Saturday, June 29, 2013

’காஃபிர்’களால் பதியப்பட்ட முஸ்லிம்களின் கதைகள் ...

“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றிருக்கும். இந்தியாவில் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் என் மீது செலுத்தப்படும் அவமானத்தையும் ஒடுக்கு முறைகளையும் தாங்க முடியாமல் மனம் வெந்து தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பேன். இப்போது இப்படி யோசிக்கிறேன். நல்லவேளை நான் ஒரு முஸ்லீமாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் பயந்து பயந்தே செத்திருப்பேன். என் நிழலே என்னைத் துரத்த ஒரு எலியைப்போல வளைக்குள் அடைந்திருப்பேன்' 
ஸ்மாயில் என்ற பெயருடன் நாதூராம் கோட்சேவால் காந்தியைக் கொலை செய்ய முடிந்ததிற்கான காரணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்காவது குண்டு வெடித்தால் மிக எளிதாக நமக்கான பொதுபுத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ள முடிவதற்கான காரணமாய்!! அது பிற மதவெறியர்கள் வைத்த குண்டாய் இருந்தாலும் கூட.. இந்த ஒப்பிடல் ஏதோ சட்டென நமக்குத் தோன்றியதில்லை. இதன் பின்னால் மிகவும் திட்டமிட்ட ஒரு அடையாள அரசியல் பதுங்கி நிற்கிறது. இஸ்லாமிய மக்கள் பிறருடன் ஒன்று கலந்து வாழும் கலாச்சாரம் இதனால் எல்லாம் இன்னும் உதிர்ந்துவிடவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை உதிர வேண்டும் என்ற வன்மம் தொடர்கிறது.

இந்த வன்மத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பதிவுகள் மூலமாகவும், கதையாடல்கள் மூலமாகவும் உரத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாய் எழுந்து நிற்கிறது. எனவே நம்மோடு இணைந்து வாழ்கிற 20 சதமான இஸ்லாமிய சமூக சொந்தங்கள் குறித்து நமது எழுத்தாளர்கள் எழுதுவதில் காட்டும் சிக்கனத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. இத்தேவையை உணர்த்துவதாக காஃபிர்களின் கதைகள் தொகுப்பு வந்துள்ளது. 18 எழுத்தாளர்கள்; அவர்களில் எவரும் இஸ்லாமியர்கள் அல்லர். ஆனால் அவர்கள் இஸ்லாம் சமுதாய வாழ்வை அவதானித்து அதை சிறுகதைகளாக வடித்துள்ளனர். இக்கதைகளைத் தொகுத்து மிகவும் முக்கியமான ஆவணமாக எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா வழங்கியுள்ளார். அவரது படைப்புகளைப் போலவே இந்த தொகுப்பும் மௌனமாக ஆனால் ஆழமான கேள்விகளை எழுப்பி நிற்கிறது. 

டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் இந்திய தேசமே “அட்டென்ஷன்'' நிலைக்கு வந்து நிலைகுத்தி நிற்பது ஏன்? என்ற வினா உங்களுக்கு எப்போதாவது எழுந்திருக்கும் என்றால் இந்தத் தொகுப்பின் தேவையும் உங்களுக்குப் புரியும்!

தமிழின் முதல் சிறுகதையென அடையாளம் காணப்பட்ட வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் துவங்கி இன்று வரை லட்சக்கணக்கான சிறுகதைகள் இஸ்லாமியர் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவைகளில் எத்தனை கதைகள் இஸ்லாமிய சமூகம் குறித்த பதிவுகளைக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இந்தத் தொகுப்பு நிச்சயம் எழுப்பும். இத்தொகுப்புக்குள் வராத கதைகள் இன்னும் இருக்கலாம். அவைகளையும் தொகுக்க வேண்டியது இன்றைய சமூகச் சூழலின் அவசியமாகப்படுகிறது.

பெருமிதங்களை நிரப்பி, உணர்ச்சிகளைத் தூண்டி சவால்களை முன்நிறுத்தி, எதிரிகள் என சுட்டப்பட்டு அவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கி, அறை கூவல்களைக் கொண்டாடும் மனநிலைமைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்துள்ள இந்துத்துவ வாதிகளின் முன்னால் இத்தகைய நூற்றுக்கணக்கான காஃபிர்களின் கதைகளை தேவைகளைத் தேடி முன்வைக்க வேண்டியது காலத்தின் அவசியம். இந்தத் தொகுப்பில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கதைகள் அணி வகுக்கவில்லை. தேச ஒற்றுமையை வலியுறுத்த வேண்டுமெனில் கோயில், மசூதி, சர்ச் படங்களை போட்டால் ஒற்றுமை பொங்கிவரும் என்ற நினைப்பும் பொதுவாக இருக்கிறது. முற்போக்கு இயக்க ஊர்வலங்களில்கூட ஒரு பூனூல் அணிந்த பார்ப்பனர், குல்லா அணிந்த இஸ்லாமியர், கோட்டு போட்ட ஃபாதர் கைகோர்த்து வருவது போல மதச்சார்பின்மை வலியுறுத்தப்படுகிறது. (அது சரி இந்து என்றால் பிராமணர்கள் மட்டும்தானா?) மற்ற மதங்களுக்கு இடம் எங்கே?

