிற சக்தி எது? வழக்கின் பின்னணியை ஒருதுளி கூட ஆராய மறுப்பதுதான் கற்றறிந்த வழக்கறிஞர்களின் பகுத்தறிவா? உணர்வு வயப்பட்டே சில கேள்விகளைக் கேட்கிறோம். வழக்கறிஞர்களின் அக்கா தங்கைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டாலும் கூட இப்படித்தான் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நீதிபதி வழக்கறிஞர் என்ற அளவுகோலை மட்டும்தான் எடுத்துக்கொள்வீர்களா?   
     நியாயமாகப் பார்த்தால் தங்கராஜு அவர்களே நேர்மையாக தனது பதவியை விட்டு விலகி, வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபித்துவிட்டு பதவி ஏற்றுக்கொள்கிறேன் எனச்சொல்லியிருக்க வேண்டும். ஒரு நீதிபதியை இன்னொரு நீதிபதி எப்படி மனச்சாய்வு இல்லாமல் நேர்மையான வழக்கு விசாரணையை நடத்துவார்? என்கிற பொதுஜனங்களின் கேள்விக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?
     வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அதிகாரம் இருந்தால் யார் குடியை வேண்டுமானாலும் கெடுக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை நாம் அனுமதிக்க முடியாது.
- நீலவேந்தன், வழக்கறிஞர். 

1 comment:

  1. ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்வதை இன்னமும் நாங்கள் நம்ப வேண்டுமா? என்பது தான்.

    ஏற்கனவே நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்கு எழுந்த எதிர்வினையை நாம் மறந்திருக்கமுடியாது...
    அதேபோலத்தான் இதுவும்... இதைவிட கொடுமை குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜீ ஜாமீனில் வந்து மீண்டும் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்றுக்கொண்டாராம். அட்லீஸ்ட் தன்மீதான வழக்கு முடியும்வரையாவது அந்தப்பதவியில் அவர் அமராமல் இருந்திருந்தால் இவர்கள் நீதிதேவதையை மதிக்கிறார்கள் என்று நாம் நம்பியிருந்திருக்கலாம்... இந்த நாட்டின் மூலை முடுக்கு, சந்து பொந்துகள் என்று எங்காவது ஒரு துளியூண்டு நீதியாவது இருக்காதா என்பதெல்லாம் வெறும் கனவுதான் போல... வாழ்க ஜனநாயகம்...

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)