ஆனால் இந்தத் தொகுப்பு அமைதியாய் பேசும் அரசியல் மிகவும் முக்கியமானது. சுப்ரமணிய பாரதி, சுந்தர ராமசாமி, கு.ப.ராஜகோபாலன், அசோகமித்ரன், பிரபஞ்சன், பொன்னீலன், வண்ண நிலவன், எஸ்.பொன்னுத்துரை, சுகுமாரன், நாஞ்சில் நாடன், தஞ்சை ப்ரகாஷ், எஸ். ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், ரமேஷ் பிரேதன், சோ. தர்மன், ஆ. மாதவன், வேல ராமமூர்த்தி, சா.சுப்பாராவ் எனப் பல தலை முறை எழுத்தாளர்களின் எழுத்தினுள் இஸ்லாமியப் படிமம் பதிந்துள்ள விதம் என்ற உளவியலைக் கண்டறிய உதவும் கதைகளின் தொகுப்பு.

இத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதை குறித்தும் அறிமுகம் செய்வது நன்றெனினும் பக்கங்கள் அதற்கு இடம் தராது. இஸ்லாமியர்கள் அல்லாதோரின் எழுத்துக்கள் என்கிற ஓர்மையைத் தாண்டி இக்கதை களுக்குள் இன்னும் நிறைய ஒற்றுமைகள் இழைந்து நிற்கின்றன. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் விதையாய் இந்திய இருப்பில் இஸ்லாமியர் வாழ்வின் நிலைகொள்ளாத் தவிப்பை பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. எந்த ஒரு கதையிலும் இஸ்லாமிய சமூகத்திற்காகப் ''பெருந்தன்மையுடன்'' பரிந்து பேசும் தொனி தட்டையான மதிப்பீட்டில் வராதது கவனம் கொள்ளத்தக்கது.

ஹஸர் தினார், அக்பர் எனும் அப்பா என்ற இரு கதைகளைத் தவிர்த்து மற்ற கதைகள் எல்லாம் சராசரி மனிதர் களின் தினசரி வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன. ஒரு வகையில் அக்பர் என்ற மாமனிதனும், கோபங்களை உடைக்கச் சுற்றியலைந்த மாலிக் காபூரும் சராசரி வாழ்க்கையுடைய மனிதரூபமாய் பார்க்கப்பட வேண்டியவர்களே. மனிதர்களே மகாபுருஷர்களாக மாறுகின்றனர். ஹஸர் தினார் மறுவாசிப்புக்கு உட்படுத்த தூண்டுகிற கதையாக இருக்கிறது.

1920 களிலேயே இஸ்லாமிய சமூகத்தை கரிசனத்தோடும் விமர்சனத்தோடும் அணுகியுள்ள பாரதியும், மனக் கணக்குப் புலியான ஹசன் ராவுத்தரும், தன்வாழ்வில் நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் மறைக்க விரும்பாத பட்டாணியும், பெற்ற மகள் திருமணத்திற்கு பயன் பட்டிருக்க வேண்டிய பணமாகினும் அது வந்தவழி தவறு என்பதால் தன் மகனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாயம்மாவும், ஒரு இந்து திருமணத்தின் நம்பிக்கை சார்ந்த வலியைப் புரிந்து கொண்டு உதவும் மொகிதீன் ஷா என்கிற இன்ஸ்பெக்டரும், தன் தாடியும், சாயலும் ஒரு இஸ்லாமியரைப் போன்று இருப்பதால் அவஸ்தைக்குள்ளாகும் அதனால் தன்னுடைய இறுதி ஆயுதமாய் ஆண் உறுப்பை எடுத்துக் காட்டும் அவலம் நிறைந்த இளைஞனும், ஜன்னல் வழியே காதல் கொண்டவனுக்காக எல்லாம் துறந்த நூரி இறுதியில் அவனையே துறந்ததும், எல்லா சோகங்களையும் தனது வயலின் வழியே இசையாய் அனுப்பும் மெஹருன்னிசாவும் தொகுப்பைப் படித்து முடித்த பல நாட்கள் உங்களுடன் தொடர்ந்து வருவார்கள். கரீம் என்ற பெயர் இருப்பதாலேயே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ''விழிப்பு'' கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. இன்னும் இதில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றிருக்கும். இந்தியாவில் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் என் மீது செலுத்தப்படும் அவமானத்தையும் ஒடுக்கு முறைகளையும் தாங்க முடியாமல் மனம் வெந்து தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன். இப்போது இப்படி யோசிக்கிறேன். நல்லவேளை நான் ஒரு முஸ்லீமாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் பயந்து பயந்தே செத்திருப்பேன். என் நிழலே என்னைத் துரத்த ஒரு எலியைப்போல வளைக்குள் அடைந்திருப்பேன்'' என்று ரமேஷ் பிரேதன் பதிந்துள்ளது நாகரிக சமூகத்தை வெட்கப்பட வைப்பதாகும்.

இந்த புத்தகத்தைப் படிக்கும்போது வாசக மனநிலை எங்கு செல்லும் என்பதற்கு நானே சிறந்த உதாரணமாய் இருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் பிரியாணி என்ற உணவை முதலில் சுவைத்தது நான் பிறந்த பரங்கிப்பேட்டையில்தான். குமத் பள்ளியில் என்னுடைய அம்மா ஆசிரியையாக பணியாற்றிய காலம் அது. மியாங்கடை ரொட்டியும், தில்ஷாத் அக்கா நெய் சாதமும் இஸ்லாமியர்கள் நிறைந்த தெருவில் வாஞ்சையுடன் எங்களை அரவணைத்த முக்காடு அத்தைமார்களும் முப்பத்தைந்து வருடகாலங்களுக்குப் பின் என்னுடைய நினைவலைகளில் எழுந்து வந்தார்கள். சுவாசத்தைப்போல மிகவும் இயல்பாகப் பழகியவர்களை தூரம் வந்தவுடன் மறந்தது மட்டுமல்ல, என்னுடைய எழுத்தில் இதுவரை அவர்களை எங்கும் பதியவில்லை என்ற குற்ற உணர்வும் எழுந்தது. இந்த குற்றவுணர்வு எழுவது நல்லதுதான். இது பற்றிப்படர வேண்டும். 

மிகச்சிறிய மனித வாழ்வின் தூரத்தினை கடக்கும் வழியில் நம்மோடு பயணிக்கும் சகபயணிகளை ஆராயும் நோக்கோடு உற்றுப் பார்ப்பதும், முகம்திருப்பி யோசிப்பதும் பயணத்தை நரகமாக்கும். அதற்கான சூழல் உருவாகியுள்ள இந்தியா போன்றொரு கொந்தளிப்பான தேசத்தில் இதைப்போல் இன்னும் நூறு தொகுப்புகள் வரவேண்டும் என்று கீரனூர் ஜாகிர் ராஜா குறிப்பிடுவதை அப்படியே வழிமொழியலாம்.

- ரமேஷ்பாபு

6 comments:

  1. Good article sir, Keep it up.
    Regards
    Haja

    ReplyDelete
  2. தோழர் ரமேஷ் பாபுவிற்கு, நிச்சயமாய் பாராட்டியே ஆக வேண்டிய சிறப்பு பதிவு. ஒரு குறை, சொல்லிவிடுகிறேன், புத்தகத்தின் பதிப்பாளர் பற்றியோ, அதன் விலை பற்றியோ குறிப்பிட்டிருக்க வேண்டும். அது அவசியம். கேரளத்தின் பஷீரின் வழியே இஸ்லாமிய மக்களின் வாழ்நிலையை, அந்த சமூகத்தை நேசிக்க துவங்கிய எனக்கு, அவர்களது சமுகத்தின் நிகழ்வுகளுக்கு, கீரனூர் ஜாகீர் ராஜா பெரிதும் உதவுகிறார். தொடரட்டும். பாத்துமாவின் ஆடு, எங்கள் தாத்தாக்கு ஒரு வெள்ளை யானை இருந்தது என்ற பஷீரின் கதைகள் கொடுத்த சுவாரசியத்தை, ஜாகீரின் வெண்ணிற இரவுகளின் கதை தொகுப்பு கொடுத்தது எனலாம்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோ,

    அருமையான புத்தக அறிமுகம். முஸ்லிம்களின் வாழ்வியல்,அடையாள சிக்கல்களை எதார்த்தமாக அலசும் முயற்சி பாராட்டத் தக்கது.இதில் சகோ கீரனூர் ஜாகிர் இராஜாவின் பங்கு குறிப்பிடத் தக்கது.

    மன்னிகவும்.உங்கள் பதிவின் தலைப்பில் பிழை உள்ளது. காஃபிர் என்னும் அரபி சொல்லுக்கு முஸ்லிம் அல்லாத்வர் என பொருள்.

    ஆகவே உங்களின் த்லைப்பு இப்படி மட்டுமே இருக்கலாம்.

    1. முஸ்லிம் அல்லாதவர்களால் பதியப் பட்ட முஸ்லிம்களின் கதைகள்.

    2.காஃபிர்களால் பதியப் பட்ட முஸ்லிம்களின் கதைகள்.


    நன்றி!!

    காஃபிர் சார்வாகன்

    ReplyDelete
  4. உண்மையான பதிவு

    ReplyDelete
  5. to சார்வாகன் - காஃபிர் என்ற வார்த்தைக்கான பொருளை விளக்கியதற்கு நன்றி ... காஃபிர்களின் கதைகள் என்பது புத்தகத்தின் பெயர் என்பதால் எழுந்த பொருள் குற்றம் அது.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)